Pages

Wednesday, February 20, 2013

ஒரே தினத்தில் இரண்டு அழைப்பிதழ்கள்


கோவை இலக்கிய வட்டத்தின் சார்பில் இலக்கியச் சந்திப்பு இம்மாதம் 27ம் நிகழ்வு வரும் ஞாயிறு (24.2.2013) காலை 10 மணிமுதல் மதியம்  1.30 மணி வரை நடைபெற உள்ளது.  இடம் கோவை மரக்கடை பஸ் நிறுத்தம் அருகில் எஸ்.பி. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி.

அன்றைய தினம் அஜயன் பாலாவின் “உலக சினிமா இரண்டு தொகுதிகள்”


எச்.பீர் முகமது வின் இரண்டு நூல்கள் அறிமுகம்.

அதோடு கூட கோவை பதிவர்களின் புத்தகங்கள் பற்றி சிறப்புரை நிகழ உள்ளது.


கோவை மு.சரளாவின் “மெளனத்தின் இறைச்சல்கள்” குறித்து கவிஞர் யாழி

அகிலாவின் “சின்னசின்ன சிதறல்கள்” குறித்து கவிஞர் ப. தியாகு

ஜீவாவின் “கோவை நேரம்” குறித்து பொன் இளவேனில்


இயக்குநர் திரு.ராம், திரு.ஆனந்த் (கோணங்கள்), திரு.ஞானி, திரு.நித்திலன், திரு.அஜயன் பாலா, திரு.சுப்ரபாரதி மணியன், மற்றும் கோவை பதிவர்கள் - ஜீவானாந்தம், கோவை.மு.சரளா, அகிலா அவர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.


இன்னொரு நிகழ்ச்சி


கீதா இளங்கோவனின் ஆவணப்படம் ”மாதவிடாய்” சிறப்புரை மற்றும் திரையிடல் 


கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அதே தினம் மாலை 2 மணி முதல் 4 மணிவரை நடைபெற உள்ளது.


இவ்விரு நிகழ்ச்சிக்கும் அன்பர்கள்.. நண்பர்களை வருக வருக என வரவேற்கிறோம்.


6 comments:

  1. இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வர இயலாவிட்டாலும் விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன், ராஜபாட்டை ராஜா,சுரேஷ்,இந்திரயவனம்...அனைவருக்கும் மற்றும் அன்பு நண்பர்களுக்கும். நன்றி!! இரு விழாக்களும் சிறப்பாக நடந்தேறின.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !