Followers

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, April 14, 2014

நினைவெல்லாம் நித்யா !!




ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தோட்டத்து பங்களா.... சேர்த்து அணைத்த இருட்டு கருக்கொண்ட நிசப்தமான இரவை மரக்கிளைகளில் படபடத்த பட்சிகளின் சிறகுகளின் சப்தத்தை விடவும், விசு விசுத்து கிளம்பி இலைகளை பட படக்க வைத்து ஏற்படுத்திய.... ஹோ.... வென்ற ஓசை சன்னல் திரைச்சீலைகளை கிச்சு கிச்சு மூட்டி உள்ளே புகுந்தது காற்று.

இலைகள் விலக்கி புகுந்த நிலவின் கீற்றொளி ஏனோ ஒரு அமானுஷ்ய காட்சியை வெளிச்சம் போட்டு காட்டியது.

பங்களாவிற்கு சற்று தொலைவில் இருந்த மரத்தின் சிறு கிளைகளின் அசைவுகள் ஏதேதோ பேசுவதைப் போல இருந்தது.

பூமிக்குள் இருந்து மேலே கிளம்பிய வேர்கள் சட சடவென வளைந்து நெளிந்து பங்களாவை நோக்கி தன் கரங்களை அசைத்து திறந்திருந்த சன்னலினுள் புகுந்து கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அவளின் கால்களையும் கைகளையும் சுற்றி வளைத்து அப்படியே சுருட்ட

“ ஹக் ”



( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )


பட படத்த நெஞ்சைப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்த அவளுக்கு குப்பென வியர்த்து கொடிட்டியது தேகம் முழுவதும்.

இது கனவுதான் என்பதை அவளுக்கு உணர்த்தினாலும்...ஏன் இப்படிப்பட்ட கனவுகள் தனக்கு வருகிறதென்பது தெரியவில்லை அவளுக்கு..
அவள் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது.

கனவில் நடக்கும் சம்பவங்களை விடவும் சில சமயங்களில்.., நிஜத்தில் நடப்பவைகள் இன்னும் புதிராக தோன்றி மறைந்தது.

ஜன்னலின் பக்கம் செல்லவே பயமாக இருந்தது. அந்த மரத்தை வெறித்து பார்க்கும் பொழுதெல்லாம் ஏதேதோ பேசும் குரல்கள் கேட்டது... இதை எல்லாம் அவரிடம் சொன்னாலும் ஏதும் கேட்பதே இல்லை...,

பித்து பிடித்தவள் பேசிய பேச்சுகளாகவே அவருக்கு படுகிறதா?

நான்கு வயதிலும் ஒன்னறை வயது கைக் குழந்தையையும் வைத்துக்கொண்டு தான் படும் கஷ்டங்கள் ஏன் அவருக்கு புரிவதில்லை.?
மாமனாரும் அத்தையும் துணைக்கிருப்பது அவளுக்கு ஒரு ஆறுதல்.

ஓவியாவின் போக்கும் வர வர சரியில்லை அந்த மரத்தின் பக்கம் போகாதே என்றால்,,,சொல்வதை கேட்பதே இல்லை.. பார்த்துக் கொண்டிருந்த போதே மரத்தின் மீது தன் காதுகளை வைத்து என்னவோ... பேசிக் கொண்டிருந்தாள்

“....வா...டீ...ஈ ””

என கூப்பிட்டு ரெண்டு சாத்து சாத்தினாள் ஆனால் அழுவதற்கு பதில் அவள் கண்களை மலங்க வெறித்து அவளையே பார்த்தாள்.

குழந்தையின் தள்ளுவண்டியை ஒரு நாள் மரத்திடம் தள்ளிக் கொண்டு போனாள்.

தனக்கு தெரிந்து அத்தையும் மாமாவும் அந்த மரத்தின் பக்கம் செல்வதேயில்லை...

அவர்களும் அந்த மரத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லை.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

ஒரு நாள்

“...சு...ரே...ஷ் ”

கூப்பிட்டு கொண்டே ஓடினாள். அவன்...வெளி ரோட்டை நோக்கி ஓடினான் கொஞ்ச தூரம் சென்று பார்த்தும் அவன் அவள் கண்களுக்கு தட்டுப்படவில்லை வெறும் இருட்டு மட்டுமே நீண்டிருந்தது.

சில சமயம் காணாமல் போன மூத்த பையன் அந்த மரத்தினடியில் நிற்பது போல் தோன்றும்

ஒரு நாள் ஓவியா ”...பொலிஸிர்கு சொல்ல...லியா...? என வார்த்தைகள் உதிர்த்தாள்.

ஏன் ? எதுக்கு ??

”அண்ணா வை கண்டுபிச்சி குடுப்பாங்கல்ல...”

”..யார் உனக்கு சொன்னா? ”

கேள்விக்கு பதிலாய்.... அந்த மரத்தை நோக்கி கை நீட்டினாள்.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )



சில தினங்கள் கழிந்து அதிசயமாக பூத்துக் குழுங்கியது அந்த மரம். ஒடிந்து விழுந்த பூங் கொத்தை முகர்ந்து பார்த்த அத்தை மூர்சையாகி விழுந்தாள். சரியாக ஒருவாரம் இருக்கும் நினைவிழந்த நிலையில் இறந்து விட்டாள்.

மாமனாரும் யாரையாவது வரச் சொல்லி அந்த மரத்தை வெட்டிப் போட வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்தார். சரியான ஆள் கிடைக்கவில்லை. இரண்டு மாதங்களின் பின்னே அந்த மரத்தையே வெறித்துப் பார்த்தபடி அதன் அருகில் போனார். நிலத்தின் அடியிலிருந்து குபு குபுவென கட்டெரும்புகள் அவர் உடல் முழுதும் ஏறியது தடுமாறி விழுந்தவர் பின் எழவே இல்லை.

அவ்வப் போது பையனின் நினைப்பாகவே இருந்தது. இரவு நேரங்களில் இரண்டு கைகளாலும் அத்தானின் நெஞ்சை குத்தி சட்டையைப் பிடித்து பையன இன்னும் தேடி கண்டுபிடிக்காம இருக்கியே த்தூ...என சிலுப்பினாள். அவன் ஏதும் பேசாமல் மெளனி யாகி விட்டான்.

சிலசமயங்களில் இருப்பு கொள்ள மாட்டேனெகிறது. என்ன எளவு ...நாய் பொளப்பு என சலித்த அவளுக்கு கண்களில் நீர் முட்டியது.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

வெட்டிப்போடப்பட்ட மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த அவனுக்கு நித்யாவின் போக்கு மிகுந்த கவலை தருவதாக இருந்தது. அவள் ..அவள் செய்த காரியத்தை நினைத்தால் .... கிர் என்ற தலையை பிடித்து கொண்டான்.

பையன் காணமல் போய்விட்ட ஏக்கம் அவளை நிரப்ப பாதித்து இருப்பது புரிந்து கொள்ள முடிந்தது.

அவளிடம் பேச்சு கொடுத்து பரிசோதனை செய்த டாக்டர் அதைத்தான் சொன்னார். அவனுக்கு புரியாத வார்த்தைகள் சொன்னார் அந்த பாதிப்பு கொஞ்ச காலத்திற்கு பிறகு சரியாகி விடும் என்றார்.

அவன் முடிவெடுத்து விட்டான் இனி இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை. அவள் செய்த காரியம் அவளுக்கே தெரியவில்லை. எதுவோ தன்னை தாக்க வருவதாக நினைத்து பலமாக தள்ளிவிட்டு அந்த பிள்ளையின் சாவுக்கு காரணமாகி விட்டாளே. யாருக்கும் தெரியாமல் மறைத்தாலும் அவன் மனது கேட்கவில்லை....ஓ..வென பீரிட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்தது. அவன் உடல் குலுங்கியது. கண்கள் சிவந்து போயிருந்தது. தாரை தாரையாக கண்ணீர் ஓடிய தடத்தை இரண்டு கைகளாலும் அழித்தான், கெட்ட சம்பவங்களோடு சேர்த்து.

சாமான்களை ஏற்றப் பட்ட வாகனம் வெளிச்சக்கீற்றை மறைத்து புழுதி பறக்க அந்த இடத்திலிருந்து புறப்பட்டு சென்றது நிசப்தத்தை கரைத்து.

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )

நினைவெல்லாம் நித்யா !! கதையாக்கம் : கலாகுமரன்

( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o ) ( o ) ( 0 ) (o )




Download As PDF

Friday, September 21, 2012

ஒரு கோப்பை தேனீர்... [கதை]



கிழக்கு இன்னம் வெளுக்கல.  காதோரம் 'ஙொய்' ன்னு கொசுக்களோட ரீங்காரம் கேட்டுக்கிட்டிருந்திச்சு.

ஏனோ இன்னைக்கு விடியறதுக்குள்ள விழிப்பு வந்திடிச்சி.

தாடிச்சாமியின் பொருமளுடன் இருமல் சத்தம் கேட்டது.  நாய்களின் குறைப்புகளும் நின்று போயிருந்தது. அழுக்குப் பிடித்த டவுசரினுள் பீடி ஏதேனும் தட்டுபடுகிறாத வென தேடினான்.  சிக்கிடுச்சி.

நெருப்புப் பெட்டி அந்த மண்டபத்தின் வெளி மூலையின் இடவாரத்திட்டின் மேல் கைவிட்டு துழாவினான் கிடைத்தது. பெட்டியின் ஓரத்தை உள்ளங்கையால் தேய்த்து கைகளை குவித்து சரக்கென குச்சியை இழுக்கப் பற்றிக்கொண்டது உதடுகளில் பீடியை வைத்து நெருப்பு காட்டி உறிஞ்சினான். உப்பென வானத்தை நோக்கி ஊதினான்.

முப்பது வருடத்திற்கு முன் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இந்த கலியாண மண்டபத்தின் பின்புரம் தான் மழைக்கு ஒண்டிக்கொள்ள இடமிருந்த இந்த திட்டுதான் வீடு.

அப்ப இளமை முறுகென்ன.. அவளுக்கு அப்போது எட்டுமாத குழந்தை இருந்தது. அந்த குழந்தையை தூக்கிகொண்டு ஒருநாள் ராத்திரி எங்கோ ஓடிப்போய்விட்டாள்.  அப்போது அவளை எவ்வளவு அடித்து உதைத்திருப்பேன்.

இபோது வயதான அனாதையாய்...சீப்பாத்திகிட்டிருக்கோம்.  ஆனாலும் மிச்சமீதி தெம்பு இருக்குகிற வரை குப்பைய அள்ளி கொட்டுறதால ஏதாச்சு கிடச்சிட்டிருக்கு.

சைக்கிளின் கரக் முரக் சப்தத்துடன் பால்காரனின் சைக்கிள் கடந்து போனது.

கிழக்கு வெளுத்திடுச்சி, நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தான். டீ தண்ணி குடிச்சா தேவலயாயிருக்கும் ஆனா போன உடனே அவன நமக்கொன்னும் வெரசா டீ போட்டு தரமாட்டான்.  காத்திருந்து தான் வாங்கிக்கோனும்.

மட்ட சாலை டீ கடையின் எதிர் புறத்தில் பார்வைக்கெட்டும் வகையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டான்.  இங்கிருந்து நாயர் கடை தெளிவாக தெரிந்தது.

மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் பட்டை போடப்பட்ட பாய்லர் தெரிந்தது. கிழவி வாசல் தெளித்துக்கொண்டிருந்தாள்.  ஜனங்கள் இரண்டு மூன்று பேராய் வந்து கொண்டிருந்தார்கள்.

புகைந்தது..பாய்லருக்கு நெருப்பு பத்த வைச்சாச்சி.

இவங்க பேசுறது ஒன்னும் அவனுக்கு வெளங்குவதில்லை.

எத்தனையோ வாழ்க்கை சம்பவங்கள் அவனுள்ளே அமிழ்ந்து மங்கிப் போயிருந்தது.

இந்த ஊரில் ஏதேனும் சுத்தப்படுத்தும் வேலை கொடுக்கிறார்கள். உணவு கொஞ்சம் கொடுக்கிறார்கள். அப்பப்ப காசு பணம் கொடுப்பாங்க. இவ்வளவு வேணும்னு கேக்கறதில்லை.

வரக்.. வரக்.. என புழுதி படிந்த தலையை சொறிந்து கொண்டான்.  கடை முன்னுக்கு போய் நின்றான்.

வந்துட்டியா...சங்கரா..அப்படி ஓரமா உட்காரு கூப்பிடுரேன் போ...கடுப்படித்தான்.

இந்த கடைய விட்டு இந்த ஊரை விட்டு வேறு ஊரு போக ஏனோ பிடிக்கவில்லை.

அவனுக்கு கொஞ்சம் தள்ளி.. ஆவென வாயை பிளந்து நாக்கை சுழற்றி இவனையே பார்த்துக்கொண்டிருந்தது நாய் ஒன்று.
வால் மேலும் கீழும் ஆடிகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தது. நம்ம கவனிக்கரத்துக்கு ஒரு சீவன்.

ஏய் ந்தா..

இரண்டு கைகளாலும் டீ தம்ளரை வாங்கிக்கொண்டான்.

வேரென்ன..?

ரெண்டு பன்னு..கசங்கிய பத்துரூபாதாளை நீட்டினான்.

பாதி பன்னை அந்த சீவனுக்கு போட்டான்.

அஹா...இந்த டீ இன்னிக்கு ஏனோ இம்புட்டு ருசியாருக்கு..சுவைத்து குடித்தான்.

******************************************************************************
அதீதம் மின் இதழில் இக்கதை வெளியாகியுள்ளது  அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், லிங்க்;
http://www.atheetham.com/?p=2695
Download As PDF

Thursday, September 13, 2012

இசை...நா...நீ [ ஒரு பக்க கதை ]



நிசப்தமான இரவு  டிக்..டிக்..டிக் கடிகாரத்தின் ஒலி;
தென்னைமரங்களின் அசைவுகள் எனக்கு வினோதமாய் தோன்றுகிறது பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தில் ;

திறந்திருக்கும் சன்னலின் வழியே ஸ்...எனும் ஓசையுடன் சில்லெனும் தென்றல்;  முகத்தை வருடி செல்கிறது.

எழுதிக் கொண்டிருக்கிறேன்..கணிப்பொறியில்;

ஹெட்போனை காதில் மாட்டிகொண்டு கோமெட் ப்ளேயரில் இசையை ஓட விடுகிறேன்.

உயிரின் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடலற்ற இசைக் கோர்வை.
எவ்வளவு காலங்களானாலும் இசைக்கு வயதில்லை என்றும் அதே இளமை துள்ளலுடன்...

கண்களை மூடி நாற்காலியில் சாய்கிறேன்.....

முகத்தின் முன்விழும் சிறு முடிக் கற்றையை கைகளால் ஒதுக்கிவிட்டபடியே கேட்கிறாள்

மருதமலை கோயிலுக்கு போயிருந்தோம்.  என் கன்னத்தைப் பிடித்து.....

நெற்றியில் திருநீரு வைக்கிறாள்.
கண்களில் விழும் திருநீற்றுத்துகள்களை உஃப் பென ஊதிவிடுகிறாள்.

ஆ காட்டு மீதமிருந்த பாதி லட்டை வாயில் தினிக்கிறாள். நந்தவனத்தில பூப்பறிக்கனும் என்னோட வரியா...பதிலை எதிர்பாராமல் கைபிடித்து இழுத்து செல்கிறாள்...

மழைத்தூறல் விட்ட  சாயங்கால இள மஞ்சள் வெயில் மாலைப்பொழுது மரங்களினுடே புகுந்து வருகிறது..ஏதோ ஒரு உலகத்திலிருப்பது
போன்று உணர்கிறேன்.....

ஸ்..ஹோ..தொடந்து வரும் காற்றின் ஓசை...

தோட்டத்து வயல் வரப்பு வாய்கால்களில் சலசலத்து செல்லும் நீர்,
வளைந்து வளைந்து செல்லும் பாதையின் இருபுறங்களிலும்
விதவிதமான வண்ண வண்ணப்பூக்கள்

பறக்கும் பூக்களென படபடத்து செல்லும் வண்ணத்துப்பூச்சிகள்...

ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்க மலர்களின் வாசனையோடு மண்வாசனையும் ;

ஆஹா..மனோரஞ்சிதம்..துள்ளிக்குதித்தோடினாள், கொலுசின் சினுங்கல்களுடன்

அந்த பச்சை மஞ்சள் கலந்த மலர் ஏதோ ஒரு  பழத்தின் இனம்புரியாத சுவையான... வாசனை. அவளுக்கு மிகப் பிடிக்கும்

பூவை பறிக்க முயற்சித்தாள் விரலில் முள் குத்த ஸ் ஆ...கையை உதறுகிறாள்.முள் குத்திய வலி உணர்கிறேன்.

அம் மலர்களை பறித்து கொடுக்கிறேன். என் விரல்களில் துளிர்க்கும் ரத்தத்துளிகள்... எனக்கு வலி இல்லை.

இதில உட்காரேன்...உட்கார்ந்தேன் வீழ்ந்து கிடக்கும் தென்னை மட்டையில்  இரு கால்களையும் சற்று உயரே தூக்கிக் கொள்கிறேன்.  இழுத்து கொண்டு ஓடுகிறாள்

வேகமாக...வே...க..மா..க..இன்னும் வே..க..மா..க ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வு.

மேகங்கள் என்னை கடந்து செல்கின்றன அதே வேகத்துடன்...

ஹ..ஹா..உம்..ஹி..ஹி..ஹ..ஹா

அவள் சிரிப்பு ஒலி மட்டும் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டே இருக்கிறது...

சட்டென நிசப்தம்...

அடுத்த இசை...

என் சிறு வயது நினைவுகளை சிதறடித்து  இது தான் நிசமென்கிறது ;

இசை...நான்..நீ...

=====================================================================
இக்கதை அதீதம் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.  [ திரு. வாமணன், திரு.எல்.கே அவர்களுக்கு எனது நன்றி ]  இதன் லிங்க்

http://www.atheetham.com/?p=2413


Download As PDF

Tuesday, March 13, 2012

புது வீட்டிற்கு வந்த விருந்தாளி ! (கதையாக்கம் : கலாகுமரன்)



    மாலை சூரியன் சுட்டெரிக்கும் தன் கோபக் கனல்களை சுருட்டிக் கொண்டிருந்தான் பால் வெள்ளை முகங்காட்டிச்சிறித்த நிலவின் அந்த அந்தி மாலைப்பொழுதில் ஓய்வாக பால்கனியில் அமர்ந்திருந்தேன்.

ஒரு திருமண வரவேற்பு நிகழ்விற்கு என் மனைவியும் மகளும் சென்றிருந்தார்கள்.

எதிரில் இருந்த அந்த சிறிய மரத்தில் இரு குருவிகள் கீச் கீச் என மாறி மாறி கூப்பிட்டுக் கொண்டிருந்தது, என் நினைவுகளை பின்னோக்கி தூண்டியது.

ஊரின் சந்தடிகள் சற்று குறைந்த தூரத்தில், பல வித மரங்களும், தென்னை மரங்களும், வாழைகளும், கரும்பு தோட்டங்களும் சூழ்ந்த ஒரு ரம்யமான சுழலில் ஆரம்பிக்கும் நிலத்தில் பலவித சிரமங்களுக்கிடையே என் தந்தை ஒரு சிறு இடத்தை வாங்கி போட்டார்.

அவர் மறைவுக்கு பின், அவரில்லாமல் அவரின் ஆசையை பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நானும் பலவித கஷ்டங்களின் இடையே ஏதோ ஒரு உந்துதலில் நமக்கும் ஒரு இனிமையான சொந்த இல்லம் வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் வீடு கட்ட ஆரம்பித்த அந்த பசுமையான நினைவுகள் என் மனதில் மின்னி மறைந்தது.

இது நடந்து நான்கைந்து ஆண்டுகள் இருக்கும். கட்டிய இந்த புது வீட்டிற்கு ஒரு வாரத்தில் வாடகை வீட்டை காலி செய்து சந்தோசத்துடன் குடி புகுந்திருந்தோம்.

என் மகளுக்கு அப்போது எட்டு வயதிருக்கும் அவளை ஒத்த வயதுடைய மனைவியின் அக்காளின் ஒரு சிறுமியும், மூன்று வயது குறைந்த மற்றொரு குழந்தையும் ஆக மூன்று பேரும் அந்த மாலை நேரத்தில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பா..., அப்பா சீக்கிறம் வாங்கப்பா.. என்ற மகளின் குறல் கேட்டது.

என்ன ஏதோ பிரச்சனையா? ... என்று நினைத்து வாசலில் எட்டிப்பார்த்தேன்.

மூவரும் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அருகில் சென்று பார்த்தால் ஒரு சிறு குருவி நிற்காமல் அமர்ந்திருந்தது கீச்... கீச் என கத்திய படி அந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தது.

அந்த குருவி பார்பதற்கு மிக அழகாக இருந்தது சிறிய குஞ்சு போல் தெரிந்தது. அதன் உச்சந்தலை முதல் வால் வரை கரு நீலமாகவும், கழுத்துப்பகுதியில் இருந்து உடல் முழுவதும் இள மஞ்சள் வண்ணமுமாக அந்தி மாலைப் பொழுதின் சூரிய ஒளியில் அதன் உடல் மின்னியது.

அந்த குருவிக்கு ஒரு காலில் எப்படியோ அடி பட்டிருக்கும் போல இருந்தது. அதனால் சரிவர நிற்க முடியவில்லை. சற்று நடுங்கியபடி, அது எங்களைப் பார்த்து கீச்... கீச்... என கத்தியது. அதற்கு எங்களை கண்டு எவ்வித அச்சமும் இல்லை. அடிபட்ட தால் தான் அந்த நடுக்கம்.

என் மகள் வீட்டின் உள்ளே ஓடிச் சென்று ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள். அதை வாங்கி குருவியின் அருகில் வைத்தேன். சுற்றும் முற்றும் பார்த்து கீச்... கீச்... என கத்தியது.

குழந்தைகளை சற்று விலகி இருக்கச் செய்தேன். மெதுவாக அது தண்ணீர் குடித்ததை பார்த்து குதூகளித்தார்கள்.

சற்று நேரத்தில் சூரியன் தன் கிரணங்களை ஒழித்து வைத்துக் கொண்டான்.
இருளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்து.

சிறுமிகள் மூவரும் அப்பா, அப்பா ப்ளீஸ் பா.. இதை நாமளே வளர்க்கலாம்...என கெஞ்சினர். குருவி இப்போது எங்கும் செல்ல முடியாத நிலைமை. நம்மை நாடி அடைக்கலம் வந்துள்ளது. என்ன… இருந்தாலும் காலையில் பார்க்கலாம்...சரி என்று அதை மெதுவாக கையில் பிடித்தேன். எவ்வித எதிர்ப்பும் அது காட்டவில்லை.

ஒரு சிறிய மரப் பெட்டி வீட்டில் இருந்தது அதன் ஒரு பக்கம் நடுவில் உடைந்திருந்தது. பெட்டியை தலைகீழாக கவிழ்க்க சொன்னேன். இப்போது அது பார்க்க ஒரு கதவு இல்லாத வீடு போல் இருந்தது. சிற் சில இடங்களில் பெட்டி உடைந்திருந்ததால் காற்றோட்ட வசதி இருந்தது.


ஹாலின் ஒரு ஓரத்தில் பெட்டியை வைத்து அதனுள் பாதுகாப்பாக குருவியை வைத்தேன் அது ஒரு புறமாக தவ்வி ஒடுங்கிக்கொண்டது. ஒரு கைப்பிடி அரிசியை அதன் அருகில் வைத்தேன். அதை கண்டு கொள்ளவில்லை. நீர் நிறைந்த கிண்ணத்தை சற்று தள்ளி வைத்தேன். பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று சிறு புத்தகத்தை வாயில் போன்ற பகுதியில் வைத்து மறைத்தேன்.

இரவில் சாப்பிடும் போது மனைவி கேட்டாள் " இத வளர்க்க போறீங்களா? ..

“இல்லை...” என தலை அசைத்தேன்.

குழந்தைகள் விட வில்லை. " இல்ல நாம இத வளர்க்களாம்ப்பா...

அவர்களுக்கு தெளிவு படுத்தினேன். இதை வளர்க்க கூண்டு வேண்டும். அதில்லாம ஒரு குருவியை மட்டும் தனியா வளர்க்க மாட்டாங்க... சுதந்திரமா பறந்து திரியர அத கூண்டிலடைத்து வளர்ப்பது பாவம் இல்லையா..

ஏதேதோ பேசிப்பின் உறங்கச் சென்று விட்டோம்.

இரவின் சில நேரங்களில் அது கீச்..கீச்.. என கத்துவதும் சிறிது அமைதியாவதுமாக இருந்தது.

மீண்டும் காலையின் அதன் கீச் கீச் ஒலியைக் கேட்டு விழித்துக் கொண்டேன். நன்றாக விடிந்திருந்தது. சிறிது நேரத்தில் குழந்தைகளும் விழித்துக் கொண்டனர்.

குருவியை கையில் மெதுவாக எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றோம். அப்பொழுது தான் கவனித்தேன் அதையொத்த மற்றொரு குருவி ஒன்று கீரீச்.. கீரீச்... என கத்திய படி சுற்றி சுற்றி பறந்தது. அந்த குருவி இதன் துணையாக இருக்கவேண்டும். ஆணா? பெண்ணா? தெரியாது.
இதை குஞ்சு குருவி என ஆரம்பத்தில் நினைத்தேனே. இதன் வளர்ச்சியே அவ்வளவுதான் என புரிந்து கொண்டேன்.

மெதுவாக தரையில் விட்டேன். அது இப்போது சற்று சுதாரித்து நின்றது.

இதை பறக்க ஊக்குவிப்பது போல் குறுக்கும் நெடுக்குமாக சுற்றிச் சுற்றி இதன் இணை கீரீச்...கீரீச்.. என கத்தியபடி பறந்தது.

நான் மற்றும் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இந்த குருவியும் பறந்து தாழ்வான மரத்தின் கிளையில் சுதாரித்து அமர்ந்தது.

அது அங்கிருந்தே கீச்...கீச்.. என எங்களைப் பார்த்து கத்தியது. அது நன்றி சொல்வது போல இருந்தது.

இதற்கிடையில் புதரில் தவ்வி தவ்வி பறந்தது. அதனுடன் பாதுகாப்பாக இணைக்குருவியும் வழி நடத்திச் சென்றது. அதற்கு முழுவதும் குணமாக இன்னும் சில தினங்கள் ஆகும்.

ஒரு வித பரவச உணர்வு எனக்குள் ஏற்பட்டது. குழந்தைகள் குதூகளித்தனர் " போயிருச்சு....போயிருச்சு...என சப்பதமிட்டனர்.

அந்த சிறிய பறவைக்கு இவ்வளவு மன தைரியத்தை கொடுப்பது எது? தனது இனத்தை எப்படி பாது காக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னை தேர்த்திக் கொள்ளும் பக்குவம். போராடி வாழ வேண்டும் என்ற உந்துதல். இயற்கை எவ்வளவோ இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

இயந்திரத்தனமான இந்த உலகத்தில் சுயநலம் மிகுந்தவன் மனிதன் தான். எவ்வளவோ விசயங்களை கற்றுக்கொள்ளாமல் இருக்கிறான்.

*********************************************************************************
இக்கதையை அதீதம் தளத்தில் வெளியிட்டு சிறப்பித்த திரு.L K அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)