Pages

Tuesday, August 13, 2013

”ஙப் போல் வளை” என்றால் ஙே என்று முழிப்பது ஏன்?

தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு ”ங்கா..”.

தமிழின் சிறப்பெழுத்து "ழ”  வைப்போல இன்னொரு எழுத்து “ங”  இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம்.

சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு.

”ங போல் வளை “

        'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
        அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும்

sculptures by Antony Gormley University of oxford
 
இதை விளக்க தமிழறிஞர்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். 
ங இந்த எழுத்து பல கோணங்களை கொண்டது. அதன் கோணத்தின் ஒவ்வொன்றுக்கும் நிமிர், எதிர்ப்பு வந்தால் சாய்ந்துவிடு. மேலும் எதிர்ப்பா கீழ் நோக்கி வா, மறுபடியும் தலை எடுத்து வளைந்து பார், பின் கிட. நிமிர்ந்து நில் என்பதை தான் ங போல் வளைந்து கொடுக்க வேண்டும் என அவ்வை சுட்டி காட்டுகிறார்.

"திரு. நாஞ்சில் நாடன் இது பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
 ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும்.      ‘ங’ எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என.            மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான ‘ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். எடுத்துக்காட்டு – அங்கு, இங்கு, எங்கு, ஈங்கு, ஏங்கு, கங்கு, சங்கு, பங்கு, தங்கு, நுங்கு, வாங்கு, மங்கு, முங்கு, தங்கம், சுங்கம், கலிங்கம், பாங்கு, தூங்கு, நீங்கு, வாங்கு, வீங்கு, மூங்கில். "

உயிர்மெய் எழுத்தில் க வை அடுத்து ங, ஙா வைத் தவிர உள்ள அந்த வரிசையில் வரும் மற்ற எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லை. காலப்போக்கில் கரைந்து போய் விட்டது என்று சொல்லலாம்.
ஆனால் அரிச்சுவடியில் 216 எழுத்துகளின் பட்டியலில் மட்டும் ஒன்றாய் கலந்து இருக்கிறது. ”ஙே ” என்று முழிப்பதற்கும் அடுத்தவனை திட்டும் முதல் எழுத்தாக இன்னும் அழியாமல் உள்ளது.

13 comments:

  1. சொன்ன மாதிரி மத்த எழுத்துக்களையெல்லாம் நாம் எங்கே பயன்படுத்துகிறோம்...யோசிக்கிறேன் பிடிபடவில்லை...ங- வைப் பற்றிய ஆராய்ச்சி அருமை..

    ReplyDelete
  2. அவ்வையார் புத்திசாலி. ங முதல் எழுத்தாக அமைக்க ங போல் வளை என்று எழுதி விட்டார். விளக்கங்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. //அவ்வையார் புத்திசாலி // நிச்சயமாக. நன்றி முரளி!

      Delete
  3. அருமையான விளக்கங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க‌ ராஜராஜேஸ்வரி !

      Delete
  4. புலவர் பெருமானுக்கு வணக்கங்கள் மூக்கில் ஒலிக்கப்படும் எழுத்து இது இந்த சிறப்பான எழுத்தை பற்றிய சிறப்பான கருத்துக்கள் பதிவு செய்திருகிறீர்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. அப்போ, மூக்கு அடைத்திருக்கும் போது இந்த எழுத்தை நாம பயன்படுத்த முடியாதா? #டவுட்டு#

      Delete
    2. @ கோவை ஆவி பிரச்சனையே இல்லையே 'கே' என்று சொன்னாலே 'ஙே' என்றுதானே ஒலிக்கும். :0)

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குரு.

      Delete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !