Followers

Thursday, February 16, 2012

வாழ்க்கை மேல் வெறுப்பு ஏன் ?


சில பேர் வாழ்கை குறித்து விசனபடுகிறார்கள், வாழ்க்கை மேல் வெறுப்பு கொள்கிறார்கள் அவர்களிடம் அற்பமாக நினைக்கும் மண் புழுவை பற்றி என்ன தெரியும், சொல்லுங்கள் என கேட்கலாம்.

மண் புழுக்களுக்கு உணர்ச்சி உறுப்புகள் வெகு அற்பமாக வாய்த்திருக்கிறது. இருளையும் ஒளியையும் அவற்றினால் பிரித்துணர முடியும் ஆனால் பார்க்கும் புலன் கிடையாது. முழுசெவிடு மோப்ப சக்தி உண்டு. ஸ்பரிச உணர்வு உண்டு.

இழுத்து செல்லும் இலைகளில் நேர்த்தியாக துவாரம் இட்டு கொள்ளும் அதுதான் இவற்றின் வீடுகள். சிலவகைப் புழுக்கள் இலைகளால் கோபுரம் போல் வீடுகளைக் கட்டும் வீட்டு வாயிலை உருவாக்கும் அவை உழைக்கும் உழைப்பும் அற்புதமாயிருக்கும். அதே நேரத்தில் பார்வை அற்ற உயிரினம் என்று சொல்ல முடியாது.

அவை ஒரு வினாடிகூட வீணாக்குவதில்லை.

ஒரு அழகிய பசும் புல் தரையைப் பார்க்கும் நாம் அதன் எழிலையும் சமதள நிலத்தையும் கண்டு ரசிக்கிறோம். இந்த அழகிய தோற்றத்திற்கு மூல காரணம் ஒன்றை மறந்து விடக்கூடாது.

இந்த சிறிய உயிரினம் போல் வேறு எந்த உயிரினமும் உலகை வளமாக்கி உலக சரித்திரத்தில் இடம் பெற்றிருக்குமா? சந்தேகம்தான்.

இன்னொரு அற்புதமான உயிரி பவழப்பூச்சி (coral) அது உருவாக்கும் அழகான மேடுகளும், திட்டுகளும் பல உயிரிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இது போல எண்ணற்ற பல உயிரிகள் உண்டு.

ஆறறிவு கொண்ட மனிதனாக பிறந்த நாம் இந்த பூமிக்காக என்ன செய்கிறோம்.
!!? சிந்தித்து பார்க்க வேண்டும்.



" மனிதன் " பெயர் விளக்கம் : மன் என்றால் மனம் . மனிதன் என்றால் அந்த மனதினால் நினைக்கும் ஆற்றல் பெற்றவன்.
Download As PDF

Tuesday, February 14, 2012

தந்தை - மகன் உறவு குறித்து எழுதப்பட்ட அருமையான சிறுகதை

பெற்ற தந்தை மகன் மீது வைத்திருக்கும் பாசம், அவன் தன்னிடம் இருந்து விலகி இருப்பது ஏன்?

மகனின் நடவடிக்கையை புரிந்து கொள்ள இயலாமல் தவிக்கும் தந்தை - மகன் உறவு குறித்து
எழுதப்பட்ட அருமையான சிறுகதை.

எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தோவியம் புத்தனாவது சுலபம்
மின் புத்தகமாக உள்ளது. தரவிறக்கி படிக்கலாம். Download As PDF

Monday, February 6, 2012

ஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது: டிராட்ஸ்கி மருது - ஒரு நேர்காணல்




ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் நேர்காணல் இங்கு மறு பதிவாக வெளியிடுகிறேன் ஓவிய துறையில் அவரது அனுபவங்கள் அதன் மூலமாக நாம் அறியப்படவேண்டிய தகவல்கள் நிறைய உள்ளன. (நன்றி : கீற்று )


ஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது: டிராட்ஸ்கி மருது நேர்காணல்: மினர்வா & நந்தன்




ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். மருதுவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கீற்றுவுக்காக உரையாடினோம். இரண்டு மணி நேரங்கள் நீண்ட அந்த உரையாடலில் இருந்து...




உங்க குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்களேன்...

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை கோரிப்பாளையம். என் குடும்பத்தோடு பூர்வீகம்னு சொன்னா அது அருப்புக்கோட்டை, காரியப்பட்டிக்குப் பக்கத்துலே இருக்கிற மருதங்குடிங்கிற கிராமம்தான். அங்கிருந்து எங்க தாத்தா காலத்துலே மதுரைக்குக் குடியேறினாங்க. அடிப்படையிலே விவசாயக் குடும்பம் எங்களோடது.

குடும்பத்துலே யாரும் கலை, இலக்கியத்தோட சம்பந்தம் இல்லாதவங்கன்னு சொல்லலாமா?


    அப்படி சொல்ல முடியாது. அப்பாவோட தாய்மாமன்கள் எல்லாம் அந்தக் காலத்துலே என்.எஸ்.கிருஷ்னணை வைச்சி விருதுநகர்லே நாடகம் போட்டவங்க. அம்மாவோட ஒரு சித்தப்பா, பேரு எம்.எஸ்.சோலைமலை, சினிமாவுலே முக்கியமான கதை - வசனகர்த்தாவா இருந்தாரு. பதிபக்தி, பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை-ன்னு பீம்சிங் இயக்கிய ‘ப’ வரிசை படங்களுக்கு கதை, வசனம் எழுதியது எங்க தாத்தாதான். அந்தப் படங்கள்லே ராமநாதபுரம் மாவட்ட சாயல் இருந்ததுன்னா அதுக்குக் காரணம் தாத்தாவோட பங்களிப்புதான். ஏன்னா டைரக்டர் பீம்சிங் வட மாநிலத்துலே இருந்து வந்தவரு. அவர் திறமையான இயக்குநரா இருந்து, நல்ல படங்களைக் கொடுத்தாரு. ஆனா கதை தாத்தாவோடது.
    அதே காலகட்டத்துலே சினிமாவுல முன்னணி நடிகரா இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்னோட பெரியப்பா பையன்தான். இப்படி எனக்கு ஒரு தலைமுறைக்கு முன்னாடியே எங்க குடும்பத்துக்கு கலைத்துறையிலே தொடர்பு இருந்தது.
    எங்க தாத்தாவுக்கு அப்பா ஒரே பையன். பிரிட்டீஷ் காலத்துலே அப்பா, வார்தாவிலிருக்கிற காந்தி ஆசிரமத்தில் ஒரு வருஷம் இருந்திருக்காரு. அங்க இருந்த ஒருத்தர், அப்பா வீட்டுக்கு ஒரே வாரிசுன்னு தெரிஞ்சு வீட்டுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறாரு.
    அதுக்குப் பிறகு, 1940களில் இலங்கையில் பண்டாரநாயகா காலத்திலே கொமீனா டி சில்வா, என்னம்பெரைரா என்ற இரண்டு டிராட்ஸ்கியவாதிகள் அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டுலே தஞ்சம் அடையிறாங்க. அவங்களோட அப்பாவுக்குத் தொடர்பு ஏற்படுது. அப்பாவும் டிராட்ஸ்கியவாதி ஆகிறார். எனக்கு டிராட்ஸ்கி மருதுன்னு பேரு வைக்கிறார். சின்ன வயசிலேயே எனக்கு உலக இலக்கியங்கள் படிக்கிற வாய்ப்பு கிடைக்குது.

