Pages

Thursday, July 26, 2012

வேதம் நீ ... [ ஒரு பக்க கதை ]



அவர் பதிவுலக பிரபலம் என்பதை விடவும், சிறந்த பேச்சாளர். ரொம்ப தூரமல்ல காரமடையில் இருந்து வட கோவை வரைக்குமான ரயில் பயணத்தில் தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போ அவர பத்தி எனக்கு சுத்தமா தெரியாது.

அதுக்கப்புரம் அவரின்  பேச்சு மேடைகளுக்கு அடிக்கடி போனேன்.  அவரின் பேச்சு மெய் மறந்து கேட்கச் செய்யும். கணீரென்ற குரலில் சரளமான பேச்சு எதுகை மோனையுடன் நாட்டு நடப்புகளுடன் சமூக அக்கரை தொனிக்க பேசுவார்.

முக்கியமா பெண்களின் முன்னேற்றம், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், நவீன நாகரீகத்தில் அவங்களோட சமூக பங்கு. தடையர தாக்கு இப்பிடி. அவருக்குன்னு பேஸ் புக்ல பெண்கள் கூட்டமே இருக்கு. அவருக்கு பத்தாவது படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.

புதிதாக ஏற்படுத்தப்பட்ட பதிவர் வட்டத்திற்கு அவரை பேச அழைக்கலாம் என்று ஒரு தினம் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் சர்பரைசா இருக்கட்டுமேன்னு போன் செய்யவில்லை.

கூச்சத்துடன் நான் அடித்த அழைப்பு மணிக்கு, முதலில் குரைப்பு சத்தத்துடன் வரவேற்றது அவங்க வீட்டு நாய்.

வளையல் கை, ஜன்னல் திறந்து " யாருங்க ?"
நான்..சுருக்கமாக சொன்னேன்.
" உள்ள வாங்க..."   கதவு திறக்க தயக்கத்துடன் நுழைந்தேன்.

"அவரு வெளியூர் போயிருக்கார்..ஒரு நிமிசம்.."  சோபாவை காட்டிவிட்டு சமையலறையினுள் நுழைந்து விட்டாள்.

ஓழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட வார சஞ்சிகைகள்..முன்பிருந்த டீபாயின் மேல் அன்றைய செய்திதாள்கள் காற்றில் பட படத்தன. .

காபி கோப்பையுடன் வந்தாள். "அவரு இல்லாதப்ப வெளி ஆளுங்கள எப்பவும் உள்ள கூப்பிட மாட்டேன்.. அவருக்கு பிடிக்காது.  நீங்க என்னோட பெங்களூர் பிரதர் மாதிரியே இருக்கீங்க..." சிரித்தாள்.

மனதில் பட்ட சந்தேகங்களை உடனே கேட்டு விடுவது எனது வழக்கம்.

கேட்டேன்... " உங்க படம் ஏதும் செல்ப்ல இல்ல.. எல்லாம் அவரோட படங்களும் கோப்பைகளுமா இருக்கு..."

"ஒரு நிமிசம்..."

உள்ளறைக்கு சென்றவள் கைகளில் அவர், அவள், மகள் சிரிக்கும் புகைப்படத்துடன் வந்தாள்... "இது ஏற்காடு போயிருந்தப்ப எடுத்தது.....  அவரோட கூட்டங்களுக்கு நாங்க போறதில்ல.அவரும் கூப்பிட மாட்டார்."

அவரு, முன்னாடி வைக்க வேண்டாம் இதெல்லாம் பர்சனலுனு செல்லிட்டார்.

"நீங்க இப்படி.. கேட்டதும் எனக்கு தாங்கல... "

சட்டென அவள் விழிகளின் ஓரத்தில் லேசாக துளிர்த்த கண்ணீரை கவனிக்க தவற வில்லை.

நாக்கில் காஃபி கசந்தது. காலி கோப்பையை வைத்தேன்.

சரி வரேங்க...கேட் வரை வந்தார்.

சூரீரென்ற வெயில் முகத்தில் அடிக்க. சில அடிகள் நடந்திருப்பேன்.
 "நீங்க வந்த விசயத்த சொல்லவா ..? "

தலை அசைத்து...புன்னகைத்தேன்.  "வேண்டாம் போன்ல பேசிக்கரேன் "

கீரீச்சிடும் கேட்டை என் எண்ணங்களோடு சேர்த்து சார்த்தி விட்டு நடந்தேன்.

*******************************************************************************

27 comments:

  1. ஒரு பக்கக் கதையில் புரிதல்கள் பல .. பெண்ணுரிமைகள் மேடைப் பேச்சில் மட்டும் தான் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

      Delete
  2. கீரிச்சிடும் கேட்டை என் எண்ணங்களோடு சேர்த்து சார்த்தி விட்டு /

    கிரீச்சிடும் மனது !

    ஊருக்கு மட்டும் உபதேசம் !

    ReplyDelete
    Replies
    1. என் எண்ணத்தை அகல் விளக்காக இரு வரிகளில் தெரிவித்த ராஜ ராஜேஸ்வரி க்கு எனது நன்றி.

      Delete
  3. நிறைய பேருடைய பேச்சும் செயலும் ஒன்று போல் இருப்பதில்லை!

    ReplyDelete
  4. புதிய டெம்ப்ளேட் அருமை.., மேம்படுத்துங்கள் இன்னும் அழகாகும் வலைத்தளம்! :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் செயலற்ற பேச்சு வீனே...தங்கள் கவனிப்பிற்கு நன்றி, சில திருத்தங்கள் செய்தேன்.

      Delete
  5. நாட்டிலே நிறைய பேர்கள் இப்படித் தான் உள்ளார்கள்...
    இவர்கள் தானாக திருந்த வேண்டும்...
    ஒருநாள் அவர்களின் செயல்களினாலே திருத்தப்படுவார்கள்...
    அப்படிப்பட்ட நண்பர்களைப் பார்த்துள்ளேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அனுபவ கருத்துக்கள்... நன்றி சார்.

      Delete
  6. வெளியே புரட்சி பேசும் யாருமே தன் வீட்டுக்குள் அதை அனுமதிப்பதில்லை. இது நிதர்சனமான கதை

    ReplyDelete
    Replies
    1. வீண் பேச்சு வீரர்கள்... சிந்திக்க வேண்டும். நன்றி பாலா.

      Delete
  7. வெளி வேசமிடும் வேசதாரிகளை வெளிச்சமிடும் கதை! சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஸ் சார்.

      Delete
  8. வாய்ச் சொல் வீரர்களுக்கு ஒரு சவுக்கடி போல் இருந்தது கதை.

    ReplyDelete
  9. அருமையான வடிவமைப்பு சார் ,யதார்த்தமா இருக்கு நடை .தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சக்தி..தொடருகிறேன்.

      Delete
  10. அனுபவக் கதையா கலாகுமரன்! ஹஹா! நல்லாயிருக்கு யதார்த்தமான நடையில்!

    ReplyDelete
  11. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.நேரம் இருந்தால் பாருங்கள்

    ReplyDelete
  12. வலைச்சர அறிமுகம் மதுரை சொக்கன் செய்தது..பித்தன் சொல்லிவிட்டார்!!

    ReplyDelete
    Replies
    1. வலைசர அறிமுக பதிவு மற்றும் தங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றி!

      Delete
  13. நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.

    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html

    ReplyDelete
    Replies
    1. பல்சுவை பதிவுகளின் எனது பதிவையும் அறிமுகம் செய்த நண்பர் நாடோடி அவர்களுக்கு எனது நன்றி.

      அதிலும் வலைசரம் மூலமாக எனது கதைக்கும் ஒரு அங்கீகாரத்தை "நாடோடி-ஸ்டீபன்" கொடுத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது.

      Delete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !