Pages

Tuesday, December 20, 2011

இலவசமாக இங்கே கிடைகின்றன!




இலவசமாக இங்கே கிடைகின்றன!

அதிகாலை சூரியனின் உதயம், சில்லென்று வீசும் குளிர்காற்று 
வண்ண சிறகுகளை பட படத்து உங்களை கடந்து செல்லும்
வண்ணத்துபூச்சி நம் அனைவரையும் அரவணைக்க
தயாராக இருக்கிறது.

மலர்ந்து மனம் வீசும் அழகிய பூக்கள்
மரங்களின் மேலிருந்து உதிர்ந்து விழும் பூக்களும், இலைகளும்
உங்களை பார்த்து கண் சிமிட்டி புன்னகை செய்யும்.

குளுமையான நிலவொளியில் நடந்து சென்று சித்திரமாக தெரியும் வானவீதி,
குழந்தைகளின் மழலை பேச்சும், குதுகல சிரிப்பும்.

இளம்பெண்களின் சிரிப்பை போன்று சப்தமிட்டு பாறைகளினூடே தெரித்து
செல்லும் ஆற்று நீரின் அழகு. 

ஹோ  என்ற பரவசத்துடன் தெரித்து விழும் அருவி.

வானத்தில் படபடத்து கூச்சலிட்டு   பறந்து செல்லும் பறவை கூட்டம்.

திரும்ப திரும்ப நுரைபொங்கி கால்களை நனைத்து செல்லும் கடல் அலைகள்.

இவை எல்லாம் இலவசமாக கிடைக்கும் இன்பம். 
நமக்கு தேவை அவற்றை அனுபவிக்கும் மனது.

3 comments:

  1. ''...நமக்கு தேவை அவற்றை அனுபவிக்கும் மனது...''
    unmai. vaalthukal

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. superrrrrrrrrrr ,,,,,,,,,,,,,,,

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !