Followers

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Saturday, February 21, 2015

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்

குழந்தையிடம் இருந்து தாய்க்கு ஸ்டெம் செல் பறிமாற்றம்
கர்பிணிகள் உடலில் செல் பறிமாற்றம் பற்றி இந்த பதிவு.

இதுபற்றி இரண்டு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன 1. கருவுற்ற பெண் வயிற்றில் வளரும் குழந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் (குருத்தணுக்கள்) தாய்க்கு கடத்தப்படுகின்றனவா? 2. அதன் மூலம் பழுதடைந்த செல்கள் தாயிடம் புதுபிக்கப் படுகின்றனவா?

Can a pregnant woman get stem cells from her
baby? And can they repair damage in her body?

தாய் கருவுற்று இருக்கும் போது, தாயிடம் இருந்து குழந்தைக்கு ப்ளஸென்ட்டா (placenta) வழியாக செல்கள் பரிமாற்றம் செய்யப் படுகின்றன.  ஒரு ஆய்வின் படி 80 சதவீத தாய்மார்கள் செல்லுக்கு "Y " குரோமோசோம்கள் ஆண் குழந்தையிடம் இருந்து கடத்தப்படுகின்றன. அப்படி கடத்தப்படும் அவை தாயின் இரத்த செல்களில் கலக்கின்றன.  உடம்பில் இயற்கையாக இருக்கும் இம்யூனல் சிஸ்டத்தின்படி தற்காப்பு நடவடிக்கையாக சில மணி நேரங்களில் அவை அழிக்கப் படுகின்றன.  

ஆனால் முழுமையாக அழிக்கப்படாத திசுக்கள் தாயின் உடலில் ஒரு பகுதி திசுவாக தங்கிவிடுகின்றன.

அதே போல குழந்தையின் உடம்பிலும் தாயிடம் இருந்து கடத்தப்படும் செல்கள் திசுக்களாக குழந்தையின் உடம்பில் தங்கிவிடுகின்றன.  தாயிடம் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட செல்கள் குழந்தையின் உடலில் அது ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் குழந்தையின் உடலில் குடிபுகுந்து விடுகிறது. அதாவது மரபணுகள் விதைக்கப்படுகின்றன.
 இந்த சுழற்சியை உற்று நோக்கினால் பரம்பரை பரம்பரையாக இந்த செல் கடத்தல் நடத்தப்படுகிறது.  எலிகளிடத்திலும் ஏன் மனிதர்களிடத்திலும் நடத்தப்பட்ட ஆய்வில் தாயின் லிவர், கிட்னி, மற்றும் தைராய்ட் சுரப்பிகளில் குழந்தையிடம் இருந்து கடத்தப்பட்ட மரபணு செல்கள் காணப்படுகின்றன. அந்த புதிய செல்கள் தாயின் உடம்புச் செல்களை போலவே வளர்கின்றன.


இன்னொன்றை சிந்தித்துப்பார்த்தால் மனித உடலில் பல பரம்பரை செல்கள் இருக்கும் போல தெரியுதே. (humans involve cells from several generations)
இத்தகைய செல் பறிமாற்றத்தால் தாய்க்கு இம்யூனல் சிஸ்டம் பாதிப்பு ஏற்படுகிறது என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது.

அப்படிப்பட்ட ஆய்வில், ஆண்பிள்ளைகளை பெற்ற தாய்மார்களில் 20 ல் 12 பேருக்கு செல் பறிமாற்றத்தின் காரணமாக தைராய்ட் சுரப்பியில் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நிரூபனமாகியுள்ளது. (குழந்தை பேற்றுக்கு பின் குண்டாகிப் போவதற்கு இதுதான் காரணமோ )

Download As PDF

Wednesday, October 30, 2013

ஐம்பது ரூபாய்க்கு எழுதிய சினிமா பாட்டு - கவிஞர் வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து, தலைமுறைகள் தாண்டித் தடம்பதித்து நிற்பவர். 15000 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டாலும் அவர் பாடல்களில் இன்னும் நவீனமும் உயிர்ப்பும் குறையவில்லை. ஒரு பொன்மாலைப் பொழுதில்..,

கவிதை என்பது உயிர் உந்துதல் -வைரமுத்துவின் நேர்காணல் தி இந்து தீபாவளி 2013 மலரில் வெளியாகி உள்ளது. (பேட்டி கண்டவர்: அருள்செல்வன்)


நீங்கள் பிரமிப்புடன் பார்த்தவர்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் சமகாலத்தவர்களுக்கும் எழுதியிருக்கிறீர்கள், உங்கள் பிரமிப்புடன் பார்ப்பவர்களுக்கும் எழுதுகிறீர்கள். என்ன வேறுபாடு உணர முடிகிறது ? இந்த மூன்று தலைமுறை வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒப்பிட முடியுமா?
தலைமுறைகள் மாறினாலும் தமிழ் ஒன்றுதான். நான் வியந்து பார்த்தவர்களுக்கும் என்னை வியந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரிதான் உழைக்கிறேன்.  காரணம் தமிழ் என்பது யாருக்குப் போய்ச் சேர்கிறதோ அவர்களின் பெயரால் அழைக்கப்படுவதில்லை;  தமிழ் படைத்தவன் பெயரால் தான் அழைக்கப்படுகிறது.  அதனால் யாருக்குப் பாட்டெழுதினாலும் வைரமுத்து பாட்டா என்று அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பது என் கருத்து.  ஒரு பாணியை உண்டாக்கிட காலம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது.  என் சுவடுகளைப் பாடலில் விட்டுச் செல்ல ஆசைப் படுகிறேன்.

காலம் தோறும் பண்பாட்டு விழுமியங்கள் மாறுகிற போது என் அடிப்படைப் பண்புகள் குறைந்து விடாதபடி பார்க்கிறேன்.  ஹீதருக்குப் பாட்டெழுதினேன்.  அதன் பிறகு பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்தினம், ஷ்ங்கர் போன்றவர்களுக்கும் எழுதினேன்.  இன்று இளைய தலைமுறையினருக்கும் பாட்டெழுதுகிறேன்.

சமகாலத்தோடு என்னையும் என்னைச் சம காலத்தோடும் பின்னிப் பிணைந்திருக்குமாறு வரித்துக் கொண்டு பாட்டெழுதுகிறேன்.  பாடலும் நானும் பழையதாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறேன்.

கிராமத்திலிருந்து வந்த உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்?  இதற்கு காரணம் ஏதாவது உள்ளதா?  எந்த வயதுவரை சாமி கும்பிட நேர்ந்தது. ?

உணவு, உடை, கலாசாரம் எல்லாமே சொல்லிக் கொடுத்தது வருவதே பழக்கங்கள்.  குல தெய்வ வழிபாடு சிறந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவந்தான் நான்.  ஆகவே கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஒரு பழக்கமாக இருந்தது.  கோயிலுக்கு என் பெற்றோரோடும் உறவினரோடும் போய்க் கொண்டிருந்தேன்.  அதை ஒரு பழக்கமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

பின்னாளில் இந்த உருவ வழிபாடு பற்றி எனக்குக் கேள்வி வந்தது.  கடவுளுக்கு ஒரே உருவம்தான் இருந்திருக்க முடியும்.  கடவுளுக்கு உருவம் என்பது வடிவத்தில் இல்லை என்று தெரிந்தது.  அப்படி இருந்தால் சூரியனுக்கு ஒரு வடிவம், நிலவுக்கு ஒருவடிவம் மனிதனுக்கு ஒரு வடிவம் என்று இருப்பது. மாதிரி கடவுளுக்கும் ஒரே வடிவம் தான் இருந்திருக்க வேண்டும். என்று கருதினேன்.  ஆனால் கடவுளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருப்பதை பார்த்து குழம்பினேன்.  அந்த குழப்பம் வந்த போது கடவுளைக் கும்பிடுவதையும் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டேன்.

பின்னாளில் திராவிட இயக்க கொள்கைகளில் என்னைத் தோய்த்துக் கொண்ட போது என் கேள்விகளுக்கு விடை கிடைத்தது.  கடவுள் என்பது உருவம் சம்பந்தப்பட்டதல்ல உளவியல் சம்பந்தப்பட்ட தென்று புரிந்து கொண்டேன்.

அறிவியல் கருத்துக்களையும் உண்மைகளையும் பாடல் வழியே தமிழ் ரசிகர்களுக்குக் கடத்தியிருகிறீர்கள்.  இதற்கு உங்களுக்கு தூண்டுதல் எது?

நான் திரையுலகதிற்கு வந்த போது பாடல் மொழி களைத்துப் போயிருந்தது.  காதலைப் பாடி அலுத்துப் போயிருந்தது.  ஏறாளமான அற்புதமான பதிவுகளை எல்லாம் கவிஞர்கள் செய்துவிட்டு போயிருந்தார்கள்.  எழுதுவதற்கு எதுவுமில்லையோ எல்லாம் சொல்லிவிட்டார்களே,  நாம் எழுத ஒன்றுமில்லையோ என்கிற வியப்பும் அச்சமும் வந்தது.

அப்போது அவர்கள் சொல்லாத செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்டு வர வேண்டுமென்றால் எது சிறந்தது என்று யோசித்தேன்.   காதலைக் கூட விஞ்ஞானபூர்வமாகப் பார்க்க வேண்டும்; வாழ்கையைக்கூட விஞ்ஞான பூர்வமாக பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.   பாட்டு என்பது களிப்பூட்டுகிற கருவியாக மட்டுமல்லாமல், கற்றுத் தருகிற கருவியாகவும் இருக்க வேண்டும் என்றூ தீர்மானித்தேன்.

நான் ஏற்கனவே பியூசியில் விஞ்ஞான மாணவன். கடவுள் நம்பிக்கை அற்றவனுக்கு விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வரும்.  அதன்படி விஞ்ஞானச் செய்தியைப் பாட்டுக்குள் கொண்டுவந்து வைத்த போது பாட்டுக்கு அர்த்தமும் புது நிறமும் கிடைத்தன.

குத்துப் பாட்டு - குடிகாரப் பாட்டு என்று சினிமாவில் ஒரு கவிஞன் தள்ளப் படும் போது குற்ற உணர்ச்சி மற்றும் சங்கடம் இருக்குமா?

இருக்கத்தான் செய்கிறது.  மறைக்க விரும்பவில்லை நான் இதற்காகவா தமிழ் செய்ய வந்தேன் என்கிற கோபமும் சலிப்பும் இருக்கத்தான் செய்கிறது.  ஆனால் அதுவும் சேர்ந்ததே கலை என்று எனக்குத் தெரிகிறது.  சுத்தமான காற்றை எல்லோரும் சுவாசித்துவிட முடியாது.  நம் உடம்பே கரியமில வாய்வை வெளியேற்றும்படிதான் படைக்கப்பட்டுள்ளது.  ஆகவே நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்வும் கலையும்,  எனவே இரண்டுக்கும் உடன்பட வேண்டியிருக்கிறது.   நான் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறேன் என்றால் அது நல்ல் நுரையீரலாக இருக்க முடியாது.

இப்படிப்பட்ட பாடலை நான் எழுத மாட்டேன் என்று நீங்கள் எழுத மறுத்த அனுபவம் உண்டா?

மிகவும் கொச்சையாக எழுதச் சொன்னபோது அப்படி நான் சொன்னதுண்டு.  ஆடை கட்டிய வார்த்தையிலும் பாலுணர்வைச் சொல்ல முடியும் என்று போராடி மாற்றி எழுதிக் கொடுத்ததுண்டு.

முதல் தேசிய விருது, ஆறாவது தேசிய விருது அனுபவங்களை ஒப்பிடிவீர்களா ?

முதல் தேசிய விருது ஒரு பரவசம், சின்னதாக ஒரு ஆனந்தக் கண்ணீர்,  ஆறாவது தேசிய விருது ஒரு செய்தி.

நன்றாக எழுதும்போது குறைவாகக் கொடுத்தார்கள்; மோசமாக எழுதும்போது அள்ளித் தருகிறார்கள் இதுதான் சினிமா “ என்றார் வாலி, உங்களுக்கு இப்படி நேர்ந்ததுண்டா?

அவர் சொன்ன உண்மைகளில் இதுவும் ஒன்று.  வாலி சொல்லிவிட்டார்.  நான் சொல்ல முடிவதில்லை.

திரைப்படம்- பாடல் இன்று கேளிக்கை, கொண்டாட்டம் என்று பொழுது போக்குக் கலாசாரத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்கின்றனவே?

இது உண்மைதான்.  எல்லாக் காலத்திலும் பொழுது போக்கு இருந்திருக்கிறது.  உழைப்புக்குப் பிறகுதான் துய்ப்பு என்று இருந்தது போய்,  துய்ப்பே உழைப்பு என்று ஆகிறபோது ஒரு சமுதாயம் மேம்பட முடியாது.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துக்கு பங்களிப்பு செய்து விட்டுத்தான் துய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இது சம்பந்தமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீங்கள் எழுதியதில் குறைந்த சம்பளம் பெற்ற பாடல் எது?  அதிகம் பெற்றது எது?

குறைந்த சம்பளம் பெற்ற பாடல் முதல் பாடல்.  பாரதிராஜா ஐம்பது ரூபாய்க் கட்டைக் கொடுத்து எடுத்துக் கொள்ளச்சொன்னார்.  நான் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டேன்.  ‘ பொன்மாலைப் பொழுது’ பாடலுக்கு நான் எடுத்துக் கொண்ட சம்பளம் ஐம்பது ரூபாய்.  அதிகம் பெற்ற பாடல்கள் இப்போது எழுதிக் கொண்டிருக்கிற பல படங்கள்.

கடவுள் மறுப்புக் கொள்கையால் பக்தி சார்ந்த சிலவித பாடல்களை எழுதும் வாய்ப்பை இழந்திருக்கிறீர்களே?

அதைப் பற்றி நான் வருத்தப் படவில்லை.  கடவுளே அதுபற்றிக் கவலைப்படாத போது நான் ஏன் கவலைப் பட வேண்டும்.

திரைப்படம் பார்ப்பதில் நீங்கள் எந்த ரகம்?  அவ்வப்போது பார்பீர்களா? ஒரே நேரத்தில் பல படங்களையா?

தினந்தோறும் ஒரு படம் என்று பார்க்கிற வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.  புதிய படங்களோடு நான் பழைய படங்களின் ரசிகனாகவும் இருக்கிறேன்.

ரஜினி, கமல் இருவரிடமும் இறுக்கமான நெருக்கமான நட்பு உண்டு உங்களுக்கு, அவர்களிடம் வியந்த நிகழ்ச்சிகள் பல இருக்கும்.  ருசிக்க முந்திரியாக தலா ஒன்று கூறுவீர்களா?

ரஜினிகாந்த் உடல் நலம் தேறிவந்த போது அவரை முதன் முதலாகச் சந்தித்தேன்.  அந்த அனுபவங்களை அவர் விவரித்தார்.  அப்போது நான் ஒன்று தெரிந்து கொண்டேன். இவர் உணமையாகவே மனதில் பக்குவப் பட்ட மனிதர் என்று.  கிட்டத்தட்ட வாழ்வை இழந்து மீண்டும் பெற்று வந்த நிலையில் வாழ்வு, மரணம் இரண்டையும் சமமாகப் பார்கிற மனநிலையை எண்ணி வியந்தேன், ஆச்சர்யப்பட்டேன்.  எனக்குப் பெருமையாக இருந்தது.  உண்மையிலேயே வாழ்க்கை அவரைப் பழுக்க வைத்துப் பக்குவப்படுத்தியிருக்கிறது, என்று உணர்ந்தேன்.

கமலிடம் நான் பார்த்து வியந்தது ஒன்று உண்டு.  போர்க்களம் என்று ஒன்று வருகிறபோதுதான் ஒருவரது மேன்மை தெரியும்.  ‘விஸ்வரூபம்” படத்திற்குச் சிக்கல் வந்த போது அதை அவர் கையாண்ட விதம் அவர் மிகவும் பக்குவமான மனிதர், நெளிவு சுளிவு தெரிந்த ஒரு ராஜதந்திரி, எந்த நிலையிலும் வார்த்தைகளைச் சிதறவிடாதவர் என்று புரிந்து வியந்தேன்.  அந்த நிலையில் வேறு ஒருவராக இருந்திருந்தால் சிதறிப் போயிருப்பார்கள்.  தன் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அவர் பண்பு, மேலும் அவர் மேல் மதிப்பைக் கூட்டியது.

இந்த இருவரும் பக்குவத்தில் முழு மனிதர்களாகத் தெரிகிறார்கள்.

அனைத்துக் கட்சிகளிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள்.  அப்பழுக்கற்ற இலக்கிய நண்பர்களைக் கட்சிக்கு ஒருவர் வீதம் கூற முடியுமா?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நட்புக் கூட இலக்கியம் சார்ந்த நட்புதான்.  வைகோ அவர்களின் நட்பு இலக்கியம் சார்ந்ததுதான்.  பாரதீய ஜனதா கட்சியின் இல.கணேசன் நல்ல இலக்கிய நண்பர்.  கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் இலக்கியம் பேசும் நண்பர்.  காங்கிரஸில் குமரி அனந்தன்.  இப்படி நண்பர்கள் இருக்கிறார்கள்.  அ.தி.மு.கவில் நண்பர் காளிமுத்து முன்பு இருந்தார். அவர் இப்போது இல்லையே.

காகிதத் தமிழ் கணிப்பொறித் தமிழாகிவிட்ட சூழலில், நீங்கள் எப்படி வாகனம் மாற்றிப் பயணம் செய்கிறீர்கள் ?

மாறித்தானே தீர வேண்டும்.  வாகனங்கள் மாறியது மாதிரி.  நான் கட்டை வண்டியிலிருந்து விமானத்திற்கு மாறியது மாதிரி.  இந்த வாகனத்திற்கும் மாறித்தான் ஆக வேண்டும்.

கணினி யுகத்தில் தாய்மொழியில் படிப்பது குறையும் அபாயம் உள்ளதே ?

குறைந்து கொண்டே போகிறது என்பது கவலை தருகிறது.  மொழிக்கல்வி என்பது வயிற்றோடு சம்பந்தப் படுத்தப்பட்டால் தமிழ் தேய்ந்து போய்விடும்.  தாய் மொழி என்பது பண்பாட்டோடு சம்பந்தப் படுத்தப்பட்டது என்று நம்பினால் தமிழ் மொழி வளரும்.  தாய்மொழி என்பது உங்கள் கலாசாரத்தோடு தொடர்புடையது என்று பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.
Download As PDF

Tuesday, October 29, 2013

கரப்பான்களை ஒழிக்க ஐடியா கேட்ட பிரபல வலைபதிவர்

சமீபத்தில் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியாகி இருந்தது (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்). தலைப்பு இதுதான் “சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான் பூச்சி பண்ணை ”. பால் பண்ணை ,கோழிப்பண்ணை,ஆட்டுப் பண்ணை போல் இது என்ன ? இந்த கேள்விதான் படித்தவர்களின் எண்ணம். 

இந்தியா ஒரு கட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தது. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதி விலக்கல்ல.  என் தந்தை மற்றும் அந்த கால பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். கடுமையான பஞ்சம் தலை விரித்தாடிய அந்த கால கட்டத்தில் மக்கள் சப்பாத்திகள்ளியின் சதைப் பகுதியையும்,எலிகளையும், ஈசல்களையும் பிடித்து பொறியல் செய்து சாப்பிட்டதை கதை கதையாக சொல்வார்கள். 

சைனா காரர்கள் எதையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவார்கள் என்ற கருத்தும் உண்மையே. சிலவகை கூட்டு புழுக்கள், வெட்டுக்கிளிகள், கரப்பான் பூச்சிகளை வறுத்து சாப்பிடுகிறார்கள். தவளை சூப், இவைகள் அறுசுவை உணவின் ஒரு அங்கம்.   கரப்பான்களை உலரவைத்து மருந்துகள், அழகு சாதனப் பொருட்களில் பயன் படுத்துகிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னாடி ரகசிய கரப்பான் பண்ணை வைத்திருந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆனார். (சின்ன கல்லு பெத்த லாபம் !)
கொதிக்கும் நீரில் போட்டு இவற்றை கொன்று வடாம் காயவைப்பதை போல் காய வைத்து பயன் படுத்துகிறார்கள்.

சீனா மற்றும் தென்கொரிய பல்கலைக் கழகங்கள் இதற்கென்றே ஆய்வு துறைகளை வைத்துள்ளது.  பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன எதற்கு? இவைகள் எய்ட்ஸ், கேன்ஸர் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்தாகுமா? ஏன் இந்த எண்ணம் என்றால் அணுகுண்டின் கதிர்வீச்சை கூட தாங்கி இவை உயிர் வாழ்ந்திருக்கின்றன என்பது தான்.

சட்னி போல அரைத்து தலையில் பூச, சொட்டை தலையில் முடி வளரும் என்கிறார் 78 வயதான சீன வைத்தியர் ஒருவர். (உவ்வே...)
எதை தின்றால் பித்தம் தெளியும் ? என்ற கதைதான்.

இதைவிட கறை நல்லது என்ற விளம்பரம் போல ஐ.நா வும் பூச்சிகளை சாப்பிடலாம் தப்பே இல்லை என்று சான்றளிக்கிறது.

நம்முடைய பிரபலபதிவர் (தமிழ்வாசி பிரகாஷ்) வீட்டிலும் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.  என்ன செய்வது என்று பரிதவித்த அவருக்கு நம் சகாக்கள் சொன்ன அட்வைசை படியுங்களேன். (சீரியசான மேட்டருக்கு பின் கொஞ்சம் சிரிப்போமே..! )





Download As PDF

Tuesday, October 15, 2013

நிலப்பரப்பை கடல்கள் விழுங்கும் ஆபத்து


கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தாழ் நிலப்பரப்புகள் கடல் விழுங்கும் அபாயத்தில் உள்ளது. உலக அளவில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது.

கடல் மட்ட அளவானது, கடல் ஓரப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அலைகளின் போக்கு அளவீடுகள், மற்றும் சாட்டிலைட் கணக்கீடுகள் கொண்டு கணிக்கப் படுகிறது.

(Global mean sea level - GMSL) உலக கடல் மட்ட அளவிட்டு தரம் தெரிவிக்கும்  புள்ளிவிவரம் என்னவென்றால் கடந்த நூற்றாண்டில் 4 முதல் 6 இன்சுகள் ( 10 முதல் 20 சென்டிமீட்டர்கள்) கடல் மட்டம் உயர்ந்துள்ளது.  கடந்த 20 வருடங்களில் வருடத்திற்கு சுமார்  0.13 இன்சுகள் (3.2 மீட்டர்கள்) உயர்ந்து வருகிறது. முன்பிருந்ததை விட கடந்த 80 வருடங்களில் இருமடங்காக உயர்ந்துள்ளது.


கடந்த இரண்டாயிரம் வருடங்களில் கடல் மட்ட உயரம் இந்த அளவில் உயர்ந்ததில்லை. எப்போது பூமி வெப்பமயமாதல் பிரச்சனைக்குள்ளானதோ அப்போதிருந்து, அதாவது 19ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் இருந்து கடல் மட்ட உயர்வு ஆரம்பித்து விட்டது. உலக அளவில் தற்போது இருக்கும் மட்ட அளவை விட சராசரியாக மூன்று அடிகள் 2100ல் உயர்ந்திருக்கும்.

குறிப்பாக 1880க்கு பிறகு பெரிய மாற்றம் ஏதும் இல்லாது இருந்த கடல் மட்ட உயரமானது 1992 ல் இருந்து கனிசமாக உயர ஆரம்பித்தது என்பதை சாட்டிலைட் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது  OECD (Organisation for Econimic co operation and development)யின் கணிப்பு.


வரும் 2070 ல் பெரிய கடற்கரை நகரங்களில் 136 பெரிய கடற்கரை நகரங்களில் கடற்மட்டம் உயரும் அபாயம், வசிக்கும் 150 மில்லியன் மக்கள் கடல் நீர் மட்டம் உயர்வதால் பாதிப்படைவார்கள், அதனோடு 35 டிரில்லியன் டாலர் சொத்துகளும் சேதமடையும். உலக அளவில் 9% சதவீத இழப்பு(GDP). இது குறைந்த பட்ச கணக்கீடு


கடல் மட்டம் உயர முக்கிய காரணங்கள் :

1. உலக வெப்பமயமாதல் Thermal expansion
2. பனிமலைகள், பனிப்பாறைகள் உருகுதல் Melting of glaciers and polar ice caps: 
3. கிரீன்லாந்து மற்றும் மேற்கு அன்டார்டிகா பனி பாறைகளின் இழப்பு   Ice loss from Greenland and West Antarctica:

உலக வெப்பமயமாதல் கடல் மட்டத்தை உயர்த்த காரணமாகிறது. 


Thermal expansion :

பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்களால் வெளியாகும் வெப்பம் பூமியை சூடாக்கி வருகிறது. கார்பன் டையாக்சைட் மற்றும் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாயுக்களால் இது அதிகரித்து வருகிறது. கடந்த நூறு வருடங்களில் கடல் மட்டத்தினை சராசரியாக எட்டு இஞ்சுகள் உயர்த்தி விட்டது.  தற்போது எரிபொருட்டகளின் உபயோகத்தை நிறுத்தி வைத்தால் கூட வாயுக்களின் ஊடே அமிழ்ந்துள்ள வெப்பம் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு குறையாது என்கிறார்கள். அப்படியானால் எதிர்காலத்திலும் கடல் மட்ட உயரத்தினை தவிர்க்க இயலாது போகும்.


பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், கடல் நீரின் வெப்பம் உயர்கிறது. 80 சதவீத வெப்பம் கடலால் உறிஞ்சப்படுகிறது. கடல் மட்டம் உயர இதுவும் முக்கிய காரணம்.

வெப்பமான கடல் நீர், கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனி பாளங்கள், பனிமலைகளை உருக வைக்கிறது. கோடைகாலங்களில் அதிகமான உருகுதலும், குளிர் காலத்தில் பனி குறைவாக இருப்பதும்.


பூமியின் வெப்பம் அதிகரிப்பு ஏன் ? அதிக அளவில் எரிபொருள் எரிக்கப்படுவது, இயற்கை நடவடிக்கைகள், வெப்பத்தை தக்கவைத்து கொள்ளும் வாயுக்களின் உயர்வு, சூழல் மாசுக்களின் அதிகரிப்பு இப்படி பல காரணிகள்.

ஆறுவருடங்களூக்கு முன்னால் Intergovernmental panel on climate change (IPCC) ஐபிசிசி தெரிவித்த எதிர்பார்க்கும் குறியீட்டு அளவீட்டை காட்டிலும், எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் குறியீட்டு அளவீடு அதிகமாகி செல்கிறது.


கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பாதிப்புகள்.

  • நல்ல நிலங்கள் உவர்நிலங்களாக மாறும்
  • தாழ்வு நிலப்பரப்பு தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்
  • பறவைகள், தாவரங்கள், கடல் உயிரினங்கள் மற்றும் மீன்வள பாதிப்பு
  • மக்கள் இருப்பிடம், உயிர்சேதம் பொருள் இழப்பு
  • கடல் சீற்றம் அதன் பாதையில் உள்ள பகுதிகளை நாசமாக்கும்.

சாண்டி புயல் போல பல அதிதீவிர புயல்கள், சுனாமிகள் உருவாக புவி வெப்பமடைதல் தான் காரணம்.


படங்கள் பனிமலைகளும் பனிபாளங்களும் உருகிவருவதை காட்டுகிறது.






வரும் 2100 ல் 2.5 அடி முதல் 6 அடிவரை கடல் மட்டம் உயர்வு ஏற்படலாம் என கணிக்கப் பட்டிருக்கிறது. இந்த கூற்றின் படி நடந்துவிட்டால் உலகின் பல கடற்கரை நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

இதில் இன்னும் ஒரு ஆபத்து என்னவென்றால் பூமியின் வெப்ப சமநிலை பாதிப்பு ஏற்பட்டு கிரீன்லாந்தின் பனிமலை முழுவதும் உருகுவிட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இலண்டன், லாஸ் ஏஞ்சல் முதற்கொண்டு, மாலத்தீவு மணிலா, பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.


மாலதீவின் மக்கள் தொகை 3,94,000.  தலைநகரான மாலேவினை சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கடற்கரை சுவர்கள் கடல் சீற்றத்தில் இருந்து அரணாக பாதுகாக்கிறது.  இந்திய கடற்பிராந்தியத்தில் மாலத்தீவு கூட்டம் கடல் மட்ட அளவில் தாழ்வான நிலபரப்பு. 2100 அளவில் ஏற்படும் கடல்மட்ட உயரம் இத்தீவுகளை கபளீகரம் செய்யும் ஆபத்து உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது.

உலகின் அநேக கடற்கரை நகரங்கள் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது.

உலகநாடுகள் இணைந்து உலக வெப்ப மயமாதலை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது மிக மிக அவசியம்.   

labels : புவி வெப்பமாதல், கடல் மட்ட உயர்வு, விழுங்கும் கடல், Sea level Rise

Download As PDF

Friday, October 11, 2013

நானூறு மில்லியன் வருட பழமையான இயந்திரம்


கடந்த ஜூலை மாதத்தில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது அந்த செய்தி சொல்லும் சேதி இதுதான்.

ரஷ்யாவின் விலாடிவாஸ்டோவில் (vladivostok) அலுமினியத்தாலான 400 வருட பழமையான இயந்திர படிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

கம்ஷட்கா பெனின்சூலாவின் ஒதுக்குப்புரமான பகுதியில் அதாவது 150 மைல்கள் தொலைவில் உள்ள டைகில் எனும் கிராமத்தில் புதைபொருள் ஆராய்சியாளர்களுக்கு (செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த) புதை படிமம் ஒன்று கிடைத்தது. இது பற்றி யுரி குளோப்(Yuri Golubev)  என்பவர் இது ஒருவகையான கியர் மெசின் போல் இருப்பதாக தெரிவித்தார். இந்த இயந்திர படிமம் (fossil) 400 மில்லியன் வருட பழமையானது.

இந்த இயந்திர படிமத்தின் படமும் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி படிமம் பிரான்ஸில் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

Ancient machine gears embedded in rock

செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தில் யுரி குளோப் என்ற பேராசிரியர் இல்லை.

உண்மையில் இந்த படிமமானது பிரெஞ்சு மியூசியத்தில் வைக்கப்பட்டிக்கு, இதன் காணொளி 2007 ல் வெளிப்பட்டதாக தெரிகிறது.

பின் ஏன் ரஷ்யாவில் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டது ?

டூரிஸ விளம்பரத்திற்காக ரஷ்யாவில் இதுமாதிரியான செய்திகள் வெளியிடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்த காணொளியில் வெளியிடப்பட்ட தவறான தகவல் மெசின் படிமம் என்பது. ரஷ்ய செய்தி வெளிப்பட்டபோது இது குறித்து விஞ்ஞானிகள் நிலைத்தகவல் எதையும் வெளியிடவில்லை. இத்தகவல் உண்மையாக இருப்பின் அவ்வாறு விஞ்ஞானிகள் மெளனியாக இருக்க வாய்ப்பில்லை.

Weekly World News  எனும் செய்தி தளமும் தவறான தகவலை வெளியிட்டுள்ளது.


சரி உண்மை என்னவாக இருக்கும் ?

முதலில் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இயந்திரம் என்பதே ஒரு முரண்.

கிரிநாய்ட் அல்லது கடல் லில்லி என அழைக்கப்படும் கடல் உயிரினத்தின் படிமமாக (crinoids steam fossils) இது இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இது கடலடியில் 6000 மீட்டர் ஆழத்தில் வாழும் ஒரு உயிரினம்) இதனுடைய படிமமே பார்பதற்கு கியர்கள் உள்ள இயந்திரம் போல் தோற்றம் தருகிறது.



Labels : ஏன் எதற்கு எப்படி, crinoids,crinoids steam fossils,கடல் லில்லி,

Download As PDF

Monday, August 26, 2013

கொசுக்களை இயற்கையாக ஒழிக்கும் முறை - தம்பி தங்க கம்பி!


கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ;


நான், புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது.

மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது.  இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன்.  செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திகள்ளி உதவியது.

கொசுவின் முட்டைகள், லார்வா, பியூபா, அடல்ட் என இந்த படிநிலைகளை தாண்டித்தான் கொசுக்களாக உருவம் பெருகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன்.  அதிலிருந்து, "மீயூசிலே ஐஸ்" என்னும் வழுவழுப்பான திரவம் கிடைத்தது.


பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன்.  கொசுவின் "லார்வா' " க்களுக்கு உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன.  இச்சோதனையில் கொசுவின் கூட்டுப் புழுக்கள் முற்றிலும் அழிந்ததை நிரூபித்தேன்.

இது இயற்கை முறையிலானது என்பதால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.  புதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய அறிவியலை  "மேக் சயின்ஸ்"  (அறிவியல் உருவாக்கம்) போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதோடு 300 யூரோ  பரிசும் பெற்றேன்.

இளம் அறிவியல் விஞ்ஞானியாக ! உருவெடுக்கும் தம்பி தங்க கம்பியை பாராட்டுகிறேன்.

source of news : dinamalar dtd. 26.8.13
Download As PDF

Monday, August 5, 2013

ஆண்மை அதிகரிக்க‌ செய்யும் மருந்துக்காக கடத்தப்படும் கடல்பல்லிகள்

கடல் குதிரை போன்ற ஒரு கடல் உயிரினம் "கடல் பல்லி"  இவை சாதாரணமாக நம் வீடுகளில் காணப்படும் பல்லியை போன்றது கடலில் மட்டும் காணப்படும் இவை இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இது "பைப் ஃபிஷ்" என்றே குறிப்பிடப்படுகிறது.


இந்த உயிரினம் இந்தியாவிலிருந்து இலங்கை வழியாக சீனா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தபட விருந்த உலர வைக்கப்பட்ட கடல் பல்லிகள் தமிழக அதிகாரிகளால் சமீபத்தில் பறிமுதல் செய்யப் பட்டது.





மீன்களை பிடிப்பது போல இவைகளை பிடிப்பதில் என்ன பிரச்சனை ?சரி இவைகளை தடை படுத்தப்பட வேண்டிய அவசியம் என்ன ?

கடல் குதிரை மற்றும் கடல் பல்லிகள் இந்திய வனவிலங்கு பாது காப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த கடல்பல்லிகள், கடற்சூழலியலில் முக்கியமானதொரு பங்காற்றுவதால் அவற்றை பாதுகாக்கவேண்டியது அவசியம் என்கிறார் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் கடல்வாழ் உயிரியல் வல்லுநர் டாக்டர் தீபக் சாமுவேல்.


இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீனவர்களால் பிடிக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட இந்த கடல்பல்லிகளின் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் ஒன்றாக இந்த கடல்பல்லிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்காகவே இவை சட்டவிரோதமாக இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப் படுவதாகவும் தமிழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தமிழக மீனவர்களிடமிருந்து ஒரு கிலோ உலரவைக்கப்பட்ட கடல்பல்லிகள் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுவதாகவும், இங்கிருந்து இவை இலங்கைக்கு சென்றபிறகு அதன் மதிப்பு ஒரு கிலோவுக்கு பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாயாக அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விரிவான தகவலை இந்த  BBC  ஒலிப்பதிவில் கேட்கலாம்.
(இயக்குவதற்கு முன் ஒலி அளவை குறைத்துக்கொள்ளவும்...)

 
Source of News BBC dated 11 July 2013 17:29 ஜிஎம்டி


Download As PDF

Monday, June 11, 2012

மரங்கள் மற்றும் பறவைகளை காக்கும் கோவைபதிவர்களின் முயற்சி..!


கோவையின் நகரின் சுற்றுப்புரங்களில் மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு என கோவையின் அனைத்து முக்கியப் பகுதிகளும் மரங்கள் இல்லாமல் போய்விட்டது.   சீசன் மழையும் பெய்யவா..? என யோசிக்கிறது.

வாகனங்களின் நச்சு புகையை இந்த மரங்கள் வடிகட்டி சுத்தப் படுத்தி வந்ததை மறுக்க இயலுமா...? மரங்களை வெட்ட ஆணையிட்டவர்களால்..

வாகனங்கள் எண்ணிக்கை பெருமளவு பெருகிவிட்ட சுழ்நிலையில் சாலைகளை நவீனப்படுத்தப் படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே... ஆனால் வெப்பத்தின் தாக்கம் மற்றும் நச்சு புகையின் அளவை குறைக்க பெரும் பங்கு வகிக்கும் மரங்களை மறந்து விடுவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும்..?..!

மரங்களை வெட்ட தடுப்பவர்களுக்கு தடை போட்டு வெட்டி முடித்த நகராட்சி மரங்களை திரும்ப சாலை ஓரங்களில் நட முயற்சி செய்யுமா..?  தனியார் இடங்களில் மரக்கன்று களை நட விரைந்து நடவடிக்கை எடுக்குமா ..? சந்தேகமே.

பறவைகள் மரங்களில் உள்ள பூச்சிகளை உண்டு கட்டுப்படுத்தி வந்தன.( சிட்டு)  நூற்று கணக்கான சிறிய பறவை இனங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பறவைகளுக்கு நாம் உணவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றின் வாழ்வாதாரமான மரங்களை வெட்டுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

தேவையற்ற மரங்களை வெட்டுங்கள்..ஆனால் அதே சமயம் தனியார் நிருவனங்கள், வீடுகளில் மரம் வளர்க்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

எஞ்சிய பறவைகள் மொபைல் டவர்களிலும், உயர் மின் கோபுரங்களிலும் தஞ்சம் அடைய வேண்டிய சூழ்நிலையை மனிதன் ஏற்படுத்திவிட்டான்.

கோவை வருபவர்கள் ஊருக்கே ஏசி போட்ட மாதிரி இருக்கே...என்ற பேச்சு பழங்கதையாகி விட்டது.

பறவைகளின் சப்தங்களை கேட்டு வாழும் மனிதன் வாகனங்களின் இரைச்சலை மட்டுமே.. கேட்டு வாழ்பவன் அவன் மனநிலை எப்படி இருக்கும் அதனால் ஏற்படும் குடும்ப நிலை பாதிப்பு இவைகளை யோசிக்க வேண்டிய கருத்து.

பேருர் செல்பவர்கள் ரோட்டின் ஓரத்தில் உங்களை வரவேற்கும் பெரிய ஆலமரத்தில் பறவைகளின் கல கலப்பு ஒலியை காலை மற்றும் மாலை நேரங்களில் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அனுபவிக்கலாம்...உணரலாம்.

கோவை ப்ளாக்கர் குழுமம் கோவை வலைப்பதிவர்கள் பங்கேற்ற தனது முதல் அறிமுக கூட்டத்தை 10.6.2012 அன்று நடத்தியது( கோவை காந்திபுரம் லால்குடி ஹால்)

முதல் கட்டமாக 100 மரகன்றுகளை நேசம் சார்பாகவும், கோவை வலைப்பதிவர்கள் சார்பாகவும் வழங்கப்பட்டது.

பெற்றுக்கொண்ட இயற்கை ஆர்வலர் திரு.யோகநாதன் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அதனால் தனக்கு எந்த பயனும் இல்லை இது போன்ற பரிசு அதைவிட மேலாக கருதுவதாகவும்...வாங்கிய காகித விருதுகள் எலிகள் நாசம் செய்து விட்டதாகவும்..குறிப்பிட்டார். மரகன்றுகளை பாசத்துடன் குழந்தையை வாரி அணைப்பது போல அன்பாக பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியான தருனம். (புகைப்பட உதவி வீடு.சுரேஸ்குமார்)


தமது சிந்தனை செயல் மூலம் கோவை பதிவர்களை ஒருங்கிணைக்கும் சங்கவி, சம்பத் மற்றும் உறுதுணையாயிருக்கும் அணைத்து பதிவர்கள், சமூக ஆர்வலர் அணைவருக்கும் இப்பாராட்டு உரித்தாகட்டும். 

Download As PDF

Monday, April 23, 2012

மரங்களின் வேரில் துளையிட்டு ஆசிட் ஊற்றிய கொடும் பாவிகள் !





மரங்களை வெட்டும் செயல் எல்லா இடங்களிலும் நடக்கிறது.
மரங்களை வெட்டினார்கள் என்று செய்திகளை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது எந்த தாக்கத்தையும் ஏற்படுவதில்லை.  இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான (23.4.2012) செய்தியின் தலைப்பு
"மரங்களின் வேரில் துளையிட்டு ஆசிட் ஊற்றிய கொடுமை ! ( கோவை பதிப்பு)"

இச்செய்தியை படிப்பவர்கள் மனதில் முதலில் தோன்றுவது என்ன மனிதர்கள் இவர்கள். அய்யா உங்க வீட்டில் கோழி அடித்து குழம்பு வைத்தால் யாரும் கேட்க போவதில்லை.  நடைபாதை அல்லது சாலை ஓர மரங்களை வெட்டும் போது தான் அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு.

செய்தியின் சாராம்சம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் (ஆங்கிலேயர்கள் நிறைய மரங்களை நட்டு நிர்மானித்த பகுதி) ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரின் வெளியே சாலை ஓரத்தில் இருந்த மரங்களை அழிக்க முயற்சி நடந்துள்ளது. இருந்த 12 மரங்களின் அடி பாகத்தை கொஞ்சம் வெட்டி அதன் வழியாக 1 அடிக்கு ட்ரில் செய்து ஆசிட்டை ஊற்றி வைத்தது. சுற்று சூழல் ஆர்வலரும் கண்டக்டருமான லோகநாதன் கூறுகையில் ' வளர்ந்து வரும் மரங்கள் நம் குழந்தைகள் மாதிரி இதை வெட்ட எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை இந்த இடத்தில் இனி மரமல்ல சிறு செடிகூட முளைக்காது. இந்த செயல் ஒரு படுகொலை என சாடியுள்ளார்.

எப்படிப்பட்ட மரங்களை வெட்டுகிறார்கள் தேவை இல்லா மரங்களா, பட்டுபோனவையா, விழும் ஆபத்து நிலையா? வீட்டிற்கோ வேறு செயல் பாட்டிற்கே இடைஞ்சல் கொடுப்பவையா இப்படி பல கேள்விகள் இறுதி பதில் தேவை, தேவை இல்ல அவ்வளவுதான். முறையான அனுமதியின்றி வெட்ட கூடாது.

காரில் ஏ.சி போட்டுக் கொண்டு செல்லும் இவர்களுக்கு இயற்கை காற்றின் வெகுமதி பற்றி தெரியாதது நியாயம் தான். ஆனால் அவர்களின் மனசாட்சியை கேட்டு சொல்லட்டும் ஒரு முறை கூட சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிக்கவில்லையா ?

ஒரு மரம் நமக்களிக்கும் நன்மைகள் பல மனிதன் வெளிவிடும் நச்சுகாற்றை,வாகனங்கள் வெளிவிடும் நச்சு புகையை தூய்மைப்படுத்துகிறது அதில் ஒன்று. படிகாதவர்களை விட இப்படி படித்தவர்கள் தான் பெரும்பாலும் தவறு செய்கிறார்கள்

சுற்று சூழல் ஆர்வளர்கள் இதுமாதிரியான மரம் வெட்டும் செயலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. இது போன்று கண்மூடித்தனமான செயலை செய்பவர்களை ஆயிரம் மரங்களை நட்டு பராமரிக்கும் தண்டனை அளித்தால் தான் எவரும் இயற்கை மீது நடத்தும் இது போன்ற கொடுமையை செய்யாமலிருப்பார்கள்.

எனது கருத்து கொடுமையான வெயிலில் சேற்றில் நடு வயலில் களை எடுத்து பாத்தி கட்டும் தண்டனையும் சேர்த்து கொடுக்கவேண்டும்.

தங்கள் கருத்துகளை பதிவிட அழைக்கிறேன்.

Download As PDF

Thursday, April 5, 2012

ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்

இந்த மண்ணில் இருந்து விளையும் பொருள்களில் இருந்து உயிர்ச்சத்து நமது உடலில்,குருதியில் இருக்கிறது.  நிறத்தால்,இனத்தால், மதத்தால்,மொழியால் நாம் வெவ்வேறாயினும் இந்தியன். இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.  மண்ணில் செய்த பொம்மைகளை வெளி நாட்டில் விற்கிறோம். அது வணிகம்.  ஆனால் மகாத்மா சிந்திய குருதி தோய்ந்த மண்ணும் அதுவும் ஒன்றா ? என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

gandhi blood grass soil
காந்தியின் ரத்தக்கறையுடன் மண், புல்
மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்தசிறிய அளவிலான மண்ணும், புற்கதிர்களும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஏலத்தில் விற்கப்படவுள்ளன.
இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இதர அரிதான பொருட்களும் பிரித்தானிய ஏல நிறுவனமான முல்லாக்ஸால் ஏலத்தில் விடப்படுகிறது.
காந்தி பயன்படுத்திய வட்டவடிவமான மூக்குக் கண்ணாடி மற்றும் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட ஒரு கைராட்டையும் ஏலத்துக்கு வரவுள்ளன.
இந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், காந்தியின் ரத்தத்துடன் கூடிய மண் மற்றும் புற்கதிர்களுக்கான அடிப்படை மதிப்பீட்டுத் தொகை 16 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரையிலான அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவரது ரத்தக்கறையுடன் கூடிய மண்ணும், புற்கதிர்களும் கண்ணாடி மூடியுடன் கூடிய ஒரு சிறிய மரப்பெட்டிக்குள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இதுதவிர காந்தி ஆங்கிலத்திலும் குஜராத்தி மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் 1946 ஆம் ஆண்டு லண்டனில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் முல்லாக்ஸ் நிறுவனத்தால் ஏலத்தில் விற்கப்படவுள்ளன.
இத்துடன், மகாராஜா ரஞ்சித் சிங்கின் உருவம் வரையப்பட்ட நுண்ணிய ஓவியம் ஒன்றும் ஏலத்துக்கு வருகிறது.
gandhiji letters and spectacles
காந்தியின் மூக்குக் கண்ணாடி, கடிதங்கள்
உறவினர்கள் ஆட்சேபம்
இதனிடையே, காந்தியின் ரத்தக்கறை படிந்த மண், புற் கதிர்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைக்கு காந்தியடிகளின் வழித்தோன்றல்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி இதுபற்றிக் கூறும்போது, ரத்தக்கறை படிந்த மண், புற்கதிர்களை ஏலம் விடுவது ஆரோக்கியமற்ற செயல் என்றும், அதே நேரத்தில், மூக்குக் கண்ணாடி, கடிதங்கள், ராட்டை போன்றவற்றை ஒரு தனியார் நிறுவனம் ஏலத்தில் விடுவதைத் தடுக்க முடியாது என்றும், அதே நேரத்தில் அந்தப் பொருட்களி்ன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி : BBC Tamil செய்திக்குறிப்பில் வெளியான தகவல் :  3 ஏப்ரல், 2012 - 15:50 ஜிஎம்டி
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)