Pages

Tuesday, September 3, 2013

பாமரனின் நக்கலும் நையாண்டியும்



பாமரன் கோயமுத்தூர்காரர் இவரின் இயற்பெயர் எழில் கோ,  எழில் என்றால் அழகு கோ என்றால் அரசன் (கவனிக்க மக்களால் இவர் அறியப்பட்ட பெயருக்கும் இவரின் இயற் பெயரும் தலைகீழ் பொருத்தம்)

விழா மேடையில் திரு.பாமரன்


திரு.பாமரனுடன் மெட்ராஸ்பவன் சிவக்குமார்


செப்.1 2013ல் சென்னையில் இசைகலைஞர்கள் சங்க மண்டபத்தில் இரண்டாம் தமிழ் வலைப்பதிவர்கள் விழா மிக அருமையாக நடைபெற்றது இந்த விழாவில் பாமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், அவர் பேச்சிலிருந்து சில பகுதிகள்.



என்னை அறிமுகப்படுத்தியவர் சொன்னார் இவர் என்னவெல்லாம் கத்தை கட்டியிருக்கிறார் என்று என்னய ஏன் எழுத்தாளனு சொல்றாங்க. நான் எப்படி இந்த எழுத்து துறைக்கு வந்தேன்? இந்த கேள்விக்கான பதிலுக்கு நான் என் மண்டையை போட்டு குடைந்தேன் என்ன என்னவோ செஞ்சு பாத்தேன் இந்த கேள்விக்கான பதிலை தேடினேன்.

நான் எழுதுவதற்கு காரணம் யார் ஊட்டிய ஞானப்பாலும் அல்ல. என் எழுத்திற்கு காரணம் பெண்கள், பெண்கள். அப்ப என்னுள் ஊறிய கவிதைகள்.
கண்ணே நீ காகித பூ
என்று தெரிந்திருந்தால்
நான் கழுதையாக தான் பிறந்திருபேன்.

டிஆரின் பாதிப்பில்

உன் கண்’மை கூட என் ஆண்’மைக்கு சவால்விட்டது
உன் பெண்’மையின்
தன்’மையால்
நான் மென்’மை அடைந்தது என்னவோ
உன்’மையிலும் உண்’மை
- - - -
இந்த மாதிரி எல்லாம் கவிதை எழுதி கொடுமைப் படுத்தியிருக்கிறேன். நண்பர்களே நான் தமிழ் சமுதாயத்திற்கு செய்த ஒரே ஒரு நல்ல காரியம் கவிதை எழுதுவதை விட்டது தான்.

பரிட்சை எழுதிய அனுபவம் ?

பரிட்சை எழுதுவதே எனக்கு பிடிக்காமல் போனது. எக்ஸாம் ஹாலுக்குள்ள கேள்விதாளை வாங்கி வெச்சுட்டு என்ன எழுதறதுன்னு முழுச்சிகிட்டு இருப்பேன்  படிச்சிருந்தா தானே எழுதுவதற்கு. அவ அவன் பர பரப்பா அடிசனல் பேப்பர் வாங்கி எழுதிட்டிருப்பான். நான் முழுச்சுகிட்டு இருக்கறத பார்த்த வாத்தியார் எதையாச்சும் உனக்கு தெரிஞ்சத எழுதுப்பான்னார். ஒரு கவிதை எழுதி வைக்கலாமன்னு தோனிச்சு எழுதினேன்.

இந்த கேள்விகளுக்கு பதில் எழுதினால்
மதிப்பெண் கிடைக்கும்
மதிப்பெண் கிடைத்தால் தேர்வு கிடைக்கும்
தேர்வு கிடைத்தால் வெற்றி கிடைக்கும்
வெற்றி கிடைத்தால் பட்டம் கிடைக்கும்
பட்டம் கிடைத்தால் வேலை கிடைக்குமா ?
என்பதே என் மனதின் கேள்வியாக இருக்கிறது.

என்று எழுதினேன். இதற்கு எனக்கு 8 மார்க்குகள் கிடைத்தது. இந்த மாதிரி ஐந்து கவிதை எழுதி இருந்தாலும் 40 மதிப்பெண்கள் கிடைத்து இருக்கும்.

குமுதத்தில் எழுதிய அனுபவம்?

கோவைதங்கம்னு ரப்பர் ஸ்டாம்பெல்லாம் செஞ்சு வெச்சு ரகளை செய்திருக்கிறேன். வாசகர் கடிதம் எழுதி அது குமுதத்தில் வெளியாவதே எனக்கு பயங்கர விசயமாக இருந்தது. 200 , 300 கார்டு வரைக்கும் எழுதி போட்டிருக்கேன்.அதுல ஒன்னு  கவிதாவின் கதையை படித்ததும் என் கண்கள் தளுக் என கண்ணீர் சிந்தியது இப்படி எல்லாம் எழுதியிருக்கேன். வாசகர் கடிதம் மட்டு எழுதினா போதுமா? அப்புறம் துணுக்கு எழுத ஆரம்பிச்சேன் முத்தாரம்,வண்ணத்திரை,பூவாளி இதில் என் துணுக்குகள் வெளிவந்தது. (1983 க்கு முன்பு) துணுக்கு ஒன்றுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா அர்ஜெண்டைனாவில் ஒருவர் மீது ஆறு முறை மின்சாரம் பாய்ச்சப்பட்டும் உயிரிழக்காமல் தப்பி பிழைத்த அதிசயம். அவர் போட்டிருந்த ரப்பர் சூ தான் அவரை காப்பாற்றியது. அப்படி ஒருத்தன் இருந்தானா இல்லையா ? யாருக்கு தெரியும்  இப்படி எல்லாம் எழுதி கொடுமைப் படுத்தியிருக்கேன்.

இப்படி கேவலமாக எல்லாம் எழுதிட்டு இருந்த நான் 1983 கல்லூரி இறுதி ஆண்டு படித்தபோது உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும் தமிழ் ஈழம் வேண்டும் தீ பற்றி எரிய தொடங்கிய காலம் என்று குறித்த
தமிழ் செய்தி பத்திரிக்கையில் கொட்டை எழுத்துகளில் வெளிவந்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். எந்த கண்களால் தமிழ் ஈழத்தை காண்போன் என்று சொன்ன குட்டிமணி, ஜெகன்,தங்கதுரை கோர படுகொளை. சிங்கள பயங்கர வாதிகளால் சிறையில் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பூட்ஸ் காலால் தரையில் தேய்து, படுகொலை செய்த கோரம் என்னை வெகுவாக பாதித்தது. அதன் பின் திமுக எனும் கம்பெனியில் சேர்ந்தேன்.

குமுதத்தில் எழுதுவற்கு அழைத்தார்கள். நீங்கள் எழுதுவதில் எந்த மாற்றமும் செய்யமாட்டோம் அப்படியே வரி மாறாமல் போடுவதாக வாக்களித்தார்கள். அதில் சூடான விவாதங்கள் நடைபெற்றது. பாலசந்தரை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் முக்கோணக்காதல் பற்றியே ஏன் எடுக்கிறார்? மூன்றாவதாக காதலிப்பவள் அவனை மயக்கி குழந்தை பெற்று அவன் காதலித்த முதலாமவளிடம் ஏன் கொடுத்துவிட்டு போகனும். அரைச்ச மாவையே அரைக்கிறார்கள் என்று சாடி எழுதி இருந்தேன். இதற்கு பெரிய எதிர்ப்பு உருவாக்கிருச்சு. இத பற்றி ஏதும் தெரியாம இருந்தேன் அப்ப டி.வி எல்லாம் பார்ப்பது இல்லை. நண்பன் சொன்னதுக்கப்புரம் தான் எனக்கு தெரிஞ்சது. சினிமா டைரக்டர்களை பற்றி... எல்லோரையும் தலையில் யோசித்து எழுதிய போது இளையராஜாவை பற்றி மட்டு இதயத்தில் நேசித்து எழுதினேன்.

அப்பொழுது ஆர்குட்டில் குரூப்பா எழுதிட்டு இருப்பாங்க அதில நானும் சேர்ந்து எழுதிட்டு இருப்பேன் எவ எவன் இருக்காண்னே தெரியாது முகமும் தெரியாது. நான் பெரியாரின் கொள்கைகளை சார்ந்து எழுதிய போது முன் வைக்கப்பட்ட விமர்சனங்களும் விவாதங்களும் ஏராளம். மூன்று மணிக்கு போன் போட்டு அவன பொளக்கனும்டா என்பார்கள். அதில பெண் பெயரில் நானே பெரியார் கொள்கைகளை எதிர்பது போல எழுதுவேன். அப்பதான எவ எவன் நம்ம எதிர் கட்சி கார ன்னு லிஸ்டு போட முடியும்.  அப்புரம் ப்ளாக் எழுதுவதை பற்றி சொன்னாங்க. இந்த மாதிரி பதிவு எழுதினாமட்டும் போதானு தமிழ்மணமோ கோமணமோ ஒன்னு இருக்காமா. ரேட்டுங்கு ஓட்டிங்கு அதில இருக்காமா. அதில யாருக்கு அதிக ஓட்டு போடறாங்களோ அவங்க எழுதின கட்டுரை மட்டும் மேலயே இருக்குமாமா? அஞ்சாறு ஏழு ஓட்டு இப்படி, இப்படி ஓட்டு போடருதுக்கே ஒரு குரூப்ப சேத்துகனுமாமா தம்பி ஒருத்தரு சொன்னாரு. வெடிய வெடிய வெள்ளாவி வெச்சுட்டு இருக்கறவனுக்கு போன போட்டு மச்சான் எனக்கு ஓட்ட போடும்பான், அப்பதான் கட்டுரை மேலேயே நிக்குமாம் எல்லாரும் வந்து படிச்சு பார்ப்பாங்களாமா, எனக்கு அந்த ஓட்டு போடற சிஸ்டமும் புரியல இந்த ஓட்டு போடற சிஸ்டமும் புரியமாட்டீங்குது.

பெண்ணீயம் குறித்தாகட்டும் ஈழம் ஆகட்டும் எல்லா விசயங்களையும் இணைய உலகம் அலசுகிறது. ஒரு கருத்தை எதிர்பதிலாகட்டும் ஆதரிப்பதிலாகட்டும் வலைப்பதிவுகள் வருகிறது. நான் ஆர்குட் ஆகட்டும் பேஸ்புக்காட்டும் நேரம் வேஸ்டாகுதுன்னு பல சமயங்களில் கோபப் பட்டிருக்கேன். ஆனால் பிற்பாடு ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன் உண்மையிலேயே இந்த வலைப்பதிவு எழுதுபவர்கள் மனித நேயத்தில் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

பேஸ்புக்கில் மூன்றாயிரம் நான்காயிரம் நண்பர்கள் வைத்திருக்கும் ஒருவனுக்கு பக்கத்து வீட்டிலிருப்பவனை தெரியாது. 65 வயசு வரை வாழ வேண்டியவன் பேஸ்புக்கில் இருந்தால் 35 வயதிலேயே இறந்து போய் விடுவான் அவ்வளவு டென்சனை கொடுக்கிறது பேஸ்புக்.

இணையம் என்பது எல்லோரையும் இணைத்து வைப்பது. நாம் எழுதுபவைகள் உலகம் முழுக்க சென்றடைகிறது. அதை நல்ல முறையில் பயன் படுத்துங்கள்.

அய்யாவை (புலவர் ராமானுசம் அய்யா ) பற்றி சொன்னார்கள் அவர்  குழந்தைகள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அய்யாவுக்கு ஒரே துணை இந்த இணைய தளம் என்று. அய்யாவை போன்று அன்பானவர்களை நாம் பெற்றிருக்கும் போது இணையத்தின் வழி நாம் எத்துணை அன்பானவர்களை பெறலாம். அதை நோக்கியே நாம் நடை போடுவோம்.

38 comments:

  1. அப்டியே விழா பந்தல்ல ஒக்காந்து கேட்ட மாதிரி இருந்தது ....!

    கோயமுத்தூர் குசும்புன்னா சும்மாவா ...! அழகரசன் அசத்திட்டாரு ...!

    பகிர்வுக்கு நன்றி குமரன் ஜி ...!

    ReplyDelete
    Replies
    1. ஜீவன் சுப்பு நீங்களும் வந்திருக்கலாம் !

      Delete
  2. அழகாக எழுதியிருக்கீங்க. ஃபேஸ்புக் குறித்து அவர் சொன்ன சில விசயங்களையும் சேர்த்து இருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. பதிவின் இறுதியில் குறிப்பிட்டு இருக்கிறேன். சில விஷயங்கள் பிடி படவில்லை வேகமான பேச்சு.

      Delete
  3. பாமரனின் பேச்சை நேரில் கேட்காத குறையை தீர்த்து வைத்தது இந்தப்பதிவு... அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்... நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பயண சோர்வு இருந்தது இருப்பினும் சில விஷயங்களை உடனே சொல்லிறனும் இல்லையா

      Delete
  4. சுவையான பேச்சு.

    செறிவாகச் சுருக்கித் தந்திருக்கிறீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அரை மணிநேர பேச்சு

      Delete
  5. பாமரன் உரையாற்றும் சமயம்தான் நான் அரங்கிற்கு வந்தேன்! உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. சிறப்பான தொகுப்பு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஜீவாவின் அருகில் இருந்தேன் நீங்கள் வந்த சமயம் இடம் மாறி இருந்திருப்பேன். எப்படி சந்திக்காமல் போனோம் ?

      Delete
  6. விழாவிற்கு வராதவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்... ரெக்கார்ட் செய்தீர்களோ...? பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  7. Written in the exact way he spoke . ( do not know how to type in Tamil HERE)

    ReplyDelete
    Replies
    1. இத்தளதின் கீழே ஒரு தமிழ் எழுதி இணைக்கப் பட்டிருக்கு ஆங்கில வார்த்தைகளை டைப் செய்தீர்களானால் அப்படியே தமிழுக்கு மாறும், நன்றி அருணா

      Delete
  8. பாமரன் அவர்கள் பேச்சு சுவாரஸ்யமும், சிந்திக்கும்படியாகவும் இருக்கிறது. விழாவிற்கு வருகை புரியாத என் போன்றவர்களுக்கு உங்கள் தொகுப்பு ரசிக்கும்படி இருக்கிறது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உபயோகமான தகவலா நன்றிங்க‌

      Delete
  9. அழகா எழுதியிருக்கிங்க.. ஆமா எப்படி நினைவு வைத்திருந்து எழுதினீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உணவில் வெண்டக்காய் சேர்த்துகரேன் அவ்ளோதான்

      Delete
    2. இது தான் ஊருக்கேத்த குசும்பா..?

      Delete
  10. எப்படி பாஸ் அவர் பேசுனதை அப்படியே நியாபகம் வைத்துளிர்கள் ??? நீங்க பெரிய ஆளுதான் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. அத தனியாக‌ சொல்கிறேன். ஸ்டூடன்ட் போலவே எப்படி இப்படி இளமையா... ரகசியம் என்னவோ?

      Delete
  11. பாமரன் பேச்சு என்னையும் கட்டி போட்டது. மீண்டும் அவரின் பேச்சை அசைப்போட வைத்ததற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்ன சாப்பாடு கட்டி எடுத்திட்டு போயிட்டீங்களா..ஹி.ஹி

      Delete
  12. ஒரு எழுத்து விடாம போட்டிருக்கீங்க. ஸ்கூல் படிக்கும் போது மனப்பாடம் செய்யும் போட்டிகளில் முதல் பரிசு வென்றீர்களோ? #டவுட்டு

    ReplyDelete
    Replies
    1. அப்ப ஞாபக சக்தி குறைவா தான் இருந்தது...

      Delete
  13. // பேஸ்புக்கில் மூன்றாயிரம் நான்காயிரம் நண்பர்கள் வைத்திருக்கும் ஒருவனுக்கு பக்கத்து வீட்டிலிருப்பவனை தெரியாது. 65 வயசு வரை வாழ வேண்டியவன் பேஸ்புக்கில் இருந்தால் 35 வயதிலேயே இறந்து போய் விடுவான் அவ்வளவு டென்சனை கொடுக்கிறது பேஸ்புக். //

    நன்றாகவே சொன்னார். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பேஸ் புக் பழகிருச்சுன்னா அடிக்கடி யார் என்ன கொமெண்ட் போட்டிக்காங்க என்ன பிரச்சனை ஓடிக்கிட்டிருக்கு ஏன் நமக்கு யாரும் லைக் போடல..பிரச்சனைகளை இழுத்து போடனும், எவனையாவது திட்டி எழுதினாதான் அதிக லைக் விழும் இப்படி எல்லாம் வடகோவை மேம்பாலம் மாதிரி கோக்குமாக்கா யோசிக்க வைக்கும்.

      Delete
  14. Replies
    1. நன்றிங்க துளசி கோபால்.

      Delete
  15. அவர் பேசுனத நீங்க நியாபகம் வாட்சு எழுதுனதுக்கு நன்றி விழாவில் கலந்து கேட்டது போல இருந்தது

    ReplyDelete
  16. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. உங்க கூடவே உட்கார்ந்து இருந்தேன்,,,எப்போ காப்பி அடிச்சீங்க...இதுல வெண்டைக்காய் வேற சாப்பிடறேன்னு சொல்லீருக்கீங்க...ஹ்ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹீரோ காப்பி அடிக்கல காஃபி குடித்தேன்.

      Delete
  18. அன்பின் கலாகுமரன் - பதிவு நன்று - ஆனால் எங்கோ படித்த மாதிரி ஒரு சிந்தனை. வேறு எங்கும் பகிர்ந்திருக்கிறீர்களா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. இல்லை. ஆனால் பிறகு சங்கவியும் இதே போல் ஒரு பதிவு போட்டிருக்கிறார் அதை நீங்கள் படித்திருக்கலாம். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி உங்களையும் விழாவில் சந்திக்க ஆவல் கொண்டேன் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னார்கள்.

      Delete
  19. மிகவும் ரசித்துக் கேட்டேன் பாமரன் அவர்களின் உரையை...நல்ல ஞாபகசக்திங்க உங்களுக்கு பேசின எல்லாவற்றையுமே எழுதிட்டீங்க போல....

    ReplyDelete
  20. அருமையான பேச்சு ....!பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ///வடகோவை மேம்பாலம் மாதிரி கோக்குமாக்கா யோசிக்க வைக்கும்.???????!!!!!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !