Pages

Thursday, February 21, 2013

கொம்பிற்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள் !


காண்டாமிருகத்தின் ஒற்றை கொம்பு அதன் பாதுகாப்பிற்காக இயற்கை அளித்த வரம் ஆனால் அதுவே அவற்றிற்கு எமனாகிறது. ஒற்றை கொம்புடைய குதிரைகள் (யூனிகார்ன்ஸ்) பற்றி கதைகளில் படித்திருக்கிறோம். நிஜத்தில் நடமாடும் யூனிகார்ன்கள் காண்டாமிருகங்கள்.



இந்தியாவில் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்ட காண்டாமிருகத்தின் கொம்புகள் குறைந்த அளவிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனாவில் இப்படி வேட்டையாடப்படும் காண்டாமிருகத்தின் கொம்புகள் உடனடியாக பொடியாக மாற்றப்பட்டே கள்ள மார்கெட்டில் விற்கப்படுகின்றன.

ஒரு கிலோ எடையுள்ள ரினோவின் கொம்பு சுமார் 65000 டாலர் மதிப்புடையது (தங்கத்தை காட்டிலும் விலை ரொம்ப சாஸ்தி இந்திய ரூபாயில் 35லட்சத்து 30ஆயிரம்) (இதன் கொம்பு மருத்துவ குணம் மிக்கது அட தேவுடா எவன் இதை கண்டுபிடிச்சானோ ?)

காஷிரங்கா தேசிய பூங்காவில் உள்ள தாயும் சேயும்

அசாமில் கைபற்றப்பட்ட காண்டாவின் கொம்பு

இந்திய காண்டாமிருகத்தின் கொம்புகள் 25 செ.மீ நீளம் கொண்டது. 
எடை 1500 முதல் 2100 கிலோகிராம். 
 தலைமுதல் வால் வரை 3.1 மீ முதல் 3.8 மீட்டர். 
கால் மற்றும் உடல்களில் தடிமனான செதிலான தோல் கொண்டது. 
உணவு பழங்கள் மற்றும் புற்கள்.  அரிசி மக்காச்சோளம் மற்றும் பயிர்கள் பிடித்த உணவு. 
பெண் காண்டா 15 ஆண்டுகளுக்கு பிறகே குட்டி போடும் பக்குவம் பெறுகிறது. பேறு காலம் 16 மாதங்கள். தாய், குட்டியை நான்கு ஆண்டுகள் பாதுகாக்கிறது. (vulnerable) அழிவு நிலை விலங்கு எண்ணிக்கை 2900 இருக்கலாம். 

இந்திய காண்டாமிருகம், முன்பு இது ஆப்கான் எல்லையில் இருந்து தென் கிழக்கில் பர்மா வரையிலும் இவை வாழ்ந்து வந்தன இப்போதுகுறிப்பிட்ட  10 இடமாக குறைந்து விட்டது மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதம் காஷிரங்கா(kaziranga அஸ்ஸாம்) தேசிய பூங்காவிலும், மீதம் பூட்டான், ஷிட்வானிலும் (நேபாளம்) உள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் 1905ன் கணக்கெடுப்பின் படி இவை 2000 இருந்தன இன்று 20 ஆக குறைந்து விட்டது ( வாழ்க மனிசர்கள் !)


யானைகளை போன்றே இவையும் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக காஷிரங்கா வாசிகள் கூறுகிறார்கள்.

காஷிரங்கா தேசிய வன பாதுகாவலர்கள் 500 பேர் உள்ளனர்.  காண்டாமிருகங்களை வேட்டைகும்பலில் இருந்து பாதுகாப்பதே பெரும்பணி. பாதுகாப்பது கடுமையான பணி, சராசரியாக ஒரு நாளுக்கு 10 முதல் 20 கிலோமீட்டர்கள் அவர்கள் நடக்க வேண்டியுள்ளது. உயிர் ஆபத்து நிறைந்த வேலை என்கிறார்கள். பாதுகாப்பிற்காக 315 ரைபிள் ரக துப்பாக்கி தான் பயன்படுத்துகிறார்கள்.

காஷிரங்கா தேசிய பூங்காவில் பணியாற்றும் வன பாதுகாவலர்களின் ஒருமாதத்திய சம்பளம் 160 டாலர்கள் (ரூபாயில்.8700).  ஒரு பாதுகாப்பு குழுவில் குறைந்தது மூன்று நபர்கள் பணியில் ஈடுபடுவர்.

இன்னும்...அடுத்த பகுதியில் பல அதிர்ச்சி தகவல்களுடன் தொடர்கிறேன்.

நன்றி : prof.ஆண்ட்ரூ பாம்போர்ட், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி மற்றும் பி.பி.சி

11 comments:

  1. இது போன்ற செய்திகள் மனதை மிகவும் வாட்டுகின்றன. இயற்கையை நாம் காத்தால், அது நம்மைக் காக்கும், ஏன் ஆறறிவு படைத்த மனிதனுக்கு இது விளங்கமாட்டேன்கிறது?

    ReplyDelete
    Replies
    1. நம்மை விடவும் விலங்குகளுக்குத்தான் இவ்வுலகில் முன் உரிமை. நம் உடலின் நகம் முடியில் உள்ள கெரடின் தான் அதன் கொம்பிலும் உள்ளது. பின் எங்கேருந்து ஆதீத சக்தி இருக்கும்.
      //ஏன் ஆறறிவு படைத்த மனிதனுக்கு இது விளங்கமாட்டேன்கிறது?//
      உண்மைதான்.

      Delete
  2. விழிப்புணர்வு தேவை.. இதுபோன்ற அரிய வகை விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இதற்காண சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும்.

      Delete
  3. பண மிருகங்கள் எதை தான் விட்டு வைக்கவில்லை...?

    ReplyDelete
    Replies
    1. பணத்தாசை பீடித்தவர்களுக்கு அது ஒன்று தான் குறிக்கோள்.

      Delete
  4. விலங்குகள் இயற்கையின் ஒரு பகுதி, மனிதன் மொத்த உலகத்தையும் அழிக்கும் வரை ஓய மாட்டான். இயற்கையின் கேவலமான படைப்பு ஒன்று உண்டென்றால் அது மனித இனமே. இது வரை எத்தனை அழிக்கப்பட்டன், அழிந்து கொண்டிருக்கின்றனவோ

    ReplyDelete
    Replies
    1. மனிதன் பாதி மிருகம் பாதி என்பார்கள்...மோசமான செய்கைகளை பார்கையில் அவனுள் மிருக குணமே மிகுந்திருக்கும். மனிதனுக்கு விலங்குகளை பார்க்கையில் பயம் அந்த பயமே அவைகளை கொல்ல காரணம். யானைகள் கார்களை புரட்டி போடுவதை பார்க்கிறோம் அவைகள் மனிதனை ஒரு கோணத்தில் வெறுக்கின்றன. பாகனையே பல சமயங்களில் அழிக்கிறது.

      Delete
  5. நல்லதொரு தகவல் பதிவு! காண்டாமிருகங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! இல்லையேல் வருங்காலம் வருந்த வேண்டியதாய் ஆகிவிடும்!

    ReplyDelete
    Replies
    1. உலக அழிவிற்கு முன் மனிதன் மட்டுமே எஞ்சியிருப்பான். நன்றி சுரேஷ்!

      Delete
  6. உங்களின் இந்தப் பதிவை ஓசையின் முகப்பக்கத்தில் பகிர்ந்துள்ளேன் ...பகிர்ந்துகொள்ள வேண்டிய தகவல்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !