Pages

Friday, August 16, 2013

இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு - பகுதி 2)


இந்தியாவின் மையப்பகுதியான விந்திய மலைப்பகுதிகளில் (போபால் தென்கிழக்கே) பிம்பெட்கா குகைப் பகுதிகளில் தொன்மையான பாறை சித்திரங்கள்  காணப்படுகின்றன.


 (V.S. Wakankar ) வாகன்கர்  என்பவர்  1957 ல் இச்சித்திரங்களை பற்றிய ஆய்வுகள் வெளியிட்டு இருக்கிறார்.  2003 ல் இந்த பகுதி இந்திய மரபுரிமை பகுதியாக யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டது ( the World Heritage List of UNESCO)




பலதரப்பட்ட வடிவங்கள் உள்ள இந்த பாறைசித்திரங்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. யானை, குதிரை மேல் இருந்து போர் புரிவது,போர் காட்சி, முகமூடி அணிந்த மனிதர்களின் வேட்டை, நீண்ட கொம்புகளை கொண்ட மாடு, மான்கள், நாட்டியம் ஆடுபவர்கள் போன்ற சித்திரங்கள் காணப்படுகின்றன.


நூற்றுக்கணக்கான சித்திரங்கள் இருந்த போதிலும் காலம் செல்ல செல்ல அவற்றின் மீது சூப்பர் இம்போஸ் என சொல்லபடும் சித்திரத்தின் மேல் சித்திர ஓவிய புதுபிப்பும் செய்யப்பட்டு இருக்கிறது.


காலத்தின் முற்பட்ட, மிக மிகப் பழமையான சித்திரங்களும் இருப்பதாக சுமார் 1,50,000 ஆண்டுகள்(   ஆப்பிரிக்காவில் இருந்து வெளிப்பட்ட நாகரீக மனிதனின் காலம் Acheulian) தெரிவித்திருந்தார் விஷ்ணு வாகன்கர்(1972).
சம்பல் பள்ளத்தாக்கு, பந்த்பூரா-காந்திசாகர் பகுதியிலும் (வட போபால், மத்தியபிரதேசம்) குகை சித்திரங்கள் உள்ளன.


முப்பரிமாண முதலை (ஆஸ்திரேலிய x-ray style)  





இப்பகுதிகளில் 1990 களில் இருந்து, Rock Art Society of India (RASI) மற்றும்  IFRAO (International Federation of Rock Art Organizations இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவு : இந்திய கற்பாறை சித்திரங்கள் (ஒர் ஆய்வு) part 1


2 comments:

  1. விடாது கருப்பு பாக்குற மாதிரி இருந்தது..

    ReplyDelete
  2. மகிழ்ந்தேன்.பயனுள்ள தகவலுக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !