Pages

Tuesday, January 24, 2012

நண்பன் படத்தில் ஒரு காட்சி ஒரு விளக்கம்

நண்பன் படத்தில் ஒரு காட்சி ஒரு விளக்கம்

நண்பன் படத்தில் ஒரு காட்சியில் கால்சராயை கழற்றி கீழே விழுந்து வணங்குவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஏன் ஆண்களை இழிவு படுத்திவிட்டார்கள் பெண்களை அவமானபடுத்துகிறார்கள் என்றோ கூப்பாடு கூச்சல் இல்லை. ஏன் என்றால் ? அந்த காட்சியை ஒரு குழந்தை மனோபாவமாக எடுத்துகொண்டார்கள்.


அது என்ன குழந்தை மனோபாவம் ? சிறு குழந்தைகளுக்கு ஆடை போடுவது பிடிப்பதில்லை அதை ஒரு தடையாக கருதுகிறார்கள். நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் குழந்தைகள் குளிபதற்கு  ஆடைகளை கழற்றினால் மகிழ்ச்சியில் குதித்து ஆட்டம் போடுவார்கள். அது தான் மனிதனின் மன இயல்பு. (இந்த சீன் இல்லையே என்காதீர்கள்)

இன்னொன்று  கடவுள் சந்நிதியில் எந்த சிந்தனையும் இல்லாமல் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் தன்னை முழுவதுமாக அர்ப்பணிப்பதாக எடுத்து கொள்கிறோம்.

அதுபோல நண்பனுக்கு தன் சரணாகதியை மற்றும் சந்தோசத்தை வெளிபடுதுகிறார்கள் .அதில் எந்த ஆபாசமோ அருவெறுப்போ இல்லை. இது தான் காரணம்.

Saturday, January 14, 2012

என் மனசறிஞ்சு சொல்றேன் - (எப்படி, எங்கிருந்து ?)

ரொம்ப பேர் இதை நெஞ்ச தொட்டு சொல்றாங்க யாரும் தலையில் கை வைத்து சொல்வதில்லை. 

தெரியாதவங்களுக்கு எளிமையா புரியற மாதிரி எழுதறேன்.

மனதின் செயல்பாட்டை பொறுத்தவரை முன்று பிரிவா பகுக்கலாம். எங்கேயும் போகவேண்டாம் வங்கி கணக்கை எடுத்துகங்க

நாள் தோறும் பணம் போடலாம் எடுக்கலாம் நடப்பு கணக்கு (Current account ) அது போல மேல் மனம் (Consicous mind ) நினைக்கவும் உடனுக்குடன் மறக்கவும் செய்கிறது.


நினைத்த போது பணம் போடலாம் எடுக்கலாம் சேமிப்பு 
கணக்கு (Savings Account ) ஆனால் சற்று இடைவெளி உண்டு  அதாவது நடுமனம் ( Sub     Conscious ) கற்றவைகளை சிறிது காலத்திற்கு நினைவு வைத்திருக்கும் சிந்திக்க நினைவூட்டும் விட்டுட்டா மறந்து விடும்.

போட்டு வைத்து இருக்கும் பணம் நீண்ட காலத்திற்கு வைத்திருக்கும் வட்டியோட திரும்ப கிடைக்கும் நிரந்தரவைப்பு (Fixed Deposit) மாதிரி உள்ளுணர்வுடன் கூடிய அடிமனசு (Super Concious mind) கேட்டது, பார்த்தது, படித்து எல்லாவற்றையும் நீண்ட காலத்திற்கு மறக்காம வாழ்க்கைக்கு நல்ல பயன கொடுக்கும்.

மன இயக்கம்

மேல்மனம் இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் தெளிவா கேட்கிறது பேச்சோட பொருளும் விளங்கும்

நடு
மனம் இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் காதில் விழும் ஆனா பொருள் விளங்காது.

அடிமனம் 
இயங்கும் போது அக்கம் பக்கம் பேசும் குரல்கள் கேட்காது நாம புத்தகம் படிக்கும்போதோ, இசையை கேட்டுட்டு  இருக்கும்  போதோ மத்தவங்க பேசுவதோ கூப்பிடுவதோ தெரியாது.

இனியவை கூறல் -(நான்கு) கனவுகளும் அதன் பலன்களும் !

சில உதாரணங்களை இங்கே தருகிறேன். அதற்கு முன் சில விளக்கங்கள்.
முதலில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கனவுகள் வருகின்றன ? எதனால் அம்மாதிரியான கனவு ஏற்பட்டது. 
"பலவிதமான ஆசைகள், விருப்பமான உணவுகளை சாப்பிடத்தோன்றுவது. பிடித்த விளையாட்டு பொருள்களின் மேலான ஈர்ப்பு, தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்றவிருப்பம், பய உணர்ச்சி, கவலைகள், மற்றவர்களின் மேல் ஏற்படும் பொறாமை"
இதுபோன்ற காரணங்களினால் இந்த மாதிரியான கனவுகள் வருகின்றன எனலாம்.

நண்பர்களுடன் விளையாடுவது போன்ற கனவு,  எதையோ செய்வது, எங்கோ வித்தியாசமான இடங்களுக்கு செல்வது போல,  பள்ளிகூடத்தில் வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக் கென்று பதில் சொல்லி பாராட்டு பெறுவது போல,  தனக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவது போன்று.   நாய்,பூனை அல்லது ஏதேனும் ஒரு உருவம் (பேய், பிசாசு) துரத்துவதாகவோ துன்புருத்துவதாகவோ, அப்பா, அம்மா அடிப்பது போல, தண்டனை பெற்று அழுவது,கீழே விழுந்து அடிபடுவது .....

முக்கியமாக கனவுகள் பெரும்பாலும் முழுக்க ஞாபகம் இருக்காது சட்டென்ற விழிப்பினால் ஒரளவு ஞாபகம் இருக்கும். முக்கியமாக நீங்கள் கவனித்தீர்களானால் மேற்படிகனவுகளினால் குழந்தைகளின் மன அழுத்தம் வெளிப்பட்டு தண்டனையோ, தீர்வோ கிடைத்து விடுகிறது. மனம் அமைதி பெருகிறது.   

கனவின் இலட்சியம் மன விருப்பங்களை பூர்த்தி செய்வது தான்
சுருக்கமாக மூன்று முக்கிய முடிவுகள் கிடைக்கிறது.
1. விருப்பத்தின் காரணமான கனவு (Wishfulfilment Dreams)
2. பயம் பரபரப்பு கவலை காரணமான கனவு (Anxiety Dreams)
3. தண்டனை பெருவதான கனவு (Panishment Dreams)

பெரியவர்களின் கனவுகள் குழப்பம் நிறைந்ததாகவும், மாற்று உருவம் கொண்டதாகவும் இருக்கும்.
சிந்தனையாளர் பிராய்டு தன் புத்தகத்தில் பல்வேறு விதமான கனவுகள் மற்றும் தீர்வுகளை குறிப்பிடுகிறார்.

இது ஒரு திருமணமான பெண்னின் கனவு :  " நான் ஒரு விருந்து வைக்க விரும்பினேன் ஆனால் வீட்டில் பொரித்த மீனை தவிர வேரொன்றும் இல்லை கடைக்கு போய் ஏதாவது வாங்கிவரலாம் என்று இருந்தேன் விடுமுறை தினம் என்பதால் கடைகளும் மூடி இருந்தது. சரி பேக்கரி கடைக்கு போன் செய்து ரொட்டி கொண்டுவர சொல்லலாம் என்றால் போன் வேலை செய்யவில்லை (out of order) எனவே விருந்து கொடுக்கும் எண்ணத்தை கைவிடவேண்டியதாயிற்று ஏன் இந்த கனவு ஏற்பட்டது "

அந்த பெண்ணை பல கேள்விகள் கேட்டார். அவரிடம் தெரிந்துகொண்ட விசயம்.

அந்த பெண்ணின் கணவன் அவளிடம் தான் குண்டாகி வருவதாகவும் அதனால் உடற்பயிற்சியும் சாப்பிடுவதை குறைக்கவும் செய்யப்போவதாகவும் கூறியிருந்தான். அவனுக்கு பல பெண்களைத் தெரியும் அவளில் ஒருத்தியை பற்றி இவளிடம் புகழ்ந்து பேசுவான். மனைவியை விட அவள் நல்ல உடல் வாகு கொண்டவள் என்பான்.

ஒரு நாள் அந்த பெண் இவளை சந்தித்த போது " நீங்க எப்ப விருந்து கொடுக்க போகிறீர்கள் உங்க வீட்டு சாப்பாடு நல்ல இருக்கும்னு சொன்னாரு" என கேட்டாள்.

இந்த பெண் மனதில் தன்னுடைய சாப்பாட்டை சாப்பிட்டு இன்னும் தன் கணவனை வசீகரிப்பாள் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த விசயங்களை வைத்து பார்தால் கனவின் பலன் புரிகிறது. இந்த பெண்மணிக்கு விருந்து கொடுக்க விருப்பமில்லை.அது சரி ஏன் பொரித்த  மீன் என்றால் அது கணவனின் தோழிக்கு பிடித்த உணவு.

இன்னும் கனவுகளை பற்றி பிறகு எழுதுகிறேன்.

Wednesday, January 11, 2012

இனியவை கூறல் - (மூன்று ) கனவு காண்பது நல்லதா?



நீங்கள் கனவு காண்பது உண்டா? இதை படித்தபிறகு கூட உங்களுக்கு கனவு வரலாம் !. 

கனவு கண்டுதான் ஏராளமான கதைகளும், கவிதைகளும், பாடல்களும்,விஞ்ஞான ஆராய்சிகளும், எண்ணற்ற கண்டுபிடிப்புகளும், ஏன் திரைப்படங்களும் உருவாகின.


கனவு என்பது என்ன?, மனிதன் ஏன் கனவு காண்கிறான்?, கனவுகளுக்கும் மனித உள்ளத்திற்கும் என்ன சம்பந்தம்? கனவுகள் நம் வாழ்க்கையின் உட்பொருளை உணர்த்துகின்றனவா? கனவு மனித வாழ்க்கையில் எப்படி எப்போது ஏற்பட்டது? இப்படி பல  கேள்விகளுக்கு விடை தேடினார் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு.

தூங்கும் மனம் தன் நினைவுகளை படமாக்கி பார்கிறது அதுதான் கனவு. படமாக்குவதும் மனம்தான் பார்பதும் மனம்தான் என்ற உண்மையை இங்கே நினைவு வைத்துக் கொள்ளவேண்டும். மனிதன் எப்போது சிந்திக்க தொடங்கினானோ அப்போதிருந்தே கனவு தொடங்கிவிட்டது.



நினைவு மனத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. கனவுகள் மனதின் விருப்பமே அடிப்படை நம்மனது அதாவது நினைவுகள் போகும் போக்கிலேயே கனவு தொடரும் அல்லது தடைபடும்.

கனவு வயது அடிபடை  அடிபடையில் பல வகைகளாக பிரிக்கபடுகிறது.

(குழந்தை கனவுகள்) : விருப்பம் காரணமாக ஏற்படுவது ,அச்சம் கவலை பரபரப்பு காரணமாக ஏற்படுவது, தண்டணை அனுபவிப்பதாக ஏற்படுவது.
பெரியவர்களின் கனவுகளின் வகைகள் : நிர்வாணகனவுகள் அல்லது அரைகுறை ஆடை அணிந்திருப்பதாக தோன்றுவது, பரிட்சை கனவுகள், உருவககனவுகள், கனவில் தோன்றும் எண்கள் மற்றும் பேச்சுகள், அர்த்தமற்ற கனவுகள்.

கனவுகள் வெளிப்படையாக ஆராயாமல் அதன் ஆழத்தில் உள்ள உண்மையை ஆராய வேண்டும். உண்மையில் கனவு காணும் போது மனிதன் தூங்கி கொண்டு இருந்தாலும் விளித்திருக்கும் அவன் மனம் கனவுகளை தணிக்கை செய்கிறது. வேண்டாத உணர்ச்சிகள் வெளிப்படாமல் மனத்தடையிடுகிறதாலேயே வெளிப்படையான கனவு அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.

கனவுகள் மனதின் நிறைவேராத ஆசைகள் பூர்த்தி செய்து வைப்பதற்காக உண்டாகின்றன. உறங்குகின்ற மனதின் வேலையே கனவு தான். நமது உள்மனதில் அமுங்கி கிடக்கும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கனவு. குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நமக்கே மறந்து போன விஷயங்கள் கனவாக வெளிப்படுகிறது. நாம் விரும்பாத நிகழ்வுகளை தடை செய்வதும் மனது தான். மனது தணிக்கையை மீறி தான் நினைக்கும் விசயத்தை உருவங்களாகவோ சங்கேத குறிகளாகவோ வெளிப்படுத்துகிறது.

கனவுகள் குறித்த ஆராய்ச்சி மருத்துவ உலகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

நிறைய புத்தகங்கள் கனவுகளை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டன.


கனவுகள் எதிர்காலத்தைப்பற்றிய சுசகமான அறிவிப்பை மனிதனுக்கு உண்டாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

[கனவை பற்றிய ஆராய்ச்சி செய்தவர் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு  (Sigmund Freud) பற்றிய சிறுகுறிப்பு அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "the interpretation of dreams" அதாவது "கனவுகளின் உட்பொருள் விளக்கம்" ( ஆண்டு 1900 ).   யுகோஸ்லெவேகியா  நாட்டில் பிறந்தவர். அவர் ஒரு யுதர் என்பதால் ஹிட்லரின் நாஸிப்படையால் வயதான காலத்தில் சொல்லெனா துன்பங்களை அனுபவித்தவர். பின் ஆஸ்திரிய நாட்டை விட்டு  துரத்தப்பட்டார் தனது 83வது வயதில் இங்கிலாந்தில் (1939) மரணமடைந்தார்.]