Followers

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, March 27, 2015

படித்ததில் பிடித்தது #ப.பி




#ப.பி படித்ததில் பிடித்தது
---------------------------------------------

யூகோஸ்லவியா நாட்டு கிராமம் ஒன்றில் நாய்,பசு, கழுதை ஆகிய மூன்றும் வாழ்ந்து வந்தன. நாட்டின் நிலைமை மோசமாக மாறி அங்கே வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவை மூன்றும் அந்த கிராமத்தை விட்டு காட்டுக்கு ஓடின.

ஆனால் அவைகளால் தாங்கள் வாழந்த கிராமத்தை மறக்க முடியவில்லை. சிறிது காலம் கழித்து கிராமத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை பார்த்து வரும் படி நாயை மற்ற இரு மிருகங்களும் அனுப்பி வைத்தன.   அந்த நாய் அடுத்த நாளே ஓட்டமாக ஓடி வந்தது "கிராமத்து நிலைமை இன்னும் மோசமாக மாறி விட்டதாகவும், குரைக்க ஆரம்பிக்கும் போது ஜனங்கள் கொல்ல வந்துவிட்டதாகவும் தப்பி வந்தது தம்பிரான் புன்னியம் எனவும், தன்னால் எப்படி குரைக்காமல் இருக்க முடியும் எனவும் சொன்னது.

சிறிது காலம் கழிந்து, கிராமத்தின் நிலையை கண்டுகொள்ள பசு சென்றது. அடுத்த நாளே திரும்பி வந்து "என்னை பார்த்ததும் என்னிடம் பால் கரக்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு என்னை அடிக்கவும் செய்தார்கள். நான் இனி அங்கே போக மாட்டேன் எனச் சொன்னது.

அதே போல கழுதையும் கிராமத்துக்கு போய் வந்து சொன்னது " கிராமத்தில் தேர்தல் நடக்கப் போகிறதாம் என்னை பார்த்தும் மக்கள் பிரதி நிதிக்காக நான் போட்டியிட வேண்டுமாம் அதற்கு நான் தான் தகுதியானவனாம்...யப்பா...சாமி ஓடியே வந்துட்டன் என்றது.

இது ரஷ்ய தலைவர் க்ருஷ்ச்சேவ் சொன்ன கதை


                                                         @@@@@@@@

 கவிஞர் கண்ணதாசன் ‪#‎எனது‬ சுயசரிதை புத்தகத்தில்...

சாதாரணமாகப் பாட்டெழுத உட்கார்ந்தால், ஒரு சுகமான உலகத்தில் மிதப்பது போல் எனக்கு தோன்றும், அகக் கவலை,புறக்கவலை எதுவும் தோன்றாது.
பாகப் பிரிவினையிலும், பாசமலரிலும் சில பாட்டுகள் பிறந்த இடங்கள் வேடிக்கையானவை.

நான் சிவகங்கைச் சீமைக்காக எழுதிய பல பாடல்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். திட்டமில்லாத அந்த வேலையால், நஷ்டமடைந்த பணம் சுமார் 20000 ரூபாய். சிவகங்கை அரசு எப்படித் தோன்றியது என்பது பற்றிச் சுமார் பத்து நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஆயிரம் அடிப்பாடல் ஒன்று எழுதி இருந்தேன். அதில் பல வகையான மெட்டுக்கள் மாறி மாறி வரும்.
மருது பாண்டியரும், ராணி வேலுநாச்சியாரும், திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியைச் சந்திக்கப் போவதாக ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில், "குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கே நடக்கின்றார்" என்று ஒரு பாடல். அது அந்தப் படத்தில் இல்லை. அதே மெட்டில் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ"என்ற பாடலை எழுதினேன்.
அது போல் "மண்ணில் கிடந்தாலும் மடியிலிருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமா ? " இது எடுக்கப் படவில்லை. பாசமலரில் மலர்ந்தும் மலராத " பாடலை அதே மெட்டில் எழுதிக் கொடுத்தேன்.

பாட்டுத் தொழிலில் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த அந்த நேரத்தில், வேறு பிடிக்காமலிருந்தால் கூட என் தொல்லைகள் வளர்ந்திருந்திருக்க மாட்டா.
சிவகங்கைச் சீமையிலே எனக்கு நஷ்டம் தொண்ணூறாயிரம் தான். அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் வலிமையான விதி என்னை மேலும் இழுத்தது. கவலை இல்லாத மனிதன் அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்தது. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய கிளைமாக்ஸ் கட்டத்தை நான்கு மணி நேரத்தில் எடுத்துப் படத்தை கொலை செய்தோம். முழு முதற்க் காரணம் சந்திரபாபு. தன் குணத்த்தாலே தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என் படத்தையும் கெடுத்து வைத்தார்


@@@@@@@@@

அப்போது பானுமதி நடித்த ராணி என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாளில் பாடல் எழுதுவதென்பது பிரசவ வேதனை போன்றது. தானானானா என்றொரு தத்த காரத்தைக் கொடுத்துவிட்டு வார்த்தைகளையும் கருத்துக்களயும் அதற்குள் திணிக்கச் சொல்லுவார்கள்.
உள்ளம் வலிக்கும், உடம்பு வலிக்கும், நினைப்பதை சொல்ல முடியாது ஏதோ வயிற்றுப் பாட்டுக்காக எழுதி தீர்க்க வேண்டும். நானும் சித்திரவதைப் பட்டு ஒரு பாடலை எழுதி முடித்தேன். ஒத்திகை பார்க்க பானுமதி வந்தார். பாட்டை வாங்கிப் பார்த்துவிட்டு "இது என்ன பாஷை ? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
எனக்கு அவமானமாகப் போய்விட்டது.
நமக்கும் ஒரு காலம் வரும் என்று நான் பொறுமையாக இருந்தேன்


@@@@@@@@@

ஒரு மனிதனுக்குத் திறமை மட்டுமே போதுமானதாக இல்லை; தோதான சந்தர்ப்பங்களும் வாய்க்க வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ, திறமை இல்லாதவனுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பமோ பயன் படுவதில்லை.



சிந்தனையிலேயே சுகமான சிந்தனை கடந்து போன காலங்களைப் பற்றிச் சிந்திப்பதாகும்

~ கவிஞர் கண்ணதாசன்
 @@@@@@@@@

 உங்களுடைய பெற்றோரை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை உங்கள் ஒருவரால் தான் தேர்ந்தெடுக்க முடியும்

சொன்னவர் ; ஸெர்னி

( ஆனால் சுவாமி என்ன சமைக்கலாம் என்ற உரிமையை வீட்டம்மணியிடம் தந்து விட்டேனே வாட் டு டு !)

@@@@@@@@@

 கருநாடகத்துடனான ‪#‎அணைப்பிரச்சனை‬ என்பது இப்போது அல்ல
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்த பிரச்சனை.

‪#‎ராணி_மங்கம்மாள்‬ வரலாற்றை படித்தோமானால், ஆற்றின் குறுக்கே
அணை கட்டுவதற்காக காலங்காலமாக தமிழர்கள் சண்டை போட்டு
வந்துள்ளனர்.

மைசூர் போர் என்பதை வரலாற்று ஏடுகள் இப்படி சித்தரிக்கின்றன.

முகலாய அரசு தக்காணத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது


@@@@@@@@@

 ஒத்தரூபாயின்மகிமை
----------------------
அதுவொரு எடை பார்க்கும் மெசின் அதுமட்டுமல்ல உயரம் இந்த நாள் இனிய நாளா என்பதையும் துக்கடா சீட்டில் சொல்லி விடும்.

சரி நம் எடையை சோதித்துப் பார்போமே என்று அருகில் சென்று மணி பர்சை துழாவினேன் ஒரு ரூபா நாணயம் ஏதும் சிக்குமா வென.

ஆஹா ...ஒன்னே ஒன்னு கண்ணே கண்னு இருந்தது. ஆனால் அது நாலணா சைசில் , இது ஏதடா வம்பா போச்சி யாரிடமாவது கேட்கலாம் ...

என் அதிர்ஷ்டம் ஒன்று உதட்டை சுழித்தார்கள், இல்லை என்று தலையாட்டினார்கள், வெரித்துப் பார்த்தார்கள். நான் என்ன கேட்டேன் இந்த காசை வைத்து விட்டு வேறு. சைஸ் காசு தானே கேட்டேன்.

பக்கத்தில் காயின் பாக்ஸ் போனில் பேச எத்தனித்தவருக்கு லைன் கிடைக்கவில்லை போல டொக்கென்று காயினை துப்பியது.
"ஏனுங்க காச மாத்திகலாமா?" தரமாட்டாராம்.
"அதையே போட்டு பாருங்க ஹி..ஹி "

ஆனது ஆகட்டும் மெசினுக்கு எதிரில் ஏறி நின்றேன்.

"காசை போடவும்"

போட்டேன். மீண்டும்

"காசை போடவும்"

" ச்சேச்சே மெசினோடு மல்லுக்கட்டுவதா? "

என் ஒத்தரூபாயை விழுங்கி விட்டு தேமேனென்றிருந்து...




@@@@@@@@@

ரோமாபுரியே அவளின் அழகில் சொக்கி போனதாக சொல்லுவார்கள். மென்மஞ்சள் உடல் நிறமும், மயக்கும் நீலவிழிகளையும் கொண்டவள் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா. நூற்றுக்கணக்கான கழுதைகள் பண்ணைகளில் வளர்க்கப் பட்டன. நித்தம் கழுதைப்பாலில் குளிப்பாளாம். அதிருக்கட்டும் இத்தகவல் எதற்கு என்றால் இப்போது கழுதைப் பால் லிட்டர் ஐந்தாயிரத்திற்கு விற்கிறார்களாம். குழந்தைகள் கழுதைப் பால் குடித்தால் நோய் நொடியில்லாமல் திட காத்திரமாக இருப்பார்களாம். ஆனால் உண்மையா ? என்றால் டுபாக்கூர் தான். குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.



@@@@@@@@@



Download As PDF

Sunday, July 20, 2014

வெளிநாட்டில் வேட்டி அனுபவம் : கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்

சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றதால் , கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பர்ய உடை மடுமல்ல தன் மான பிரச்சனையாக சட்ட சபை வரை விவாத பிரச்சனையானது வேட்டி. தொடர்ந்து கிளப்புகள் அனுமதி மறுப்பது முதல்வரின் கண்டனத்திற்கு உள்ளானது.


வெளிநாட்டில் வேட்டி கட்டி சென்ற கவிஞர் கண்ணதாசனின் அந்தக் கால சுவரஸ்ய பயண அனுபவத்தை , படித்ததில் இருந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன் சின்ன நகைச்சுவை காட்சிகள்.....

‪#‎தலீவரின்_மனைவி‬

ஏனுங்க சபைக்கு போறதா சொன்னீங்கன்னுதான் நாலஞ்சு வேட்டி எடுத்து வெட்சிருக்கேன்...மறக்காம எடுத்திட்டு போங்க. அப்புரம் துண்டக் கானோம் துணியக் கானோமினுட்டு கூவாதீக


‪#‎தலைவனும்_தொண்டனும்

தலைவரே ....உங்க வேட்டி??

அதா இப்ப முக்கியம் சண்டைல காணாம போறது சகஜம்பா...


#அரசியல் வாதி கணவனிடம்...மனைவி

"ஏனுங்க எங்கேங்க உங்க வேட்டி ?"

"அடியேய்..எத வேனா கேளு...வேட்டிய மட்டும் கேட்காத...ஓடுகாலி...ஓடுகாலி"

"வேட்டிஇல்லாம வந்திருக்கீங்களே எங்கேன்னு கேட்டா ஓடுகாலின்றீங்களா? நா அம்மா வூட்டுக்கு போறேன்"

"அய்யய்யோ...கிழிஞ்சது, அவங்க கிட்ட கேட்கப்போறியா? "

"கிழிஞ்சிடுச்சா முன்னமேயே சொல்றதுக்கென்ன"



கவிஞர் கண்ணதாசனின் வெளிநாட்டு பயண அனுபவம், முக்கியமாக வேட்டி அனுபவம் அதில் இருப்பதால் இந்த கட்டுரையை இங்கு பகிர்கிறேன். அந்தக் கால காட்டத்திற்கு நம்மையும் அழைத்து செல்கிறார், கவிஞர்.

சந்தித்தேன் சிந்தித்தேன்....கவிஞர் கண்ணதாசன் நூலில் இருந்து....



ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நானும், மன்னை அம்பிகாபதியும், மெல்லிசை மன்னர் தம்பி விஸ்வநாதனும், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ யும் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். எங்களில் மன்னை அம்பிகாபதி மட்டும் வேட்டி கட்டி, மேலே ஜிப்பா போட்டிருந்தார். அந்த வேட்டி காபூல் நகரத்துச் சிறுவர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது. அவர்கள் கூட்டமாகக் கூடி அந்த வேட்டியை இழுத்துப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அம்பிகாபதிக்கு கோபம் வந்துவிட்டது.

“நீங்கள்தானடா கோமாளிகள்” என்று அவர்களைத் தமிழில் திட்டினார்.

காபூலில் கேலியாகத் தெரிந்த வேட்டி, சோவியத் யூனியனில் துருக்மினிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் பெரும் மரியாதைக்குரியதாயிருந்தது.

சின்னச் சின்னப் பெண்களெல்லாம் கூட அம்பிகாபதியின் கையைப் பிடித்துக் கொண்டு படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.

நல்ல வேளையாக நானும் வேட்டி கொண்டு போயிருந்தேன்.

துருக்மினிஸ்தானில் சீசன், அசல் பெங்களூர் மாதிரியே இருக்கும். மாஸ்கோவைப் போல் அங்கே பனி பெய்வதில்லை. லேசான வெய்யிலும், குளிர் காற்றும் இருக்கும். ஆகவே, நானும் வேட்டி கட்டிக் கொண்டு போட்டோவுக்கு நிற்க ஆரம்பித்தேன்.

இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழகப் பிரிவுக்கு நான் துணைத் தலைவர். சோவியத் அழைப்பின் பேரில் நாங்கள் சென்றிருந்தோம்.

அஷ்காபாத்தில் நாங்கள் போய் இறங்கிய போது, காலை எட்டு மணி. விமானத்தின் கதவு திறக்கப் பட்டதும், வாத்தியங்கள் முழங்கின. படப் பிடிப்புக் காமிராக்கள் சுழன்றன. மாநில மந்திரிகளெல்லாம் வந்திருந்தார்கள்.

”அண்ணே! யாரோ மிகப் பிரபலமான ஒருவர் இந்த விமானத்தில் வந்திருப்பார் போலிருக்கிறது” என்ற படியே விமானத்தை விட்டுக் கீழே இறங்கினார் தம்பி விஸ்வநாதன்.

”நான் தான் அது! “ என்றார் அம்பிகாபதி.

அவர் சொன்னதிலும் தவறில்லை. வந்திருந்தவர்கள் எங்கள் கழுத்தில் மாலைகளைப் போட்டார்கள்.

லெனின் கிராடில் ‘செம்பியன்’ என்ற தமிழறிவு மிக்க ரஷ்யர் எங்கள் துணைக்கு வந்தார்.

லெனின் கிராடைச் சுற்றிப் பார்த்த போது அங்கேயும் அம்பிகாபதிக்குத் தான் சிறப்பான வரவேற்பிருந்தது.

இந்த வேட்டியையும் சட்டையையும் ரஷ்யர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஆனால் மாஸ்கோவில் நிலமை வேறு. அங்கே அடுப்பையே தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்குக் குளிர். அங்கேயும் அம்பிகாபதி வேட்டி சட்டையோடுதான் காட்சியளித்தார்.

எனக்கு எங்கேயுமே இருப்புக் கொள்ளாது. அற்புதமான சர்க்கஸ். அதிலிருந்து பாதியிலே ஹோட்டலுக்குப் போக விரும்பினேன். தெ.பொ.மீ க்கு ரொம்ப வருத்தம். கூட வந்த பெண்மணி, “கார் வரத் தாமதமாகும்” என்றார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.

அம்பிகாபதியின் வேட்டியையும், சட்டையையும் பார்த்து மாஸ்கோ ஜனங்களெல்லாம் பரிதாபப் பட்டார்கள். துணைக்கு வந்த அம்மையார் தன் கோட்டுக்குள்ளேயே அம்பிகாபதியையும் திணித்துக் கொண்டு, பனி தாக்காதபடி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

இருப்பினும், எனக்கும் அம்பிகாபதிக்கும் அதனால் பாதங்கள் பாளம் பாளமாக வெடித்துவிட்டன. காரணம் நாங்கள் பூட்ஸ் போடவில்லை.

நான் எந்த நாட்டிலும் எந்தப் பெண்ணைக் கண்டாலும் முத்தமிடுவேன். அம்பிகாபதி அதற்குத் தூபமிடுவார். ஒரு கூட்டுப் பண்ணையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது தெ.பொ.மீ க்கு கெட்ட கோபம் வந்துவிட்டது.

துருக்மினிஸ்தானில் ‘மாரே’ என்று ஓர் அற்புதமான ஊர். அங்கே அம்பிகாபதியோடு படம் பிடிக்க ஏக கிராக்கி. அந்த ஊரிலுள்ள எல்லோருமே கலைஞர்கள்.

