Followers

Showing posts with label மரபியல். Show all posts
Showing posts with label மரபியல். Show all posts

Thursday, November 20, 2014

கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன ?




யானை மற்ற விலங்குகள் மனித வாடையை பல அடி தொலைவில் மனித நடமாட்டம் இருக்கும் போதே கண்டுபிடித்து விடுகின்றன.  உண்ணும் உணவின் வாடையை சுவையை நாம் உணர்ந்து கொள்வது போலவே என்று சொல்லலாம்.

குறிப்பாக "சல்கேடோன் " (Sulcatone ) எனும் வேதியல் நொதி வியர்வை சுரப்புகளில் வெளிப்படுகிறது.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "என் அன்பே " என தம் குட்டினூன்டு மூளையில் பதிவு செய்துவிட்டன கொசுக்கள் .

நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைகழகத்தை சேர்ந்த லெல்ஸ்லி வோஷெல் தலைமையில் ஒரு குழு கொசுக்களுக்கு ஏன் மனித ரத்தம் பிடிக்கிறது என்ற ஆய்வில் இறங்கியது.

விலங்குகளை காட்டிலும் மனிதனின் வாழ்க்கை முறை அவைகளுக்கு பிடித்து போனது.   கொசுக்கள் தம் இனத்தை பெருக்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மனிதர்கள் தம்மை சுற்றி தண்ணீர் மற்றும் கழிவுப் பொருட்களை அமைத்துக்கொண்டதே காரணமாம்.


காடுகளில் ரத்தத்தை தேடி அலைவதற்கு கிராமங்கள் நகரங்கள் அவைகளுக்கு தோதாக அமைந்து விட்டன.  விலங்குகளிடம் இருப்பதை போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு இல்லை. அதுவுமில்லாமல் மனிதர்கள் கூட்டங் கூட்டமாக வசிக்கிறார்கள். அதனாலேயே விலங்குகளை விடுத்து அவை மனிதர்களை தேர்தெடுத்து இருக்க வேண்டும்.


14 விதமான கொசுக்களின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த போது மனிதர்களுக்கும் கொசுக்களுக்குமான தொடர்பினை உறுதி செய்து இருக்கிறார்கள். குறிப்பாக  "Or4" (codes for an odor receptor) எனும் கூறு இதை உறுதி செய்கிறது.


இதுதான் முக்கிய பாரம்பர்ய சாவி என்று சொல்லலாம்.  அதாவது மேற்சொன்ன கூறு அதன் ஜீனில் பதியப்பட்டதால், புதிதாக ஜனிக்கும் கொசுக்கள் மனிதர்கள் மேல் "காதல்" கொண்டு துரத்துகின்றன (! ).


"அடெஸ் அஜிப்டி " (Aedes aegypti)  எனும் வகை கொசுக்களே அதிக அளவில் உலகம் பூராவும் பரவி உள்ளன.

Download As PDF

Monday, May 26, 2014

கண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா?


"நெக்டெர்னல் லெகோப்தாலமஸ் " [ Nocturnal lagophthalmos ] என்று மருத்துவத்துறையில் குறிக்கப்படும் கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கு இருக்கும்.   ஆனால் பெரியவர்களுக்கு என்பது கொஞ்சம் சீரியஸ் ஆன பிரச்சனை தான்.  குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் முழுமையாக மூடாமல் கொஞ்சம் திறந்த படி தூங்குவது(அரைக்கண்) இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடிய படியே தூங்குவர். சிலருக்கு டீன் ஏஜ் வரைக்குமே இந்த பிரச்சனை இருக்கலாம்.  பெரியவர்களுக்கு எனும் போது தோல் நோய் பிரச்சனை அல்லது முகத்தில் ஏதேனும் சர்ஜரி செய்திருந்தால் இந்த பிரச்சனை இருக்கும். பெரியவர்களுக்கு இந்த பிரச்சனையால் இமைமுடிகள் கண்களில் பட்டு எரிச்சலை (அலர்ச்சி/அயர்ச்சி) ஏற்படுத்தும்.  தொடர்ந்தால் பார்வை பிரச்சினை ஏற்படும்.  அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐ மாஸ்க் என்று சொல்லக்கூடிய முக மூடியை அணிந்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.

அடுத்த கேள்வி ஒரு கண்னை மட்டும் திறந்தபடி தூங்க முடியுமா ?
இயல்பின் மனிதனுக்கு இதுவும் முடியாத காரியந்தான். பறவைகள், விலங்குகள் அந்த மாதிரி தூங்குவது உண்டு.  பெரும்பான்மையான விலங்குகள் ஒரு கண்ணை மூடி தூங்கு கின்றன.  அப்போது அவைகளுக்கு ஒரு பக்க  மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்து கொள்ள இயற்கை வழங்கிய கொடை. இமைகளே இல்லாத விலங்குகள் அதிகம் உண்டு.

மீன்களுக்கு இமைகளே இல்லை பிரச்சனை இல்லை.  டால்பின்கள் ஒரு கண்னை மூடியே தூங்கும். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளும் தூங்கி கொண்டே பறக்கும்.



Download As PDF

Saturday, November 23, 2013

டார்வின் தவளை அழிவுக்கு காரணம் என்ன?

இவ்வுலகில் நீர் நில வாழ் (amphibians )உயிரினங்கள் தோன்றி 365 மில்லியன் வருடங்கள் ஆகின்றன அதாவது சடையானை போன்ற விலங்குகள் உருவாவதற்கு முன்பே.

இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1830)  தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரை வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.

டார்வின் ஆராய்சியில் முக்கிய இடம் பெற்றது ஒரு தவளை அதற்கு அவரின் பெயர் இடப்பட்டது "Northern Darwin’s frog " மற்ற தவளைகளை போல் இல்லாமல் வித்தியாசமானது இந்த தவளை. இதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? அது இப்போது முற்றிலும் அழிந்து விட்டதாக நம்பப் படுகிறது.(extinct species !)



இது பற்றி பி.பி.சியில் வெளியான தகவல் :

புகழ் பெற்ற பிரிட்டிஷ் தாவரவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் பெயரிடப்பட்ட ஒரு தவளையினம் அழிந்தொழிந்து போய்விட்டது என்று சிலி மற்றும் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறியிருக்கிறனர்.

வட டார்வின் தவளை என்ற இந்த தவளையினம், நீர்-நிலம் வாழ் பிராணிகளைத் தொற்றிய ஒரு வித மோசமான தோல் வியாதி காரணமாக, அதன் தென்னமெரிக்க வாழ்விடங்களிலிருந்து முழுதுமாகக் காணாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்,

இந்த தவளையின் உறவினமான, தென் டார்வின் தவளையினமும், எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவுகள் அறிவியல் சஞ்சிகையான "ப்லோஸ் ஒன்" என்ற சஞ்சிகையின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தவளையினம், 1830களில் சார்லஸ் டார்வின் எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் உலகக் கடற்பயணம் மேற்கொண்டபோது அவரால் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இனத்தின் மிகவும் அசாதாரணமான அம்சம் என்னவென்றால், இந்தத் தவளைகளின் குஞ்சுகள் ஆண் தவளைகளின் குரல்வளைக்குள் வைத்து வளர்க்கப்படுவதுதான்.

தொடர்புடைய பதிவு :  தசாவதாரமும் டார்வினிசமும் !

இந்த தவளையின் காணொளி கீழே இதில் வாய் வழியாக குட்டியை பிறசவிக்கிறது.  தவளையை பார்த்தே அருவருப்பு அடைபவர்கள் இதை பார்க்க வேண்டாம்.






நன்றி : கலாகுமரன்
Download As PDF

Thursday, August 29, 2013

அழிந்துபோன டைனோசர், பனிக்கால யானை மறு உருவாக்கம் சாத்தியமா?


விஞ்ஞானிகள் சிலர் தீவிரமாக யோசிக்கிறார்கள் அழிந்து போன மிருகங்களை திரும்ப கொண்டுவர முடியுமா ? அப்படி அந்த மிருகங்களை திரும்ப உருவாக்கப்பட்டால் அதனால் என்ன பயன்?

இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜுராசிக் பார்க் ஆங்கில திரைப்படம் மைக்கேல் க்ரிக்டன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.  இதில் அழிந்து போன டைனஸோர் மிருகங்களை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்குவதாக கதை.

ஆனால் அந்த கதைப்படி (அந்த டெக்னாலஜி) மேஜிக்கெல்லாம் செய்து மிருகங்களை உருவாக்குவது என்பது நடவாத காரியம்.  இருந்தாலும் மிருகங்களை உருவாக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

சைபீரியாவின் வடகிழக்கு மூலைப் பகுதியில் உள்ளது ப்ளைஸ்டோசீன் பார்க் (Pleistocene Park) அழிந்து போன தாவர உன்னிகளான காட்டெருமை, கலைமான், இனங்களை உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சடைமுடி யானையை உருவாக்குவது பெரும் சவால்.  பனிப்பாறை பகுதியில் உறைந்து கிடைத்த படிமத்தின் ஜீன் (DNA) கொண்டு திரும்ப அந்த யானையை உருவாக்க முடியுமா?

"பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டுவரும்  சடைமுடி யானை"

லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தை சேர்ந்த பேராசிரியர் அட்ரியன் லெஸ்டர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த விலங்கை திரும்ப உருவாக்க முடியும் என்று நினைக்கவில்லை என்கிறார்.

டி.என்.ஏ நுண்தொடர்பிழை உடைந்து போயிருக்கும் ஒருவேலை, அந்த விடுபட்ட பகுதியை இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும்.  அந்த கோடிங்கை கண்டுபிடிக்க ஆசிய யானைகள் உதவுமா?

ஒருவேலை ஜீராஸிக் பார்க் கதையில் வருவது போல தவளையின் டிஎன் ஏ இந்த இணைப்பு இடைவெளியை நிரப்புமா? டோலி ஆட்டின் குளோனிங் சிஸ்டத்தை போல (SCNT = somatic cell nuclear transfer) ஆசிய யானையின் கருமுட்டையில் வலு ஊட்டப் பெற்ற மமூத் யானையின் நியூக்ளியஸ் பதிவிடுதல் சாத்தியமா? இதில் பல உள்குத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்கிறார் லெஸ்டர்.


"மறு உருவாக்க லிஸ்டில் உள்ள வட அமெரிக்க தூது புறா"

"1936ல் அழிந்துபோன டாஸ்மேனியன் புலி"


"பாதுகாக்கப்பட்டு வரும் கடைசி வெள்ளை காண்டாக்கள்"



சமீபத்தில் (1936 ? ) அழிந்து போன தைலாசின் அல்லது டாஸ்மேனியன் புலி மறு உருவாக்கம் சாத்தியமென்கிறார்கள்.

நியூசவுத்வேல்ஸ் (ஆஸ்திரேலியா) பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்(palaeontology research குரூப்) இது சாத்தியமென்கிறார். 1990 லிருந்து இது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இப்படி விலங்கு மறு உருவாக்க ஆய்வு நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.


பையோ பேங்க்

சாண்டியாகோ உயிர் தொழில்நுட்ப  கல்லூரி விலங்கியல் பதப்படுத்தும் கூடத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உயிர் கருக்கள்,செல்கள் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது.



கோவை ஆவி உடன் சேர்ந்து பதிவர்விழாவில் கலந்து கொள்ள கோநேஜீ டிராவல்ஸில்


Download As PDF

Monday, April 23, 2012

தேனீக்களிடம் நடத்திய ஞாபகசக்தி ஆய்வு.


சுறுசுறுப்பு மற்றும் நேரத்தை கடைபிடிப்பதில் பெயர் பெற்றவை தேனீக்கள். சமீபத்தில் ஆக்லாண்டு, ஜெர்மன்,நியுசிலாந்து புலனறிவு ஆராய்சியாளர்கள் (தனித் தனியாக) தேனீக்களுக்கு மூன்று மணிக்கொருமுறை ஐசோஃபுளுரன் மயக்கமருந்து (isoflurane) கொடுத்து ஆராய்ந்தார்கள். மனிதனின் அறுவை சிகிச்சைக்கு இம்மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. சரி இந்த ஆராய்ச்சி எதற்கு ? 

நம்மில் சிலர் எப்படி சரியான நேரத்திற்கு அலாரம் வெச்ச மாதிரி தூக்கத்திலிருந்து விழிக்கிறார்கள் ?  நமது மூலையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்சைம் சுரந்து எழுப்பிவிடுவதாக சொல்கிறார்கள். அப்படி இந்த என்சைம் சுரப்பதற்காண கோடிங் DNA ( ஜீன் செல்) வில் பதியப்படும்.  இம்மாற்றம் பற்றிய இந்த டைமிங் சென்ஸ் பற்றிய மரபியல் ஆய்வு (ஜெனிடிக்) தான் இது.

மற்ற விலங்குகளை (குரங்கு, எலி ) விட தேனீக்களுக்கு டைமிங் சென்ஸ் அதிகம் அதனால் அவைகளை இந்த ஆராய்சிக்கு உட்படுத்தினார்கள். தேனீக்களுக்கு நுண்ணிய டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டு மூன்று மணிக்கொருதரம் மேற்சொன்ன மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சில பல தூரங்களில் விட்டும் அவற்றின் கூட்டிலேயே விட்டும் இப்படி பல விதங்களில் சோதித்தார்கள்.

இப்படி தொடர்ந்த இடை வெளியில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட தேனீக்கள் நேரம் தவறின, கூடு இருந்த இடத்தை மறந்தன. அவற்றின் செயல்பாடுகளில் அந்த மூன்று மணி வித்தியாசம் இருந்தது.  அவற்றின் ஜீன் களில் mRNA ( நம்ம DNA மாதிரி) மூலக்கூறு செல்களில் இந்த வேதிவினை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் இரவில் கொடுக்கப்பட்ட மருந்து வேலை செய்யவில்லை என்கிறார்கள். இன்னும் இது குறித்த ஆய்வு தொடர்கிறது.

தேனீக்களை பற்றிய சில சுவையான தகவல்கள் :

சுறுசுறுப்பு மற்றும் கட்டுக்கோப்புக்கு பெயர் பெற்றவை தேனீக்கள். அதேபோல சரியான பூக்களில் தேன் சேகரிக்க குறித்த நேரத்திற்கு செல்கிறது திரும்புகிறது.  சூரியன் தான் இவற்றிற்கு திசை காட்டி(காம்பஸ்).

தேனீக்கள் 35 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக அறிகிறோம். பெரும்பாலான தேனடைகளில் ஒரேஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். ஆண் பூச்சிகள் சோம்பேரிகள் அவற்றிற்கு கொடுக்குகள் கிடையாது தேன் சேகரிக்க வெளியில் எங்கும் செல்வதும் இல்லை.  இவை செய்யும் ஒரே வேலை ராணி தேனியுடன் இணைவது (டம்மி பீஸ் ?!)

