அது ஒரு ஞாயிறுக் கிழமை சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.
குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான்.
“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?
“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”
“இல்ல இப்ப அழுதுச்சே...”
உள்ளே இருந்து மனைவி “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”
**********************************************************************
மலை ரயில் சுமாரான வேகத்தில போய்கிட்டு இருந்தது. அந்த பெட்டியில் ஒரு அழகான பெண், ஒரு கிழவி, ஒரு இந்தியன், ஒரு ஃப்ரெஞ்சு காரன் நாலுபேர் மட்டும் இருந்தாங்க.
அந்த ரயில் ஒரு குகையின் உள்ளே நுழைந்தது. ஒரே கும்மிருட்டு, லைட்டு எரியல. “பச்சக் பச்சக்னு முத்தம் இடும் சப்தம் கேட்டது. அதை தொடர்ந்து “பளார்” என்று அறையும் சப்தமும் கேட்டது. குகையை விட்டு ரயில் வெளியே வந்தது. ஃப்ரெஞ்சுகாரன் கன்னத்தில் அறைவிழுந்ததற்கு அடையாளமா கை விரல்களின் அச்சு இருந்துச்சு.
கிழவி நினைச்சுகிட்டா
“ என்ன கன்றாவியோ, இவ சுத்த மேசம் ஒரு ஆளு முத்தம் குடுக்க வுட்டுடாளே”
மனதிற்குள் சிரித்து கொண்ட அந்த பெண்
“ என்ன ஆளு இவன் நமக்கு முத்தம் குடுக்காம கிழவிக்கு குடுத்துட்டான் போலிருக்கு”
அறை வாங்கிய ஃப்ரெஞ்சுக்காரன் கன்னத்தில் கை வைத்தபடி மனதில்
“இந்தியாக்காரனுக்கு முத்தம் குடுத்துட்டு நம்மள அறஞ்சிட்டாளே பாவி”
இந்தியாக்காரன் குஷியா மனதில் “மவனே பொண்னு பக்கதில வசதியான எடமா பிடிக்கிற “ நானே என் கையில முத்தம் கொடுத்து அவனுக்கு உட்டேன் ஒரு அறை “வாழ்க இருட்டு”
**********************************************************************
ஒரு சமய கூட்டம் நடந்திட்டு இருந்தது, சாமிஜி சொன்னார்
”முத்தம் இடுவதால ஒருத்தருக்கிட்ட இருந்து கிருமிகள் மற்றவருக்கு பரவி விடும்.
வெள்ளைச்சாமி எழுந்து சொன்னார்
“ அதாஞ் சாமி என் பொஞ்சாதி முத்தங்குடுத்தாக்கூட திருப்பி கொடுத்துறேனுங்க”
**********************************************************************
நடு சாமத்தில் நல்லா தூங்கும் கணவனை பட படவென தட்டி எழுப்பினாள் மனைவி
“ஏங்க ஏந்திருங்க வெளியே புயலும் மழையுமா இருக்கு வீட்டுக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு எனக்கு பயம்ம்மா இருக்குதுங்க...”
“அடச்சீ கம்முன்னு தூங்கு...இது வாடகை வீடு தானே நீ ஏன் கவலைப்படறே”
**********************************************************************
ஒரு பெண்ணின் தோழிக்கு அவளின் நடவடிக்கை எரிச்சலாக இருந்தது. ஒரு நாள் அவளிடமே கேட்டுவிட்டாள். “ஆமா நீ ஏன் ரெண்டு போரோடேயும் நெருங்கி பழகுற”
அதுக்கு அவள் சொன்னாள். “ஜீப்பு பின்னாடி ஒரு ஸ்டெப்னி இருக்கு கவனிச்சிருக்கியா? அது எதுக்கு?”
“அதுமாதிரிதான்”
**********************************************************************
கல்யாணத்திற்கு முன்னாடி பெண்னோட கையை பிடிச்சிகிட்டா
அது அவளின் மேல் இருக்கும் அன்பை காட்டும்.
அதுவே கல்யாணத்திற்கு பின்னாடி
வெறென்ன... அவனோட தற்காப்புக்குத் தான்
**********************************************************************
“அந்த காலத்தில இளவரசர்களுக்கு 14 வயசிலேயே நாட்டை ஆளும் பொறுப்பு குடுத்திருவாங்க” “ஆனா கல்யாணம் 18 வயசில தான்”
“ஏன் ?”
“நாட்டை ஆளலாம் பெண்ணை ஆளுவது அவ்வளவு சுலபம் இல்ல”
**********************************************************************
82 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 லட்சம் பரிசு கிடைத்தது.
அவரோட குடும்பதினர் இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது சொன்னா “பொக்குன்னு போய்ட்டார்னா” யோசனை செஞ்சு ஒரு டாக்டர் கிட்ட போனாங்க
விசயத்தை கேட்ட டாக்டர் “நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க நா பாத்துக்கிறேன்”
ஊர்க்கதை பேச்சிட்டு மெல்லமா ““ஐயா உங்களுக்கு லாட்டரியில 10 லட்சம் விழுந்தா என்ன பன்னுவீங்க”
டாக்டர் சார் நீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா உங்களுக்கு ஒரு அஞ்சு லட்சம் கொடுத்திருவேன்”
இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.
**********************************************************************
மகன் : “இந்த இயற்கைக்கு ரொம்ப முன் யோசனை ஜாஸ்திப்பா.”
அப்பா : “முன் யோசனையா எப்படிப்பா”
மகன் : பின்ன மனுசன் கண்ணாடி போடுவான்னு அதுக்கு முன்கூட்டியே தெரிஞ்சு இருக்கு
இல்ல.. காது இல்லேன்னா கண்ணாடிய எப்படி மாட்டுவே”
**********************************************************************
நேற்று நீங்க கூப்பிட்ட விருந்துக்கு வர முடியாம போச்சுங்க...என்ன ரொம்ப எதிர் பார்த்திருப்பீங்க...
அப்படியா நேற்று நீங்க வரலியா ?
**********************************************************************
ஒரு பேருந்தில் இரண்டு இளவயசு பெண்கள் பயணம் செஞ்சாங்க. அவங்களுக்கு உட்கார இடம் கிடைக்கல...ஒருத்தி கொஞ்சம் சப்தமாவே சொன்னாள் “அழகானவர் எந்திருச்சு நமக்கு எடங்குடுப்பாருடி” ஆறு சீட்டுகள் காலியாகிடுச்சு.
எழுந்திருச்சவங்க ஆறுபேரும் அறுபது வயசுக்காரங்க
**********************************************************************
வாத்தியார் : “என்னடா முழிக்கிற இந்த கேள்விக்கு முட்டா பய கூட பதில் சொல்லிருவாண்டா !”
மாணவன் : “அதான் சார் நா பதில் சொல்லல...”
**********************************************************************
ஜோஸ்யம் பார்ப்பவர் : பத்துரூபா கொடுத்தீங்கன்னா நீங்க இரண்டு கேள்வி கேட்கலாம்
வந்தவர் : ”ரெண்டு கேள்விக்கு பத்துரூபாயா”
ஆமா “அடுத்த கேள்வி கேளுங்க”
**********************************************************************
கணக்கு வாத்தியார் : “உங்க அப்பாவுக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாசம் 100 ரூபாய் வீதம் ஆறுமாதம் திருப்பி கொடுதால், அவர் மீதி எவ்வளவு எனக்கு தரணும்”
பையன் : “ஆயிரம் ரூபா சார்”
கணக்கு வாத்தியார் : என்ன.. உனக்கு கணக்கே புரியலயா?
பையன் : “சார் எங்க அப்பாவ பத்திதான் உங்களுக்கு தெரியல”
**********************************************************************
ஒரு போர் வீரன் பந்தயம் கட்டுவதில் அளவு கடந்த ஆசை அல்ல வெறியே இருந்தது. இந்த விசயம் புதிதாய் வந்த படைத்தலைவருக்கு தெரிந்தது.
என்ன நீ எதுன்னாலும் பந்தயம் கட்டுவியாமே அப்படியா? என்று கேட்டார்.
ஆமாங்க, எதன்மேல் வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன் உதாரணமா உங்க தொடையில் மச்சம் இருக்குன்னு பந்தயம் கட்டுரேன்.
(அவருக்கு அவன் தோற்றால் பந்தயம் கட்டும் சுபாவத்தை விட்டுருவான் என்று எண்ணினார்)
என்ன எங்க இருக்கு பாருன்னு தொடைய காட்டினார் மச்சம் இல்ல தோத்துட்டான்.
பந்தய தொகைய கொடுத்தான். படைத்தலைவர் சொன்னார் “போப்பா இனி மேலாச்சும் திருந்து”
அடுத்தநாள் பழைய படைத் தலைவர், சமாச்சாரம் கேள்விப்பட்டேன் உண்மையா ? அப்படின்னு கேட்டார். ஆமா இனி அவன் திருந்திடுவான்னாரு.
போங்க சார்..உங்க தொடைய காட்ட மாட்டீங்ன்னு எங்கிட்ட பந்தயம் கட்டி ஜெயிச்சுட்டான்..
**********************************************************************
இது உண்மையான்னு தெரியல...
ஹிட்லர் காலத்தில் அவரு ரொம்ப ஸ்ரிக்டுன்னு தெரியும்.
சினிமா தியேட்டரில் படம் முடிஞ்சதும் தேசிய கீதம் மாதிரி அவரோட படத்தை காட்டுவாங்கலாம் ஜனங்க மரியாதையா எழுந்து நிற்பாங்க.
ஒருநாள் ஹிட்லர் மாறு வேடத்தில் சாதாரனமா ஒரு தியேட்டருக்கு விசிட் செஞ்சாரு.
வழக்கம் போல அவரோட படத்தை காட்டும் போது உட்கார்ந்திருந்தாரு.
பக்கத்தில் இருந்தவன் அவரைப் பார்த்து
“யோவ் உன்ன மாதிரித்தான் நானும், அதுக்காக எழுந்திருக்கலேன்னா மாட்டிக்குவே எழுந்திரு” என்றான்.
**********************************************************************
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு, மேடையில் பேசறதுக்கு விருப்பம் இல்ல.
இருவரும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். வில்பர்ட் ரைட்டை பேசும்படி வற்புறுத்தி கேட்டுகிடாங்க வேற வழி இல்லாம எழுந்து
“நான் பேசுவதில்லை ஆர்வில் ரைட் தான் வழக்கமா பேசுவாரு” ன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டாரு.
அடுத்து ஆர்வில் ரைட்டுக்கும் வேற வழி இல்ல அவரும் எழுந்து
“வில்பர்ட் சொற்பொழிவாற்றிட்டாரு இனி நான் என்ன பேசுறது” என்று பேச்சை முடிச்சுகிட்டார்.
**********************************************************************
சர் ஆர்தர் கானன் டாயில் துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர் ( கரெக்ட் ஷெர்லக் ஹோம்ஸ் !) அவருக்கு ஆவியுலகத்தில் நம்பிக்கை இருந்தது. அவரோட நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொரு நண்பர் இவரை மடக்கனும்னு இவரிடம் இறந்தவரின் ஆவி இவரோடு பேசியதா ? என்று கேட்டார்.
அதுக்கு கானன் டாயில் “இல்ல” ன்னு பதில் சொன்னார்.
“இப்பவாவது நம்புரீங்களா ஆவி இல்லேன்னு”
”அப்படி நினைக்கல..அவர் இறக்கறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்ல, அதனால ஆவி இப்ப பேசாம இருந்திருக்கலாம்”
**********************************************************************
அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக்கதை இது.
ஒரு ஓவியன் ஒரு படத்தை கொண்டு வந்து காட்டினான் அதில் பசுவும் புல்லும் வரைந்து இருப்பதாக சொன்னான். சுருட்டி வைத்திருந்த படத்தை பிரித்து பார்த்தா அதில பசுவும் இல்ல புல்லும் இல்ல.
புல் எங்கே? என்று கேட்டதற்கு “பசு புல் சாப்பிட்டு விட்டது” என்று சொன்னான் ஓவியன்.
சரி பசு எங்கே? என்று கேட்டதற்கு “அது புல்ல திண்ணுட்டதால விரட்டி விட்டுட்டேன்” என்றான்.
அவரு சொன்ன இன்னொரு கதை :
இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒருதனை இரண்டு பெண்கள் காதலிச்சாங்க. ஒருத்தி ஏழை, ஆனால் அழகா இருப்பா. இன்னொருத்தி சுமாரான அழகு, இரண்டுபேரில் யாரை திருமணம் செய்துக்கிறதுன்னு நண்பன் கிட்ட ஆலோசனை கேட்டான். நண்பன் சொன்னான். “ஏழையா இருக்கிற பெண்னை கல்யாணம் செய்துக்க, அவதான் உனக்கு ஏற்றவள். வாழ்கையில் உனக்கு உறுதுணையா இருப்பாள், அதோட அழகாவும் இருப்பான்னு சொன்னியே”.
போகும் போது “சரி, அந்த பணக்காரப் பெண் எங்கிருக்கிறாள் முகவரி சொல்லுப்பா” என்று கேட்டான்.
**********************************************************************
அஞ்சலகத்தில் எழுதுவதற்காக ஒரு பேனாவை கட்டி வைத்திருப்பார்கள். வந்தவர் அந்த பேனாவில் எழுதினார், எழுதவில்லை.
அஞ்சலக எழுத்தரிடம் “இது என்ன ஹைதர் அலி காலத்து பேனா வா ? “ ன்னு கேட்டார்.
அதற்கு அவர் “ தகவல் விசாரணைக்கு பக்கத்து கவுண்டரில் கேளுங்க சார்”
**********************************************************************
கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாங்க.
சாப்பிட்டு முடிச்சுட்டு வெளியில போகும் போதுதான் மூக்கு கண்ணாடி பையில இல்ல அது டேபிலேயே இருக்கும்ன்னு பார்க்க மனைவி மட்டும் உள்ள போனாங்க..டேபில் மேல பார்த்தாள் கீழே பார்த்தாள் காணோம்...தேடுறத பார்த்து
அங்கிருந்த சர்வர் “அம்மா அவரு அப்பவே போயிட்டாருங்களே” என்றான்.
**********************************************************************
சென்னையில் இருந்த குடும்பம் வெளிநாடு போவதால் அவர்களுடைய நாயை உறவுக்காரர்களிடம் விட்டுவிட்டு போய் விட்டார்கள். அந்த வீட்டு பையன் நாயை பழக்குவதற்காக துணியை காட்டி “எடுத்துட்டு வா” என கட்டளை போட்டான் அது அசையவே இல்ல. அவனோட அப்பா வந்தாரு ”ரொம்ப நேரமா இது கூட கத்திட்டு இருக்கேன்” என்று சொன்னான். அவர் “ இஸ்துக்கினு வா”ன்னு சொல்லவும் அது பாய்ந்தோடியது.
**********************************************************************
பாட்டி பேரனிடம் ஒரு விடுகதை போட்டார். “சிங்கம் போல நுழையும், ஆடு போல வெளியே போகும், அது என்ன?
வினாடி யோசித்த பேரன் : “அப்பா”
**********************************************************************
ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார். தீர்ப்பு வந்தது அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆகப் பத்துவருசம் சிறை தண்டனை அவனுக்கு.
**********************************************************************
சிலது புதிது...
ReplyDeleteநல்ல பேரன்... ஹா...ஹா... சிரிச்சாச்சி... ஹிஹி...
நன்றிங்க D.D
Deleteகாது இல்லேன்னா கண்ணாடிய எப்படி மாட்டுவே\\ Contact Lens!!
ReplyDeleteஇது கொஞ்சம் ஓல்ட் ஜோக்ஸ், அப்ப கான்டாக்ட் லென்ஸ் இல்லையே, இல்லையே.. ! ஹி..ஹி நன்றிங்க.
Deleteசிரிச்சு மாளலை
ReplyDeleteவாங்க ராஜி... நன்றி!
Deleteநல்லஇருக்க்கு
ReplyDeleteநன்றிங்க ஆதாம்!
Deleteஹாஹஹா
ReplyDeleteநன்றி நண்பரே. ஏதோ நம்மால முடிஞ்சது!
Deleteசிரிக்க வைக்கும் பதிவு படங்கள் சிந்திக்க வைத்தது வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவாங்க கவிதாயினி நன்றி :)
Deleteநல்லயிருக்குப்பா....
ReplyDeleteஹாஹா பழைய ஜோக்ஸ் நினைவுபடுத்தியமைக்கு நன்றி
ReplyDeleteநன்றிங்க சக்கரகட்டி..
Delete