உங்களுக்கு கலையில் ஈடுபாடு வந்தது எப்படி?
    நான் வளர்ந்த சூழலே அற்புதமானது. நாங்க இருந்த ஏரியாவுலே தான் அய்யனார் சிலை மாதிரியான டெரகோட்டா சிற்பங்கள் செய்யிற கலைஞர்கள் இருந்தாங்க. அவங்க மண்ணைக் குழைச்சு சிற்பமா மாத்துறதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். பிறகு மதுரை அழகர் கோயில், மீனாட்சி கோயில் மற்றும் நாயக்கர் மகால் ஆகிய இடங்களில் இருக்கிற சிற்பங்களை அடிக்கடி பார்க்க முடியும். மதுரை அழகர் கோயில் திருவிழாவும் ஒரு முக்கியமான இன்ஸ்பிரேஷன். மதுரையைச் சுத்தி 50, 60 கிலோமீட்டர் தூரத்திலே இருக்கிற எல்லா நாட்டுப்புற கலைஞர்களும் திருவிழாவுக்கு வருவாங்க. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டமா இருந்துச்சி
    அப்ப காந்தி மியூசியத்துலே வாரம் ஒரு இலவச சினிமா போடுவாங்க. அதனால் ரொம்ப சின்ன வயசிலேயே வேர்ல்டு கிளாசிக்ஸ் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைச்சது.
    பிறகு எங்க அப்பா மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டது. அப்ப மதுரையிலே பெரிய புத்தகக் கடை பாரதி புத்தகாலயம். அதை நடத்திக்கிட்டு இருந்த சுவாமிநாதன் அப்பாவோட பால்ய நண்பர். அப்பா என்னை வாரத்துக்கு மூணு தடவையாவது அங்க கூட்டிக்கிட்டு போவாரு. அந்தக் கடைக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா மாதிரியான ஆட்கள் எல்லாம் வருவாங்க. ஒரு தடவை போனா, குறைஞ்சது மூணு மணி நேரமாவது இருப்போம். ரொம்ப சின்ன வயசிலேயே உலக இலக்கியங்களோட அறிமுகம் கிடைச்சது.
    ரீகல் தியேட்டர்லே நல்ல இங்கிலீஸ் படம் வந்தா, பரீட்சை இருந்தாக் கூட, அப்பா அதைப் பார்க்கச் சொல்வாரு. ‘Bridge on the river Kiwai-னு ஒரு படம் வந்திருக்கு. புஸ்தகத்துலே படிச்ச பாலைவனத்தை அதிலே பார்க்கலாம்’ன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போவாரு. டாலி, பிக்காஸோ, டிராட்ஸ்கி இவங்களோட ஓவியங்கள் அப்பா மூலம்தான் எனக்கு அறிமுகமாச்சு. இதெல்லாம் நான் எட்டாம் வகுப்பு படிச்சபோதே கிடைச்சதுங்கிறதுதான் ரொம்ப முக்கியம். இவையெல்லாம் தான் என் கலைப்பாதையின் படிக்கட்டுகள்.

நீங்க ஓவியத்துறைக்கு வருவதற்கு மதுரையில் பார்த்த சிற்பங்கள் ஒரு முக்கிய காரணம்னு சொல்றீங்க. ஆனால், தமிழக மரபில் சிற்பங்களுக்கும், கட்டடக் கலைக்கும் இருக்கிற முக்கியத்துவம் ஓவியங்களுக்கு இல்லையே, ஏன்?

    தமிழகத்தில் ஓவியம் என்பது சிற்பத்தோடு இணைந்தேதான் இருந்தது. தனி ஓவியம்னு இல்லை. கி.பி. 4ம் நூற்றாண்டில் அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மீது ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு. காலப்போக்குல ஓவியங்கள் நிறமிழந்து போனது. இப்பயும் வெயில் படாம, கோயிலுக்குள் இருக்கிற சிற்பங்கள் மீது ஓவியப் பூச்சு இருப்பதைப் பார்க்க முடியும்.
    இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க? இலக்கியத்துக்கு வரையும்போது, நீங்க எந்த மாதிரியான அணுகுமுறையை வைச்சிருக்கீங்க?
    எழுத்துக்கு வரையும்போது வார்த்தைகள்தான் தூரிகையை நகர்த்துதுன்னு சொல்வாங்க. ஆனா நான் கொஞ்சம் வேற மாதிரிதான் இயங்கியிருக்கிறேன். கடந்த 20 வருஷமா பத்திரிகைகளில் வரைஞ்சிட்டு வர்றேன். எப்போதும் எழுத்தாளர்களோட வார்த்தைகளை நான் தேவவாக்காக எடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா மற்ற ஓவியர்கள் பத்திரிகைகளுக்கு வரையும்போது, அந்த எழுத்திலே இருக்கிற சம்பவங்களை வரைவாங்க. நான் அப்படி வரைஞ்சது கிடையாது. தேவைப்பட்டபோது எடுத்திருக்கேனேயொழிய அதை மட்டுமே வரைஞ்சதில்லை.
    எழுத்து ஒரு விஷயத்தைச் சொல்லும். அது என்ன சொல்லுதோ, அதை நோக்கிய விஷயத்தை என் படமும் சொல்லும். அதுக்கு மேலே என் படம் எதுவும் சொல்லலைன்னும் கிடையாது. எழுத்திலிருந்து படத்தைப் பிரிச்சிட்டாக்கூட, என் படம் அதே விஷயத்தை சொல்றதை நீங்க பார்க்கலாம். ஓவியர் என்பவர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது. இன்னும் சொல்லப்போனா ஓவியங்கள்தான் எழுத்தை மக்கள் மனசுலே நிறுத்தி வைக்குது.
    இராமாயணம், மகாபாரதம் எல்லாம் வெறும் வார்த்தைகளால மக்கள் மனசுலே இத்தனை வருஷமா நிக்கலை. அதுக்கு இணையா கடந்த இரண்டாயிரம் வருஷமா இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள், கூத்துக்கள் மூலம்தான் நிக்குது. ராமா ராமான்னு என்னதான் எழுதுனாலும், ராமாவோட இமேஜ் கிடைக்கலைன்னா அது இந்தளவுக்குப் போய் சேர்ந்திருக்காது. வெறும் வார்த்தைகள் அனுமானிக்கதான் வைக்கும், கோடுகள்தான் மனசுலே கொண்டு வந்து சேர்க்கும். இன்னும் சொல்லப்போனா, வார்த்தைகள் பொய் சொல்லும், கோடுகள் பொய்யே சொல்லாது.

கடந்த இருபது வருஷமா தமிழ் இலக்கியத்தோட இயங்கிட்டு வர்றீங்க. அது எந்தளவுக்கு உங்களை பாதிச்சிருக்கு?

    Marudhuசிலரோட எழுத்துக்கள் என்னைப் பாதிச்சிருக்கு. பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பலை. சிலரோட வடிவம் நல்லா இருக்கும், சிலரோட உள்ளடக்கம் நல்லா இருக்கும். பொதுவா எழுத்து மட்டுமில்லை, எல்லா விஷயங்களும் என்னை பாதிக்குது. எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறேன். பத்திரிகைச் செய்திகள், டிவியிலே வர்ற விளம்பரங்கள், கிராமத்துலே இருந்து வர்ற உறவினர்கள், நாடங்கள் எல்லாம் என்னை influence பண்ணுது.

தமிழ் நாடகங்களை நீங்க எப்படி பார்க்கிறீங்க?

    நவீன நாடகங்களில் மிகப் பெரிய முனைப்பு இருக்குது. ஆனா ஒரு ஆர்டிஸ்டா நான் என்ன நினைக்கிறேன்னா, தமிழ் நாடகத்துலே visual poverty இருக்குது. இதுக்குக் காரணமா பட்ஜெட்னு சொன்னாக்கூட, இருக்கிறதை வைச்சி இன்னும் பெட்டரா பண்ண முடியும். இயலாமையே எளிமைன்னு இங்க ஆயிடுச்சோன்னு கூட தோணுது. பின்ன அதுவே ஒரு standard ஆகி, இப்ப வரைக்கும் அதை யாரும் உடைக்க முயற்சிக்கலைன்னுதான் சொல்லணும்.

    நாடகத்துலே மட்டுமில்லை, பட்ஜெட் பிரச்சினையா இல்லாத சினிமாவுலே கூட இந்தப் பிரச்சினை இருக்கு. இரண்டரை மணி நேரம் ஓடுற சினிமாவுலே இரண்டே கால் மணி நேரம் பேசிக்கிட்டே இருக்காங்க. பேசியே கதையை நகர்த்துறாங்க. இது எனக்கு அயற்சியைத்தான் தருது. பெரிய இயக்குநர்னு சொல்ற மணிரத்னம் மாதிரியான ஆட்களோட படங்கள்லே வேறவிதமான தப்பு இருக்குது. அவங்க மிகைப்படுத்தப்பட்ட visuals-யை காமிக்கிறாங்க.
    பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்தும் கூட இதிலே எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா இவங்க திரைக்கதையை எழுதுறாங்க; விஷூவலா பார்க்கிறது இல்லை. இவர் வசனம் எழுதுன கதை, இவர் எழுதுன கதைன்னு காட்சி ஊடகத்துலே வசனங்களுக்கு முக்கியத்துவம் தர்ற போக்கு இங்கதான் இருக்கு. கூத்து, மேடை நாடகம் இதோட ஒரு தொடர்ச்சியாதான் சினிமா இருக்கே தவிர, அதை காட்சி ஊடகமா யாரும் இங்க பார்க்கலை.

மற்ற கலைகளும் இதோட தொடர்ச்சியாத்தான் இருக்குதா?

    ஆமா. தமிழ்நாட்டை சத்தங்கள்தான் ஆளுது. அலங்காரமா பேசுறவங்கதான் இங்க கொண்டாடப்படுறாங்க. அலங்காரம் என்பது பொய்னு ஜனங்களுக்குத் தெரியறது இல்லை. அலங்காரமா பேசி ஆட்சியைப் பிடிச்சவங்க எல்லாம் அலங்காரமான கலைகளையே கொண்டாடுறாங்க. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த இந்த 40 வருஷத்துலே, அவங்க சினிமாவுலே இருந்து வந்தவங்க என்பதாலே, அவங்க கட்டுன கட்டிடங்கள் எல்லாம் ஜூபிடர் பிலிம்ஸ் செட் மாதிரிதான் இருக்கு. அந்த கட்டிடம் எல்லாம் சிமெண்ட்லே செஞ்ச செட்கள்தான்.
    பெரியார் பிறந்ததாலதான் தமிழ்நாட்டுலே புதிய பாதையே கிடைச்சது. அவர் வந்த பின்னாடிதான் தமிழர் வாழ்க்கையிலே வெளிச்சமே வருது. அவருடைய முக்கிய கொள்கைகள் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு மற்றும் பெண் விடுதலை. கடவுளைத் தூக்கிப் போட்டதும், கதை சொல்றதில் இருந்த மாய மந்திரத் தன்மையும் காணாமப் போயிடுச்சி. ஏன்னா இங்க மாய மந்திரங்கிறது கடவுளோட மட்டுமே இணைச்சி வைச்சிருந்தாங்க.
    அந்த மாய மந்திரத் தன்மை கதை சொல்றதில் இருந்திருந்தா தமிழ் சினிமா விஷுவல் மீடியாவா வளர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஓவியத்துறையில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதற்கு என்ன காரணம்?

    உலக அளவிலேயே இந்தத் துறையில் பெண்களோட எண்ணிக்கை ஆண்களோட ஒப்பிடும்போது மிகக் குறைவுதான். அதிலும் இந்தியாவிலே மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம் இங்க பெண்கள் படிக்க வந்ததே கடந்த 50, 60 வருஷமாத்தான். இங்க சமூகத் தடைகள் ஏராளமா இருக்கு. ஒரு கலைஞராக இருப்பது என்பது lifetime commitment. ஆனா இங்க கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுறாங்க. அதனாலே பிரகாசிக்க முடியாம போயிடுது.

    ஆனா இந்தியாவிலே நவீன ஓவியங்கள்லே முக்கியமான பாதையைத் தொடங்கி வைத்த அமிர்தா சர்கில் ஒரு பெண்தான். ஒரு ஹங்கேரியனுக்கும், இந்திய பெண்ணுக்கும் பிறந்தவர். இவர்கிட்ட இருந்துதான் இந்திய நவீன ஓவியங்கள் தொடங்குதுன்னு சொல்லலாம்.

ஓவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. நெதர்லாந்து ஓவியர் ரெம்பரெண்ட்-னு சொன்னா, லைட்டிங்கை ரொம்பவும் வீச்சோட தன் ஓவியங்களைப் பயன்படுத்தினவர், பிரான்சில் டேவிட் தன்னோட ஓவியங்கள் மூலமா புரட்சியை மக்கள் மனதில் தூண்டி விட்டவர்னு சொல்லலாம். இந்த மாதிரி இருக்கிற ஆளுமைகளில் உங்களை ரொம்பவும் கவர்ந்தவர் யார்? யாரோட ஓவியங்களைத் திரும்பத் திரும்ப ரசிக்கிறீங்க?

    அப்படி ஓரே ஒருத்தரை மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா என்னை பாதிச்சவங்க நிறைய பேரு இருக்காங்க. ஓவியர்கள் மட்டுமில்லாம, என்னைச் சுற்றியிருக்கிற எல்லாமே என்னை influence பண்ணுது - அது அழகர்கோயில் திருவிழாவாக இருக்கலாம், இல்லை நம்முடைய மரபுக்கலைகளாக இருக்கலாம்.

    குறிப்பாக ஓவியர்கள்னு சொல்லனும்னா ஆரம்ப காலகட்டத்தில் கிளாசிக் பெயிண்டர்ஸ் எல்லோரையும் விரும்பிப் பார்த்தேன். பின்னாடி நவீன ஓவியங்களுக்கு வந்தபோது, எனக்கு உருவங்களை வரைவதில் அதிக ஆர்வம் இருப்பதால், அந்த மாதிரி வரையறவங்களை அதிகம் ரசிக்கிறேன். காமிக் புத்தக ஓவியர்கள் மீதும் எனக்குப் பெரிய ஈடுபாடு இருக்கு. அதோடு கிராபிக்ஸ் டிசைனிங்கில் முக்கியமான எல்லோரையும் க்ளோசா வாட்ச் பண்றேன். அதிலே ஜேன் லேனியான் (போலாந்து), மில்டன் கிளேசர் (அமெரிக்கா), ஹேன்ட்ஸ் எடில்மன் (ஜெர்மனி) முதலானவங்களை ரொம்பவும் ரசிக்கிறேன்.

    காமிக் புத்தகங்களில் வரையாம, நவீன ஓவியம்னு சொல்லவும் முடியாத, அதே நேரத்தில் ரொம்ப பவர்புல்லா பத்திரிகைகளில் வரையற ஸால்ட் ஸ்டீபக், ரால்ட் ஸ்டீமன், ரொனால்ட் ஷெர்லி ஆகியோரையும் எனக்குப் புடிக்கும்.

    இந்த வகையில்தான் ரசிக்கிறேன்னு கிடையாது. எல்லாத்தையும் ரசிக்கிறேன். ஏன்னா என்னோட வொர்க் ஸ்டைலே அப்படித்தான் இருக்குது.

    எனக்குப் போட்டோகிராபி பிடிக்கும். ஓரு போட்டோ எடுத்து, அதை பிரிண்ட் பண்ணுவேன். அதுமேல manual-ஆ வரைவேன். வரைஞ்ச ஓவியத்தை கம்ப்யூட்டருக்குக் கொண்டுபோய், கிராபிக்ஸ் பண்ணுவேன். என்னோட படங்கள் எல்லாமே ஒரு mixed paintings. அதிலே போட்டோ இருக்கும், ஓவியம் இருக்கும், கிராபிக்ஸ் இருக்கும். அதனால் ரசனையும் mixed-ஆ தான் இருக்கு.


நீங்க ஐரோப்பாவில் இருக்கிற முக்கியமான ஆர்ட் கேலரி, மியூசியம் எல்லாத்துக்கும் போயிருக்கீங்க. அந்த அனுபவங்களைப் பத்தி சொல்ல முடியுமா?

    சின்ன வயசிலே நான் போட்டோவில பார்த்த ஓவியங்கள் எல்லாத்தையும் நேரில் பார்க்க முடிஞ்சது. போட்டோவுல, பிக்சர்லே பார்த்துட்டு சின்னதா இருக்கும்னு நான் நினைச்ச ஓவியங்கள் எல்லாம் மிகப் பெரியதா இருந்தது. அதே மாதிரி பெரிசா இருக்கும்னு நினைச்ச பல ஓவியங்கள் ரொம்பவும் சிறிசா இருந்தது. இந்த அனுபவம் இந்தியாவிலிருந்த போன பெரும்பாலான ஓவியர்களுக்கு இருந்திருக்கும்.

    டெலாய்ராய்க், டேவிட், மைக்கேல் ஆஞ்சலோ, டாவின்சி ஆகியோருடைய படங்களை நேரில், அதுவும் ஒரு அடி கிட்டத்துலே பார்க்கிறது இருக்கே, அது விவரிக்க முடியாத அனுபவம். அதில பல ஓவியங்கள் என் வாழ்நாள் முழுக்க என்னைத் துரத்திக்கிட்டே வருபவை. ஜெர்மன் நாட்டிலே இருக்கிற முன்ஸ்டர்லே ஒரு பெரிய மியூசியம் இருக்கு. அதுல எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைச்சது.

    அந்த மியூசியத்துலே தெருவைப் பத்தின ஓவியம் ஒண்ணு பார்த்தேன். பார்த்துட்டு வெளியே வந்தா, அதே தெரு அப்படியே வெளியே இருக்கு. ‘ஐயோ இப்பதான் இந்தத் தெருவை ஓவியத்திலே பார்த்தேன்’ அப்படின்னு மிகப்பெரிய வியப்பு. ஏன்னா அந்த ஓவியம் 400 வருஷத்துக்கு முந்தினது. அந்த ஓவியத்திலே இருக்கிறமாதிரியே இப்பவும் அந்த தெருவை பராமரிக்கிறாங்க.

    அந்த நகரத்துலே ரெண்டு முனிசிபாலிட்டி இருக்கு. பழைய நகரத்தைப் பராமரிக்க old municipality, புதிய நகரத்தைப் பராமரிக்க new municipality. பழைய நகரத்துலே இருக்கிறவங்க தன்னோட வீட்டின் வெளிப்புறத்தை கொஞ்சம்கூட மாத்த மாட்டாங்க. தாழ்ப்பாள் பழுதானக்கூட அதே கலர்லே, அதே டிசைன்லே தாழ்ப்பாள் செஞ்சுதான் மாத்துறாங்க. அதே நேரத்துலே வீட்டுக்குள்ளே என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாம். பழைமையைப் பாதுகாக்கிறதில் அவங்க காட்டுற ஆர்வம் என்னை மலைக்க வைச்சது.

    பின்னே சிசிலி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள் பெரும்பாலானவற்றைப் பார்வையிட முடிஞ்சது. இத்தாலியில் ஒரு அனுபவம். 1940களில் இரண்டாவது உலகப் போர் நடந்தபோது, 4 மாடிக் கட்டிடம் ஒண்ணு குண்டு வீசித் தாக்கப்படுது. தாக்குதலுக்குப் பின்னாடி அந்தக் கட்டிடத்தோட ஓரே ஒரு சுவர் மட்டும் நான்கு மாடி அளவுக்கு இடிபடாம தப்பியிருக்கு. போருக்குப் பின்னாடி அந்த இடத்தை வாங்குனவரு, அந்த சுவரை இடிக்காம, தன்னோட புதிய கட்டிடத்துக்கு ஒரு பக்க சுவரா அதை இணைச்சுக்கிட்டாரு. பழைமைக்கு அவங்க கொடுக்கிற முக்கியத்துவம் அப்படி.

    பாரீஸ்லே ஒரு இடம் இருக்கு. நம்ம லேண்ட்மார்க்கை விட மூணு மடங்கு பரப்பளவுல விஸ்தீரணமா இருக்கும். அது மாதிரி மூணு மாடி. அதுலே ஒரு மாடி முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள். எனக்கு அது ஒரு கனவுலகம்னு சொல்லணும். கடந்த 150 வருஷத்துலே வந்த முக்கியமான எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அங்க இருக்கு.

    காலையிலே 9 மணிக்கு நண்பர்கள் என்னை அங்க விட்டுட்டுப் போவாங்க. கையிலே ஒரு பேக். அதிலே கொஞ்சம் சாண்ட்விச். மதியம் வரைக்கும் சுத்துவேன். பின்னே ஒரு பார்க்கிற்கு வந்து, கொண்டு வந்த சாண்ட்விச்சை சாப்பிடுவேன். மறுபடியும் உள்ளே போயிடுவேன். ராத்திரி எட்டரை மணிக்கு நண்பர்கள் வந்து பிக்கப் பண்ணிக்கிடுவாங்க. இப்படி 4 நாள் அங்கே மட்டுமே சுத்திப் பார்த்தேன்.

    காமிக்ஸ் புத்தகத்துலே ஏதாவது ஒரு பக்கம் ரொம்பவும் பிரமாதமான ஓவியமாக இருக்கும். அதை புளோ-அப் பண்ணி, வரைஞ்சவங்க கையெழுத்தோட விற்கிறாங்க. அது 10,000 டாலருக்கு விலை போகுது. ஒரு பெயிண்டிங்க்கு கொடுக்கிற விலையை காமிக் புத்தகத்தோட ஒரு பக்கத்துக்குக் கொடுக்கிறாங்க. அந்த இடத்தைப் பார்க்கிறதுக்கு எனக்கு சொர்க்கம் மாதிரி தெரியுது.

    வெளிநாடுகளுக்குப் போய்விட்டு வந்த பிறகு என்னோட ஓவியங்களை ஒரு self review பண்ன முடிஞ்சது.


ஓவியர்களைக் கொண்டாடுற தேசங்களுக்குப் போயிட்டு வந்த பிறகு, ஓவியங்களுக்கு பெரிய மரியாதை இல்லாத நம்ம நாட்டு சூழலை எப்படிப் பார்க்கிறீங்க?

    கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நம் நாட்டுலே நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருந்தது. சென்னையிலே மிஞ்சிப் போனா ரெண்டு அல்லது மூணு கேலரிதான் இருக்கும். ரொம்பவும் கஷ்டப்பட்டாதான் கூட்டம் சேர்க்க முடியும். ஆனா இப்ப நிலைமை மாறியிருக்கு. நல்ல தரத்தோட 30 கேலரிகள் இருக்கு. கண்காட்சி நடத்துனா கூட்டம் வருது. ரசிக்கிறாங்க.

    ஓவியம் ஒரு தொழிலா வளர்ந்துட்டு இருக்கு. ஓவியம் சார்ந்த அறிவு எல்லோருக்கும் தேவைப்படுது. ஒரு Web designerக்கு டிசைனிங் பண்ணும்போது கலர் சென்ஸ் தேவைப்படுது. முன்னே நான் காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்தபோது அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமே இல்லை. இப்ப நிறைய பேருக்கு அனிமேஷன் பத்தி நல்ல ஐடியா இருக்குது. இந்த நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும்னு தோணுது.


மீண்டும் மீண்டும் வரையத் தூண்டுகிற மாதிரியான ஒரு object ஒவ்வொரு ஓவியருக்கும் இருக்கும். உங்களை அது மாதிரி விடாமல் வரையத் தூண்டும் object எது?

    எனக்கு அசைவுகளை வரைவதில் அலாதி ஆர்வம். என் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு மூவ்மெண்ட்டை பேசுறதாத்தான் இருக்கும். அதனால்தான் என்னுடைய ஓவியங்களில் மனிதர்களும், விலங்குகளும் அதிகமாக இருக்கிறார்கள். அசைவுகளின் மீது இருக்கும் ஆர்வத்தால்தான், நான் அனிமேஷனுக்குப் போனேன். அதனால்தான் ரொம்ப சீக்கிரமாவே கம்ப்யூட்டரை பயன்படுத்தவும் ஆரம்பிச்சேன்.


நீங்க சினிமாவில் அனிமேஷன், ஆர்ட் டைரக்ஷன் ஈடுபட்டு வர்றீங்க. அந்த அனுபவங்களைப் பற்றி?

    சினிமாவில் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேதான் நான் வேலை பார்த்திருக்கேன். வித்தியாசமா வொர்க் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கிற படங்களில் மட்டும்தான் பண்ணியிருக்கேன். நாசரோட ‘தேவதை’, செல்வமணியோட ‘அசுரன்’ மாதிரியான படங்களில்தான் எனக்கு ஆர்வம்.

    Marudhuகொஞ்சம் படங்களில் அனிமேஷன் வொர்க் பண்ணியிருக்கேன். ஆர்ட் டைரக்ஷன்லேயும் கிரியேட்டிவிட்டிக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிற படங்களைத்தான் பண்ணியிருக்கேன்.

    மகேந்திரனின் சாசனம் படத்திலே வேலை பார்த்ததில் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சது. ஆனால், உண்மை என்னன்னா, படத்தில் நான் பண்ணி வெச்சிருந்த நிறைய பொருட்கள் பயன்படுத்தப்படலை. செட்டிநாடு தொடர்பா என்கிட்ட நிறைய இருந்தது. நானும் நிறைய வொர்க் பண்ணினேன். அதெல்லாம் முழுமையா படத்திலே வரலை. இருந்தாலும் என்னால முடிஞ்சவரைக்கும் செட்டிநாட்டு சூழலை படத்திலே கொண்டு வந்தேன்.

    நம்ம தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் வர்ற வரைக்கும் நாற்காலிகள் கிடையாது. வெறும் திண்டுகளைத்தான் மன்னர்கள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. அந்த மாதிரியான நிஜமான சரித்திரப் பின்புலம் உள்ள படங்கள்லே வேலை பார்க்கணும்னு ஆசை.

நீங்க கத்துக்கிட்டதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொடுக்கறீங்க?

    நான் படிக்கற காலத்துலே அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமில்லைன்னு சொன்னேன் இல்லையா? ரொம்ப நாளைக்கு அப்படித்தான் இருந்தது. அனிமேஷன் பத்தி நான் நிறைய படிச்சி தெரிஞ்சிக்கிட்டதுதான். அதுலே வொர்க் பண்றதுக்கு நான் 18 வருஷம் காத்திருக்க வேண்டியிருந்தது.

    இப்ப அப்படியில்லை. என்கிட்டே ஜூனியரா இருந்த 40 பேர் இப்போ நல்ல அனிமேஷன் கிரியேட்டரா பீல்டுல இருக்காங்க.

    அதுதவிர குழந்தைகளுக்கு அனிமேஷன் பயிற்சி வகுப்பை கடந்த 10 வருஷமா பண்ணிட்டிருக்கேன். அதிலே படிச்சவங்க இப்போ நல்ல குறும்பட இயக்குநர்களா வளர்ந்திருக்காங்க.


போட்டோகிராபியில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

    நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தபோது, மதுரை டவுன் ஹால் ரோட்டிலே பாரிலேண்ட்னு ஒரு கடை இருந்தது. அதிலே சினிமா புரொஜெக்டர் ஒண்ணை விற்பனைக்கு வைச்சிருந்தான். நான் அந்தக் கடை வழியா போகும்போதெல்லாம் அதை பார்ப்பேன். பிறகு கொஞ்சநாள்லே என்கிட்டே இருந்த பாக்கெட் மணியெல்லாம் சேர்த்து மொத்தம் 35 ரூ வந்துச்சி. அதை எடுத்துக்கிட்டு நேரே கடைக்குப் போனேன்.

    கடையில் ரெண்டு மார்வாடிங்க இருந்தாங்க. புரொஜெக்டர் வேணும்னு சொன்னேன். அதிலே பெரியவரா இருந்த ஒருத்தர், இன்னொருத்தர்கிட்டே, ‘இந்த மாதிரி சின்னப் பசங்கிட்டே வியாபாரம் பண்ணாதே’ அப்படினு இந்தியிலே சொன்னார். எனக்குப் பாஷை புரியாட்டாலும் அவர் என்ன சொல்றாருன்னு புரிஞ்சது. ‘இல்லையில்லை, என்னாலே எந்தப் பிரச்சினையும் வராது’ன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்.