ராணி தேனீ அளவில் பெரியவை நன்கு வளர்ந்தவுடன் கூட்டை விட்டு 1000 அடி உயரத்தில் பறக்கும் தொடந்து செல்லும் 10 முதல் 20 ஆண் தேனீக்களுடன் அந்தரத்தில் இது இணையும்.  அதன் பிறகு இறகு பீய்ந்த ஆண் தேனீக்கள் இறந்து விடும். அதன் பிறகு ராணி தேனீக்கள் உறவு கொள்வதில்லை தக்க வைத்துக்கொண்ட ஸ்பேர்ம்களை வைத்துக்கொண்டு தினமும் 1500 முதல் 3000 முட்டைகளை இடுகிறது. அவற்றின் வேலை முட்டை இட்டு கொண்டிருப்பதே. வயதான பின் முட்டையிடுவதை நிறுத்திவிடும். ஒரு கூட்டில் பெரும்பாலும் ஒரு ராணி ஈ தான் இருக்கும். அதற்கு மேல் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு இறந்து ஒரே ஒரு ராணி தேனீ மட்டுமே உயிருடன் இருக்கும்.

ராணி தேனீ எப்படி உருவாகின்றன ?   ராணி தேனீ லார்வா எனப்படும் புழுப்பருவத்தில் அது உண்ணும் ஊட்டசத்து மிக்க ஒரு வகை நொதிப்பொருளினால் அதன் உடலில் ஏற்படும் மாற்றமே அவற்றை உருவாக்குகிறது. அந்த நொதிப்பொருளுக்கு TOR (Target of Rapamycin) ராப்பாமைசின் அடைவி என்று பெயர்.

நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான தேனீக்கள் இருக்கும்.
அவற்றில் நிர்வாக கோளாரோ, குளருபடியோ ஏற்படுவதில்லை. தேன்கூடுகள் பெண்களின் ராஜ்ஜியம்.

வேலைக்கார தேனீக்கள் அனைத்தும் பெண் தேனீக்கள் ஆனால் மலடுகள். ராணி தேனீக்கு இவை கட்டுப்பட்டவை.  சுறுசுறுப்பிற்கும் கட்டுபாட்டிற்கும் பெயர் பெற்றவை. 24 மணிநேரமும் உழைக்கப் பிறந்தவை.  தேனை சேகரிப்பது கூட்டை நிர்மானிப்பது, லார்வா, ராணி ஈ, ஆண் ஈ, இவற்றிற்கு உணவளிப்பது இப்படி. எதிரிகளை தாக்க இவை கொடுக்கினால் கொட்டுகின்றன. கொடுக்கினை இழந்த தேனீக்கள் இறந்துவிடும். ( தற்கொலைப்படை ?!) 

அறுங்கோண அறைகளையே கட்டுகிறது. கட்டுமாணங்களில் சிறந்த வடிவமைப்பு இந்த அறுங்கோணம் இதற்கு பழுதாங்கும் மற்றும் இழுவை திறன் அதிகம். (வாட் எ ஜீனியஸ் !! )

மர பிசின்களைக்கொண்டும் அவற்றில் சுரக்கும் நொதியங்களை வைத்தும் புரோபோலின் எனப்படும் பிசினைக்கொண்டு மெழுகாலான பலவித பயன்பாடு கொண்ட அறைகளை (கூட்டை hive ) கட்டுகிறது.

ஊணவு கிடைக்குமிடம், திசை, ஆபத்து, இப்படி பல விசயங்களை நடனம் மூலம் பறிமாறிக் கொள்கின்றன.  சுற்றி சுற்றிப்பறப்பது, நேர்கோட்டில் சென்று நடுநடுங்கி பறந்து பின் வளைந்து திரும்புவது இப்படி பல சமிஞ்சைகள். (காணொளி காண்க)

இதன் வகைகள் மலைத்தேனீ (Epis Dorsata), கொம்புத்தேனீ - (Apis Florea), அடுக்குத்தேனீ - (Apis Indica) கொசுத்தேனீ - (Apis Melipona), மேற்குலகத்தேனீக்கள் மற்றும் ஆசிய தேனீக்கள்



Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)