தம்பி விஸ்வநாதனைப் பாடச் சொல்லிவிட்டு. நாங்கள் படத்துக்குப் ”போஸ்” கொடுத்தோம்.

எந்த ஊருக்குப் போனாலும் தெ.பொ.மீ யோடு அம்பிகாபதியைத் தங்க வைத்து விடுவோம். தெ.போ.மீ மிகவும் கண்டிப்பானவர். அம்பிகாபதி அவருக்குக் கட்டுப் பட்டு அவர் கூட இருப்பார். நானும் விஸ்வநாதனும் அறையில் பத்துப் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவோம்.

1967 கடைசியில் சோவியத் யூனியன் சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பினோம். அதுவரை காங்கிரஸ்காரராக இருந்த அம்பிகாபதி, சோவியத் விஜயம் முடிந்து திரும்பியதும் இந்தியக் கம்யூட்னிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். இப்போது, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் அம்பிகாபதி என்னைச் சந்திக்க வந்தார்.
நேற்று (10-1-80) அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஒரு மாதம் சிங்கப்பூர் மலேஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சோவியத் யூனியனில் எந்த வரவேற்பிலும் அவர் பெயரை “அம்பிகாபதி” என்று உச்சரிப்பதில்லை. ‘அம்பிகபோதி’ என்றழைப்பார்கள்.

விஸ்வநாதனை “விஷ்வகாந்த்” என்பார்கள்.

தெ.பொ.மீ யை ரெக்டார். நான் கொண்ணதாசன்.

அதோ அந்த துருக்மினிஸ்தானில், கோரகும் கால்வாயில் நானும், தம்பி விஸ்வநாதனும், அம்பிகாபதியும் பிறரும் படகு சவாரி செய்த காலங்கள்.....

* * * * * * * * * * * * * * * * *

Download As PDF

Tuesday, June 17, 2014

சர்தார்ஜி ஜோக்ஸ்(Part III)






பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோவின் பின் சக்கரத்தை கலட்டிக்கொண்டிருந்தார்.

"ஏன் பஞ்சரா ? "

"போர்டைப்பாருங்க ஜி"

போர்டில் "பார்க்கிங் டுவீலர் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *


வெளிநாடு சென்ற சர்தார் பீச்சில் குளித்து விட்டு ஹாயாக குடையின் கீழ் படுத்துகிடந்தார்.

வெள்ளைக்கார பெண் அவரை கடந்து செல்லும் போது "ஆர்  யூ ரிலாக்ஸிங் ?" என்று கேட்டார்

அதற்கு அவர் " நோ ...நோ ஐ ஆம் பாண்டா சிங்" என்றார்

திரும்பவும் இன்னொரு பெண்னும் இதே கேள்வியை கேட்க, இந்த இடம் சரிப்படாது என்று இடத்தை மாற்றினார்.

அங்கே ஒரு சர்தார்ஜி இருக்க இவர் தம் இங்கிலீசு புலமையை காட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.

அவர் படித்த சர்தாஜி சிரித்துக்கொண்டே "யா...ஐ ஆம் ரிலாக்ஸிங்"

"பொடேர் "என்று அவரை அடித்த சர்தாஜி "உன்ன தான் அங்க எல்லோரும் தேடிட்டு என்ன கேட்கிறாங்க கொய்யால நீ இங்க இருக்க"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *


மைசூர் அரண்மனையில்

"ஜீ இதில உட்காரக்கூடாது திப்பு சுல்தானோட நாற்காலி"

"ஒயே...கவலப்படாத அவரு வந்தவுடனெ ஏந்திருச்சுருவேன்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


மாசமாயிருக்கும் தன் மனைவிக்கு சர்தார்  SMS அனுப்பினார்.

சிறிது நேரம் கழித்து ரிபோர்ட் வந்தது

பல்லே...பல்லே என்று குதிக்க ஆரம்பித்தார் கேட்டதற்கு

மெசேஜ் செய்தியை காட்டினார் .  SMS ரிபோர்ட் "Delivered"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


ரயில் வருவதற்காக காத்திருந்த சர்தார்....ஓடிப்போய் ஓரமாக நின்றுகொண்டார்.

ஏன் ? என்றால் ஸ்பீக்கர் சொன்னத கேட்கலியா

"காடி ப்ளேட்பார்ம் பர் ஆ ரஹி ஹை"  கத்தினார்.

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

 " எழுதினதை காட்டு "

சர்தார் :   "நீங்க அழிச்சப்பவே நானும் அழிச்சுட்டேன் மிஸ்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தாருக்கு கல்யாணம் மார்ச் 2 ம் தேதி கல்யாணம் முடிவாகி இருந்தது.

இந்தி, தமிழ்,  தெரியாதவர்களிடம் ( ! ! ?) இன்விடேசன் கொடுத்து விட்டு இப்படி சொன்னார்

"மேரேஜ் ஆன் மார்ச்  செகண்ட், ப்ளீஸ் கம் ஆன் ஃபர்ஸ்ட் நைட்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர்  "நெப்போலியன் டிக்ஸ்னெரியில்  "முடியாது "
 "பயம்" என்ற வார்த்தைகள் இல்லை"

சர்தார் "இப்ப யோசிச்சு என்ன செய்ய வாங்கும்போதே பார்த்து வாங்கனும்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

இரவில் சர்தாரின் அறையின் வெளியே குரல் கேட்டது...

"புரிஞ்சிக்கோ என்ன தொந்தரவு செய்யாத.. நேத்து ராத்திரியே நல்லா தூங்க
முடியல..என் வாழ்க்கையோட விளையாடாத "

காலையில்...

ஜி...யாரோட பேசிட்டு இருந்தீங்க

பேசிட்டா பொளம்பிட்டு இருந்தேன் கொசு தொல்ல தாங்கல..

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


ஸ்கூல் டேஸ்..

ஆங்கில வாத்தியார் சர்தாரிடம் இந்த வாக்கியத்தை   கொடுத்து past tence ல்
எழுத சொன்னார்   "I make a mistake"

என்ன எழுதி இருப்பார்....

இப்படித்தான்..

"I was made by a mistake"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தார் பல சமயங்களில் போனில் மணிக்கணக்காக பேசுவார்...

ஒரு நாள் அதே போல போன் பேசிவிட்டு வைத்து விட்டார்

அவர் மனைவி "என்ன சீக்கிரம் முடிச்சிட்டீங்க 25 நிமிட் தானே ஆச்சு"

சர்தார் "அது ராங்க் கால் ஸ்வீட்டி" சொல்லிவிட்டு வெளியே நடந்தார்.

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தாரிடம் ஒருவர் " நீங்க எங்க பிறந்தீங்க ? "

"பஞ்சாப்"

எந்த பகுதி ?

பகுதியா எல்லாம் இல்ல பாய்... எல்லாம் முழுசா தான்

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

விவாகரத்துக்காக சர்தாரும் அவருடைய மனைவியும் கோர்ட்டில் ;

உங்களுக்கு  3 குழந்தைகள் இருக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுமானால் எப்படி பிரிப்பது ?"

குசு ..குசுவென்று மனைவியிடம் பேசிவிட்டு சொன்னார்

"அடுத்த வருசம் பிரிச்சிறோம் மேம் சாப் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

டாக்டர் படித்து விட்டு முதல் முறையாக ஒரு நோயாளிக்கு வைத்தியம் பார்த்தார்.

டார்ச் அடித்து கண்கள், காதுகள்,, நாக்கை நீட்ட சொல்லி பார்த்துவிட்டு


"லோவா இருக்கே"

டாக்டர் நீங்க ப்ரஸர் பார்க்கவேயில்லையே


"டார்ச் பேட்டரி லோவா...இருக்கே "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

"ஒருவாரமா யாருக்கு பேசினாலும்....கர்ர்ர்ர்ர்... இந்த பொன்னு ரொம்ப
தொல்ல குடுக்குதுபா..."

பக்கத்தில் இருந்தவர் போனை வாங்கி கேட்டார்

 "ப்ளீஸ் ரீ சார்ஜ் யுவர் கார்ட் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

தொடர்புடைய பதிவுகள் :





Download As PDF

Thursday, May 22, 2014

கொஞ்சம் சிரிப்பு !!

தனி கட்டையா இருந்த வரைக்கும் பிரச்சனை இல்ல கலியாணத்துக்கு அப்புரம் அப்பிடி இருக்க முடியாது இல்லையா.   தேதிகளை  கரெக்டா ஞாபகம் வெச்சிகனுமே. என்ன தேதியா ?  மனைவியோட பிறந்த நாள், மனைவியர் தினம், முக்கியமா அவளோட தங்கச்சி பிறந்த நாள் கூட ஞாபகம் வெச்சிகனும் இல்லியா.

முத்தண்ணா  ஒரு ஐடியா செஞ்சாரு நேரா பொக்கே ஷாப்புக்கு போனாரு, முன்னதாகவே இன்னின்ன தேதில வாழ்த்து மலர் கொடுக்கனும்னு கார்டு எழுதி அதுக்கான அட்வான்ஸ் கொடுத்து வெச்சிட்டாரு.

அவர் வேலைக்கு போன பின்னாடி மனைவிக்கு அவர் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டையோட பொக்கே டெலிவர் ஆச்சுது. அவர் மேல ஒரு தனி பிரியமே அவளுக்கு ஏற்பட்டுச்சு. எல்லாம் நல்ல படியா போய்ட்டிருந்தது,

இரண்டாவது வருசம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தார். வந்தவர் கண்ணில பொக்கே பட்டுச்சு.

மனைவியை பார்த்து  “ வெரி ப்யூடிபுள் நீ வாங்கின பொக்கேவா யாருக்கு ? “

அதுக்கப்புரம் என்ன நடந்திருக்கும்கிறீங்க....?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு பெண்மணிக்கு எதிர்பாராத விதமா அலாவுதின் விளக்கு கிடைச்சது.   அத தேச்சதும் ஜீனி  " என்ன வேண்டும் கேளுங்கள் எஜமானி."

"எனக்கு 3 விசயம் நீ செஞ்சு குடுக்கனும்"

மன்னிக்கவும் நீங்கள் கேட்கும் ஒரு கேள்வியை மட்டுமே நிறைவேற்ற முடியும்.  எனக்கு அதுக்கு மேல பவர் இல்லன்னு சொல்லிடுச்சு.

உலக மேப்பல் ஒரு இடத்த சுட்டிக் காட்டி இந்த நாட்டில் அமைதி இருக்கனும் சண்டையே நடக்கக் கூடாது.

அம்மணி அந்த இடத்தில் ஆயிரம் வருசமா சண்டை நடந்துக்கிட்டு இருக்கு சமாதானம் கொண்டுவர்ரது கஷ்டம்ன்னுச்சு

சரி போனா போவுது,   என் குழந்தைகளை கவனிச்சுக்கர, முக்கியமா தொவச்சுபோடற, சமைக்கர , பங்களா, காசுபணத்தோட, என்ன அன்பா கவனிச்சுகற புருசன் வேனும் முக்கியமா அவரு கிரிகெட் பார்க்கக் கூடாது என்னோட சேர்ந்து டிவி. சீரியல் தான் பார்கனும். அப்படிப்பட்டவரு என்ன கட்டிகிடனும்

ஜீனி  " எஜமானி... முதல் கேள்வி கேட்டீங்களே அது எந்த இடம் ?"


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


(கணவனும், மனைவியும்)

கண்ணே உங்கிட்ட ஒரு நல்ல விசயம் ஒரு கெட்ட விசயம் சொல்லனும்

குரல் கம்ம ” ஆனா எனக்கு தொண்டை கட்டிக்கிச்சு ”

”சரி கெட்ட விசயத்த சொல்லு “


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நண்பனோட வீட்ல நடந்த சம்பவம்.   அவங்க சின்ன பையன் தொன தொனன்னு ஏதாவது சந்தேகம் கேட்டுட்டே இருப்பான்.
அவங்க கிட்ட கேட்டான் “ நான் எப்படி பொறந்தேன் ?”

அதுவந்து, அதுவந்து (சமாளிபையிங்..)  ஒரு பெரிய கழுகு கொண்டாந்து போட்டது.

சரி அப்போ...அப்பா , நீங்க ?

அது மாதிரி தான்பா....

தாத்தா... பாட்டி?

அது மாதிரி தான்பா (ஸ் ஸ்  ப்பா..)

அடுத்த நாள் ஸ்கூல் அசைன்மெண் டீச்சரிடம் சொன்னான்

“இத எப்படி சொல்றதுன்னு தெரியல ஆனா 3 தலமுறையா எங்க குடும்பத்தில இயற்கையான குழந்தை பிறப்பு நடக்கல அதுதான் எனக்கு கவலையா இருக்கு “

டீச்சர் “ ங்ஙே “

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நண்பனோட மனைவி நல்லா வயலின் வாசிப்பாங்க, அவங்க திருமண தினத்தில (Wedding day) வாசிச்சு காட்றதா இருந்தது.

ஆனா ஏதோ ஒரு பொருள் விழுந்ததினால அதில ஒரு கம்பி அறுந்து போச்சு.
அந்த பெண்னோட அம்மா இப்படி அறிவிச்சாங்க

எல்லோரும் மன்னிச்சுக்கங்க அமி இன்னிக்கு பெர்பார்ம் செய்ய முடியாது அவளோட ஜி ஸ்டிரிங் அறுந்து போச்சு”

பி.கு இது  a ஜோக் இல்லை


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எட்டுவயசு பையனுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு புத்தகம் கிடைச்சது. அந்த புத்தகத்தில் பின்னாடி சில பக்கங்கள் காலியாக இருந்தது

"இது எதுக்குமா? "

அதுவா உனக்கு ஏற்பட்ட அனுபவங்கள அதில எழுதனும்

எப்படி ?? பேஸ் புக்ல எழுதறாப்பலயா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அனுபவ பாடத்திற்காக ஸ்கூல்ல இருந்து குழந்தைகள ஒரு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க அங்க

எக்ஸ்-ரே டெக்னீசியன்  : " எப்பவாச்சும் எலும்பு உடஞ்சிருக்காமா ? "

”ஆமா”

உனக்கு ரொம்ப வலிச்சு இருக்குமே

”இல்ல”

உண்மையாவா எந்த எலும்பு காட்டுமா ?

அது என்னோட சிஸ்டரோட எலும்பு உடச்சது நான் தான்

எக்ஸ்-ரே டெக்னீசியன்  : " அவ்.... நீங்க போங்கம்மா "


@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என்னோட பெண்னுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்.

”“Step back on the pedals, and the bike will brake!”

சைக்கிள் நேரா புதருக்கு ஓடியது....

"ஏய்.... " நல்ல வேலயா ஓன்னும் அடிபடல

நான் தான் சொன்னேன்ல ஏன் பெடல புஷ் பேக் செய்யல...

"ஹைய்யய்யோ.... நான் பெடல புஷ் பேக் அடிச்சா சைக்கிள் ஒடஞ்சிபோயிரும்னு நினைச்சிட்டேன்"

நான் “ ங்..ஙே “



@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு பள்ளிக்கூடத்தில் புதிதாக வந்த டீச்சர்

“பெயர் என்னப்பா”

“ஸ்பைடர் மேன்”

உன்னோட ரியல் நேம் என்னப்பா ?

ஓ...அதுவா..சாரி,  பீட்டர் பார்க்கர்”

@@@@@@@@@@@@@@@@@@@@@@

Download As PDF

Monday, April 14, 2014

ஜோக்ஸ்...ஜோக்ஸ்


சலூன்கடையில் “உங்க தல முடிய ரொம்ப கட் பன்னனும் போல இருக்கே”

சீட்டின் பின்னால் வாகக சாய்ந்து கொண்டவர்
“ம்..இருக்கலாம் இந்த தடவை நல்லா கட்பன்னிடுங்க...”

“ போன தடவ மோசமா கட்செஞ்சு இருப்பீங்கலோ”

 @#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

தன் அப்பாவுடன் முதன் முதலில் பாலட் நடனம் பார்க்கப்போனான் ஒரு சிறுவன்.

“பெண்கள் கால் விரல்கள் தரையில் சுழல துள்ளி ஆடினர்”

பையன் அப்பாவிடம் கேட்டான் “ டான்சுக்கு ஏம்பா உயரமானவங்க கிடைக்க மாட்டாங்களா ?”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

பல்லு புடுங்க எவ்வளவு பீஸ் டாக்டர்

ஐநூறு ரூபாய்கள்

டாக்டர் என்கிட்ட முன்னூறு ரூபாய்தான் இருக்கு

நிதானமா பல் பிடுங்க கொஞ்ச நேரம் ஆகும் பரவாயில்லையா?

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

கண் ஆபரேசன் முடிஞ்சதும் கண் திறந்து பார்த்த நோயாளிக்கு எல்லாம் கொஞ்சம் மங்களா தெரிஞ்சது டாக்டரிடம் கேட்டான்.

“டாக்டர் சினிமாவுல யூஸ் பன்ற புகை மூட்டம் எக்யூப்மெட் இங்க எதுக்கு ? “

ஓ அதுவா...