    வீட்டிலே வந்து ஆபரேட் பண்ணிப் பார்த்தா நான் எதிர்பார்த்த மாதிரியான விஷூவல் அதிலே கிடைக்கலே. அம்மா ஒரே திட்டு, இப்படி காசை வேஸ்ட் பண்ணிட்டியேன்னு. மறுபடியும் கடைக்குப் போனேன். எனக்குப் புரொஜெக்டர் வேண்டாம்னு சொன்னேன்.

    பெரியவர், ‘நான் சொன்னேன் கேட்டியா? இந்த மாதிரி பையங்கிட்டே பிசினஸ் பண்ணாதே’. நான் சொன்னேன், ‘நான் தப்பா எதுவும் வியாபாரம் பண்ணலை. நான் எதிர்பார்த்த எபெக்ட் கிடைக்கலை. அதனால இதைக் கொடுத்துட்டு ஒரு ஸ்டில் கேமிரா வாங்கிக்கிறேன்.’

    அப்படித்தான் முதல்லே கேமிரா வாங்கினேன். அன்னையிலிருந்து என்கிட்டே அந்தந்த காலகட்டத்துலே வேற வேற கேமிராக்கள் வந்து போயிட்டிருக்கு. இப்ப டிஜிட்டல் கேமிரா யூஸ் பண்றேன். கேமிரா, கம்ப்யூட்டர் இதெல்லாம் எனக்கு ஒரு வரப்பிரசாதம். நான் முழு சுதந்திரத்தோட வேலை பார்க்க முடியாது. ஒரு பெரிய கதவு திறந்திருக்குது. நான் வேலை செய்யறதுக்கு ஒரு பெரிய ஸ்பேஸ் கிடைச்சிருக்கு. அதனால்தான் என் பெயிண்டிங்ஸ்ல ஒரு வெரைட்டி பார்க்க முடியுது.


நீங்க எப்படி அறியப்படணும்னு விரும்புறீங்க?

    நான் வெறும் ஓவியர் கிடையாது. அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட்களுக்கு நான் தான் முன்னோடி. ஏன்னா இனி வர்ற ஆர்டிஸ்ட்டுக்கு எல்லாம் தெரியணும். பிலிம் கிராமர், பெயிண்டிங், போட்டோகிராபி, அனிமேஷன் இதெல்லாம் தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. அதே நேரத்தில் நான் நகர்ந்துக்கிட்டிருந்த பாதைக்கு பக்கமா காலமும் நகர்ந்து வந்தது.

    ஓவியத்திலிருந்து தான் போட்டோகிராபி பிரிஞ்சுது. அதுலேயிருந்து அனிமேஷன் வந்தது. இப்போ இது எல்லாத்தையும் கம்ப்யூட்டர் ஒண்ணாக்கிருச்சு. இப்ப எல்லா ஊடகமும் கலந்து ஒரு ஊடகமா மாறிடுச்சு. இந்தப் பாதையிலே நான் முதல் ஆள்னு நான் என்னைக் கருதுறேன். அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட் எப்படி தயாராகணுமோ அப்படித்தான் நான் தயாராகிக்கிட்டு வந்தேன். நான் தயாராகி வந்த இடத்துக்குத்தான் உலகம் வந்திருக்கிறதா நினைக்கிறேன்.




மேற்கண்ட பேட்டி வெளியான ஆண்டு : ஜூலை 2009 (நன்றி : கீற்று ) Download As PDF

Wednesday, February 1, 2012

கனவு நெசமாகும்னு சொல்ராங்கலே! அது உண்மையா?


நான் கண்ட கனவு பலிச்சிடுச்சி என்று சிலர் சொல்கிறார்கள். நான் கண்ட கனவு பலிச்சிடுமோ அது மாதிரியே ஆகிடுமோ ? என்று சிலர் பயப்படுகிறார்கள்.

கனவு கண்டவர்களுக்கு அது முழுக்க ஞாபகம் இல்லாத போது எதற்கு பயப்படுகிறார்கள். இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது திரும்ப திரும்ப வரும்போது யோசிக்கவேண்டிய சமாச்சாரம் தான்.

இன்னொரு வகை அதாவது அதி அற்புத கனவுகள். எதிர்பாரத ஒரு விசயம் நடக்கும் போது நம்ம மனசுல ரீவைண்ட் பன்னி பார்தோம்னா சில நினைவுகள் பிடிபடும். அது பின்னாலேயே போனோம்னா கனவு கண்டது ஞாபகம் வரும். அப்ப நாம் என்ன சொல்றோம் கனவு பலிச்சிடுச்சி. அப்ப கனவு நமக்கு தேவையா இருக்கு. நல்லது நடந்தா கனவை ஆதரிக்கிறோம் இல்லேனா அத எதிர்க்கிறோம். இதுதான் மனித இயல்பு.

உள் மனதில் தண்ணீர்க்குள் இருக்கும் சிறிய நீர்க்குமிளி மாதிரி இருக்கும் நினைவுகள் மொல்ல விடுபட்டு மேலெழும்பி வெளிமனதை தொடுகிற போது நாம் கனவை பற்றி உணர்கிறோம்.

சாதாரணமான உணர்ச்சிகள், ஒழுக்கம் பற்றிய கோட்பாடுகள்,உலகை பற்றிய அறிவு, புலண்களை அடக்கியாலும் தன்மை, இவற்றை கொண்ட வெளிமனதை நாம் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொள்கிறோம். இந்த வெளிமனம் தான் நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்கிறது.

உள்மனம் எப்படிப்பட்டது? அதன் செயலை நாம் சாதாரணமாக உணர்வதில்லை. பரம்பரை பரம்பபரையாக ஜீன் மூலமாக கடத்தப்பட்ட பண்புகள், உணர்ச்சிகள், மதி நுட்பம், குழந்தை பருவம் முதல் நம் மனதில் பதிந்து விட்ட ஆசைகள், அபிலாஷைகள், விருப்பு வெருப்புகள் நிறைந்தது நம் உள் மனம். அதில் உயர்ந்த லட்சியங்கள் இருக்கலாம்,விகாரமான வெறி உணர்ச்சிகளும் பதிந்து இருக்கலாம். எப்படி ஒரு பயங்கரமான குகைக்குள் நவரத்தினங்களும், வைர வைடூரியங்களும், காட்டு விலங்குகளும்,கலைப்பொக்கிசங்களும் நிறைந்திருக்குமோ அது போல.

நன்மை அல்லது கெடுதல் நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்துவது இந்த உள்மனம் தான். பின்னால் இன்பங்கள் அல்லது துன்பங்கள் உண்மையிலே நடக்கும் போது நாம் இந்த உள் மனதை உணர்ந்து கொள்ளலாம்.

சில சமயங்களில் நாம் சொல்ல அல்லது செய்ய வெட்கப்படும் நடவடிக்கைய நம்மை அறியாமல் நாம செய்திருப்போம் அது உள் மனசோட காரியந்தான்.

கனவுகள் நம் எதிர்காலத்தை உணர்த்துகின்றனவா? மனித இனம் தோன்றிய நாள் முதல் கேட்க படும் கேள்வி. எதிர்காலத்தை திட்டவட்டமா படம் பிடித்து காட்டுகிறது என்று சொல்ல முடியாத போதிலும் சூசகமா தெரிவிக்கிறது என்று சொல்லலாம். ஏன்னென்றால் கனவு குறிப்பிட்ட மனிதனின் கடந்தகால வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுதான் வருகிறது அந்த பழைய வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாமல் எந்த எதிர்கால மாறுதலும் உண்டாக முடியாது.

ஒருவன் தன்வாழ்க்கையில் திடு திப்பென்று செய்யும் எந்த ஒரு புதிய காரியத்தைப் பற்றிய உணர்வு அன்று வரை அவன் மனதில் பதிந்த ஒன்று அந்த உணர்வு வெடித்து இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். Download As PDF

Tuesday, January 24, 2012

நண்பன் படத்தில் ஒரு காட்சி ஒரு விளக்கம்

நண்பன் படத்தில் ஒரு காட்சி ஒரு விளக்கம்

நண்பன் படத்தில் ஒரு காட்சியில் கால்சராயை கழற்றி கீழே விழுந்து வணங்குவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஏன் ஆண்களை இழிவு படுத்திவிட்டார்கள் பெண்களை அவமானபடுத்துகிறார்கள் என்றோ கூப்பாடு கூச்சல் இல்லை. ஏன் என்றால் ? அந்த காட்சியை ஒரு குழந்தை மனோபாவமாக எடுத்துகொண்டார்கள்.


அது என்ன குழந்தை மனோபாவம் ? சிறு குழந்தைகளுக்கு ஆடை போடுவது பிடிப்பதில்லை அதை ஒரு தடையாக கருதுகிறார்கள். நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் குழந்தைகள் குளிபதற்கு  ஆடைகளை கழற்றினால் மகிழ்ச்சியில் குதித்து ஆட்டம் போடுவார்கள். அது தான் மனிதனின் மன இயல்பு. (இந்த சீன் இல்லையே என்காதீர்கள்)

இன்னொன்று  கடவுள் சந்நிதியில் எந்த சிந்தனையும் இல்லாமல் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பதாக எடுத்து கொள்கிறோம்.

அதுபோல நண்பனுக்கு தன் சரணாகதியை மற்றும் சந்தோசத்தை வெளிபடுதுகிறார்கள் .அதில் எந்த ஆபாசமோ அருவெறுப்போ இல்லை. இது தான் காரணம்.
Download As PDF

Saturday, January 14, 2012

என் மனசறிஞ்சு சொல்றேன் - (எப்படி, எங்கிருந்து ?)

ரொம்ப பேர் இதை நெஞ்ச தொட்டு சொல்றாங்க யாரும் தலையில் கை வைத்து சொல்வதில்லை. 

தெரியாதவங்களுக்கு எளிமையா புரியற மாதிரி எழுதறேன்.

மனதின் செயல்பாட்டை பொறுத்தவரை முன்று பிரிவா பகுக்கலாம். எங்கேயும் போகவேண்டாம் வங்கி கணக்கை எடுத்துகங்க

நாள் தோறும் பணம் போடலாம் எடுக்கலாம் நடப்பு கணக்கு (Current account ) அது போல மேல் மனம் (Consicous mind ) நினைக்கவும் உடனுக்குடன் மறக்கவும் செய்கிறது.


நினைத்த போது பணம் போடலாம் எடுக்கலாம் சேமிப்பு 
கணக்கு (Savings Account ) ஆனால் சற்று இடைவெளி உண்டு  அதாவது நடுமனம் ( Sub     Conscious ) கற்றவைகளை சிறிது காலத்திற்கு நினைவு வைத்திருக்கும் சிந்திக்க நினைவூட்டும் விட்டுட்டா மறந்து விடும்.

போட்டு வைத்து இருக்கும் பணம் நீண்ட காலத்திற்கு வைத்திருக்கும் வட்டியோட திரும்ப கிடைக்கும் நிரந்தரவைப்பு (Fixed Deposit) மாதிரி உள்ளுணர்வுடன் கூடிய அடிமனசு (Super Concious mind) கேட்டது, பார்த்தது, படித்து எல்லாவற்றையும் நீண்ட காலத்திற்கு மறக்காம வாழ்க்கைக்கு நல்ல பயன கொடுக்கும்.

மன இயக்கம்

மேல்மனம் இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் தெளிவா கேட்கிறது பேச்சோட பொருளும் விளங்கும்

நடு
மனம் இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் காதில் விழும் ஆனா பொருள் விளங்காது.

அடிமனம் 
இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் கேட்காது நாம புத்தகம் படிக்கும்போதோ, இசையை கேட்டுட்டு  இருக்கும்  போதோ மத்தவங்க பேசுவதோ கூப்பிடுவதோ தெரியாது.
Download As PDF

இனியவை கூறல் -(நான்கு) கனவுகளும் அதன் பலன்களும் !

சில உதாரணங்களை இங்கே தருகிறேன். அதற்கு முன் சில விளக்கங்கள்.
முதலில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கனவுகள் வருகின்றன ? எதனால் அம்மாதிரியான கனவு ஏற்பட்டது. 
"பலவிதமான ஆசைகள், விருப்பமான உணவுகளை சாப்பிடத்தோன்றுவது. பிடித்த விளையாட்டு பொருள்களின் மேலான ஈர்ப்பு, தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்றவிருப்பம், பய உணர்ச்சி, கவலைகள், மற்றவர்களின் மேல் ஏற்படும் பொறாமை"
இதுபோன்ற காரணங்களினால் இந்த மாதிரியான கனவுகள் வருகின்றன எனலாம்.

நண்பர்களுடன் விளையாடுவது போன்ற கனவு,  எதையோ செய்வது, எங்கோ வித்தியாசமான இடங்களுக்கு செல்வது போல,  பள்ளிகூடத்தில் வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக் கென்று பதில் சொல்லி பாராட்டு பெறுவது போல,  தனக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவது போன்று.   நாய்,பூனை அல்லது ஏதேனும் ஒரு உருவம் (பேய், பிசாசு) துரத்துவதாகவோ துன்புருத்துவதாகவோ, அப்பா, அம்மா அடிப்பது போல, தண்டனை பெற்று அழுவது,கீழே விழுந்து அடிபடுவது .....

முக்கியமாக கனவுகள் பெரும்பாலும் முழுக்க ஞாபகம் இருக்காது சட்டென்ற விழிப்பினால் ஒரளவு ஞாபகம் இருக்கும். முக்கியமாக நீங்கள் கவனித்தீர்களானால் மேற்படிகனவுகளினால் குழந்தைகளின் மன அழுத்தம் வெளிப்பட்டு தண்டனையோ, தீர்வோ கிடைத்து விடுகிறது. மனம் அமைதி பெருகிறது.   

கனவின் இலட்சியம் மன விருப்பங்களை பூர்த்தி செய்வது தான்
சுருக்கமாக மூன்று முக்கிய முடிவுகள் கிடைக்கிறது.
1. விருப்பத்தின் காரணமான கனவு (Wishfulfilment Dreams)
2. பயம் பரபரப்பு கவலை காரணமான கனவு (Anxiety Dreams)
3. தண்டனை பெருவதான கனவு (Panishment Dreams)

பெரியவர்களின் கனவுகள் குழப்பம் நிறைந்ததாகவும், மாற்று உருவம் கொண்டதாகவும் இருக்கும்.
சிந்தனையாளர் பிராய்டு தன் புத்தகத்தில் பல்வேறு விதமான கனவுகள் மற்றும் தீர்வுகளை குறிப்பிடுகிறார்.

