Followers

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, December 24, 2013

நகைச்சுவைகள்...ரசிப்போம் சிரிப்போம்

ஜோக்ஸ்  சிலது சொந்த சரக்கு மற்றது படித்து ரசித்தவை
 ( மு.கு : வலைச்சரத்தில் ஏற்கனவே இந்த பதிவு வெளியாகி இருக்கு. )

ஒரு பியானோ வாசிப்பவர் முதன் முதலா ஒரு படத்திற்காக வாசித்து கொடுத்தார்.  தயாரிப்பாளரிடம் கேட்டார்

 “ படத்த நான் பார்காமலே வாசிச்சிருக்கேன் இந்த டியூன் போதுமா ?”

தயாரிப்பாளர் அதெல்லாம் டைரக்டர் பார்த்துப்பார்.

"சரி எப்ப நான் அந்த படத்த பார்க்கலாம்? "  படம் ரிலீஸ் செய்வாங்க அப்ப பார்துக்குங்க.

அது ஒரு மாதிரியான படம், படம் ரிலீஸ் ஆச்சு இவரோட சேர்த்து மூனு பேர் அவங்க ரெண்டு பேரும் கணவனும் மனைவியும்.

இவருக்கு சங்கோஜமா போச்சு அவங்க கிட்ட சொன்னார்
 “ நான் இந்த படத்த பார்க்க வரல என்னோட மியூசிக்க கேட்க வந்தேன்’’

கணவன் சொன்னான் " நாங்களும் எங்களோட நாய் குட்டிய தான் பார்க்க வந்தோம்."


@@@@@@@@@@@@@

நடிகை தோழியிடம் : இன்னும் ஒரு இருபத்திமூனு வருசத்துக்கு நடிச்சுகிட்டே  இருக்கனும் இதுக்கு ஏதுன்னா வழி இருக்கா?

ஒ இருக்கே சீரியல்ல நடிக்க ஒத்துக்கோ.

@@@@@@@@@@@@@

என்னய்யா இது மேடையில் சேருக்கு பதில் ஊஞ்சல் கட்டி வைச்சிருக்கு ?

அது விளையாட்டு துறை அமைச்சருக்கான சீட்டு.

@@@@@@@@@@@@@

ஓட்டு போட அப்ப எல்லாம் வாக்கு சீட்டு இருந்துச்சு

அதுக்கப்புரம்...

ஓட்டு மெசின் வெச்சாங்க

இப்ப

ஐ பேட் வைச்சிருக்காங்க

@@@@@@@@@@@@@

அவள் அவன் கன்னத்தை பார்த்து : நீங்க எத்தனை முறை சேவ் செய்வீங்க

அவன் :  ஒரு நாளைக்கு 20 - 30

அவள் : * & $ ^ ! ஙே...

அவன் : என்னோட தொழிலே அதானே

@@@@@@@@@@@@@

(பெண் டாக்டரும் , வைத்தியம் பார்க்க வந்த பெண்னும்)

டாக்டர் ஏன் அந்த பேசண்ட திட்டி அனுப்பீட்டீங்க

பின்ன என்ன அவரு கதை ஆசிரியராமா எங்கிட்ட வந்து கதைக்கு கரு கிடைக்குமான்னு கேட்கறான்.

@@@@@@@@@@@@@


ஆசிரியர்  : வெரும் வயத்தில எத்தனை இட்டிலி சாப்பிட முடியும் ?
ஒவ்வொருத்தரும் 6, 10, 12 ன்னு அடிச்சிவிட்டாங்க அதுல ஒரு பையன் மாத்திரம் சார் ஒன்னுதான் சார்.

ஆமா சார் ஒரு இட்லி சாப்பிட்டதுக்கு அப்புரம் அது வெறும் வயிரா இருக்காதே.

@@@@@@@@@@@@@

ஒன்பது நட்சத்திரங்களின் பெயர் எழுது ?
கேள்விக்கு மாணவன் எழுதிய பதில்
“நயன்தாரா”

(நமக்கு ஒன்னு விளங்குது மாணவனுக்கு இங்கிலீசும் இந்தியும் தெரிஞ்சிருக்கு)

@@@@@@@@@@@@@

டாக்டர் பக்கத்தில எதுக்கு ஒரு மந்திர வாதிய பக்கத்திலேயே
உட்கார வச்சிருக்கார்.

இறந்து போன பேசண்ட் ”ஆவியா” வந்து தொல்ல குடுக்கறாங்களாமா அதுங்கள விரட்ட தான்.

@@@@@@@@@@@@@

உன் புருசன் தொன தொனன்னு பேசிட்டே இருப்பாருன்ன அமைதியா இருக்காரு.

நேற்று தீபாவளிக்கு ஆசையா அல்வா கேட்டாருன்னு செஞ்சு குடுத்தேன்
அப்போதிலிருந்து வாயே திறக்கலையே.

@@@@@@@@@@@@@

நாம எங்காவது அவரசர வேலையா போயிட்டு இருப்போம்
இந்த எடத்துக்கு எப்படிபோறதுன்னு வழி கேட்பாங்க இப்படியும் ஒரு பொது ஜனம் ;

இங்கிட்டு போஸ்டாபீஸ் எங்க இருக்கு

ஒரு கிலோமீட்டர் தாண்டி போகனும்

இரண்டடி வெச்சவன் திரும்ப வந்தான்...

ஒரு கிலோமீட்டர எப்படி தாண்டறது ?.

@@@@@@@@@@@@@


இன்ஸ்பெக்டர் : திருட்டு DVD யா விக்கிற நட ஸ்டேசனுக்கு

ஐயா...நான் தான் இந்த பட தயாரிப்பாளர்யா... இந்த படத்த இப்படி வித்தாதான் உண்டு.

(என்ன கொடுமை சரவணன்! )
(tks to கி.ரவிகுமார்)
@@@@@@@@@@
காதலி நீங்க லவ் லெட்டர் குடுத்த விசயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு..
காதலன : ஹையய்யோ உன் தங்கசிக்குமா?
(#எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்! அவ்..)

@@@@@@@@

இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”

அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற

அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!

(tks to shahulhamid hamid)

(என்னா ஒரு கொல வெறி !)
@@@@@@@
அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை. கடைசியாக பணம் தர
வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள்,
அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். தபால் அதிகாரிகள்
இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.

ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அதை பார்த்த ஓபாமாவுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த
பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர்
எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும்
அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பைய
னுக்கு குஷி தாளவில்லை.

நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்கள்..
ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல்
அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த ஓபாமா
திருடி விட்டார்.....
(tks to Kanna Kanna)

@@@@@@@@@@@@@@@
மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,
போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிறிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலரல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.

அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...

கோப்பி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் எமது படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "

பகிர்வு : தமிழ்குளோன்
( வெளிநாட்டில் இது சகஜம் போலிருக்கு! )

நன்றி

 கலாகுமரன்

Download As PDF

Thursday, December 19, 2013

சிட்டி லைட்தந்த நகைச்சுவை சக்ரவர்த்தி சார்லிசாப்ளின்


சிட்டி லைட்ஸ்  1931 ல் வெளியான வசனங்களற்ற திரைக்காவியம் நீங்கள் பார்க்க வில்லை என்றால் உங்கள் வாழ்க்கை ஒரு காற்புள்ளி.



சினிமா படங்களில் ஒலி ஒளிப்பதிவுகள் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பின்னே எடுத்த இவர் படங்களில் பேச்சொலி தேவையில்லை என்பதே அவரின் முடிவாக இருந்தது. அவர் தேர்ந்தெடுத்த பாதை ஒன் அன் ஒன்லி என்று கூடச் சொல்லலாம். ஆனால் பின்னனி இசை காட்சி அமைப்பிற்கு மிகப் பொருத்தமானதாகவும், கண்களை மூடி இசையை கேட்டாலே காட்சி மனக் கண்முன் ஓடும் படியாக ஒன்றிணைந்திருந்தது.


படம் பார்ப்பவனுக்கு வசனங்கள் தேவையில்லை அது வெறும் ஆரவாரம் காட்சியை உணர வசனங்கள் பெரும் தடை. ஒவ்வொரு காட்சி தொடங்கும் போதும் காட்சியை பற்றிய ஒரு ஸ்லைட் காட்டப்படுகிறது. இருட்டில் இருந்து தொடங்கி இருட்டில் முடியும். இதுதான் அவரின் வெற்றி பார்முலா.  சிட்டி லைப் படத்தின் இறுதி காட்சி எப்படி இருக்கவேண்டும் “நான் அந்த காட்சியில் நடிக்கவில்லை வெறுமனே நின்று கொண்டிருந்தேன்” என்று சொன்னார். அந்த காட்சியில் டக்கென்று நேருக்கு நேராக காதலியை பார்க்கிறார் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அவர் முகத்தில் பொங்குகிறது, அடுத்த செகண்டே அவர் முகம் மாறுகிறது ஏன்? காதலியின் ஏளனப் பார்வை. சுக்கு நூறாக இவர் மனது உடைவதை கைகளில் உதிரும் ரோஜா இதழ்கள் உதிர்கின்றன.  இவள் நமக்கு எட்டாக் கனி விலகி ஓடுகிறார் பின்னாலேயே அவள் விரைந்து அவர் களில் புது ரோஜாவை கொடுத்து தொடும் உணர்ச்சி தேடலில், மென்மை உள்ளத்தின் சொந்தக்காரன் இவனா ? நம் வாழ்க்கையின் ஒளி கொடுத்தவன் இவனா?  நீங்களா கேள்விக்கணை தொடுக்கிறாள், புன்சிரிப்புடன் மெல்ல தலை அசைக்கிறார் யூ கேன் ஸீ நவ் ?” “யெஸ் ஐ கேன் ஸீ நவ்” காட்சிகள் மெல்ல மெல்ல இருளுக்குள் சென்று எண்ட் கார்ட் போடப் படுகிறது.


இந்த படத்தில் காதலியுடன் ரோஜா மலரும் பேசுகிறது. இது பேசா படம் என்பதே நமக்கு மறந்து போகிறது.

கதை சுருக்...தெருகூட்டும் தொழிலாளி பார்வை அற்ற பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அவளுக்காக ஜெயிலுக்கு போகிறான். காதலியின் கண் பார்வைக்காக தன் வாழ்க்கையையே பணையம் வைக்கிறான். இறுதியில் காதலியுடன் சேர்கிறானா ?, அவ்வளவுதான்.


படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் நகைச்சுவையின் எல்லை வரை உங்களை இட்டு செல்கிறது. படம் முடியும் போது உங்கள் மனம் லேசாக இருப்பதை உணரமுடியும். இந்த திருப்தியை இந்த காலத்து படங்கள் கொடுக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. (இத சொல்றதனால என்னை வயசானவன்னு நினைச்சிகாதீங்க...)


படம் முழுக்க நகைச்சுவைதான்...இருந்தாலும் நான் ரசித்த நகைச்சுவைகாட்சிகள் சில...







க்ரீகோ ரோமன் கற்சிலை திறப்பு விழாவில் திரை விலக பெண்சிலையின் மடியில் தூங்கிக் கொண்டு இருப்பார்..சாப்ளின். எல்லோரும் தேசிய கீதத்திற்கு சல்யூட் அடிக்க ஓட்டை டவுசர் சிலையின் கத்தியில் சொருகிக் கொள்ள... தத்தளிக்கும் காட்சி

பார்ட்டி ஒன்றில் நூடில்ஸோடு அலங்கார காகிதங்களை சாப்பிடும் காட்சி. இசையின் உணர்ச்சி எல்லையில் எல்லோரும் துணையோடு ஆட நமக்கு யாரும் இல்லையே என்ற இவரின் தவிப்பும்... சட்டென ஒரு பெண்மணியை பிடித்தாடுவார் சாப்ளின்... வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் காட்சிகள்...

"Tomorrow the birds will sing!" and "Be brave! Face life!"

தற்கொலை செய்து கொள்ள வரும் மில்லியனர், சாப்ளினை சாவில் இருந்து காப்பாற்றும் காட்சி, குடி போதையில் இருக்கும் போது மட்டுமே இவரை நண்பராக ஏற்றுக் கொள்ளும் பணக்காரர்.(Harry Myers)

எதிர்பாராமல் விசில் தொண்டையில் மாட்டிக்கொள்ள விக்கலும் விசிலும்... அந்த இறுதிகாட்சியில் நாய் ஒன்று இவர் விசில் சப்தத்திற்கு அவரோட மூஞ்சிக்கு முன்னாடி  நிற்கும் பாருங்க...ஹா..ஹா

குதிரை லத்திக்கு பயந்து ,பக்கத்து தெருவில் செல்வார் அங்கு யானை லத்தி போட்டு கடந்து செல்லும்....காட்சி.

காதலியின் கண் அறுவை சிகிச்சைக்காக தன் உயிரையே பனையம் வைக்கும் பாக்ஸிங் காட்சி நம்மை சீட்டின் நுனியில் இருத்தி வைக்கும்.

இது என்ன பிதற்றல் என்று உங்களுக்கு தோன்றலாம்... நிச்சயமாக சொல்லலாம் இந்த படத்தை நீங்கள் பார்த்து முடித்திருக்கும் நீங்கள் வயதானவரென்றால் இளைஞராகவும், இளைஞர் என்றால் குழந்தையாகவும் உரு மாறி இருப்பீர்கள். (குழந்தை யென்றால் ? இந்த குசும்புதானே வேண்டாங்கரது)

படத்தை பார்க்க வேண்டும் என்று விருப்பப் படுபவர்கள் உங்கள் மின் அஞ்சலை என்னை தொடர்புகொள்ள என்ற பக்கத்தில் உள்ள பெட்டியில் போடவும் லிங்க் தருகிறேன்...

                                           ஐன்ஸ்டீன் உடன் சாப்ளின்


நடிகர் நடிகையர் City Lights (1931), "A Comedy Romance in Pantomime,"

Charles Chaplin (the tramp), Virginia Cherrill (the blind girl), Harry Myers (the drunken millionaire), Florence Lee (grandmother), Allan Garcia (butler), Jean Harlow, Henry Bergman, Albert Austin,

by kalakumaran
Download As PDF

Tuesday, October 29, 2013

கரப்பான்களை ஒழிக்க ஐடியா கேட்ட பிரபல வலைபதிவர்

சமீபத்தில் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியாகி இருந்தது (லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்). தலைப்பு இதுதான் “சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான் பூச்சி பண்ணை ”. பால் பண்ணை ,கோழிப்பண்ணை,ஆட்டுப் பண்ணை போல் இது என்ன ? இந்த கேள்விதான் படித்தவர்களின் எண்ணம். 

இந்தியா ஒரு கட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தது. தமிழ்நாடு மட்டும் இதற்கு விதி விலக்கல்ல.  என் தந்தை மற்றும் அந்த கால பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். கடுமையான பஞ்சம் தலை விரித்தாடிய அந்த கால கட்டத்தில் மக்கள் சப்பாத்திகள்ளியின் சதைப் பகுதியையும்,எலிகளையும், ஈசல்களையும் பிடித்து பொறியல் செய்து சாப்பிட்டதை கதை கதையாக சொல்வார்கள். 

சைனா காரர்கள் எதையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவார்கள் என்ற கருத்தும் உண்மையே. சிலவகை கூட்டு புழுக்கள், வெட்டுக்கிளிகள், கரப்பான் பூச்சிகளை வறுத்து சாப்பிடுகிறார்கள். தவளை சூப், இவைகள் அறுசுவை உணவின் ஒரு அங்கம்.   கரப்பான்களை உலரவைத்து மருந்துகள், அழகு சாதனப் பொருட்களில் பயன் படுத்துகிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னாடி ரகசிய கரப்பான் பண்ணை வைத்திருந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆனார். (சின்ன கல்லு பெத்த லாபம் !)
கொதிக்கும் நீரில் போட்டு இவற்றை கொன்று வடாம் காயவைப்பதை போல் காய வைத்து பயன் படுத்துகிறார்கள்.

சீனா மற்றும் தென்கொரிய பல்கலைக் கழகங்கள் இதற்கென்றே ஆய்வு துறைகளை வைத்துள்ளது.  பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன எதற்கு? இவைகள் எய்ட்ஸ், கேன்ஸர் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்தாகுமா? ஏன் இந்த எண்ணம் என்றால் அணுகுண்டின் கதிர்வீச்சை கூட தாங்கி இவை உயிர் வாழ்ந்திருக்கின்றன என்பது தான்.

சட்னி போல அரைத்து தலையில் பூச, சொட்டை தலையில் முடி வளரும் என்கிறார் 78 வயதான சீன வைத்தியர் ஒருவர். (உவ்வே...)
எதை தின்றால் பித்தம் தெளியும் ? என்ற கதைதான்.

இதைவிட கறை நல்லது என்ற விளம்பரம் போல ஐ.நா வும் பூச்சிகளை சாப்பிடலாம் தப்பே இல்லை என்று சான்றளிக்கிறது.

நம்முடைய பிரபலபதிவர் (தமிழ்வாசி பிரகாஷ்) வீட்டிலும் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.  என்ன செய்வது என்று பரிதவித்த அவருக்கு நம் சகாக்கள் சொன்ன அட்வைசை படியுங்களேன். (சீரியசான மேட்டருக்கு பின் கொஞ்சம் சிரிப்போமே..! )





Download As PDF

Tuesday, August 27, 2013

கொஞ்சம் சிரிங்க பாஸ் - நகைசுவைகள்


முகநூலில் நான் ரசித்த நகைசுவைகள்



டாக்டர் கணவன் உடம்பை பரிசோதித்துவிட்டு " இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் அதற்குள் உங்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்துவிடுங்கள்"

மாலை 5 PM : கண்ணீர் மல்க மனைவியிடம் செய்தியை பகிர்ந்தான் அவன் . துடித்தாள் அவள் ...

எனக்கு உன் கையால ரவா தோசையும் வெங்காய சட்னியும் குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி ......

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு உன் கையால மீன் குழம்பு வச்சு குடும்மா இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும் பால்ல உன் கையால பாதாம் அரைச்சு கொஞ்சமா சர்க்கரை போட்டு குடு - இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ..

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான் ...

அவள் : பேசாம படுங்க - காலைல எழுந்த உடன் எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு , சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பணும் ,அய்யர் ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல booking பண்ணணும் , உங்களுக்கு எழுந்திருக்கற வேலை கூட இல்ல ?

thanks to Ramesh Guru
========================================================================

என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?
என்ன முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..! 

************

உங்க மனைவி பார்க்குற புடவைகள் மேலே 1,2,3 -னு
நம்பர் ஸ்டிக்கர் ஏன் ஒட்ட சொல்றீங்க?
-
நூறு புடவை வரைக்கும் பார்த்துட்டு, நான் பார்த்த
39 -வது புடவைக்கு பில் போடுங்கன்னு சொல்லுவா…அதான்!

************

இந்த பேஷண்ட் அபாய கட்டத்தை தாண்டிட்டார்னு
எதை வச்சு சொல்றீங்க சிஸ்டர்…?
-
இவருக்கு ஆபரேஷன் தேவையில்லைன்னு டாக்டர்
சொல்லிட்டுப் போனது உங்க காதுல விழலையா…?

************

நீதிபதி :
இனிமே கோர்ட் பக்கமே வரக்கூடாதுன்னு போன தடவை
சொல்லியிருந்தேனே..?
கைதி :
குத்தம் செஞ்சுட்டு தலைமறைவா இருந்த என்னை
போலீஸ்காரங்கதான் பிடிச்சுட்டு வந்துட்டாங்க எசமான்..! 
************

டாக்டர், உங்க பீஸை என்னால ஜீரணிக்க முடியலை..!
-
கவலைப்படாதீங்க, அதை ஜீரணிக்க தனியா ஒரு மாத்திரை
தர்றேன் சாப்பிடுங்க…!
************
என்னய்யா இது..சாப்பாட்டு ஐட்டத்தோட பேரையெல்லாம் எழுதி அந்த
ஆள் மனு குடுக்கறான்..?

தலைவரே…அது மனு இல்லை..’மெனு’..!
************
தலைவர் எப்பவும் சரக்கு ஞாபகத்துல இருக்கார்னு
எப்படி சொல்றே?

பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து
விட்டுட்டு அது பொங்கி வழியறதைப் பார்த்து
‘சியர்ஸ்’னு கத்திட்டாரே..!
************

மாணவன்: சார் வயிறு வலிக்குது சார்…
-
ஆசிரியர்: வயித்துல ஒண்ணுமில்லைன்னா, அப்படித்தான்
வலிக்கும்…
-
மாணவன்: அப்படின்னா, நேத்து நீங்க தலை வலிக்குதுன்னு
சொன்னீங்களே!
************
பால்’ பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதுடான்னா…
கால் பக்கத்துக்கு எழுதியிருக்கியே…?
-
இது சுண்டக் காய்ச்சின பால் சார்..!
************
ஆசிரியர்: மாணவர்களே, நீங்கள் படித்து முன்னேறி இந்தியாவுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்…

மாணவர்: ஏன் சார்? இந்தியான்ற பேர் நல்லா இல்லையா?



என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…
-
அப்படியா?-

ஆமாம்! எப்போ என்னை அடிச்சாலும் உடனேதெரியாம அடிச்சிட்டேன்’னு ஸாரி கேட்டுடுவா..!


தலைவரே…உங்க மேலே ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு மக்கள்
பேசிக்கிறாங்க…!

'கறை நல்லது’னு ஏன் இன்னும் அவங்களுக்குப் புரியலை…!?

thanks to  Venkatesan Subramanian
************

ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒ­ரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது.
ஆனால்,அதற்கு முன் அவர்கள் வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.

பாகிஸ்தானி தன் முதுகில் இருதலையணை கட்டச் சொன்னான்; பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்., 

ஷேக் சொன்னார் ”எனக்கு­ இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்"

இந்தியன் கேட்டான். ”எனக்கு­ 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார். 
அடுத்தது”… 
”இந்தப் பாகிஸ்தான்காரரை­ என் முதுகில் கட்டுங்கள்!” 

இது எப்புடி இருக்கு... ??

thanks to Ramesh Guru
========================================================================

ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..

" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?

"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!

thanks to AR Raja

========================================================================

இம்சை அரசனும், Facebook-ம்..!!!
------------------------------------------
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் 
போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் 
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா 
போருக்கு வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு
ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் 
அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு 
எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய் 
அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..

thanks to Kamal Kamalkvl
------------------

above picture : tks to Suresh Krishanan


Download As PDF

Monday, July 8, 2013

பழைய ஜோக்குகள்...கொஞ்சம் சிரிங்க பாஸ்!


அது ஒரு ஞாயிறுக் கிழமை சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.

குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது.  மனைவியை கூப்பிட்டான்.
“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?
“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”
“இல்ல இப்ப அழுதுச்சே...”

உள்ளே இருந்து மனைவி “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”

**********************************************************************

மலை ரயில் சுமாரான வேகத்தில போய்கிட்டு இருந்தது. அந்த பெட்டியில் ஒரு அழகான பெண், ஒரு கிழவி, ஒரு இந்தியன், ஒரு ஃப்ரெஞ்சு காரன் நாலுபேர் மட்டும் இருந்தாங்க.
அந்த ரயில் ஒரு குகையின் உள்ளே நுழைந்தது. ஒரே கும்மிருட்டு, லைட்டு எரியல. “பச்சக் பச்சக்னு முத்தம் இடும் சப்தம் கேட்டது.  அதை தொடர்ந்து “பளார்” என்று அறையும் சப்தமும் கேட்டது.  குகையை விட்டு ரயில் வெளியே வந்தது.  ஃப்ரெஞ்சுகாரன் கன்னத்தில் அறைவிழுந்ததற்கு அடையாளமா கை விரல்களின் அச்சு இருந்துச்சு.

கிழவி நினைச்சுகிட்டா
“ என்ன கன்றாவியோ, இவ சுத்த மேசம் ஒரு ஆளு முத்தம் குடுக்க வுட்டுடாளே”

மனதிற்குள் சிரித்து கொண்ட அந்த பெண்
“ என்ன ஆளு இவன் நமக்கு முத்தம் குடுக்காம கிழவிக்கு குடுத்துட்டான் போலிருக்கு”

அறை வாங்கிய ஃப்ரெஞ்சுக்காரன் கன்னத்தில் கை வைத்தபடி மனதில்
“இந்தியாக்காரனுக்கு முத்தம் குடுத்துட்டு நம்மள அறஞ்சிட்டாளே பாவி”

இந்தியாக்காரன் குஷியா மனதில் “மவனே பொண்னு பக்கதில வசதியான எடமா பிடிக்கிற “ நானே என் கையில முத்தம் கொடுத்து அவனுக்கு உட்டேன் ஒரு அறை “வாழ்க இருட்டு”

**********************************************************************

ஒரு சமய கூட்டம் நடந்திட்டு இருந்தது, சாமிஜி சொன்னார்
”முத்தம் இடுவதால ஒருத்தருக்கிட்ட இருந்து கிருமிகள் மற்றவருக்கு பரவி விடும்.

வெள்ளைச்சாமி எழுந்து சொன்னார்
“ அதாஞ் சாமி என் பொஞ்சாதி முத்தங்குடுத்தாக்கூட திருப்பி கொடுத்துறேனுங்க”

**********************************************************************
நடு சாமத்தில் நல்லா தூங்கும் கணவனை பட படவென தட்டி எழுப்பினாள் மனைவி

“ஏங்க ஏந்திருங்க வெளியே புயலும் மழையுமா இருக்கு வீட்டுக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு எனக்கு பயம்ம்மா இருக்குதுங்க...”

“அடச்சீ கம்முன்னு தூங்கு...இது வாடகை வீடு தானே நீ ஏன் கவலைப்படறே”

**********************************************************************
ஒரு பெண்ணின் தோழிக்கு அவளின் நடவடிக்கை எரிச்சலாக இருந்தது. ஒரு நாள் அவளிடமே கேட்டுவிட்டாள்.  “ஆமா நீ ஏன் ரெண்டு போரோடேயும் நெருங்கி பழகுற”
அதுக்கு அவள் சொன்னாள்.  “ஜீப்பு பின்னாடி ஒரு ஸ்டெப்னி இருக்கு கவனிச்சிருக்கியா? அது எதுக்கு?”

“அதுமாதிரிதான்”
**********************************************************************

கல்யாணத்திற்கு முன்னாடி பெண்னோட கையை பிடிச்சிகிட்டா
அது அவளின் மேல் இருக்கும் அன்பை காட்டும்.
அதுவே கல்யாணத்திற்கு பின்னாடி
வெறென்ன... அவனோட தற்காப்புக்குத் தான்
**********************************************************************

“அந்த காலத்தில இளவரசர்களுக்கு 14 வயசிலேயே நாட்டை ஆளும் பொறுப்பு குடுத்திருவாங்க” “ஆனா கல்யாணம் 18 வயசில தான்”
“ஏன் ?”
“நாட்டை ஆளலாம் பெண்ணை ஆளுவது அவ்வளவு சுலபம் இல்ல”
**********************************************************************

82 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 லட்சம் பரிசு கிடைத்தது.
அவரோட குடும்பதினர் இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது சொன்னா “பொக்குன்னு போய்ட்டார்னா” யோசனை செஞ்சு ஒரு டாக்டர் கிட்ட போனாங்க
விசயத்தை கேட்ட டாக்டர் “நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க நா பாத்துக்கிறேன்”
ஊர்க்கதை பேச்சிட்டு மெல்லமா ““ஐயா உங்களுக்கு லாட்டரியில 10 லட்சம் விழுந்தா என்ன பன்னுவீங்க”
டாக்டர் சார் நீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா உங்களுக்கு ஒரு அஞ்சு லட்சம் கொடுத்திருவேன்”
இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.
**********************************************************************

மகன் : “இந்த இயற்கைக்கு ரொம்ப முன் யோசனை ஜாஸ்திப்பா.”
அப்பா : “முன் யோசனையா எப்படிப்பா”
மகன் : பின்ன மனுசன் கண்ணாடி போடுவான்னு அதுக்கு முன்கூட்டியே தெரிஞ்சு இருக்கு
இல்ல.. காது இல்லேன்னா கண்ணாடிய எப்படி மாட்டுவே”
**********************************************************************

நேற்று நீங்க கூப்பிட்ட விருந்துக்கு வர முடியாம போச்சுங்க...என்ன ரொம்ப எதிர் பார்த்திருப்பீங்க...

அப்படியா நேற்று நீங்க வரலியா ?

**********************************************************************

ஒரு பேருந்தில் இரண்டு இளவயசு பெண்கள் பயணம் செஞ்சாங்க. அவங்களுக்கு உட்கார இடம் கிடைக்கல...ஒருத்தி கொஞ்சம் சப்தமாவே சொன்னாள் “அழகானவர் எந்திருச்சு நமக்கு எடங்குடுப்பாருடி” ஆறு சீட்டுகள் காலியாகிடுச்சு.

எழுந்திருச்சவங்க ஆறுபேரும் அறுபது வயசுக்காரங்க

**********************************************************************

வாத்தியார் : “என்னடா முழிக்கிற இந்த கேள்விக்கு முட்டா பய கூட பதில் சொல்லிருவாண்டா !”
மாணவன் : “அதான் சார் நா பதில் சொல்லல...”

**********************************************************************

ஜோஸ்யம் பார்ப்பவர் : பத்துரூபா கொடுத்தீங்கன்னா நீங்க இரண்டு கேள்வி கேட்கலாம்
வந்தவர் : ”ரெண்டு கேள்விக்கு பத்துரூபாயா”
ஆமா “அடுத்த கேள்வி கேளுங்க”
**********************************************************************

கணக்கு வாத்தியார் : “உங்க அப்பாவுக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாசம் 100 ரூபாய் வீதம் ஆறுமாதம் திருப்பி கொடுதால், அவர் மீதி எவ்வளவு எனக்கு தரணும்”
பையன் : “ஆயிரம் ரூபா சார்”
கணக்கு வாத்தியார் : என்ன.. உனக்கு கணக்கே புரியலயா?
பையன் : “சார் எங்க அப்பாவ பத்திதான் உங்களுக்கு தெரியல”
**********************************************************************
ஒரு போர் வீரன் பந்தயம் கட்டுவதில் அளவு கடந்த ஆசை அல்ல வெறியே இருந்தது. இந்த விசயம் புதிதாய் வந்த படைத்தலைவருக்கு தெரிந்தது.
என்ன நீ எதுன்னாலும் பந்தயம் கட்டுவியாமே அப்படியா? என்று கேட்டார்.
ஆமாங்க, எதன்மேல் வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன் உதாரணமா உங்க தொடையில் மச்சம் இருக்குன்னு பந்தயம் கட்டுரேன்.

(அவருக்கு அவன் தோற்றால் பந்தயம் கட்டும் சுபாவத்தை விட்டுருவான் என்று எண்ணினார்)

என்ன எங்க இருக்கு பாருன்னு தொடைய காட்டினார் மச்சம் இல்ல தோத்துட்டான்.
பந்தய தொகைய கொடுத்தான். படைத்தலைவர் சொன்னார் “போப்பா இனி மேலாச்சும் திருந்து”

அடுத்தநாள் பழைய படைத் தலைவர், சமாச்சாரம் கேள்விப்பட்டேன் உண்மையா ? அப்படின்னு  கேட்டார். ஆமா இனி அவன் திருந்திடுவான்னாரு.

போங்க சார்..உங்க தொடைய காட்ட மாட்டீங்ன்னு எங்கிட்ட பந்தயம் கட்டி ஜெயிச்சுட்டான்..
**********************************************************************

இது உண்மையான்னு தெரியல...

ஹிட்லர் காலத்தில் அவரு ரொம்ப ஸ்ரிக்டுன்னு தெரியும்.
சினிமா தியேட்டரில் படம் முடிஞ்சதும் தேசிய கீதம் மாதிரி அவரோட படத்தை காட்டுவாங்கலாம் ஜனங்க மரியாதையா எழுந்து நிற்பாங்க. 
ஒருநாள் ஹிட்லர் மாறு வேடத்தில் சாதாரனமா ஒரு தியேட்டருக்கு விசிட் செஞ்சாரு.
வழக்கம் போல அவரோட படத்தை காட்டும் போது உட்கார்ந்திருந்தாரு.
பக்கத்தில் இருந்தவன் அவரைப் பார்த்து
“யோவ் உன்ன மாதிரித்தான் நானும், அதுக்காக எழுந்திருக்கலேன்னா மாட்டிக்குவே எழுந்திரு” என்றான்.
**********************************************************************
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு, மேடையில் பேசறதுக்கு விருப்பம் இல்ல.
இருவரும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். வில்பர்ட் ரைட்டை பேசும்படி வற்புறுத்தி கேட்டுகிடாங்க வேற வழி இல்லாம எழுந்து
“நான் பேசுவதில்லை ஆர்வில் ரைட் தான் வழக்கமா பேசுவாரு” ன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டாரு.

அடுத்து ஆர்வில் ரைட்டுக்கும் வேற வழி இல்ல அவரும் எழுந்து
“வில்பர்ட் சொற்பொழிவாற்றிட்டாரு இனி நான் என்ன பேசுறது” என்று பேச்சை முடிச்சுகிட்டார்.
**********************************************************************
சர் ஆர்தர் கானன் டாயில் துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர் ( கரெக்ட் ஷெர்லக் ஹோம்ஸ் !) அவருக்கு ஆவியுலகத்தில் நம்பிக்கை இருந்தது.  அவரோட நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொரு நண்பர் இவரை மடக்கனும்னு இவரிடம் இறந்தவரின் ஆவி இவரோடு பேசியதா ? என்று கேட்டார்.
அதுக்கு கானன் டாயில் “இல்ல” ன்னு பதில் சொன்னார்.
 “இப்பவாவது நம்புரீங்களா ஆவி இல்லேன்னு”

”அப்படி நினைக்கல..அவர் இறக்கறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்ல, அதனால ஆவி இப்ப பேசாம இருந்திருக்கலாம்”
**********************************************************************
அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக்கதை இது.
ஒரு ஓவியன் ஒரு படத்தை கொண்டு வந்து காட்டினான் அதில் பசுவும் புல்லும் வரைந்து இருப்பதாக சொன்னான். சுருட்டி வைத்திருந்த படத்தை பிரித்து பார்த்தா அதில பசுவும் இல்ல புல்லும் இல்ல.

புல் எங்கே? என்று கேட்டதற்கு “பசு புல் சாப்பிட்டு விட்டது” என்று சொன்னான் ஓவியன்.
சரி பசு எங்கே? என்று கேட்டதற்கு “அது புல்ல திண்ணுட்டதால விரட்டி விட்டுட்டேன்” என்றான்.
அவரு சொன்ன இன்னொரு கதை :

இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒருதனை இரண்டு பெண்கள் காதலிச்சாங்க. ஒருத்தி ஏழை, ஆனால் அழகா இருப்பா. இன்னொருத்தி சுமாரான அழகு, இரண்டுபேரில் யாரை திருமணம் செய்துக்கிறதுன்னு நண்பன் கிட்ட ஆலோசனை கேட்டான்.  நண்பன் சொன்னான். “ஏழையா இருக்கிற பெண்னை கல்யாணம் செய்துக்க, அவதான் உனக்கு ஏற்றவள். வாழ்கையில் உனக்கு உறுதுணையா இருப்பாள், அதோட அழகாவும் இருப்பான்னு சொன்னியே”. 

போகும் போது “சரி, அந்த பணக்காரப் பெண் எங்கிருக்கிறாள் முகவரி சொல்லுப்பா” என்று கேட்டான்.
**********************************************************************
அஞ்சலகத்தில் எழுதுவதற்காக ஒரு பேனாவை கட்டி வைத்திருப்பார்கள்.  வந்தவர் அந்த பேனாவில் எழுதினார்,  எழுதவில்லை.

அஞ்சலக எழுத்தரிடம் “இது என்ன ஹைதர் அலி காலத்து பேனா வா ? “ ன்னு கேட்டார்.

அதற்கு அவர் “ தகவல் விசாரணைக்கு பக்கத்து கவுண்டரில் கேளுங்க சார்”
**********************************************************************
கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாங்க.
சாப்பிட்டு முடிச்சுட்டு வெளியில போகும் போதுதான் மூக்கு கண்ணாடி பையில இல்ல அது டேபிலேயே இருக்கும்ன்னு பார்க்க மனைவி மட்டும் உள்ள போனாங்க..டேபில் மேல பார்த்தாள் கீழே பார்த்தாள் காணோம்...தேடுறத பார்த்து
அங்கிருந்த சர்வர் “அம்மா அவரு அப்பவே போயிட்டாருங்களே” என்றான்.
**********************************************************************
சென்னையில் இருந்த குடும்பம் வெளிநாடு போவதால் அவர்களுடைய நாயை உறவுக்காரர்களிடம் விட்டுவிட்டு போய் விட்டார்கள்.  அந்த வீட்டு பையன் நாயை பழக்குவதற்காக துணியை காட்டி “எடுத்துட்டு வா” என கட்டளை போட்டான் அது அசையவே இல்ல.  அவனோட அப்பா வந்தாரு ”ரொம்ப நேரமா இது கூட கத்திட்டு இருக்கேன்” என்று சொன்னான். அவர்  “ இஸ்துக்கினு வா”ன்னு சொல்லவும் அது பாய்ந்தோடியது.
********************************************************************** 


பாட்டி பேரனிடம் ஒரு விடுகதை போட்டார்.  “சிங்கம் போல நுழையும்,  ஆடு போல வெளியே போகும், அது என்ன?

வினாடி யோசித்த பேரன் : “அப்பா”

**********************************************************************

ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார். தீர்ப்பு வந்தது அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆகப் பத்துவருசம் சிறை தண்டனை அவனுக்கு.
**********************************************************************
Download As PDF

Monday, October 1, 2012

கண்ணதாசனின் நகைச்சுவைகள்..[ஜோ...க்...ஸ்]


திரு.கண்ணதாசன்.. கவியரசர் மட்டுமல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியும் அவரே என்பதை  "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"  நமக்கு உணர்த்துகிறது இதிலிருந்து சில நகைச்சுவைகள்.  "வெள்ளைச்சாமி' அவர் உருவாக்கிய நகைச்சுவை கதாபாத்திரம்.


அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை, பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்; வட்டிக்குப் பணம்
கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான்  " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத் தூங்க வைத்தாள்.

கணவன் : சீ ! நீ காட்டுவது பாசமா ?  பாசம் என்பதை என் அம்மாவிடம் தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே !

கணவன் : என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு விட்டாரே !

********************************************************************
இல்லற இன்பம்

பாகவதர் : கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...

சிஷ்யன் : ஏன் ?

பாகவதர் : என் மனைவி பெயர் கல்யாணி...

*******************************************************************
பகுபதம் !

வெள்ளைச் சாமி ஒரு நாள் பொதுக் கூட்டத்திற்கு போயிருந்தார். அங்கே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதாவது ;

"ஒரு பச்சை யானை வெள்ளை முட்டை போட்டது. அதிலிருந்து ஒரு குருவிக் குஞ்சு வெளிவந்து, ஒரு சிங்கத்தை கொன்று விட்டது. அந்தச் சிங்கம் ஒரு யானையின் உயிரை வாங்கிக் கொண்டு மீண்டும் வந்துவிட்டது...."

அவர் பேச்சை கேட்ட வெள்ளைச்சாமி பக்கத்தில் இருந்த நண்பரிடம் " இவர் யார் ?" என்று கேட்டார்.

இவர் தான் பெருவாரியான வோட்டுகளில் ஜெயித்த எம்.எல்.ஏ " என்றார் நண்பர்.

*************************************************************************
கணக்கில் வராத பணம் !

ஊரெங்கும் கருப்புப் பணம், கருப்புப் பணம் என்று பேசிக் கொண்டார்கள்.
வெள்ளைச்சாமிக்கு அது என்னவென்று புரியவில்லை.

அவரி கையில் நூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய்க் கட்டு ஒன்று இருந்தது.

அதிகாரி ஒருவரைப் பார்த்து " ஐயா..கருப்பு பணம் என்றால் என்ன? என்று கேட்டார்.

கணக்கில் வாராத பணம் ...என்று சொன்னார் அதிகாரி.

வெள்ளைச் சாமி தன்னிடம் இருந்த ஒரு ரூபாய்க் கட்டை எண்ணிப் பார்த்தார். மொத்தம் தொண்ணூற்றொன்பது ரூபாய்தான் இருந்தது.

ஓஹோ...ஒரு ரூபாய் கருப்புப் பணம் போலிருக்கிறது..! என்று முணுமுணுத்தார் வெள்ளைச்சாமி.

************************************************************************
வாக்குச்சீட்டின் மகிமை !

ஒரு அரசியல் கூட்டத்திற்குப் போய் அமைதியாக உட்கார்ந்தார், வெள்ளைச்சாமி.  பேசத்தொடங்கிய ஒருவர்  " தாய்மார்களே...! " என்று ஆரம்பித்தார்.

"நிறுத்தையா...என்று கத்தினார் வெள்ளைச்சாமி.

உனக்குக் கொஞ்சமாவது மானம்..வெட்கம்...இருக்குதா ?

இவ்வளவு பெண்கள் இருக்கும் இடத்தில் அசிங்கமாகப் பேசுகிறாயே..!

"தாயே.." என்று கூப்பிடுங்கள் என்றார்.

****************************************************************************
பெருங்கதை !

திடீரென்று வெள்ளைச் சாமிக்கு சினிமாவுக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது.

"பெரிய நடிகர்கள் நடிக்கின்ற படத்துக்குக் கதை எழுதினால் தான் முன்னுக்கு வரலாம்  ! என்று யாரோ சொன்னார்கள்.

உடனே வெள்ளைச் சாமி பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

"கதாநாயகன் ராமு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். கதாநாயகி கமலா ஒரு ஆபீஸில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்தார்கள். ராமுவுக்கு வயது அறுபத்தொன்பது. கமலாவுக்கு வயது பதினாறு.."

- வெள்ளைச் சாமியின் கதை உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

****************************************************************************
நீங்கள் வருவீர்கள் !

வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி "மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும் என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார். அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார் கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார் அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார். பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார். பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார்.   நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் : நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!

*******************************************************************************

ஞானத் தொழிற்சாலை

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.   பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!  ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....

*******************************************************************************

Download As PDF

Saturday, September 1, 2012

சில ஜோக்ஸ் : படித்தவை ( 2 )




ஒரே நாளில் பிணவரைக்கு 3 பிணங்கள் வந்தன. விசாரணைக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.  மூன்றும் சிரிச்ச படியே உயிரை விட்டிருந்தன. அவரோட போலீஸ் மூலை சந்தேகத்தை கிளப்புச்சு   போஸ்ட் மார்டம் செய்யும் டாக்டரிடம் கேட்டார்.  "அதெப்படி ஒரே சமயத்தில வந்த மூனு பாடியும் சிரிச்சிக்கிட்டிருக்கு"

முதல் பாடி இங்கிலீஸ்காரர்  60 வயசு தன்னோட மனைவியோட சந்தோசமா இருந்தப்ப ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே போய்ட்டார்.

"சரி, இது ? " இரண்டாவத சுட்டி காட்டினார்.

அடுத்த பாடி ஸ்காட்டிஸ்காரர்  25 வயசுதான். லாட்டரியில் லட்ச ரூபா அடிச்சது சந்தோசத்தில ஓவரா குடிச்சமேனிக்கு செத்துப் போய்ட்டான்.

மூனாவது கருப்பா இருந்தது "ஒகே..இதுக்கு என்ன சொல்றீங்க "

30 வயசுதான் மின்னலடிச்சு செத்துப் போய்ட்டான்.
"அது எப்படி சிரிச்ச படிக்கு ? "
அதுவா அவன் யாரோ போட்டோ எடுக்கராங்கன்னு சிரிச்சிட்டு இருந்திருக்கான். அப்படியே பொசுங்கி போய்ட்டான்.

*****************************************************************************

மனிதர்களை தின்னும் ஒரு கூட்டம் அதில் ஒரு அப்பாவும் மகனும், சாப்பிட மனுசங்கள தேடி ரொம்ப தொலைவு நடந்தாங்க.

கொஞ்ச தூரத்தில ஒரு ஆள் நாய வாக்கிங் கூட்டிட்டு  போய்டிருந்தான்.
 " அப்பா அந்த ஆளு..." கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.

"இவ வேண்டாம்பா...இவன நாய்க்கு தான் போடனும்."  உதட்டை பிதுக்கிட்டான் அப்பா.

இன்னும் கொஞ்ச தூரம் போனாங்க...ஒரு ஆள் நல்லா குண்டா இருந்தான்.
 " அப்பா..."  மறுபடியும் கைகளை உதறியபடியே கேட்டான் பையன்.

இவன் வேண்டாம் இவன தின்னா நமக்கு கொழுப்பு சாஸ்தியா பூடும். நாம  ஹார்ட் அட்டாக் வந்து சாக வேண்டியது தான். வுட்டுடு.

பையனுக்கு பசி தாளமுடியல.

அடுத்து அழகான ஒரு லேடி வந்தா..

"அப்பா... இவ வேண்டாம்டா"

ஏம்பா ?
அழகா இருக்காடா...!

"இவள இப்படியே உட்றுவோம் முதல் உங்க அம்மாவ சாப்பிட்டரலாம். வா"

******************************************************************************

துணி கடை ஒன்றில் மனைவி புடவை செலக்ட் செய்யும் வரை காத்திருந்த கணவன் :

சரி சரி செலக்ட் பண்ணிட்டியா பில் போட்டுரலாமா ?

நீங்க யாரு..?

?? அடிப்பாவி ஒருநாள் பூரா காத்துகிட்டிருக்கேன் அதுக்குள்ள என்ன மறந்திட்டியா...

சாரீங்க

சரி சரி

அதில்ல நீங்க..மிதிச்சிட்டிருக்கிறது என் சாரீங்க..

====================================================================

கணவன் : மனைவி

ஏங்க உங்களுக்கு 4 கர்சீப் வாங்கி வந்திருக்கேன்...

வெரி குட் நல்லாருக்கு.

சரி ஆயிர ரூபா குடுங்க...

என்ன 4 கர்சீப்க்கு இந்த விலையா ? அநியாயமாயிருக்கே...

அதில்லீங்க...ஒரு புடவை வாங்கினா 4 கர்சீப் ஃப்ரீ...

======================================================================

இரண்டு பெண்கள்

கண்டக்டரை கட்டி கிட்டது தப்பா போச்சு

கொஞ்ச நேரம் வாசப்படியில நின்னாகூட உள்ள போ...உள்ள போங்கரார்.

இது பரவாயில்ல மெக்கானிக்க கட்டிக்கிட்டது தப்பா போச்சு

ஏன் ?

எப்பவும் கட்டிலுக்கு அடியில படுத்துதான் தூங்குறார் ?

======================================================================
டி.வி பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் ;
சமையல் அறையில் இருந்து வேக வேகமா வந்த மனைவி ஏங்க நீயூஸ் வாசிச்ச பொண்ணு என்ன கலர் சாரி கட்டியிருந்துச்சு

கவனிக்கலயே...

ஆமா...போங்க..நீங்க..நீயுஸ் பாக்கிற லட்சணம்..

அப்பாவி கணவன் : ஙே...

======================================================================

எனக்கு அபரேசனா ? ரொம்ப பயமா இருக்கு டாக்டர்.

நாங்க இருக்கோம் உங்களுக்கு எதுக்கு பயம் ?

நீங்க இருப்பீங்க டாக்டர் அபரேசன் செஞ்சிக்க போறது நான் தானே..

======================================================================

மூணு நாளா கேஸ் ப்ராப்ளம்..

அதுக்கு என்ன...கேஸ் கம்பெனிக்கு போன் செஞ்சீங்களா...

சரீங்க கண்டக்டர்

யோவ் நான் டாக்டர் யா..

அதத்தானே கேட்டேன்

======================================================================
இது இன்னும் கொஞ்சம் பழசு...

அப்பா நம்ம வீட்டு கன்னுக்குட்டி ஹம்மா.. ஹம்மா ன்னு கத்துதுப்பா

சரிடா அதுவும் ஏ ஆர் ரகுமான் விசிறியாயிடுச்சா...

======================================================================
கணவன் : மனைவி

ஆஹா...நான் உதச்சி ஸ்டார்ட் ஆகாத வண்டி நீ உதச்சதும் ஸ்டார்ட் ஆகிடிச்சே.

ஹி..ஹி...உங்கம்மாவ நெனச்சு உதச்சங்க.. அவ்ளோதான்.
======================================================================
இரண்டு பெண்கள்:

அதோ போறாளே அவ சுத்த அடங்கா பிடாறி..

அனா அவ மாமியார் நல்லவங்க..

அது யாரு...

ஹி..ஹி..நான்தேன்.

======================================================================

ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துவிட்டாள்.

இன்ஸ்பெக்டர் :

வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..

லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க..

======================================================================

போலீஸ் ஸ்டேசனில் கணவன்

சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...

எத்தனை நாளா..?

மூனு மாசமா சார்...

அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற...

இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..

======================================================================


Download As PDF

Friday, May 18, 2012

தத்துபித்துவங்கள் !!



மு.கு : புரியலேனா ரெண்டு தடவை படிக்கலாம் ஏன்னு ? யாரும் கேட்கப்போறதில்ல.  படிச்சதும் மறந்திடுங்க ஏன்னா ? சிந்திக்கரது கஷ்டம்.


பெண்கள் எதிர்காலம் பற்றி கவலைப் படுகிறார்கள் கணவன் அமையும் வரை.
ஆண்கள் எதிர்காலம் பற்றி கவலைப்படுவதே இல்லை மனைவி அமையும் வரை.

வாழ்கையில் வெற்றி பெற்றவன் அதிகம் சம்பாதிக்க மனைவி செலவழிப்பாள்.
வாழ்கையில் வெற்றி பெற்றவள் அப்படி ஒரு மனிதனை கண்டுபிடிப்பதே.

ஆணுடன் மகிழ்ச்சியாக இருக்க கொஞ்சம் காதல் அதிகம் அவனை பற்றி புரிதல் இருக்கவேண்டும்.

பெண்ணுடன் மகிழ்ச்சியாக் இருக்க அதிக காதல் அவளை பற்றி புரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது.

பெண்கள் ஆணை திருமணம் செய்யும் போது அவன் மாறிவிடுவான் என நினைக்கிறாள் ... அவன் மாறுவதில்லை.

ஆண்கள் பெண்ணை திருமணம் செய்யும் போது அவள் மாற மாட்டாள் என
நினைக்கிறான் .... அவள் மாறிவிடுகிறாள்.

கல்யாணமான ஆண்கள் செஞ்ச தப்ப மறந்திடனும்... ஏன்னா ஒரே விசயத்தை ரெண்டு பேர் ஞாபகம் வெச்சுக்க தேவையில்லை.

எந்த ஆர்கியூமென்ட்லயும் மனைவி சொல்லறது தான் கடைசி வார்த்தையா இருக்கும்.

எந்த ஆர்கியூமென்ட்லயும் கணவன் சொன்னது தான் முதல் வார்த்தையா இருக்கும்.

ஆண்கள் செலவழிப்பாங்க ரெண்டு ரூவா ஒரு ரூபா மதிப்புள்ள பொருளுக்கு.

பெண்கள் செலவழிப்பாங்க ஒரு ரூவா ரெண்டு ரூபா மதிப்புள்ள பொருள் வேண்டாங்கரதுக்காக.

பி.கு : படிச்சதும் என்ன தேடாதீங்க ஏன்னா? நா பக்கத்தில இல்ல.
இன்னொரு விசயம் மேல இருக்கரத எல்லாம் நா சிந்திக்கவே இல்ல.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)