Followers

Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Wednesday, December 31, 2014

சிந்தனை விருந்து



  • நன்மை செய்தவருக்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கே மாறுபட்டதாகும். நன்மை செய்தவருக்கு தீமை செய்வது பேய்க் குணமாகும்
    ~ஜெனிக்கா~

  • மேகங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கதிரவனை மறைத்திட முடியாது. உண்மையான திறமைசாலியை எவ்வளவு சக்தி வாய்ந்த எதிரிகளும் மடக்கிவிட முடியாது ~ரவீந்திரநாத் தாகூர்~

  • தங்களுக்கு தெரிந்தவற்றைப் பற்றி எல்லா ஆண்களும் பேசுவார்கள். ஆனால் பெண்கள் தங்கள் மனதுக்கு திருப்தியானதையே பேசுவார்கள் ~ரூஸ்ஸோ~
  • சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள். சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்காதவன் சோம்பேறி. பிறர் சிந்திப்பதைக் கெடுப்பவன் அயோக்கியன் ~ ரூஸ்வெல்ட்~

  • பாம்பு போன்ற விச ஜந்துக்களைக் கூட நான் நூலகங்களுக்குள் அனுமதிப்பேன் ஆனால் நச்சுத் தன்மை வாய்ந்த நூல்களை நான் நூலகத்திற்குள் அனுமதிக்க மாட்டேன் ~ குன்றக்குடி அடிகளார்

  • பாயாசம் அதிக சுவையா இருக்கிறது என்பதற்காக அதிகமா சாப்பிட்டா அவதிதான். அதுமாதிரி பணமும் அளவோட இருந்தா நிம்மதியா இருக்கும். அதிகமானா அவதிதான் ~அறிஞர் அண்ணா~

  • மேலுலகில் நமக்கு சொர்க்கம் கிடைப்பதை விட, இந்த உலகத்தில் நமக்கு சுதந்திரம் கிடைப்பதே மகிழ்சிக்குறியது ~ பாலகங்காதர திலகர்~

  • நம்ம நாட்ல "சரஸ்வதி" படத்த வெச்சுட்டு பூசை செய்கிற மாணவன் பரிட்சைல தோத்து போறான். ஆனா அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் ல அச்சடித்த காகிதத்தில மலத்த தொடச்சுட்டு போறவன் நம்மைவிட அறிவுலேயும், திறமையான ஆற்றலாலும் திறமையுடன் இருக்கான் எப்பிடி? ~ தந்தை பெரியார்~

  • அதிகமாக அனுபவிகவும், மிக சொர்பமாய் இருக்கும் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வெற்றிக்கு வழி  ~கதே~

  • இந்த உலகம் விரைவில் உயர்வோருக்குத் தான் நல்ல மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் புழுதிகள், வைக்கோல், மூங்கில் இவைகள் தான் இவ்வளவு விரைவில் வளர்கின்றன. ~ஹாரி~

  • எதிர்பார்ப்பது குறைவாக இருந்தால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது. நம் தகுதிக்கு மேலே எதிர் பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் ~ பீச்சர்~

  • நீ நல்ல பெண்ணை கலியாணம் செய்துக விரும்புகிறாயா? தன் பெற்றோருக்கு நல்ல மகளாக வாழ்பவளையே தேர்ந்தெடு ~புல்லர்~

  • பால் கீழே சிந்திவிட்டதற்கு வருத்தப் பட்டால் திரும்பவும் கிடைக்காது. நடந்து முடிந்த காலங்கடந்த நிகழ்ச்சிக்களுக்காக வருத்தப் பட்டால் திரும்பவும் பெற முடியாது. ~எமர்சன்~

  • எந்த ஒரு மனிதன் தீவிரமாகவும் திடமாகவும் சிந்திக்கிறானோ அந்தச் சிந்தனைகளின் வளர்ச்சியே ‪#‎கலை‬. அப்படி சிந்திப்பவனே சிறந்த கலைஞன். ~புதுமைப் பித்தன்~ 
  •  **************************************
"Tomorrow, is the first blank page of a 365 page new life book...to start with"
Wish You all a Great, Prosperous, Blissful, Healthy, Bright, Delightful, Energetic and Extremely Happy, HAPPY NEW YEAR 2015 
 
~kalakumaran~
Download As PDF

Tuesday, November 18, 2014

பில்கேட்ஸ் சிந்தனைகளில் இருந்து !



வெற்றியை கொண்டாடுவது சரிதான் அதைவிட முக்கியமானது தோல்விக்கான பாடம் மறைந்து இருப்பதை கவனி.



  • நான் சில பாடங்களில் தோற்றுப்போனேன்.  என் நண்பன் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்றான். இப்போது அவன் மைக்ரோசாப்டில் எஞ்சினீயராக இருக்கிறான் நான், மைக்ரோசாப்டில் முதலாளியாக இருக்கிறேன்.



நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஊற்று உங்களது மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளர்களிடம் இருக்கிறது.


  • கடினமான வேலையை செய்ய நான் சோம்பேரிகளையே தேர்ந்தெடுக்கின்றேன்.  ஏனென்றால் அவர்கள் தான் அதை சீக்கிரம் முடிக்க சுலபமான வழியை யோசிப்பார்கள்.


கற்றவை எதிலும் எதிலும் உச்சம் அடையவில்லை...ஆனால் இன்று  பல்கலைகழகங்களில் உச்சம் பெற்ற பலரும் என்னிடம் வேலைபார்பவர்கள்..


  • வெற்றி மோசமான வாத்தியார்.  ”இழப்பில்லை” என்று நுணுக்கமானவர்களை நினைக்க வைத்து வசப்படுத்திவிடுகிறது.



நிறையப்பேர் ஒருவருடத்தில் எவ்வளவோ செய்யலாம் என்று திட்டமிட்டு, அடுத்த பத்துவருடத்தை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார்கள்.



  • ஒரு வேலையை மட்டுமே செய்ய கூடியவனுக்கு தான் அந்த ஒரு வேலை தேடி வரும்.


வாழ்க்கை எளிதானதல்ல; அதை நீ எளிதாக்கு.


  • சீனாவை ஒப்பு நோக்கும் போது, மில்லியன் பேர்களில் நீ ஒருவன் ஆனால்  அங்கேயோ உன்னைப் போல் 1300 பேர் இருப்பார்கள்.



நீ உள்ளுக்குள் நினைப்பவைகளை உலகம் கண்டுகொள்ளாது...
உன்னிடம் இருக்கும் நல்லவைகளை பற்றி தீர்மானிக்கும் முன்பே
உன்னிடம் அதை எதிர்பார்க்கும்.


  • ஆசிரியர் உன்னிடம் கடினமாக நடந்து கொள்கிறார் என நினைப்பதற்கு முன்...உன் முதலாளியின் வருகைக்காக காத்திரு.



பர்கருக்குள்ளா வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறாய் ! 

இதையே மாற்றி யோசித்தால்; 
உயர்வடைந்த உன் தாத்தாக்களோ அதினுள்ளே  வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதை கண்டார்கள்.



  • மைக்ரோசாப்டின் வளர்ச்சியை பார்த்து என்னை விட யாரும் பெருமை பட்டு விடமுடியாது ஆனால் அதே சமையத்தில் வாழ்நாள் முழுதும் ஒருவன் சம்பாதிப்பதை என் தவறுகளால் நான்  தொலைத்துவிட்டு இருக்கிறேன்.



தொழில் நுட்பம் என்பது ஒரு கருவி.  குழந்தைகளிடையே ஒருவருக்கு ஒருவர் முன்னேற்றம் அடைய தூண்டுகோலாக இருக்கும் ஆசிரியரே முக்கியமானவர் இல்லையா.


  • வெற்றியின் திறவுகோல் பொறுமை !



எதிர்காலத்தில், இணைய பயன்பாடு குக்கிராமங்களை உலக மயமான நவீன 
 வசதிகளுடன் கட்டமைக்கும்.


  • புத்திசாலி தனமான வாழ்க்கை என்பது வாழை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உருமாறி குலைதள்ளுவதை போல இருக்க வேண்டும்.




எல்லைக்கோட்டை தொட்டுவிட திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறேன்...நீங்கள் நினைப்பது போல் அந்த கோட்டை நான் கடந்துவிடவில்லை.


சொன்னவர் : பில் கேட்ஸ்


Download As PDF

Friday, November 14, 2014

ஐன்ஸ்டீன் சிந்தனைகளில் இருந்து..




  • தொழில்நுட்ப மாற்றம் என்பது கொடுமைக்காரன் கையில் கிடைக்கும் கோடாளி.


