Followers

Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

Monday, July 8, 2013

பழைய ஜோக்குகள்...கொஞ்சம் சிரிங்க பாஸ்!


அது ஒரு ஞாயிறுக் கிழமை சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.

குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது.  மனைவியை கூப்பிட்டான்.
“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?
“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”
“இல்ல இப்ப அழுதுச்சே...”

உள்ளே இருந்து மனைவி “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”

**********************************************************************

மலை ரயில் சுமாரான வேகத்தில போய்கிட்டு இருந்தது. அந்த பெட்டியில் ஒரு அழகான பெண், ஒரு கிழவி, ஒரு இந்தியன், ஒரு ஃப்ரெஞ்சு காரன் நாலுபேர் மட்டும் இருந்தாங்க.
அந்த ரயில் ஒரு குகையின் உள்ளே நுழைந்தது. ஒரே கும்மிருட்டு, லைட்டு எரியல. “பச்சக் பச்சக்னு முத்தம் இடும் சப்தம் கேட்டது.  அதை தொடர்ந்து “பளார்” என்று அறையும் சப்தமும் கேட்டது.  குகையை விட்டு ரயில் வெளியே வந்தது.  ஃப்ரெஞ்சுகாரன் கன்னத்தில் அறைவிழுந்ததற்கு அடையாளமா கை விரல்களின் அச்சு இருந்துச்சு.

கிழவி நினைச்சுகிட்டா
“ என்ன கன்றாவியோ, இவ சுத்த மேசம் ஒரு ஆளு முத்தம் குடுக்க வுட்டுடாளே”

மனதிற்குள் சிரித்து கொண்ட அந்த பெண்
“ என்ன ஆளு இவன் நமக்கு முத்தம் குடுக்காம கிழவிக்கு குடுத்துட்டான் போலிருக்கு”

அறை வாங்கிய ஃப்ரெஞ்சுக்காரன் கன்னத்தில் கை வைத்தபடி மனதில்
“இந்தியாக்காரனுக்கு முத்தம் குடுத்துட்டு நம்மள அறஞ்சிட்டாளே பாவி”

இந்தியாக்காரன் குஷியா மனதில் “மவனே பொண்னு பக்கதில வசதியான எடமா பிடிக்கிற “ நானே என் கையில முத்தம் கொடுத்து அவனுக்கு உட்டேன் ஒரு அறை “வாழ்க இருட்டு”

**********************************************************************

ஒரு சமய கூட்டம் நடந்திட்டு இருந்தது, சாமிஜி சொன்னார்
”முத்தம் இடுவதால ஒருத்தருக்கிட்ட இருந்து கிருமிகள் மற்றவருக்கு பரவி விடும்.

வெள்ளைச்சாமி எழுந்து சொன்னார்
“ அதாஞ் சாமி என் பொஞ்சாதி முத்தங்குடுத்தாக்கூட திருப்பி கொடுத்துறேனுங்க”

**********************************************************************
நடு சாமத்தில் நல்லா தூங்கும் கணவனை பட படவென தட்டி எழுப்பினாள் மனைவி

“ஏங்க ஏந்திருங்க வெளியே புயலும் மழையுமா இருக்கு வீட்டுக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு எனக்கு பயம்ம்மா இருக்குதுங்க...”

“அடச்சீ கம்முன்னு தூங்கு...இது வாடகை வீடு தானே நீ ஏன் கவலைப்படறே”

**********************************************************************
ஒரு பெண்ணின் தோழிக்கு அவளின் நடவடிக்கை எரிச்சலாக இருந்தது. ஒரு நாள் அவளிடமே கேட்டுவிட்டாள்.  “ஆமா நீ ஏன் ரெண்டு போரோடேயும் நெருங்கி பழகுற”
அதுக்கு அவள் சொன்னாள்.  “ஜீப்பு பின்னாடி ஒரு ஸ்டெப்னி இருக்கு கவனிச்சிருக்கியா? அது எதுக்கு?”

“அதுமாதிரிதான்”
**********************************************************************

கல்யாணத்திற்கு முன்னாடி பெண்னோட கையை பிடிச்சிகிட்டா
அது அவளின் மேல் இருக்கும் அன்பை காட்டும்.
அதுவே கல்யாணத்திற்கு பின்னாடி
வெறென்ன... அவனோட தற்காப்புக்குத் தான்
**********************************************************************

“அந்த காலத்தில இளவரசர்களுக்கு 14 வயசிலேயே நாட்டை ஆளும் பொறுப்பு குடுத்திருவாங்க” “ஆனா கல்யாணம் 18 வயசில தான்”
“ஏன் ?”
“நாட்டை ஆளலாம் பெண்ணை ஆளுவது அவ்வளவு சுலபம் இல்ல”
**********************************************************************

82 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 லட்சம் பரிசு கிடைத்தது.
அவரோட குடும்பதினர் இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது சொன்னா “பொக்குன்னு போய்ட்டார்னா” யோசனை செஞ்சு ஒரு டாக்டர் கிட்ட போனாங்க
விசயத்தை கேட்ட டாக்டர் “நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க நா பாத்துக்கிறேன்”
ஊர்க்கதை பேச்சிட்டு மெல்லமா ““ஐயா உங்களுக்கு லாட்டரியில 10 லட்சம் விழுந்தா என்ன பன்னுவீங்க”
டாக்டர் சார் நீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா உங்களுக்கு ஒரு அஞ்சு லட்சம் கொடுத்திருவேன்”
இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.
**********************************************************************

மகன் : “இந்த இயற்கைக்கு ரொம்ப முன் யோசனை ஜாஸ்திப்பா.”
அப்பா : “முன் யோசனையா எப்படிப்பா”
மகன் : பின்ன மனுசன் கண்ணாடி போடுவான்னு அதுக்கு முன்கூட்டியே தெரிஞ்சு இருக்கு
இல்ல.. காது இல்லேன்னா கண்ணாடிய எப்படி மாட்டுவே”
**********************************************************************

நேற்று நீங்க கூப்பிட்ட விருந்துக்கு வர முடியாம போச்சுங்க...என்ன ரொம்ப எதிர் பார்த்திருப்பீங்க...

அப்படியா நேற்று நீங்க வரலியா ?

**********************************************************************

ஒரு பேருந்தில் இரண்டு இளவயசு பெண்கள் பயணம் செஞ்சாங்க. அவங்களுக்கு உட்கார இடம் கிடைக்கல...ஒருத்தி கொஞ்சம் சப்தமாவே சொன்னாள் “அழகானவர் எந்திருச்சு நமக்கு எடங்குடுப்பாருடி” ஆறு சீட்டுகள் காலியாகிடுச்சு.

எழுந்திருச்சவங்க ஆறுபேரும் அறுபது வயசுக்காரங்க

**********************************************************************

வாத்தியார் : “என்னடா முழிக்கிற இந்த கேள்விக்கு முட்டா பய கூட பதில் சொல்லிருவாண்டா !”
மாணவன் : “அதான் சார் நா பதில் சொல்லல...”

**********************************************************************

ஜோஸ்யம் பார்ப்பவர் : பத்துரூபா கொடுத்தீங்கன்னா நீங்க இரண்டு கேள்வி கேட்கலாம்
வந்தவர் : ”ரெண்டு கேள்விக்கு பத்துரூபாயா”
ஆமா “அடுத்த கேள்வி கேளுங்க”
**********************************************************************

கணக்கு வாத்தியார் : “உங்க அப்பாவுக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாசம் 100 ரூபாய் வீதம் ஆறுமாதம் திருப்பி கொடுதால், அவர் மீதி எவ்வளவு எனக்கு தரணும்”
பையன் : “ஆயிரம் ரூபா சார்”
கணக்கு வாத்தியார் : என்ன.. உனக்கு கணக்கே புரியலயா?
பையன் : “சார் எங்க அப்பாவ பத்திதான் உங்களுக்கு தெரியல”
**********************************************************************
ஒரு போர் வீரன் பந்தயம் கட்டுவதில் அளவு கடந்த ஆசை அல்ல வெறியே இருந்தது. இந்த விசயம் புதிதாய் வந்த படைத்தலைவருக்கு தெரிந்தது.
என்ன நீ எதுன்னாலும் பந்தயம் கட்டுவியாமே அப்படியா? என்று கேட்டார்.
ஆமாங்க, எதன்மேல் வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன் உதாரணமா உங்க தொடையில் மச்சம் இருக்குன்னு பந்தயம் கட்டுரேன்.

(அவருக்கு அவன் தோற்றால் பந்தயம் கட்டும் சுபாவத்தை விட்டுருவான் என்று எண்ணினார்)

என்ன எங்க இருக்கு பாருன்னு தொடைய காட்டினார் மச்சம் இல்ல தோத்துட்டான்.
பந்தய தொகைய கொடுத்தான். படைத்தலைவர் சொன்னார் “போப்பா இனி மேலாச்சும் திருந்து”

அடுத்தநாள் பழைய படைத் தலைவர், சமாச்சாரம் கேள்விப்பட்டேன் உண்மையா ? அப்படின்னு  கேட்டார். ஆமா இனி அவன் திருந்திடுவான்னாரு.

போங்க சார்..உங்க தொடைய காட்ட மாட்டீங்ன்னு எங்கிட்ட பந்தயம் கட்டி ஜெயிச்சுட்டான்..
**********************************************************************

இது உண்மையான்னு தெரியல...

ஹிட்லர் காலத்தில் அவரு ரொம்ப ஸ்ரிக்டுன்னு தெரியும்.
சினிமா தியேட்டரில் படம் முடிஞ்சதும் தேசிய கீதம் மாதிரி அவரோட படத்தை காட்டுவாங்கலாம் ஜனங்க மரியாதையா எழுந்து நிற்பாங்க. 
ஒருநாள் ஹிட்லர் மாறு வேடத்தில் சாதாரனமா ஒரு தியேட்டருக்கு விசிட் செஞ்சாரு.
வழக்கம் போல அவரோட படத்தை காட்டும் போது உட்கார்ந்திருந்தாரு.
பக்கத்தில் இருந்தவன் அவரைப் பார்த்து
“யோவ் உன்ன மாதிரித்தான் நானும், அதுக்காக எழுந்திருக்கலேன்னா மாட்டிக்குவே எழுந்திரு” என்றான்.
**********************************************************************
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு, மேடையில் பேசறதுக்கு விருப்பம் இல்ல.
இருவரும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். வில்பர்ட் ரைட்டை பேசும்படி வற்புறுத்தி கேட்டுகிடாங்க வேற வழி இல்லாம எழுந்து
“நான் பேசுவதில்லை ஆர்வில் ரைட் தான் வழக்கமா பேசுவாரு” ன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டாரு.

அடுத்து ஆர்வில் ரைட்டுக்கும் வேற வழி இல்ல அவரும் எழுந்து
“வில்பர்ட் சொற்பொழிவாற்றிட்டாரு இனி நான் என்ன பேசுறது” என்று பேச்சை முடிச்சுகிட்டார்.
**********************************************************************
சர் ஆர்தர் கானன் டாயில் துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர் ( கரெக்ட் ஷெர்லக் ஹோம்ஸ் !) அவருக்கு ஆவியுலகத்தில் நம்பிக்கை இருந்தது.  அவரோட நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொரு நண்பர் இவரை மடக்கனும்னு இவரிடம் இறந்தவரின் ஆவி இவரோடு பேசியதா ? என்று கேட்டார்.
அதுக்கு கானன் டாயில் “இல்ல” ன்னு பதில் சொன்னார்.
 “இப்பவாவது நம்புரீங்களா ஆவி இல்லேன்னு”

”அப்படி நினைக்கல..அவர் இறக்கறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்ல, அதனால ஆவி இப்ப பேசாம இருந்திருக்கலாம்”
**********************************************************************
அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக்கதை இது.
ஒரு ஓவியன் ஒரு படத்தை கொண்டு வந்து காட்டினான் அதில் பசுவும் புல்லும் வரைந்து இருப்பதாக சொன்னான். சுருட்டி வைத்திருந்த படத்தை பிரித்து பார்த்தா அதில பசுவும் இல்ல புல்லும் இல்ல.

புல் எங்கே? என்று கேட்டதற்கு “பசு புல் சாப்பிட்டு விட்டது” என்று சொன்னான் ஓவியன்.
சரி பசு எங்கே? என்று கேட்டதற்கு “அது புல்ல திண்ணுட்டதால விரட்டி விட்டுட்டேன்” என்றான்.
அவரு சொன்ன இன்னொரு கதை :

இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒருதனை இரண்டு பெண்கள் காதலிச்சாங்க. ஒருத்தி ஏழை, ஆனால் அழகா இருப்பா. இன்னொருத்தி சுமாரான அழகு, இரண்டுபேரில் யாரை திருமணம் செய்துக்கிறதுன்னு நண்பன் கிட்ட ஆலோசனை கேட்டான்.  நண்பன் சொன்னான். “ஏழையா இருக்கிற பெண்னை கல்யாணம் செய்துக்க, அவதான் உனக்கு ஏற்றவள். வாழ்கையில் உனக்கு உறுதுணையா இருப்பாள், அதோட அழகாவும் இருப்பான்னு சொன்னியே”. 

போகும் போது “சரி, அந்த பணக்காரப் பெண் எங்கிருக்கிறாள் முகவரி சொல்லுப்பா” என்று கேட்டான்.
**********************************************************************
அஞ்சலகத்தில் எழுதுவதற்காக ஒரு பேனாவை கட்டி வைத்திருப்பார்கள்.  வந்தவர் அந்த பேனாவில் எழுதினார்,  எழுதவில்லை.

அஞ்சலக எழுத்தரிடம் “இது என்ன ஹைதர் அலி காலத்து பேனா வா ? “ ன்னு கேட்டார்.

அதற்கு அவர் “ தகவல் விசாரணைக்கு பக்கத்து கவுண்டரில் கேளுங்க சார்”
**********************************************************************
கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாங்க.
சாப்பிட்டு முடிச்சுட்டு வெளியில போகும் போதுதான் மூக்கு கண்ணாடி பையில இல்ல அது டேபிலேயே இருக்கும்ன்னு பார்க்க மனைவி மட்டும் உள்ள போனாங்க..டேபில் மேல பார்த்தாள் கீழே பார்த்தாள் காணோம்...தேடுறத பார்த்து
அங்கிருந்த சர்வர் “அம்மா அவரு அப்பவே போயிட்டாருங்களே” என்றான்.
**********************************************************************
சென்னையில் இருந்த குடும்பம் வெளிநாடு போவதால் அவர்களுடைய நாயை உறவுக்காரர்களிடம் விட்டுவிட்டு போய் விட்டார்கள்.  அந்த வீட்டு பையன் நாயை பழக்குவதற்காக துணியை காட்டி “எடுத்துட்டு வா” என கட்டளை போட்டான் அது அசையவே இல்ல.  அவனோட அப்பா வந்தாரு ”ரொம்ப நேரமா இது கூட கத்திட்டு இருக்கேன்” என்று சொன்னான். அவர்  “ இஸ்துக்கினு வா”ன்னு சொல்லவும் அது பாய்ந்தோடியது.
********************************************************************** 


பாட்டி பேரனிடம் ஒரு விடுகதை போட்டார்.  “சிங்கம் போல நுழையும்,  ஆடு போல வெளியே போகும், அது என்ன?

வினாடி யோசித்த பேரன் : “அப்பா”

**********************************************************************

ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார். தீர்ப்பு வந்தது அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆகப் பத்துவருசம் சிறை தண்டனை அவனுக்கு.
**********************************************************************
Download As PDF

Monday, October 1, 2012

கண்ணதாசனின் நகைச்சுவைகள்..[ஜோ...க்...ஸ்]


திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை  "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"  நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள்.  "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்.


அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம்
கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான்  " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத் தூங்க வைத்தாள்.

கணவன் : சீ ! நீ காட்டுவது பாசமா ?  பாசம் என்பதை என் அம்மாவிடம் தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே !

கணவன் : என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு விட்டாரே !

********************************************************************
இல்லற இன்பம்

பாகவதர் : கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...

சிஷ்யன் : ஏன் ?

பாகவதர் : என் மனைவி பெயர் கல்யாணி...

*******************************************************************
பகுபதம் !

வெள்ளைச் சாமி ஒரு நாள் பொதுக் கூட்டத்திற்கு போயிருந்தார். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதாவது ;

"ஒரு பச்சை யானை வெள்ளை முட்டை போட்டது. அதிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு வெளிவந்து, ஒரு சிங்கத்தை கொன்று விட்டது. அந்தச் சிங்கம் ஒரு யானையின் உயிரை வாங்கிக் கொண்டு மீண்டும் வந்துவிட்டது...."

அவர் பேச்சை கேட்ட வெள்ளைச்சாமி பக்கத்தில் இருந்த நண்பரிடம் " இவர் யார் ?" என்று கேட்டார்.

இவர் தான் பெருவாரியான வோட்டுகளில் ஜெயித்த எம்.எல்.ஏ " என்றார் நண்பர்.

*************************************************************************
கணக்கில் வராத பணம் !

ஊரெங்கும் கருப்புப் பணம், கருப்புப் பணம் என்று பேசிக் கொண்டார்கள்.
வெள்ளைச்சாமிக்கு அது என்னவென்று புரியவில்லை.

அவரி கையில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய்க் கட்டு ஒன்று இருந்தது.

அதிகாரி ஒருவரைப் பார்த்து " ஐயா..கருப்பு பணம் என்றால் என்ன? என்று கேட்டார்.

கணக்கில் வாராத பணம் ...என்று சொன்னார் அதிகாரி.

வெள்ளைச் சாமி தன்னிடம் இருந்த ஒரு ரூபாய்க் கட்டை எண்ணிப் பார்த்தார். மொத்தம் தொண்ணூற்றொன்பது ரூபாய்தான் இருந்தது.

ஓஹோ...ஒரு ரூபாய் கருப்புப் பணம் போலிருக்கிறது..! என்று முணுமுணுத்தார் வெள்ளைச்சாமி.

************************************************************************
வாக்குச்சீட்டின் மகிமை !

ஒரு அரசியல் கூட்டத்திற்குப் போய் அமைதியாக உட்கார்ந்தார், வெள்ளைச்சாமி.  பேசத்தொடங்கிய ஒருவர்  " தாய்மார்களே...! " என்று ஆரம்பித்தார்.

"நிறுத்தையா...என்று கத்தினார் வெள்ளைச்சாமி.

உனக்குக் கொஞ்சமாவது மானம்..வெட்கம்...இருக்குதா ?

இவ்வளவு பெண்கள் இருக்கும் இடத்தில் அசிங்கமாகப் பேசுகிறாயே..!

"தாயே.." என்று கூப்பிடுங்கள் என்றார்.

****************************************************************************
பெருங்கதை !

திடீரென்று வெள்ளைச் சாமிக்கு சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

"பெரிய நடிகர்கள் நடிக்கின்ற படத்துக்குக் கதை எழுதினால் தான் முன்னுக்கு வரலாம்  ! என்று யாரோ சொன்னார்கள்.

உடனே வெள்ளைச் சாமி பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

"கதாநாயகன் ராமு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கதாநாயகி கமலா ஒரு ஆபீஸில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். ராமுவுக்கு வயது அறுபத்தொன்பது. கமலாவுக்கு வயது பதினாறு.."

- வெள்ளைச் சாமியின் கதை உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

****************************************************************************
நீங்கள் வருவீர்கள் !

வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி "மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும் என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார். அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார் கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார் அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார். பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார். பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார்.   நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் : நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!

*******************************************************************************

ஞானத் தொழிற்சாலை

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.   பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!  ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....

*******************************************************************************

Download As PDF

Saturday, September 1, 2012

சில ஜோக்ஸ் : படித்தவை ( 2 )




ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள் வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.  மூன்றும் சிரிச்ச படியே உயிரை விட்டிருந்தன. அவரோட போலீஸ் மூலை சந்தேகத்தை கிளப்புச்சு   போஸ்ட் மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.  "அதெப்படி ஒரே சமயத்தில வந்த மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டிருக்கு"

முதல் பாடி இங்கிலீஸ்காரர்  60 வயசு தன்னோட மனைவியோட சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே போய்ட்டார்.

"சரி, இது ? " இரண்டாவத சுட்டி காட்டினார்.

அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர்  25 வயசுதான். லாட்டரியில் லட்ச ரூபா அடிச்சது சந்தோசத்தில ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப் போய்ட்டான்.

மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இதுக்கு என்ன சொல்றீங்க "

30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப் போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன் யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு சிரிச்சிட்டு இருந்திருக்கான். அப்படியே பொசுங்கி போய்ட்டான்.

*****************************************************************************

மனிதர்களை தின்னும் ஒரு கூட்டம் அதில் ஒரு அப்பாவும் மகனும், சாப்பிட மனுசங்கள தேடி ரொம்ப தொலைவு நடந்தாங்க.

கொஞ்ச தூரத்தில ஒரு ஆள் நாய வாக்கிங் கூட்டிட்டு  போய்டிருந்தான்.
 " அப்பா அந்த ஆளு..." கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.

"இவ வேண்டாம்பா...இவன நாய்க்கு தான் போடனும்."  உதட்டை பிதுக்கிட்டான் அப்பா.

இன்னும் கொஞ்ச தூரம் போனாங்க...ஒரு ஆள் நல்லா குண்டா இருந்தான்.
 " அப்பா..."  மறுபடியும் கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.

இவன் வேண்டாம் இவன தின்னா நமக்கு கொழுப்பு சாஸ்தியா பூடும். நாம  ஹார்ட் அட்டாக் வந்து சாக வேண்டியது தான். வுட்டுடு.

பையனுக்கு பசி தாளமுடியல.

அடுத்து அழகான ஒரு லேடி வந்தா..

"அப்பா... இவ வேண்டாம்டா"

ஏம்பா ?
அழகா இருக்காடா...!

"இவள இப்படியே உட்றுவோம் முதல் உங்க அம்மாவ சாப்பிட்டரலாம். வா"

******************************************************************************

துணி கடை ஒன்றில் மனைவி புடவை செலக்ட் செய்யும் வரை காத்திருந்த கணவன் :

சரி சரி செலக்ட் பண்ணிட்டியா பில் போட்டுரலாமா ?

நீங்க யாரு..?

?? அடிப்பாவி ஒருநாள் பூரா காத்துகிட்டிருக்கேன் அதுக்குள்ள என்ன மறந்திட்டியா...

சாரீங்க

சரி சரி

அதில்ல நீங்க..மிதிச்சிட்டிருக்கிறது என் சாரீங்க..

====================================================================

கணவன் : மனைவி

ஏங்க உங்களுக்கு 4 கர்சீப் வாங்கி வந்திருக்கேன்...

வெரி குட் நல்லாருக்கு.

சரி ஆயிர ரூபா குடுங்க...

என்ன 4 கர்சீப்க்கு இந்த விலையா ? அநியாயமாயிருக்கே...

அதில்லீங்க...ஒரு புடவை வாங்கினா 4 கர்சீப் ஃப்ரீ...

======================================================================

இரண்டு பெண்கள்

கண்டக்டரை கட்டி கிட்டது தப்பா போச்சு

கொஞ்ச நேரம் வாசப்படியில நின்னாகூட உள்ள போ...உள்ள போங்கரார்.

இது பரவாயில்ல மெக்கானிக்க கட்டிக்கிட்டது தப்பா போச்சு

ஏன் ?

எப்பவும் கட்டிலுக்கு அடியில படுத்துதான் தூங்குறார் ?

