- நன்மை செய்தவருக்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கே மாறுபட்டதாகும். நன்மை செய்தவருக்கு தீமை செய்வது பேய்க் குணமாகும்
~ஜெனிக்கா~
- மேகங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கதிரவனை மறைத்திட முடியாது. உண்மையான திறமைசாலியை எவ்வளவு சக்தி வாய்ந்த எதிரிகளும் மடக்கிவிட முடியாது ~ரவீந்திரநாத் தாகூர்~
- தங்களுக்கு தெரிந்தவற்றைப் பற்றி எல்லா ஆண்களும் பேசுவார்கள். ஆனால் பெண்கள் தங்கள் மனதுக்கு திருப்தியானதையே பேசுவார்கள் ~ரூஸ்ஸோ~
- சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள். சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்காதவன் சோம்பேறி. பிறர் சிந்திப்பதைக் கெடுப்பவன் அயோக்கியன் ~ ரூஸ்வெல்ட்~
- பாம்பு போன்ற விச ஜந்துக்களைக் கூட நான் நூலகங்களுக்குள் அனுமதிப்பேன் ஆனால் நச்சுத் தன்மை வாய்ந்த நூல்களை நான் நூலகத்திற்குள் அனுமதிக்க மாட்டேன் ~ குன்றக்குடி அடிகளார்
- பாயாசம் அதிக சுவையா இருக்கிறது என்பதற்காக அதிகமா சாப்பிட்டா அவதிதான். அதுமாதிரி பணமும் அளவோட இருந்தா நிம்மதியா இருக்கும். அதிகமானா அவதிதான் ~அறிஞர் அண்ணா~
- மேலுலகில் நமக்கு சொர்க்கம் கிடைப்பதை விட, இந்த உலகத்தில் நமக்கு சுதந்திரம் கிடைப்பதே மகிழ்சிக்குறியது ~ பாலகங்காதர திலகர்~
- நம்ம நாட்ல "சரஸ்வதி" படத்த வெச்சுட்டு பூசை செய்கிற மாணவன் பரிட்சைல தோத்து போறான். ஆனா அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் ல அச்சடித்த காகிதத்தில மலத்த தொடச்சுட்டு போறவன் நம்மைவிட அறிவுலேயும், திறமையான ஆற்றலாலும் திறமையுடன் இருக்கான் எப்பிடி? ~ தந்தை பெரியார்~
- அதிகமாக அனுபவிகவும், மிக சொர்பமாய் இருக்கும் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வெற்றிக்கு வழி ~கதே~
- இந்த உலகம் விரைவில் உயர்வோருக்குத் தான் நல்ல மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் புழுதிகள், வைக்கோல், மூங்கில் இவைகள் தான் இவ்வளவு விரைவில் வளர்கின்றன. ~ஹாரி~
- எதிர்பார்ப்பது குறைவாக இருந்தால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது. நம் தகுதிக்கு மேலே எதிர் பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் ~ பீச்சர்~
- நீ நல்ல பெண்ணை கலியாணம் செய்துக விரும்புகிறாயா? தன் பெற்றோருக்கு நல்ல மகளாக வாழ்பவளையே தேர்ந்தெடு ~புல்லர்~
- பால் கீழே சிந்திவிட்டதற்கு வருத்தப் பட்டால் திரும்பவும் கிடைக்காது. நடந்து முடிந்த காலங்கடந்த நிகழ்ச்சிக்களுக்காக வருத்தப் பட்டால் திரும்பவும் பெற முடியாது. ~எமர்சன்~
- எந்த ஒரு மனிதன் தீவிரமாகவும் திடமாகவும் சிந்திக்கிறானோ அந்தச் சிந்தனைகளின் வளர்ச்சியே #கலை. அப்படி சிந்திப்பவனே சிறந்த கலைஞன். ~புதுமைப் பித்தன்~
- **************************************
"Tomorrow, is the first blank page of a 365 page new life book...to start with"
Wish You all a Great, Prosperous, Blissful, Healthy, Bright, Delightful, Energetic and Extremely Happy, HAPPY NEW YEAR 2015
~kalakumaran~