ஒருவன் பள்ளியில் கத்துகிட்ட மொத்த வித்தையும் மறந்து போய் எஞ்சி இருப்பது கல்வி.



  • கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானது தான்... ஆனால் அதற்காக அது உருவாக்கப் படவில்லையே.


ஈர்ப்பு விசை   காதலில் விழுபவர்களுக்கு பொறுப்பாகாது.
உலகில் புரிந்து கொள்ள கடினமான விசயம் ஒன்று உண்டென்றால் அது வருமானவரி.


  • நான் எதிர்காலத்தை பற்றி நினைப்பதே இல்லை, அதுவே சீக்கிரம் வந்துவிடுகிறதே.


செய்யப்படுபவை முடிந்தவரை எளியதாக இருக்கவேண்டும்.  ஆனால் எளிமையான தாக இருக்க வேண்டியதில்லை.


  • ஒருவனின் படைப்பாற்றலின் ரகசியம் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது  என்பது அதன் ஆதாரங்கள்(சோர்ஸ்) எப்படி மறைக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது.


புதிர்களை விடுவிப்பது என்பது அதை உறுவாக்கிய முறையிலே தான் என்று சொல்ல முடியாது.


  • அவனுக்கு வெளியே வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவன் வாழ தொடங்குகிறான்.


கணிதம் சிக்கலாக இருப்பாதாக கவலைப் படவேண்டாம், என் திறமை அதில் அதி மோசமானது.


  • இரண்டு விசயங்கள் எல்லையற்றது. ஒன்று இந்த பிரபஞ்சம், அடுத்து மனித முட்டாள்தனம். பிரபஞ்சத்தை பற்றி உறுதியா தெரியல.


மூன்றாம் உலகப்போரில் எந்தவிதமான ஆயுதங்கள் பயன்படுத்தப் படுமோ தெரியல, ஆனா
நான்காம் உலகப்போரில் கற்களையும், தடிகளும் பயன்படுத்தப் படலாம்.


  • மந்தையில் மாசற்ற உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஒரு செம்மறி ஆடாக இருந்தாக வேண்டும்.


   ஆபத்து அறியாமல் விபத்தில் இறப்பவனுக்கு "மரண பயம்" அனைத்து பயங்களிலும் நியாயமற்றது 



  • மனநிலை பிறழ்ந்தவர்கள் ஒன்றையே திரும்ப திரும்ப செய்கிறார்கள் ஆனால் விதவிதமான முடிவை எதிர் பார்க்கிறார்கள்.

கற்பனை அறிவைவிட முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு.  கற்பனை பரந்துபட்டது


  • நல்ல அரசியல் ஆலோசகரின் வயிறு காலியாக இருக்காது.


புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் ஊள்ள வித்தியாசம். புத்திசாலி எல்லைகளை வகுத்து கொண்டவன்.


  • ஒவ்வொருவரும் புத்திசாலி தான் எப்போது ? தர்க்கரீதியாக சிந்திக்கும் போது. மீன் மரம் ஏறும் என்பதை அறிந்தவனை விட மீன் வாழ்க்கையை அங்கேயே கழிக்கும் என நினைப்பவன் முட்டாள்.


சார்பியல் (ரிலேட்டிவிட்டி) என்பது ? அழகிய பெண்னை ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது மணி துளி போல ஓடிவிடும்  : அதுவே சூடான அடுப்பின் மேல் ஒரு சில மணிதுளி  உட்கார்ந்திருப்பது ஒரு மணி நேரம் போன்றது.


  • திறமைசாலி பிரச்சனையை அணுகுகிறான்.  அறிவாளி அதில் இருந்து தப்பிக்க நினைக்கிறான்.




A = x + y + z  இதில் A என்பது வாழ்க்கையின் வெற்றி , x  என்பது வேலை, y  என்பது விளையாட்டு, z என்பது வாயை மூடி இருப்பது.


  • ஆண் கடைசிவரை மாற மாட்டோம் என்று பெண்னை கலியாணம் செய்துகொள்கிறான்.  கடைசிவரை சேர்ந்திருப்போமா...என்று நினைத்த பெண், ஆணை கலியானம் செய்து கொள்கிறாள் . இதில் இருவருமே ஏமாற்றமடைகிறார்கள்.


எதையும் அறிவியல் பூர்வமாக வரையறுத்து விடலாம், ஆனால் அதை உணர முடியாது.  பீத்தோவனின் சிம்பொனி அலையின் வேறுபாடு மற்றும் அழுத்ததை பொறுத்தது என்று சொல்வது போல.




  • தண்டனைக்கு பயந்துதான் ஒழுக்கமானவனாக இருக்கிறான், ஒழுக்கமானவனுக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா அவன் இருக்கிறான்.




ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குள்ள உரிமை கொடுக்க வேண்டும்.




  • தனியொருவனுக்கு,  அவனுக்கு தெரியாமல் ஏதும் மறைக்கப் படவில்லை என அரசியல் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.



வாழ்க்கையின் ஜீவாதாரமாக இருப்பது வேலை மட்டுமே.




  • ஆர்வம் எனும் புனிதத்தை இழக்கக் கூடாது.


அனைத்திற்கும் வெளியே  இருந்து பார்க்கும் போது கவலை கொள்வதற்கு சின்னதும் பெரியதுமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.


  • காகிதங்களில் எழுதி வைத்துக்கொள்வது நாம் ஞாபகப் படுத்தி கொள்வதற்காகத்தான். மூளை சிந்திபதற்கு மட்டுமே.




சொன்னவர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்






Download As PDF

Wednesday, July 2, 2014

பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?



அப்ப பத்து 12 வயசிருக்கும் வானத்தில் வட்டமா டார்ச் ஒளி சீரான
வேகத்தில சுத்திட்டு இருக்கும் என்ன விட பெரிய பசங்களுக்கு அது
என்னன்னு தெரிஞ்சிருந்தது. நாங்க இருக்கும் பகுதி நகரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர்ங்கரதால அந்த வட்ட டார்ச் ஒளி அமாவாசை இருட்டில் பளிச்சுன்னு தெரியும். ஜம்போ சர்கஸ், ஜெமினி சர்கஸ், ரஷ்யன் சர்கஸ் இப்பிடி பல சர்கஸ் கம்பெனிகள் அப்ப பிரபலமா இருந்தது. அவங்க கூடாரத்தில் இருந்து ஒளிவட்ட சமிங்சை தான் அது.

கயித்து கட்டில் போட்டு வாசலில் படுத்துப்போம். சிறுவர்களான எங்களுக்கு அது ரொம்ப சுவாரஸ்யமான அனுபமா இருந்துச்சு. வானத்தின் நட்சத்திர சிமிட்டல்களை ரசிச்சுகிட்டே பல கதைகள் பேசி மகிழ்வது ஏகாந்த அனுபவம் இப்போதைய சிறுவர் சிறுமிகளுக்கு இல்லாம போச்சு.

சர்கஸ் காரங்களும் அந்த ”சர்ச் லைட்டை” இப்ப அடிக்கராங்களான்னு தெரியல... அப்ப இருந்த வீதி விளக்கு வெளிச்சங்கள் முன்ன மாதிரி மஞ்சளா மினுக்கு மினுக்குன்னு இல்லாம பளீர்ன்னு இருப்பதால சர்ச் லைட் தோத்துப் போச்சானும் தெரியல...

அவங்களோட பெரும்பான்மையான இரவு வாழ்க்கை வீட்டுப் பாடம் (ஹோம் வொர்க்) செய்வதிலும் மீதி டி.வி பெட்டியும் எடுத்துகிச்சு. என் வீட்டுக்கு உறவு குழந்தைகள் வந்து தங்கினால் அவங்களுக்கு மொட்ட மாடி அனுபவத்த கொடுகிறேன். நிலாச்சோறு சாப்பிடுவது குழந்தைகளுக்கும் ஏன் பெரியவங்களுக்கும் பல சிந்தனை ஓட்டங்களை ஏற்படுத்தும் அட்வெஞ்சர்னு சொல்லலாம்.

சரி கேள்விக்கு செல்வோம்...பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?

நிலாவின் மேற்பரப்பு கண்ணாடி போல ஒளியை பிரதிபளிக்க செய்யும் வகையில் அமைஞ்சிருக்கு. சூரிய கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பட்டு எதிரொளிப்பது தெரிந்ததுதான். சினிமா திரையை போல பெரிய திரைன்னும் சொல்லலாம். அமாவாசை காலங்களில் பூமியில் இருந்து சர்ச் லைட் மாதிரி பெரிய லைட்ட அடிக்கமுடியுமா ? முடியும். பெரிய பவர் லேசர் புரொஜெக்டர் வெச்சு 4 லட்சம் கிலோ மீட்டருக்கு ரீச் ஆகரமாதிரி ஒளி கற்றைகளை பாய்ச்சினா அது நிலவில் பட்டு எதிரொளிக்கும். என்ன அந்த செலவு “அஸ்ட்ரானாமிகளா” இருக்கும் அம்புடுதான்.





Download As PDF

Friday, March 28, 2014

வால் செத்துப் போச்சி !!

சந்தர்பங்களும் வாய்ப்புகளும் வாழைப் பழம் போல் வருவதில்லை....

அவைகள் பலா பழம் போலவே வருகின்றன.
ஆம்.... வாழை பழம் வேண்டுமென்கிற போது சுலபமாக உறித்து தின்று விடலாம்.  பலா பழத்தை சுவைக்க முட்களை நீக்கி பிசு பிசுப்பைத் தாண்டி சுளைகளை எடுக்க மெனக்கெட வேண்டும்.



கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள் தனக்கு வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட காரணமாயிற்று என்று கவிஞர் வாலி குறிப்பிட்டார்

அந்த பாடல் வரிகள் ...

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

இதே பாடலில் இந்த வரியையும் ரசிக்காமல் கடக்க முடியாது....


""வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும் 
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.""

ஆம் அந்த பாடலின் முதல் வரிகள்...

மயக்கமா தயக்கமா....


#படித்து_ரசித்தது

வால் செத்துப் போச்சி !!

இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை அவன் வாலைப் பற்றித்தான் கவலை. வாலி வானுலகம் போயிருந்தாலும் அவன் வால் மண்ணுலகில் வைக்கப் பட்டு இருந்தால் என்ன செய்வது ?? அந்த வால் வந்து தன்னை துன்புறுத்துமோ என்ற பயம்.

வாலி மீளாது போயினும் அவன் வால் மீண்டுவிட்டால் என்ன செய்வது என்று அச்சப் படுகிறான். அச்சத்தை தீர்த்து வைக்கிறான் அனுமன்.

அஞ்சலை அரக்க ! பார்விட்டந்தர மடைந்தானறே

வெஞ்சின வாலி, மீளான், வாலும்போய் வீழ்ந்ததன்றே !!

{{ கம்பராமாயணம்}}


தானிக்கி தீனி!!

{பரமார்த குரு கதை}

ஒரு சமயம் குருவும் சீடர்களும் வெளியூரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். செமையான வெயில், வழியில் தென்பட்ட ஒரு விடுதிக்கு சென்றனர். விடுதியாளரிடம் சற்று இளைப்பாறி செல்வதாக கேட்டு இடம் பிடித்தார்கள். அந்த விடுதிக்கு பணக்காரர் ஒருவர் குடும்பத் தோடு வந்தார். அவர் விடுதியாளரிடம் பணத்தை பற்றி கவலை படாமல் அறுசுவை உணவு செய்து தரும் படி கேட்டார். உணவின் மணம் மூக்கை துளைத்தது. குருவிற்கும் சீடர்களுக்கும் பசி வயிற்றை கிள்ள கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்று மூட்டைகளை பிரித்து உண்ணத் தொடங்கினர். ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் மணத்தை உறிஞ்சி யவாறே கட்டுச் சோற்றை காலி செய்தனர்.

சட்டென்று வந்த விடுதியாளர் அவர்களின் செயலை கவனித்துவிட்டார். அவர்களிடம் சமையல் மணத்தை நுகர்ந்தவாரே அவர்கள் சாப்பிட்டதால் அதற்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.

காசு தர மறுத்த குரு சீஷ்ய கோடிகளை பஞ்சாயத்தில் நிறுத்தினார். நடந்த தை கேட்ட நாட்டாமை விடுதியாளர் சொல்வது சரிதானென்றும் அதனால் குரு அவருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு சொன்னார். குரு மற்றும் சீடர்கள் தீர்ப் பை கேட்டு நொந்தனர்.

அதோடு நில்லாமல் நாட்டாமை வேலைக் காரனை கூப்பிட்டு பண முடிப்பை எடுத்து வர செய்தார். விடுதியாளரை அழைத்து காசு நிறைந்த முடிப்பை மேலும் கீழு ஆட்டிக் காட்டி என்ன இது ? எனக் கேட்டார்.

" காசு, துட்டு, பணம், பணம்...என சந்தோசமாக கூறினார் "

பணத்தின் ஓசையை கேட்டீர்கள் அல்லவா அது நீங்கள் காசை வாங்கி கொண்டதற்கு சமம்.

தானிக்கி தீனி சரியா போச்சு " இதுதான் தீர்ப்பு என்றார்.

$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


// மேரி க்யூரி //

போலந்து பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் பட்ட இடத்தில் பிறந்தவரான மேரி க்யூரி உலக மக்களுக்காக புற்று நோய் குணப் படுத்தும் ரேடியத்தை தன் உயிர் கொடுத்து கண்டு பிடித்தார் என்று சொல்லலாம்.

சோதனைச் சாலையில் கதிர் வீச்சு தாக்கத்தினால் அவர் ரத்தம் கெட்டது.
அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் சொன்னார் "அழகான யுவதிகள் இருக்க வேண்டிய இடம் சமையல் அறையும் வரவேற்பறையும் தவிர விஞ்ஞான வகுப்பறை அல்ல..."

பெண்ணான அவருக்கு நொபல் பரிசு வழங்குவதை ஒரு கூட்டம் கடுமையாக எதிர்த்தது. எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு 45 மாதங்கள் ஓய்வில்லாமல் முதுகு ஒடியும் படியான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். மேரி கண்டுபிடித்த ரேடியம் மிகக் கொடுமையான புற்று நோயை குணப் படுத்தும் மருந்தாயிற்று.

ரேடியம் கண்டுபிடிக்கும் முறையை, காப்புரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்து இருந்தால் கோடி கோடியாய் சம்பாதித்திருக்க முடியும் ஆனால், உலகத்துக்கே இலவசமாக வழங்கிவிட்டார்.

அதன் பின் அவருக்கே ரேடியம் தேவைப் பட்ட போது தயாரித்து வைத்திருந்த எந்த நிறுவனமும் அவருக்கு கொடுக்க முன் வரவில்லை.

அமெரிக்காவை சேர்ந்த மாதர் அமைப்பு லட்சம் டாலர் நிதிதிரட்டி அவருக்கு ரேடியம் கிடைக்க ஏற்பாடு செய்தது. இறக்கப் போவதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அந்த முடிவை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார். அவர் வேண்டியது இறப்புக்குப் பின் கணவர் க்யூரியின் கல்லறைக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே விருப்பமாய் இருந்தது.

அவரின் விருப்பத்திற்கும் சாதனைக்கும் உற்ற துணையாக இருந்தார் அவர் கணவர். பெண்கள் படிப்பதை கேலி பேசும் படிப்பாளிகள் நிறைந்த சமூகத்தில் இருந்து மீண்டுவந்த மேரி அன்றைக்கு சவால்களை சந்திக்காமல் இருந்து இருந்தால் உலகம் ஒரு அருமையான விஞ்ஞானியை இழந்து இருக்கும்.  








Download As PDF

Wednesday, December 4, 2013

சிந்தனை சிதறல்..

புத்தர் எட்டுவழிகளை போதித்தார் என்று சொல்கிறார்கள். அந்த வழிகளை நாம் நடை முறைப் படுத்துவதையோ ஏன் தெரிந்து கொள்ள விரும்புவதையோ என்றோ மறந்துவிட்டோம் என்று தான் சொல்லவேண்டும்.

அந்த எட்டு தத்துவ விளக்கங்கள் இவை ; 
  1. சரியாக புரிந்து கொள்; வாழ்வையும் உலக இயல்புகளையும், வாழ வேண்டிய நெறிகளையும், புரிந்து கொள்.
  2. சரியாக எண்ணு; மனதில் தூய்மை இருக்கட்டும்.  கொடுமையையும், கெட்ட எண்ணத்தையும், ஆசை வெறியையும் அகற்று.
  3. சரியானபடி பேசு; சாந்தமாகப் பேசு, பொய் சொல்லாதே, புறஞ்சொல்லாதே, கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே. வம்பு பேசாதே.
  4. சரியான செயல்களில் ஈடுபடு; உன் செயல் தூய்மையான செயலாக இருக்கட்டும்.  துன்பம் கொடுக்காதே, அழிக்காதே, அவர்களது நிதானத்திற்குப் பங்கம் ஏற்படுத்தாதே.
  5. சரியான தொழிலைத் தேர்ந்தெடு; நாணயமான தொழிலைச் செய்; பிறருக்குக் கேடு செய்யாதே நியாயமற்றவைகளை செய்யாதே.
  6. சரியான முயற்சியில் ஈடுபடு; உழைப்பதிலும், முயற்சியிலும் ஈடுபடும்போது கெட்ட எண்ணம் எழாது.  நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்.
  7. சரியான சிந்தனை; மனத்தைப் பற்றி உடலைப் பற்றி உன் உணர்வுகளைப் பற்றி இயற்கையைப் பற்றி சரியாக சிந்தித்துத் தெரிந்து கொள்.
  8. சரியான கவனம்; மன சக்தியை ஒன்று திரட்டிக் கருத்தில் செலுத்து அமைதி பெறுவாய்.  உள்ளொளி பெறுவாய்.