இது ஒரு திருமணமான பெண்னின் கனவு :  " நான் ஒரு விருந்து வைக்க விரும்பினேன் ஆனால் வீட்டில் பொரித்த மீனை தவிர வேரொன்றும் இல்லை கடைக்கு போய் ஏதாவது வாங்கிவரலாம் என்று இருந்தேன் விடுமுறை தினம் என்பதால் கடைகளும் மூடி இருந்தது. சரி பேக்கரி கடைக்கு போன் செய்து ரொட்டி கொண்டுவர சொல்லலாம் என்றால் போன் வேலை செய்யவில்லை (out of order) எனவே விருந்து கொடுக்கும் எண்ணத்தை கைவிடவேண்டியதாயிற்று ஏன் இந்த கனவு ஏற்பட்டது "

அந்த பெண்ணை பல கேள்விகள் கேட்டார். அவரிடம் தெரிந்துகொண்ட விசயம்.

அந்த பெண்ணின் கணவன் அவளிடம் தான் குண்டாகி வருவதாகவும் அதனால் உடற்பயிற்சியும் சாப்பிடுவதை குறைக்கவும் செய்யப்போவதாகவும் கூறியிருந்தான். அவனுக்கு பல பெண்களைத் தெரியும் அவளில் ஒருத்தியை பற்றி இவளிடம் புகழ்ந்து பேசுவான். மனைவியை விட அவள் நல்ல உடல் வாகு கொண்டவள் என்பான்.

ஒரு நாள் அந்த பெண் இவளை சந்தித்த போது " நீங்க எப்ப விருந்து கொடுக்க போகிறீர்கள் உங்க வீட்டு சாப்பாடு நல்ல இருக்கும்னு சொன்னாரு" என கேட்டாள்.

இந்த பெண் மனதில் தன்னுடைய சாப்பாட்டை சாப்பிட்டு இன்னும் தன் கணவனை வசீகரிப்பாள் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த விசயங்களை வைத்து பார்தால் கனவின் பலன் புரிகிறது. இந்த பெண்மணிக்கு விருந்து கொடுக்க விருப்பமில்லை.அது சரி ஏன் பொரித்த  மீன் என்றால் அது கணவனின் தோழிக்கு பிடித்த உணவு.

இன்னும் கனவுகளை பற்றி பிறகு எழுதுகிறேன்.
Download As PDF

Wednesday, January 11, 2012

இனியவை கூறல் - (மூன்று ) கனவு காண்பது நல்லதா?



நீங்கள் கனவு காண்பது உண்டா? இதை படித்தபிறகு கூட உங்களுக்கு கனவு வரலாம் !. 

கனவு கண்டுதான் ஏராளமான கதைகளும், கவிதைகளும், பாடல்களும்,விஞ்ஞான ஆராய்சிகளும், எண்ணற்ற கண்டுபிடிப்புகளும், ஏன் திரைப்படங்களும் உருவாகின.


கனவு என்பது என்ன?, மனிதன் ஏன் கனவு காண்கிறான்?, கனவுகளுக்கும் மனித உள்ளத்திற்கும் என்ன சம்பந்தம்? கனவுகள் நம் வாழ்க்கையின் உட்பொருளை உணர்த்துகின்றனவா? கனவு மனித வாழ்க்கையில் எப்படி எப்போது ஏற்பட்டது? இப்படி பல  கேள்விகளுக்கு விடை தேடினார் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு.

தூங்கும் மனம் தன் நினைவுகளை படமாக்கி பார்கிறது அதுதான் கனவு. படமாக்குவதும் மனம்தான் பார்பதும் மனம்தான் என்ற உண்மையை இங்கே நினைவு வைத்துக் கொள்ளவேண்டும். மனிதன் எப்போது சிந்திக்க தொடங்கினானோ அப்போதிருந்தே கனவு தொடங்கிவிட்டது.



நினைவு மனத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. கனவுகள் மனதின் விருப்பமே அடிப்படை நம்மனது அதாவது நினைவுகள் போகும் போக்கிலேயே கனவு தொடரும் அல்லது தடைபடும்.

கனவு வயது அடிபடை  அடிபடையில் பல வகைகளாக பிரிக்கபடுகிறது.

(குழந்தை கனவுகள்) : விருப்பம் காரணமாக ஏற்படுவது ,அச்சம் கவலை பரபரப்பு காரணமாக ஏற்படுவது, தண்டணை அனுபவிப்பதாக ஏற்படுவது.
பெரியவர்களின் கனவுகளின் வகைகள் : நிர்வாணகனவுகள் அல்லது அரைகுறை ஆடை அணிந்திருப்பதாக தோன்றுவது, பரிட்சை கனவுகள், உருவககனவுகள், கனவில் தோன்றும் எண்கள் மற்றும் பேச்சுகள், அர்த்தமற்ற கனவுகள்.

கனவுகள் வெளிப்படையாக ஆராயாமல் அதன் ஆழத்தில் உள்ள உண்மையை ஆராய வேண்டும். உண்மையில் கனவு காணும் போது மனிதன் தூங்கி கொண்டு இருந்தாலும் விளித்திருக்கும் அவன் மனம் கனவுகளை தணிக்கை செய்கிறது. வேண்டாத உணர்ச்சிகள் வெளிப்படாமல் மனத்தடையிடுகிறதாலேயே வெளிப்படையான கனவு அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.

கனவுகள் மனதின் நிறைவேராத ஆசைகள் பூர்த்தி செய்து வைப்பதற்காக உண்டாகின்றன. உறங்குகின்ற மனதின் வேலையே கனவு தான். நமது உள்மனதில் அமுங்கி கிடக்கும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கனவு. குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நமக்கே மறந்து போன விஷயங்கள் கனவாக வெளிப்படுகிறது. நாம் விரும்பாத நிகழ்வுகளை தடை செய்வதும் மனது தான். மனது தணிக்கையை மீறி தான் நினைக்கும் விசயத்தை உருவங்களாகவோ சங்கேத குறிகளாகவோ வெளிப்படுத்துகிறது.

கனவுகள் குறித்த ஆராய்ச்சி மருத்துவ உலகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

நிறைய புத்தகங்கள் கனவுகளை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டன.


கனவுகள் எதிர்காலத்தைப்பற்றிய சுசகமான அறிவிப்பை மனிதனுக்கு உண்டாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

[கனவை பற்றிய ஆராய்ச்சி செய்தவர் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு  (Sigmund Freud) பற்றிய சிறுகுறிப்பு அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "the interpretation of dreams" அதாவது "கனவுகளின் உட்பொருள் விளக்கம்" ( ஆண்டு 1900 ).   யுகோஸ்லெவேகியா  நாட்டில் பிறந்தவர். அவர் ஒரு யுதர் என்பதால் ஹிட்லரின் நாஸிப்படையால் வயதான காலத்தில் சொல்லெனா துன்பங்களை அனுபவித்தவர். பின் ஆஸ்திரிய நாட்டை விட்டு  துரத்தப்பட்டார் தனது 83வது வயதில் இங்கிலாந்தில் (1939) மரணமடைந்தார்.]


 
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)