எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயமாகிவிட்ட உலகமிது...நெகிழிகளை "Better Pollutants "[சிறந்த சீர்கேடி] என்று சொல்லுவார்கள். உலக நாடுகளில் பல, தர கட்டுப்பாட்டுகள் விதித்து தடை விதித்திருக்கின்றன. இந்தியாவை பொருத்த வரை ஏட்டு சுரைக்காய்...
டண் கனக்கில் பெரு மலையாக குவியும் இந்த (பிளாஸ்டிக்) பாலிதீன் குப்பைகளை ஒழிப்பது என்பது பெரும் சவால் மட்டுமல்ல இதுவரையில் அளவும் குறைந்த பாடில்லை. இன்றைக்கு தண்ணிர் தட்டு பாடு தலை விரித்தாடுகிறது...மழை இல்லை அதனால் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். தண்ணீரை நிலத்தில் சேர்வதை தடுக்கும் பெரிய காரணி இந்த பாலிதீன் குப்பைகள். மனிதன் கண்டுபிடிப்பில் மோசமானது இது என்றால் மிகை இல்லை.
பாலிதீன் குப்பை கழிவுகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதில் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதை உபயோகித்து சாலை போட்டு கூட பார்த்து விட்டார்கள். எல்லாம் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை தான்.
விசயத்திற்கு வருவோம் ஜப்பானிய விஞ்ஞானிகள் நொதிக்கும் பேக்டீரியாவை வைத்து சுத்தமாக அழிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.(சாப்பாட்டை கெட்டுப் போகச் செய்கிறதே ) வேக்ஸ் வார்ம் என்று சொல்லுகிற மெழுகு புழுக்கள் வைத்து அழிக்க முடியுமா? என்று பார்த்தார்கள்...வெற்றி இல்லை.
இந்த நிலையில் ஒரு சம்பவம்...பெட்ரோச்சினி என்ற பெண்மணி ஸ்பெயினில் தேனிக்கள் வளர்ப்பு ஆய்வகத்தில் பணி புரிந்து வருகிறார். தேன் கூட்டை சுத்தப் படுத்தும் போது அதில் இருந்த வேக்ஸ் வார்ம் (மெழுகு கம்பளிப் பூச்சி) யை எடுத்து ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் கடித்து ஓட்டை செய்து விட்டு தப்பி போயிருந்தது. இந்த புழுவை தேனீக்கள் எதற்கு கூட்டில் வைத்திருக்கின்றன என்று பார்த்தால் சேதார மாகும் தேவை இல்லாத மெழுகுகளை இந்த புழுக்கள் உண்டு சுத்தம் செய்து விடுகின்றன. (தேன் பூச்சிக்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? ! )
இந்த வகை புழுக்களை Greater Wax Moth என்று சொல்லுகிறார்கள் மேலே சொன்ன ஜப்பான் காரர்கள் ஆய்வு செய்தது வேறு வகை என்று அறிக.
இந்த வகை மெழுகு புழுக்களை வைத்து பாலித்தீனை ஒழித்து விடலாமே...நிற்க அவை சும்மா கடித்து விட்டதா என்றால் இல்லை சாப்பிட்டு விட்டன...அவை சிறு சிறு அழிக்க முடியாத துகள் எச்சங்களா (மைக்ரோப்ஸ்) என்பதையே கவனிக்க வேண்டும். இந்த புழுக்களை பொறுத்த வரை பாலித்தீன்களை சாப்பிட்டு ஜீரணம் செய்து விட்டன. பிறகென்ன அதிக அளவில் இந்த புழுக்களை வளர்த்து விட்டால் போச்சு அப்படியும் செய்யலாம் ஆனால் இயற்கை சூழலை அளவோடுதான் கையாள வேண்டும்.
இப்போதைய முக்கிய விடயம் அதன் வயிற்றில் செறிக்கும் அந்த என்ஸைம்...அதை உருவாக்கி விட்டாலே பாலித்தீன்களை கரைத்து மண்ணில் மக்கச் செய்து விடலாம். இந்த ஆய்வு வெற்றிகரமாக நடக்கட்டும் என்று நம்புவோம்....
நன்றி
(கலாகுமரன்)
அருமையான வியக்க வைக்கும் தகவல்கள்
ReplyDeleteஆய்வு வெற்றிபெறட்டும்
ReplyDeleteஆகா! மனித குலத்துக்கே இனிய செய்தியை அளித்திருக்கிறீர்கள் ஐயா! பூமி பிழைத்து விடும் எனும் நம்பிக்கை துளிர்க்கிறது. மிக்க நன்றி!
ReplyDeleteகலாகுமரன் ஐயா! கீழே நீங்கள் இணைத்துள்ள ’தமிழ் எழுதி’ வேலை செய்யவில்லை. சரி செய்ய உங்களுக்கே தெரியும் எனில் செய்து விடுங்கள். இல்லாவிட்டால், e.bhu.gnaanapragaasan@gmail.com எனும் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்! சரியான நிரலை அனுப்பி வைக்கிறேன்!
ReplyDeleteஅருமையான வழிமுறை தான்..
ReplyDeleteநம் நாட்டில் நிச்சயம் ஏட்டு சுரக்காய் தான்..
ஆராய்ச்சியின் பலன் எப்பொழுது தெரியும்?
ஆனால் அதன் கழிவான Ethylene glycol விஷத்தன்மை வாய்ந்ததா? இதுதான் Polyester ன் மூலப்பொருளாம்.
ReplyDelete