இந்த 8 அம்சங்களில் நான் தெரிந்து கொண்டது கடவுளை வழிபாடு செய் உன் துயரம் தீர்பார் என அவர் பரிந்துரைக்கவில்லை.

என் பார்வையில் இந்த உலகம் ஒவ்வொரு கணத்திலும் அபாயத்தை வெளிகாட்டுவதாகவே தெரிகிறது.  எல்லாம் மாயை என்று சொல்வது போல்
மக்களின் போக்கு வெகுவாக மாறிவிட்டது.   யாரும் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வது இல்லை.  எல்லா நேரங்களிலும் ஒரு மாய உலகத்தில் இருப்பதை போன்றே உணர்கிறார்கள்.  நிதர்சனம் என்ன என்பதை யாரும் சட்டை செய்வதே இல்லை.

என்னைப் பொருத்த வரை இந்த நிமிடத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் போதும் என எண்ணுகிறேன்.  ஆனால் அப்படி இருப்பதையோ நினைப்பதையே இந்த உலகம் கிண்டலடிக்கிறது.  ஏன் என்றால் நான் ரசனையில் இருக்கும் போது நான் பின் தங்கி விடுகிறேன், வேகமாக செல்லும் உலகம் இது.

ஆன்மீக வாதியை விடவும் நாத்திக வாதி ஆன்மீகத்தை பற்றி அதிகம் சிந்திக்கிறான்.   அவனை விடவும் இவனுக்கு தேடுதல் அதிகம்.  அப்படித்தான் பெரியாரின் தமிழ் சீர் திருத்த எழுத்தும் ஆன்மீக வாதிக்கு தெரியாதது இவருக்கு தெரிந்தது.


நாம் எப்போது வலிமை இழக்கிறோம் என்றால் மனம் தளர்ந்து விடுகிற போது என்று என்று சொல்லலாம்.  அப்போது நம் உடலில் எண்டார்பின்னும், லிம்போசைட்ஸும் குறைந்து போகிறது.

Endorphin  என்றால் ரத்தத்தில் வலியை குறைக்கும் ரசாயணம்.
Lymphocytes  என்றால் நோய்கிருமிகளை கொல்லும் பொருள்.

நீ என்னவாக இருக்க விரும்புகிறாய் என்று என்னைக் கேட்டால்
எனது பதில் நான் ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை விஞ்-ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்.  (ஒன்றை கண்டுபித்தவர்கள் விஞ்ஞானிகள், மற்றதை கண்டுபிடித்தவர்கள் ஞானிகள்.)

கண்டுபிடிப்புகள் காலத்தால் அழியாது ஆனால் அது உருமாறும் மாற்றம் பெரும். எட்வின் லாண்ட் கண்டுபிடித்தது உடனடி போட்டோ மெக்கானிசம். டார்க் ரூமில் வைத்து பிரிண்ட் போட தேவை இல்லை. அப்போது அது பெரிய வித்தை தான் ஆனால் இப்போது டிஜிட்டல் வந்து விட்டது இருந்தாலும் அது அதுதான் இது இதுதான். 

 ”எண்ணங்கள் ரகசியமானவை அவற்றை மறைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள் மக்கள் ஆனால் அவற்றை ஒருநாளும் நாம் ஒளித்து வைக்க முடியாது “ ------- ஜேம்ஸ் ஆலன்


வலைச்சரத்தில் வெளியான் பதிவின் மீள்பதிவு :  by Kalakumaran



Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)