======================================================================
டி.வி பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் ;
சமையல் அறையில் இருந்து வேக வேகமா வந்த மனைவி ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு

கவனிக்கலயே...

ஆமா...போங்க..நீங்க..நீயுஸ் பாக்கிற லட்சணம்..

அப்பாவி கணவன் : ஙே...

======================================================================

எனக்கு அபரேசனா ? ரொம்ப பயமா இருக்கு டாக்டர்.

நாங்க இருக்கோம் உங்களுக்கு எதுக்கு பயம் ?

நீங்க இருப்பீங்க டாக்டர் அபரேசன் செஞ்சிக்க போறது நான் தானே..

======================================================================

மூணு நாளா கேஸ் ப்ராப்ளம்..

அதுக்கு என்ன...கேஸ் கம்பெனிக்கு போன் செஞ்சீங்களா...

சரீங்க கண்டக்டர்

யோவ் நான் டாக்டர் யா..

அதத்தானே கேட்டேன்

======================================================================
இது இன்னும் கொஞ்சம் பழசு...

அப்பா நம்ம வீட்டு கன்னுக்குட்டி ஹம்மா.. ஹம்மா ன்னு கத்துதுப்பா

சரிடா அதுவும் ஏ ஆர் ரகுமான் விசிறியாயிடுச்சா...

======================================================================
கணவன் : மனைவி

ஆஹா...நான் உதச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே.

ஹி..ஹி...உங்கம்மாவ நெனச்சு உதச்சங்க.. அவ்ளோதான்.
======================================================================
இரண்டு பெண்கள்:

அதோ போறாளே அவ சுத்த அடங்கா பிடாறி..

அனா அவ மாமியார் நல்லவங்க..

அது யாரு...

ஹி..ஹி..நான்தேன்.

======================================================================

ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துவிட்டாள்.

இன்ஸ்பெக்டர் :

வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..

லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க..

======================================================================

போலீஸ் ஸ்டேசனில் கணவன்

சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...

எத்தனை நாளா..?

மூனு மாசமா சார்...

அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற...

இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..

======================================================================


Download As PDF

Wednesday, May 30, 2012

சில ஜோக்ஸ் : படித்தவை




ஸ்கூலில் இருந்து ஒரு பையன் கையில் கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தான்

என்னாப்பா என்ன பிரச்சனை ?

கையில அடிபட்டிச்சு.

சரி காட்டு என்று கட்டுப்போட்ட கையைத் தொட்டார்.

இல்ல டாக்டர், இந்த கை. மாற்றிக்காட்டினான் ? டாக்டருக்கு குழப்பம்.

என்னப்பா வலது கையில தான கட்டுபோட்டிருக்க.

இல்ல டாக்டர் இடது கைதான். இந்த பசங்களைப்பற்றி உங்களுக்கு தெரியாது  எந்த கையில அடிபட்டுச்சோ அந்த கைமேலெயே விழுவானுங்க. அதுக்குதான் கட்ட மாத்தி போட்டிருக்கேன்.

(..மாத்தி யோசி.. ?! )
@@@@@@@@@@@@@@

நண்பரிடம் :
என் மனைவிக்கு கண்ணில தூசு பட்டுச்சு ஒரே ப்ராப்ளம் டாக்டர்கிட்ட 100 ரூபா
கொடுக்கவேண்டியதா போச்சு.

நண்பர் :

இது பரவாயில்லங்க என் வைப்புக்கு புடவை கண்ல பட்டிடுச்சு 1200 ரூபா அழவேண்டியதா போச்சு.


(வைப் இத படிக்க மாட்டாங்கற தைரியம் தான்.)

@@@@@@@@@@@@@@

டாக்டர் நடுத்தர வயதுடையவர் ஒருவருக்கு பகலில் ஒருமணி நேரம் சவாரி செய்தால் போதும் 90 நாளில் தொப்பை கரைந்து விடும் அதற்கு எங்கேயும் போக வேண்டாம் அவரிடமே ஒரு குதிரை இருப்பதாகவும் ஒரு மணிக்கு 100 ரூபாய்தான் பீஸ் கொடுத்தால் போதும் என்றார்.

பேஷன்ட் யோசிப்பதாக சொல்லி சென்று விட்டார். சில நாட்கள் சென்றது.

ஒரு நாள் இருட்டான இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தவர் தமது குதிரையை அந்த பேஷன்ட் ஓட்டிக் கொண்டுருப்பதை கண்டார்.

என்ன இந்த நேரத்தில் சவாரி செய்யரீங்க ?

இருட்டில் பேஷன்டிற்கு டாக்டரை அடையாளம் தெரியவில்லை.

இதோட ஓனர் ஒரு மாங்கா மடையன் பகல்ல ஓட்டரதுக்கு 100 ரூபாய் கேட்பான் அதான் ராத்திரி ரவுண்டு போரேன்.

சரி ராத்திரிக்கு எவ்வளவு ரேட் ?

பக்கத்தில வாங்க, இப்ப அவன் இருக்கமாட்டான் ஹி ஹி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒருவர் புதிதாக கார் வாங்கியிருந்தார்.

நண்பரிடம், சவுண்ட் கேட்டீங்களா என்னோட புதூ கார் ?

என்ன மாடல் ?

சரியா தெரியல  Z -ல ஸ்டார்ட் ஆகும்.

நான் கேள்வி பட்டவரைக்கும் பெட்ரோல்ல தான் ஸ்டார்ட் ஆகும் அது எப்படி  Z -ல.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாக்டர் என் ஹஸ்பன்ட கொஞ்சம் செக் பண்ணனும்

ஏன் என்ன பிரச்சனை ?

ரொம்ப நேரமா நா பேசினாலும் என்ன சொன்ன ன்னு என்னைய திருப்பி கேட்கிறார் ?

சரி விடுங்க, காட் அவருக்கு கொடுத்த கிப்ட். எல்லாருக்கும் கிடைக்குமா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு வடநாட்டு கிப்ட் கடையில் பின்வரும் வாசகம் எழுதிருந்தது

உங்களுக்கு இங்கிலீஸ் தெரியலேன்னு கவலைப்பாடதீங்க நாங்க புரோக்கன் இங்கிலீஸ் பேசுவோம். 

[Never mind your English. We speak good broken English ]

இதேமாதிரி ஒரு பேக்கரியில்

இங்கு தரமான ஸ்நேக்ஸ் கிடைக்கும். (ஸ்நாக்ஸ் ஆ ஸ்நேக்ஸா ?)

@@@@@@@@@@@@@@@@@@@

கஸ்டமர் : உங்க ஹோட்டல்ல நல்ல வசதி இருக்கா ?

முதலாளி : நிச்சயமா சார். உங்க வீடு மாதிரி நீங்க பீல் பண்ணலாம் ?

கஸ்டமர் : அட கஷ்டகாலமே ! இங்கேயும் அதே பிரச்சனையா ? இதுக்கு நா வீட்லேயே தங்கிடறது நல்லது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பேங்க் மேனேஜரிடம் ஒருவர் :

என்னோட செக் பணம் இல்லைன்னு திரும்ப வந்திருச்சுன்னாங்க ஏன் உங்க பேங்கில பணம் இல்லீங்களா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீண்ட நாள் கழித்து சந்தித்துக் கொண்ட இரு பெண்கள்

ஹாயி உன்ன பாத்தா அடையாளமே தெரியல..

ஆமா உன் முகத்தை பார்த்தா அடையாளமே தெரியல. ஆனா எனக்கு இந்த கிளிப் பச்ச கலர் புடவை நல்லா ஞாபகம் இருக்கு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டிரைவர் : சாரி சார் பெட்ரோல் போட மரந்திட்டேன். கார் ஒரு அடி கூட முன்னால போகாது.

ஓனர் : சரி.. சரி..விடு ரிவர்ஸ்லயே வீட்டுக்கு விடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது என்ன ப்ளாக்ல பழைய ஜோக்கா போட்டிருக்கீங்க

ஒன்னுமில்ல உங்க ஞாபக சக்தி எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ண தான்.
ஹி. ஹி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)