திடும்னு பளிச்சுனு தெரிஞ்சா நான் ஆபரேசன் சரியா செய்யலேன்னு பலரும் ஃபீல் செய்யராங்க அதான்.”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

டாக்டர் என்னோட வலது மூட்டு வலியா இருக்கு

அது ஒன்னுமில்ல வயசாகுது இல்லியா ?

...டாக்டர் ஆனா என்னோட ரெண்டு காலுக்குமே ஒரே வயசுதான் இருக்கும்

டாக்டர் “ ஙே “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@

பஸ் நடத்துநர் “இந்த புள்ளக்கு 5 வயசாச்சுன்னு சொல்லுதே டிக்கட் எடுக்கனும்மா”

பெண்மணி “ எனக்கு கல்யாணமாகியே 4 வருசம்தான் ஆச்சு புள்ளக்கி எப்படிங்க 5 வயசு ஆகும்”

”அதெல்லாம் எனக்கு தெரியாது ...நான் டாக்டர் இல்லம்மா கண்டக்டர் “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ      


மொத மொதலா சர்சில் நடக்கும் கலியாணத்திற்கு தன்னோட பையனோடு உடன் போனார் ஒருவர்.

பையன் : “அப்பா ஏம்பா பொண்ணு வெள்ள வெளேர்னு டிரஸ் போட்டிருக்கு

அப்பா : தேவதை வெள்ள டிரஸ் போட்டிருக்கும் இல்லியா. இன்னிக்கு வாழ்க்கையில் அந்த பொண்ணுக்கு எல்லா சந்தோசமும் வந்து சேரப் போகுது அதுக்குத் தான்.

பையன் : சரிப்பா அப்ப ஏன் மாப்ள கருப்பு கலர் கோட் போட்டு இருக்காரு.

அப்பா : “ ங்...ஙே “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பாலத்தின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்ய இருந்தவனை பார்த்தவர் ஓடி வந்து தடுத்து “ஏம்பா ஏன் எல்லாத்துக்கும் இது தீர்வு இல்லப்பா” என சமாதானம் செய்து அமைதி படுத்தினார்.

”சரி ஏன் இந்தமுடிவு எடுத்தே ?”

”சம்சாரம் பக்கத்து வீட்டு காரனோடு ஓடி போய்ட்டா”

”இன்னொரு கலியாணம் செஞ்சிட்டா போச்சு. எப்ப நடந்திச்சு ?”

“ 1 வருசம் ஆகிடுச்சு இப்ப அவன் போன் பன்னினான் அவள திரும்ப எங்கிட்டயே ஒப்படைக்கப் போறானாம் “

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


நீண்ட நாள் கழித்து இரண்டு பெண்கள் ஒரு காஃபி சாஃபில் சந்தித்து கொண்டார்கள்.

முதலாமவள் “ஏன் அடிக்கடி சொறிஞ்சிக்கிட்டே இருப்பியே.. இப்ப எப்படி?”

இரண்டாமவள் “அதெல்லாம் தேவையில்ல இப்ப எனக்கு கலியாணம் ஆகிடுச்சு அவரு பாத்துப்பாரு”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


இரண்டு ப்ரிகேஜி சிறுவர்கள்.... எங்கம்மாக்கு இருட்ல கூட நல்லா
கண்ணு தெரியுதுடா ?

எப்படிடா சொல்ற

நேத்து கரண்ட் போனப்ப எங்கம்மா எங்கப்பாட்ட ஷேவ் செய்யலன்னு திட்டினாங்க..டா

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இரண்டு ப்ரிகேஜி சிறுவர்கள்.... கூடிய சீக்கிரம் எங்க வூட்ல தம்பி பாப்பா வரும்டா...

எப்படிடா சொல்ற,,,

போன தடவ எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாம போனப்ப தங்கச்சி பாப்பாவோட வந்தாங்க

இப்ப எங்க அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையாமா

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


“ஹலோ...இது பயர் ஆபீஸா”

”ஆமா சொல்லுங்க”

”என் வீட்டு முன்னாடி அழகான பூந்தோட்டம் வெச்சிருக்கேன்”

”சரிம்மா நெருப்பு எங்க புடிச்சது?”

”நீங்க வரும்போது அதுமேல வண்டிய ஓட்டிட்டு வராம பார்த்துக்கங்கன்னு சொல்ல தான் கூப்ட்டேன்”

“நா கேட்டதுக்கு பதிலே சொல்லலியே”

”நெருப்பு பக்கத்து வீட்ல புடிச்சிருக்கு”

“ ஹலோ...ஹலோ... கட்டாகிடுச்சே”


@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நண்பர்களுக்கு கடன் கொடுத்தா நட்பு முறிஞ்சிடுமாம்....நான் உனக்கு கடன் தர முடியாது.

“அதனால பரவாயில்ல நாம எப்பவும் நல்ல நண்பர்கள்னு சொல்லிகிட்டதில்லியே”

@#@ #@ # @#@ #@ # @# @# @#@#@ #@# @# @# @#@ #@ ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

Download As PDF

Friday, April 11, 2014

சக்கரை கலந்த இறைச்சியினால் மறதி ஏற்படுமா ?

மொறு மொறு இறைச்சியில் சுவைக்காக இனிப்பு சேர்க்கப் படுகிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள்  குறித்த தகவல்கள் ...தொடர்ந்து படியுங்கள்..

இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 



பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும். இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள். இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல்
மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

தற்போது இத்தகைய உணவுகள்,  குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த மருத்துவ விஞ்ஞானிகளின்  எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக
வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.

Tks to bbc news

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?'

பழமொழியாக வழங்கி வந்தாலும் இதுக்கு விடை சொல்ல முடியுமா ?

இதற்கான பதில் இறுதியில்...

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

தவறு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது. தவறுகளே நம்மை கூர் செய்கின்றன



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நகைச்சுவை

தேர்தலில் நின்ற ஒருவர் தோற்ற தாக அறிவிக்கப் பட்டது. அவருக்கு 3 ஓட்டுகள் மட்டுமே கிடத்து இருந்தது. அவர் மனைவி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

"யோவ்...எனக்கு அப்பவே சந்தேகம் இருந்திச்சு. உனக்கு ஓட்டு போட்ட அவ யாருன்னு இப்ப ...இப்பவே தெரிஞ்சாகனும்"

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

நடிகையை கல்யாணம் செஞ்சுகிட்ட ஒருத்தன், டாக்டரிடம் போனான்...

" டாக்டர் எ மனைவி மேலே ஒரே சந்தேகமா இருக்கு "

"ஏன் "

" அவ அந்த மாதிரி போஸ் கொடுத்து இருக்கா டாக்"

" நடிப்பு தானப்பா"

" அதில்ல இல்ல டாக் அதுக்காக டிரைவிங் லைசென்ஸ்ல கூடவா.... "



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அப்ப புதுசா கலியாணம் ஆகி இருந்தது. பல சமயத்துல வீட்டுக்கு வர லேட்டாகிடும்.  வீட்டு நாய் என்ன பார்த்து சுத்தி சுத்தி குரைக்கும். அவ என்னோட செறுப்ப எடுத்து போடுவா அது குரைப் பத நிறுத்திடும்.

3 வருடங்களுக்கு பிறகு.....



"என்னோட நாய் செறுப்பு எடுத்து கொண்டு வருது

"அட டே"

என்ன நொ டே டே...

அவ என்ன பார்த்து குரைக்கிறா...



(நகைச்சுவைக் காக யார் மனதையும் புண் படுத்துவதற்காக இல்லை முக்கியமா என வூட்டுகாரி க்கு LoL) 

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~


மொபைல் போன் பயன் படுத்துவோரில் நூற்றில் 68 பேருக்கு "பான் தம் வைப்ரேசன் சின்ரோம்" இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.  அதாவது அருகில் இருக்கும் யாரோட மொபைல் சினுங்கினால் நம்முழுதான்னு எடுத்துப் பார்க்கரது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

விடுகதைக்கான பதில்  "காளான்"

விடுகதையாக இருந்தது பின்னாளில் பழமொழியாக மருவியது.



Download As PDF

Friday, February 28, 2014

சர்தார்ஜி ஜோக்ஸ்...[ PART TWO ]



சர்தார் சிறிய டி.வி வாங்குவதற்காக ஒரு வீட்டு பொருள்கள் விற்கும் கடைக்கு சென்றார். அந்த கடையில் சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

விற்பனையாளரிடம் "இந்த குட்டி டி.வி வேண்டும் என்ன விலை என்றார் ? "
விற்பனையாளர் "சர்தாருக்கு நாங்க விக்கறது இல்ல"

அவரை முறைத்து பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் ஒரு நாள் டர்பனை கழட்டி வைத்து விட்டு அதே கடைக்கு சென்றார் அதே ஆள்

"இந்த டிவி என்ன விலை ? "

அதே பதில் .

சில நாட்களுக்கு பின்,...

சர்தார் விடுவதாக இல்லை போனால் போகிறது என்று சலூன் கடைக்கு சென்று கெட்டப்பை மாற்றிக்கொண்டார்.  மீண்டும் அதே கடை அதே ஆள்.

அவரது துரதிருஷ்டம் "நாங்க சர்தாருக்கு விக்கறது இல்ல"

மிகக் கடுப்பானார் ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாந்தமாக கேட்டார்.

"அது சரி நான் தான்னு எப்படி கண்டுபிடிச்ச ? "

"அது மைக்ரோவோவன் " என்று பதில் வந்தது

  #@#@#@#@#@#@#@#@#@#@#@


சர்தாரும் அவர் நண்பரும்

சர்தார் :  ராத்திரி ட்ரெயின்ல தூக்கமே இல்ல பா...

நண்பர் : ஏன் ?

சர்தார் : ஊ(அ)ப்பர்  பெர்த்

நண்பர் : கீழ் இருக்கும் பெர்த் காரங்கள மாத்தி கேட்டிருக்கலாமே...

சர்தார் : ஒயே...அதான் யாருமே இல்லியேபா

 #@#@#@#@#@#@#@#@#@#@#@



சர்தார்  சேமிப்பு கணக்கு துவங்க ஒரு பேங்கிற்கு போனார்.  அவரிடம்
ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது..

விறு விறுவென்று மேனேஜரிடம் போனார்....

நான் இந்த பேங்கல தானே அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போறேன் பின்ன எதுக்கு
நான் டெல்லி போவனும்.... என்று அந்த விண்ணப்பத்தில் சுட்டி காட்டி னார்.

சுட்டிய இடத்தில்   " FILL UP IN CAPITAL " என்று இருந்தது.

#@#@#@#@#@#@#@#@#@#@#@



சர்தார் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

ஆசிரியர்  "  இந்தியாவுல ஒவ்வொரு 10 செகண்டுக்கும் ஒரு பெண்  குழந்தையை பெற்று எடுக்கிறார் "

சர்தார்   " ... அந்த பொண்ண உடனடியா தேடி கண்டுபிடிச்சி  நிறுத்த சொல்லனும் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது

டின் & மார்டின்  - ன்னு பேர் வெச்சார்

அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு

பீட்டர் & ரிபீட்டர்  - ன்னு பேர் வெச்சார்

அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு

மேக்ஸ் & க்ளைமேக்ஸ்  - ன்னு பேர் வெச்சார்

அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு
என்ன பேர் வெச்சு இருப்பாரு....

''''''
''''''
'''''

"டயர்ட் & ரிடயர்ட் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

(சினிமா தியேட்டரில்..)

சர்தார் டிக்கட் கிழிப்பவரிடம் திரும்ப திரும்ப சொன்னார்

"நாங்க 19 பேரு...நாங்க 19 பேரு "

இன்னொருத்தர் இருந்தா  ...20 பேரு ஆகி இருக்குமே ?

" 19 பேரு சேர்க்கரதுக்கே ரெம்ப கஷ்டமா போச்சுது, இது 18 ப்ளஸ் படம் தானே 19 பேர் போதுமே "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தார்ஜி சாவு வீட்டுக்கு போயிருந்தார்  போட்டோ கிராபர் வராததால்
செத்து போனவரை  புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள்.

ஆனால் அவருக்கு  தர்ம அடி  விழுந்தது

என்ன நடந்திருக்கும்....
..
...
....

"ஸ்மைல் ப்ளீஸ் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

ப்யூனை கூப்பிட்டு அவசரமாக ஒரு பிளம்பரை கூட்டி வரச்செய்தார் புரெபசர் சர்தார்.

உங்கள எதுக்கு இங்க வரச் சொன்னன் தெரியுமா?

பிளம்பர் தலையை சொரிந்து கொண்டே “தெரியலயயே சார்”

ஃக்வெஸ்டின் பேப்பர் லீக்காகிடுச்சாம் சீக்கரம் கண்டுபிடிச்சு அடைக்கனும் “

#@#@#@#@#@#@#@#@#@#@#@

  வேலைக்காரனை கூப்பிட்ட சர்தார்

“செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டியா ? “

இல்லீங்க ஐயா... மழை வருது

இது கூட உனக்கு சொல்லி தரனுமா ? கொடை பிடிச்சுட்டு தண்ணி ஊத்து போ...

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாரின் காதலி “ ஓ டார்லிங் நிச்சயத்திற்கு நீங்க எனக்கு ரிங் குடுக்கனும் “
”நிச்சயம் கண்ணே உன்னோட போன் நம்பர் சொல்லு “

#@#@#@#@#@#@#@#@#@#@#@

தெருவில் போன சர்தாரை நாய் துரத்த எப்படியோ தப்பிச்சு மாடி ஏறினார்.

இதை மேலிருந்து கவனித்தவர்  “ஏன் சிரிச்சிக்கிட்டே வரீங்க”

ஹி..ஹி... நான் ஹட்சில் இருந்து இப்ப ஏர்டெல்லுக்கு மாறிட்டேன் அதுக்கு தெரியல போல...

#@#@#@#@#@#@#@#@#@#@#@

இங்கிலீஸ் டீச்சர் எல்லோரையும் “கிரிகெட்டை பற்றி கட்டுரை எழுத சொன்னாங்க”

சர்தாரிடம் ” அதுக்குள்ள எழுதியிட்ட யா எங்கே காட்டு“

”DUE TO RAIN NO MATCH "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

  அம்மா :  "அந்த சோனியா பொண்ணுக்கு உன்ன விட ஒரு வயசு அதிகம்டா"

 சர்தார்  : “ ஓயே,,.. நான் அடுத்த வருசம் தானே கல்யாணம் செஞ்சுக்கபோறேன்...நீ கவல படாத”

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாரும் மனைவியும் ஒரு காஃபி ஷாபிற்கு போனாங்க.

சர்வரை கூப்பிட்டு “தம்பி ரெண்டு ஹாட் காஃபியே கொடு ஒரு எக்ஸ்ட்ரா டம்ளர் குடுத்துருபா”

மனைவி கடிந்து கொண்டார் “பாப்ரே பாப்...நான் கோல்ட் காஃபி தானே கேட்டேன்”

நான் தான் எக்ஸ்ட்ரா டம்ளர் கேட்டிருக்கேன்ல ஆத்தி குடுக்குறேன். அவங்களே ஆத்தி கொடுத்தா ரேட் ஜாஸ்தி மா“

 #@#@#@#@#@#@#@#@#@#@#@

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த சர்தார் புலம்பினார்

“ஹையோ... என்ன மார்டர்ன் ஆர்ட்டோ,.. மோசமா இருக்கே”

பக்கத்தில் இருந்தவர் “ஜி அது கண்ணாடி”

#@#@#@#@#@#@#@#@#@#@#@

பார்க்கில் ஒருவர் சர்தாரிடம் கேட்டார்....

ஏன் மன்மோகன் சிங் காலைல வாக்கிங் போகாம சாயங்காலமா வாக்கிங் போறார் ?
சர்தார்  " அரே பாய்.... அவரு  P.M ... A.M  இல்லே..."

#@#@#@#@#@#@#@#@#@#@#@

உடல் எடையை குறைப்பதற்காக சர்தார் ஒரு டாக்டரிடம் போனார்.
தினமும் 8 கிலோமீட்டர்கள் நடந்தால் 300 நாட்களில் 34 கிலோ குறைஞ்சிடும்னார் டாக்டர்.

300 நாட்கள் கடந்துவிட்டது, சர்தார் டாக்டருக்கு போன் செய்தார்.

"டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே உடல் இளைச்சு போச்சு ஆனா ஒரு ப்ராப்ளம் "

"என்னாச்சு "

"என் வூட்லேருந்து இப்ப நான் 2400 கிலோமீட்டர் தாண்டி இருக்கேன் என்ன செய்யட்டும்"

 #@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தாரின் இரண்டு காதுகளும் சிவந்து போய் இருந்தது....டாக்டர் கேட்டார்
"அச்சச்சோ என்னாச்சு "

டாக்டர் நான் துணிக்கு அயர்ன் செஞ்சிட்டு இருந்தப்போ.... போன் வந்திடுச்சு
"போனுக்கு பதிலா  அயர்ன் பாக்ஸை காதுல வெச்சு"

"அது....சரி அந்த காது ?"

"அதே ஸ்கவுண்டரல் திரும்ப போன் பன்னிட்டான் "

#@#@#@#@#@#@#@#@#@#@#@

சர்தார் செல்ல நாயை வாக்கிங் கூட்டிட்டு போய்டிருந்தார்....

எதிரே வந்த நண்பர்.... "மூனு நாய் வளர்த்தரீங்களா ?"
திரும்பிப் பார்த்த சர்தார்....

அதுங்க ரெண்டும் "ஜூலியோட  ஃப்ரென்ட்ஸ்...எங்களோட வாக்கிங் வருதுங்க..."

#@#@#@#@#@#@#@#@#@#@#@





Label :  சர்தார்ஜி ஜோக்குகள், சர்தார் நகைச்சுவை

Download As PDF

Friday, February 21, 2014

சர்தார்ஜி ஜோக்குகள் !!


Disclaimer : நகைச்சுவைக்காக மட்டும் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...

முதலாளி ; உனக்கு ஸ்டார்டிங் சேலரி 2000

சர்தார் ; "ரொம்ப சந்தோசம், அப்ப டிரைவிங் சேலரி ? "

@#@#!#@

எகிப்து கேளரியில் மம்மியை பார்த்து கொண்டிருந்த இரண்டு சர்தாஜிகள்.

"பெரிய ஆக்ஸிடண்டு போலப்பா...உடம்பு முழுக்க கட்டு போட்டிருக்கு."

"இருக்கும், இருக்கும் வண்டி நம்பரு கூட எழுதிருக்கே BC 1827 "

@#@#!#@#

ஒரு டிடக்டிவ் நிறுவன இண்டர்வியுவில்;

காந்திய சுட்டது யாரு ?

சர்தார்ஜி ; நன்றி சாப்., இப்பவே அத கண்டு புடிக்கிற வேலைய ஆரம்பிச்சுடுரேன்.

@#@#!#

பரிட்சைக்கு ப்ரட்ண்ட் பத்தி மட்டுமே படிச்சிருந்த சர்தார் பரிட்சையில் கேட்கப் பட்ட பாதர் ங்கர கேள்விக்கு, இப்படி எழுதினார்.

I am fatherly person. I have lot of fathers, some of my fathers are male, some are female. My true father is my neighbour.

@#@@!@

இண்டர்வியூவில் P.hd ன்னு போட்டிருக்கீங்க அப்படின்னா ?
சர்தாஜி புன்னகையுடன்

" Passed Highschool with Difficulty "

@#!#!@!#

தமிழ் காரன் கேட்டான் "தமிழ் தெர்யுமா?"

சர்தார்ஜி "ஹிந்தி தெர் ரா பாப் "

@#!#!@!#

சர்தார் அடிக்கடி சமையல் அறைக்கு போவதும், சக்கரை டப்பாவை திறந்து பார்பதுமாக இருந்தார்.

மனைவி கேட்டார்
"ஏனுங்க டப்பாவை அடிக்கடி திறந்து பார்கரீங்க"

"டாக்டர் சொன்னதை மறந்திட்டியா...அடிக்கடி சுகரை செக் செய்ய சொன்னாரே"

@#!#!@!#

இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று சர்தாஜிகள் போய்ட்டு இருந்தாங்க, வழியில் ட்ராபிக் போலிஸ் கை காட்டி நிறுத்தினார்.  ஒருத்தர் சொன்னார் " ஏற்கனவே நாங்க 3 பேர் இருக்கோம் சார்"

@#!#!@!#

ஒரு காட்டில் இரண்டு சர்தார்கள் சென்று கொண்டு இருக்கும் போது எதிரே ஒரு சிங்கம் வந்து விட்டது ஒருத்தர் தைரியமாக மணலை அள்ளி அதன் கண்களில் போட்டுவிட்டு ஓடினார். இரண்டாமவர் மெதுவாக நடந்து போனார். ஏன் ஓடாமல் நடந்து வருவதாக கேட்டதற்கு "அது கண்ணுல மண்ண போட்டது நானில்லையே பின்ன எதுக்கு ஓடனும்"

@#!#!@!#

பேங்க் வேலைக்கு இன்டர்வியூவில் சர்தாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது " சைக்ளோன் என்றால் என்ன ? "

அவரின் பதில் "சைக்கிள் வாங்க பேங்கில் கொடுக்கப்படும் லோன்"

இன்னொரு இன்டர்வியூவில் "உங்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் தெரியுமா ? "

"அட்ரஸ் சொல்லுங்க சார்"

இன்னொரு இன்டர்வியூவில் " கர்பனை செஞ்சுக்கோங்க.... நீங்க பதினஞ்சாவது மாடீல இருக்கும் போது தீ பிடிச்சுக்குது எல்லோரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யராங்க நீங்க என்ன செய்வீங்க"

"கர்பனை செய்யறத நிறுத்திடுவேன் "

@#!#!@!#


மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கி வந்த சர்தார் ஒன்னொன்னா எடுத்து அதன் ஓரங்களை நறுக்கினார். நண்பர் ஏன் என்று கேட்டார்.

" சைட் எபெக்ட் வராம இருக்கோனுமே அதான் கட் செய்றேன்"

@#!#!@!#

பஸ் கண்டரிடம் இரண்டு டிக்கெட் கேட்டார்.

"ஒரு ஆளுக்கு எதுக்கு 2 டிக்கெட்"

"ஒன்னு தொலஞ்சி போனா இன்னொன்னு இருக்குமே அதுக்குதான்"

இரெண்டுமே தொலஞ்சி போச்சின்னா

"பாஸ் இருக்கே பாஸ்"


@#!#!@!#

இஸ்ரோ சர்தார் ஒருவரை நிலவுக்கு அனுப்பியது. நிலவுக்கு சென்றதும் ராக்கெட்டில் இருந்து இறங்க மறுத்த சர்தார்.

 " யாருகிட்ட காது குத்தரீங்க இன்னிக்கு அம்மாவாசை இது நிலாவா இருக்காது"

@#!#!@!#

"மேரா பேட்டா மோட்டார் சைகிள் சே கிர் கயா "

டாக்டர் " ஐ டோன்ட் நோ இந்தி டெல் மி இன் இங்கிலீஸ்"
" My londa gironda from Hero Honda"

@#!#!@!#

இங்கிலீஸ் வாத்தியார் " Tell a compound sentence."

சர்தார் " Stick No Bills! "

@#!#!@!#

ATM மெசினில் பணம் எடுக்கும் போது பின்னால் இருந்தவர் "உங்க பாஸ்வேர் எனக்கு தெரிஞ்சிடுச்சே **** தானே"

தவறான பதில் அது "2345"

@#!#!@!#

விற்பனையாளர் : "சார் இந்தாங்க எறும்பு பவுடர் "

சர்தார்ஜி " வேனாம் வேனாம் இன்னிக்கு அதுங்களுக்கு பவுடர் போட்டா...நாளைக்கு லிப்ஸ்டிக் கேட்கும் "

@#!#!@!#

_கலாகுமரன்

Download As PDF

Thursday, February 6, 2014

புதிர்களும்... ஜோக்குகளும் !!



மகள் ; அம்மா ,அப்பா மீன் வாங்கிட்டு வந்திருக்காரு மா ?

மனைவி ; முன்னமேயே சொல்லியிருந்தா. ..மசால் ரெடி செஞ்சு இருப்பனே ,..

மகள் ; அம்...மா (ஷாக்காமா..!)
இது நல்லா சாப்பிடுற மீனுமா ..

நான் ; அதுங்க நல்லா சாப்பிடுற மீன்கள்...

மனைவி ; க்..கும், கலர் மீனுன்னு சொல்ல வேண்டியது தானே. எனக்கு தெரியாதா நீங்க வாங்கி வருவீங்கன்னு.

(அதானே..மீச இருந்தாத்தானே மண்ணு ஒட்டறதுக்கு)

@@@@@@

நண்பனோட மானத்த காப்பாத்துனேன்னு சொன்னியே என்னாச்சு. ?

"அவன் போட்டு இருக்கரது என்னோட சட்ட பேண்ட் "

@@@@@@

பேராசிரியர் சொன்னார், "கவனம் வெச்சுக்குங்க..சொர்கத்துக்கு போக வரவு செலவு கணக்கு இருக்குப்பா..."

கடைசி பெஞ்சில் இருந்து ஒரு குரல்

"இருக்கட்டும் இந்த பிசினெஸ் நடக்கர இடம் எங்கே இருக்கேன்னு தெரிஞ்சிக்கலாமா? "

@@@@@@

கல்யாண ஆல்பத்தை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள், மகள்.

"ஆமா.. ம்மா, அப்ப ஊட்டி விட்டதோட சரி" இது நான்.

"உ க் .. ஊம்..கொமட்ல குத்துவேன்" இது மனைவி.

"சரி..சரி சண்டை போடாதீங்க, என்ன விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு இருக்கீங்க...ஹாங்" - இது மகள்.

@@@@@@



"வெஜிட்டேரியன் டயட்டு உடம்புக்கு நல்து, என்னான்ட ஹார்டு ப்ராப்ளமின்னிட்டு ஒத்த முசலு குட்டி கூட வந்ததில்ல..."

@@@@@@

புதிர் 1

"CAFFEINE ENHANCES MEMORY " என்று கண்டுபிடிச்சிருக்காங்க



உங்க மூளைத்திறனை டெஸ்ட் செஞ்சு பாருங்க. மேலே உள்ள படத்தில் ஒரு முகம் ஒழிஞ்சு இருக்கு "மூனு" செகண்டுக்கு உள்ள கண்டு பிடிக்க முடியுதா பாருங்க. 

புதிர் 2




மேலே உள்ள படத்தில் ஒன்னுக்குள்ள ஒன்னு இரண்டு பாசிமணி மாலைகள் இருக்கு ..அது தெரிஞ்சதுதான் !.. நான் கேட்கரது அவை இரண்டும் சரியான வட்ட வடிவில் இருக்குதா ? (க்ளூ.... இரண்டு மாலைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளி சமச்சீரா இருக்கான்னு பாருங்க)

புதிர் 3



மேலே இருப்பது கோக்கு மாக்கான கணக்கு.,, இப்படி சொல்வதற்கு காரணம் பெருக்கலின் நேரிடையான பதிலை கொஞ்சம் அறிவுப்பூர்வமான ( ! ) சிந்தனை தான். யோசிங்க இதுக்கு என்ன விடை என்பதை இறுதியில் சொல்கிறேன்.

புதிர் 4


எத்தனை "F " ? கேள்வியில் வரும் எழுத்தை தவிர்த்து பாருங்க.  15 நொடிக்குள்ள கண்டுபிடிக்க முயற்சி செய்ங்க. இது நம் மூளை எந்த அளவு ஸ்ட்ராங்கா ? ! இருக்கு என்பதற்கான சின்ன டெஸ்ட்.

புதிர் 5




புதிர் 6

இரண்டு பசங்க ஒரு ஆற்றை கடக்கனும் கரையில் ஒரே ஒரு படகு மட்டும் இருக்கு ஆற்றை கடக்க வேறு கயிறு , மிதவை ஏதும் இல்லை அவங்களுக்கு நீச்சலும் தெரியாது. பிரச்சனை என்னன்னா அந்த படகில ஒருத்தர் மட்டுமே போகலாம். படகு தானா திரும்பி வராது. ஆனாலும் அவங்க ஆற்றை கடந்தாங்க அது எப்படி?

புதிர் 7


லாஜிக் கேள்வியும் ; லாஜிக் பதிலும்

காடு மலை சுத்தி பார்ப்பதில் ஆர்வமுள்ள ஒருத்தன் காட்டுவழியா
போனப்ப எதிர் பாராத விதமா "அறிவுப்பூர்வமா" அதாவது லாஜிக்கா யோசிக்கிற நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தில் மாட்டிக்கிட்டான்.

அந்த கூட்டத்தோட தலைவன் கிட்ட அவன கூட்டிட்டு போனாங்க

தலைவன் சொன்னான் " இப்ப நீ உன்னோட கடைசி வாக்கியத்தை பேசலாம்"

நீ சொல்ற வாக்கியம் உண்மையா இருந்தா விறகு கட்டையில்
வெச்சு எரிச்சிடுவோம்.

நீ சொல்ற வாக்கியம் பொய்யா இருந்தா உன்ன எண்ணையில்
போட்டு பொரிச்சிடுவோம் னாங்க.

சிக்கிய சிங்காரம் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொன்னான் "_ _ _ - -"

அவன் சொன்னத கேட்ட அந்த கூட்டம் அவன விட்டுட்டு போய்ட்டாங்க

அப்படி அவன் என்ன தான் சொல்லி இருப்பான் ? ?

புதிர் 8

ஒரு சின்னகணக்கு..

எங்கிட்ட இரண்டு மீன் தொட்டிகள் இருக்கு. இரண்டிலும் மீன்கள் எண்ணிக்கை சமம் இல்லை.

முதல் தொட்டில இருந்து ஒரு மீன எடுத்து இரண்டாவது தொட்டில போட்டா முதல் தொட்டியில் இருக்கும் மீன்களின் இரண்டு மடங்கு இரண்டாவது தொட்டியில் இருக்கும்.

இரண்டாவது தொட்டியில இருந்து ஒரு மீன எடுத்து முதல் தொட்டியில் போட்டா இரண்டு தொட்டி மீன்களும் சமமாயிடும்.

அப்படின்னா, இரண்டு தொட்டியிலேயும் எத்தனை எத்தனை மீன்கள் இருக்கும் ?

புதிர் 9


புதிர் 10


புதிர் 11

ஒரு ஆள் அவசரமா ஒரு பையன தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாரு தன்னோட பையன் கால்ல ஆணி குத்திடுச்சு வைத்தியம் பாருங்கன்னு சொன்னாரு

ஆனா அந்த சர்ஜன் "இவனுக்கு என்னால ஆபரேசன் செய்ய முடியாது ஏன்னா இவன் என் பையன்"

அங்க என்ன நடக்குது உங்களுக்கு புரிஞ்சதா?

@@@@@@

இந்த குதூகலத்தை நம்மால் உணர முடியாது போவதேன் ? இது புதிர் இல்லை சிந்தனைக்கு ;


புதிர்களுக்கான விடை உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் இருப்பினும்....

 புதிர் 1 :

If you managed to find the man in 3 SECONDS, 
the RIGHT part of your brain = > more developed than in the average person.
If you found him in about 1 MINUTE => the right part of your brain is of the average person.
If you needed more than 1 minute to find him => the right part of your brain is slow.


புதிர் 2 : வட்ட வடிவில் இருக்கு (ஆப்டிகல் இல்யூசன்)

புதிர் 3 :this is one of derives....இண்டெலிஜெண்ட் மல்டிலெவல் எல்லாம் இருக்கு நாம எளிமையா இதை அனுகலாம் என்று நினைக்கிறேன் ; 11x11 = 4 இதை a = 4
22x22 = 16 => 11x2x11x2 => 11x11x2x2=> ax2x2 => 4x4 =16
33x33 => 11x3x11x3=> ax3x3=>4x9=36
44x44 => ax4x4 => 4x16=64
சமத்தின் வலதுபுறம் 4,16,36,64

கணித கோட்பாடு இல்லைன்னாலும் ஒரு இண்டெலிஜெண்ட் லாஜிக்கா எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்.
11x11=121 => 1+2+1=4
22x22=484 => 4+8+4=16
33x33=1089 => 1+0+8+9=18
இது சரி என படவில்லை 4,16,18 இதில் முரண்பாடு தெரிகிறது.

இதை இப்படி கூட்டலாம், 9+18+9 =36
(10 லிருந்து 1 குறச்சு 9,
10+8=18)
44x44=1936 இதை எப்படி அடுத்து அடுத்து கூட்டுவது?
like this, 44x44=1936 இதை எப்படி அடுத்து அடுத்து கூட்டுவது?
(16)(33)(6)
(16)(32)(16)
1936=16+32+16=64

33x33=36 is correct how ?
11x11=4
22x22=16

Let us say a Common divisional Number 'A '
11x11=121/A = 4
22x22=484/A=16

A=121/4 =30.25
A=484/16=30.25

so common divisional number must be 30.25
So 33x33=36 A=1089/36 =30.25

44x44=64 A=1936/64=30.25
55x55=100 A=3025/100=30.25

புதிர் 4 :  பெரும்பாலானவர்களுக்கு 3 F களே கண்களுக்கு சட்டென தெரியும். ஆப் வரும் இடங்களை விட்டுவிடுவார்கள். சரியான விடை 6 F

புதிர் 5 :  சரியான விடை 4

புதிர் 6 :  இருவரும் எதிர் எதிர் கரையில் நிற்கிறார்கள்.

புதிர் 7 : என்னை எண்ணையில் போட்டு பொரிச்சுடுவீங்க.

புதிர் 8 : விடை முதல் தொட்டியில் 5, இரண்டாவதில் 7

புதிர் 9 : வட்டத்தில் உள்ள நம்பர் எதிர் திசையில் இருக்கும் செக்மென்ட்களின் கூட்டல் (17)

புதிர்10 : 101 - 10^2 = 1  (101 - 10 அடுக்கு 2 =1) ,  101 = 102 - 2

புதிர்11 : சர்ஜன் அந்த பையனின் அம்மா.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)