Pages

Saturday, June 22, 2013

கொங்கு நாட்டின் செப்பேடு இரகசியங்கள் !

ஓலைச் சுவடி காலத்திற்கு முந்தைய காலத்தில் அதாவது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் செப்பேடுகள் கொங்கு நாட்டில் நடைமுறையில் இருந்தன.

இந்த செப்பேடுகளில்  மன்னரின் ஆளுகைக்குட்பட்ட விவரங்கள், அரசு உத்தரவுகள்(ஆணைகள்), மானியங்கள், இன்னபிற தகவல்கள்,  தானமாக பெற்ற கிராமங்கள், அசையும் அசையா சொத்துக்கள் போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

செப்பேடுகளில் பிராமி மற்றும் வட்டெழுத்து முறை எழுத்துக்களால் எழுதப்பட்டவை.

சோழர்கால வட்டெழுத்துக்கள்




செப்பேடுகள் இரும்பு, வெண்கலம், ஐம்பொன் போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்டன.

செப்பேடுகளில் எழுதுவதற்கு நீண்ட நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

கோவையில் பேரூர் நொய்யல் ஆற்றில் இவ்வகை செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன (தற்போது அல்ல). பேரூர் தமிழ் கல்லூரியில் அமைந்துள்ள பேரூராதீனத்தில் ஐம்பொன்னாலான செப்பேடுகள் பராமரிக்கப்படுகிறது.



கோவையில் பேரூர், போளுவாம்பட்டி, ஆலாந்துறை, வெள்ளலூர், இருகூர், சூலூர், பட்டணம் பகுதியில் செப்பேடு பதிவுகள் அதிகம் நடந்திருக்கிறது.

சில இரகசியங்களை அடுத்த தலை முறையினருக்கு உணர்த்துவதற்காகவும் இந்த செப்பேடுகள் பயன் பட்டிருக்கின்றன.

பாட்டன் பூட்டன் காலத்திய செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் காலப்போக்கில் மங்கியதால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.


செப்பேடுகளை சிலர் தங்களின் முன்னோரின் நினைவாக பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அதில் உள்ள விவரங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை.  இன்னும் வெளியே தெரியாத பல செப்பேடுகள் இரும்பு பெட்டிகளில் ஒளிந்திருப்பதாக தொல்லியல் துறையினர் நம்புகின்றனர். 

7 comments:

  1. நல்ல உள்ளங்கள் ஐம்பொன்னாலான செப்பேடுகளை பணம் ஆகி விடுவார்கள் என்று பாதுகாப்பாக வைத்திருக்கலாம்...!

    (ஒழிந்திருப்பதாக ---> ஒளிந்திருப்பதாக) ஒழித்தும் இருக்கலாம்...!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ம்..இருக்கலாம்..தங்கிலீஸ் தட்டச்சில் தவறு ஏற்பட்டு விட்டது சுட்டி காட்டியதற்கு நன்றி..நன்றி!

      Delete
  2. ஐ.. எங்க ஊர் ந்யூஸ்..

    ReplyDelete
    Replies
    1. தகடு..தகடு...கிடைச்சா சொல்லுங்க.!

      Delete
  3. இவற்றை ஆராய்ந்தால் பழந்தமிழர் பற்றி இன்னும் பல தகவல்கள் கிடைக்கக் கூடும்.வைத்திருப்பவர்கள் அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நல்ல விசயம், நடைமுறையில் சாத்தியமான்னு தெரியல...நன்றிங்க முரளி.

      Delete
  4. \\பாட்டன் பூட்டன் காலத்திய செப்பேடுகளில் உள்ள எழுத்துக்கள் காலப்போக்கில் மங்கியதால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.\\ மங்கிய எழுத்துக்களைப் படிப்பதற்கும் ஏதாவது வழி இருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !