Pages

Monday, March 4, 2013

ஆண்டுக்கு 10 கோடி சுறாக்கள் கொல்லப்படுகின்றன



தொடர்புடைய பதிவு : திமிங்கிலங்கள் [ whales ]




ஆண்டுதோறும் 10 கோடி சுறா மீன்கள் கொல்லப்படலாம் என்று இது குறித்த மிகவும் துல்லியமான கணிப்பு என்று கருதப்படும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தமது வாழ்நாளில் சற்றே தாமதமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மைகொண்ட சுறாக்கள் இந்த அளவுக்கு கொல்லப்படுவது அபாயகரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சீனர்கள் தாம் அருந்தும் ''சூப்''புகளில் சுறா செதில்களை பயன்படுத்துவதே சுறா மீன்கள் கொல்லப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
சரியான புள்ளிவிவரங்கள் இல்லாது இருப்பதால் உலகளாவிய அளவில் சுறாக்கள் பிடிக்கப்படுவது குறித்து துல்லியமாக கூறுவது கடினமாக உள்ளது. ஏராளமான சுறா மீன்கள் பிடிக்கப்பட்டவுடன் அதன் செதில்கள் வெட்டியெடுக்கப்பட்டு பிறகு மீண்டும் கடலில் வீசப்படுகின்றன. இப்படிக் கொல்லப்படும் சுறாக்கள் அதிகார பூர்வ புள்ளி விவரங்களில் இடம்பெறுவதில்லை.

 விஞ்ஞானிகள் ஆண்டுதோறும் 6 கோடியே 30 லட்சத்தில் இருந்து 27 கோடியே 30 லட்சம் வரையிலான சுறாக்கள் ஆண்டுதோறும் கொல்லப்படலாம் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தனர்.

அதாவது இந்த மீன்கள் பிடிக்கப்படும் வேகம் அதன் இனப் பெருக்க வேகத்தை விட அதிகமாக இருக்கிறது.

இது குறித்து கருத்து வெளியிட்ட நீயுயார்க் ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேமியன் சேப்மேன், மிகவும் மோசமான புள்ளி விவரங்கள் காரணமாகவே எவ்வளவு சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பது குறித்த கணிப்பீட்டில் குறைந்த பட்ச எண்ணிக்கைக்கும் அதிக பட்ச எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது என்றும் ஆனால் ஆண்டுதோறும் 10 கோடி சுறாக்கள் கொல்லப்படலாம் என்பது ஒரு இடைப்பட்ட சிறப்பான கணிப்பீடு என்றும் கூறினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையே சுறா மீன்கள் பிடிக்கப்படுவதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. தேவையை ஈடுகொடுக்க மீன்பிடிக் கப்பல்கள் சுறாக்களை பிடிக்கும் இடங்களையும் பிடிக்கப்படும் சுறா இனங்களையும் மாற்றியுள்ளன. இதனால் சுறாக்களின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சி அடையும் என்ற அச்சம் இருக்கிறது. சிலவகைச் சுறா இனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன மேலும் இவற்றின் இனப் பெருக்க வீதம் மிகவும் குறைவானது என்பதால் சுறாக்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகறித்துள்ளன.

வரும் ஞாயிற்றுக் கிழமையன்று பாங்காக்கில் 178 நாடுகளின் பிரதிநிதிகள் அருகிவரும் உயிரினங்களின் வர்த்தகம் குறித்த சர்வதேச மாநாட்டில் சந்திக்க உள்ளனர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 சுறா இனங்களின் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு திட்டம் இதில் முன்வைக்கப்பட உள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த இம் மாநாட்டில் சுறாக்களை பாதுகாக்கும் முடிவை நிறை வேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒரு சில வாக்குகளால் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் இம்முறை இந்தத் தீர்மானத்துக்கு வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் மத்தியில் ஒரு பரந்துபட்ட ஆதரவு இருப்பதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.


நன்றி : பி.பி.சி செய்தி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 மார்ச், 2013 - 14:06 ஜிஎம்டி

15 comments:

  1. மற்றொரு உயிரினத்தையும் அழிக்க 'முன்னேறி' விட்டான் மனிதன்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் எந்த உயிரினத்தையும் விட்டுவைக்காத உயிரினம்! நன்றி

      Delete
  2. சிறப்பான விழிப்புணர்வூட்டும் இடுகை, மற்ற உயிரினங்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வு இன்னும் பரவலாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுக்கு அடிகோலும் நிலையாகும். இது போன்ற தொடர்ந்து தகவல்கள் தாருங்கள். அதிகமான மீன்களைக் கொன்று குவிப்பது ஜப்பான்.

    ReplyDelete
    Replies
    1. உலக அளவில் அரசும் சட்டமும் முழுமையாக செயற்படுத்தப்படுவதில்லை என்றே தோன்றுகிறது. மீன் பிடிப்பதற்கும் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. உயிரினங்களை இப்படி கொன்று குவிப்பது சூழ்நிலை தகவமைப்பை சீறழித்து, உலக அழிவிற்கே இட்டுசெல்லும். நன்றி தமிழானவன்!

      Delete
  3. தன இனத்தை மட்டுமல்லாது பிற இனத்தையும் அழிக்க நினைக்கும் மனிதன் கடைசியில் என்ன ஆக போகிறானோ ?

    ReplyDelete
  4. Replies
    1. இயற்கையை சீர்குலைப்பது மனித இன அழிவுக்கு வழி வகுக்கும். நன்றி ராஜபாட்டை ராஜா!

      Delete
  5. தன் இனத்தைக்கூட இன்னம் சாப்பிட அழிக்கவில்லையே தவிர தன் தேவைகளுக்காக அழித்துக் கொண்டுதானே இருக்கிறான்.....மனிதனைப்போல ஒரு தன் நலம் சார்ந்த ஒரு இனம் உலகிலேயே கிடையாதென்பதற்கு இன்னுமொரு சான்று சுறாக்கள் அழிவு.

    ReplyDelete
    Replies
    1. மாக்கள் போல நடந்துகொள்ளும் மனிதன் ஒரு சுயநல மிருகம் என்றுதான் சொல்லுகிறார்கள். நன்றி எழில்!

      Delete
  6. மனிதனின் இந்த வேகம் விரும்பத்தக்கதல்ல

    ReplyDelete
    Replies
    1. டெக்னாலஜி வளர வளர மனிதனின் மனம் கற்காலம் நோக்கி செல்கிறது. நன்றி முரளிதரன் அவர்களே!

      Delete
  7. இனியவை கூறல் அப்படின்னு சொல்லிட்டு, இப்படி நெஞ்சை பதறவைக்கும் சம்பவங்களையே தொடர்ந்து கூறலாமா.......... படிக்க படிக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு..............

    ReplyDelete
    Replies
    1. மனிதன் இயற்கையை சீரழிப்பது,தன் இன பேரழிவிற்கு தன்னை உட் படுத்திகொள்கிறான். இவற்றை உணர்த்துவதும், நம் எதிரிப்பை தெரிவிக்கவும் வேண்டி உள்ளது. மனிதனின் மறுபக்கம் மோசமானதாகவே இருக்கிறது. பணம் மட்டுமே குறிக்கோளாய் இருப்பது தான் இதற்கு காரணம். மனித உரிமை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவற்றை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

      Delete
  8. நீங்க சொல்றது கரெக்ட் தாங்க.. ( ஆனா சுறா கறி சூப்பரா இருக்கும் ஸார்..)

    ReplyDelete
    Replies
    1. உணவுக்காக‌ என்பதையும் தாண்டி அழிவு ஏற்படுத்தப்படுகிறது. லிமிடேசன்.. காலம் எல்லாம் இருக்கு இல்லையா?. மீன்களை பிடிப்பதற்கு வருடத்தில் குறிப்பிட்ட மாதத்தில் தடை விதிக்கப்படுகிறது.

      Delete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !