Pages

Thursday, December 26, 2013

சாப்ளின் உதிர்த்த பொன்மொழிகள் [பகுதி 1 ]



  •  ஒழுங்கீனமான உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை; நம்முடைய தொல்லைகளும் தான். 

  • வாழ்க்கை அழகானதும் அற்புதமானதும் கூட ஜெல்லி மீன் போல..

  • நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்.

  • எப்போதும் மழையில் நனைந்த படியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்த்துவிட முடியாதே; 



  •  ஒரு மனிதனின் உண்மையான சொரூபம் ; அவன் குடித்திருக்கும் போது தெரியவரும்.

  • நாம் ரொம்ப அதிகமா யோசிக்கறோம்; ரொம்ப குறைவா உணர்கிறோம்.

  • இவ்வுலகத்தில் ஒவ்வொருதருக்கும் இடமிருக்கு ; எல்லோருக்கும் கொடையளிக்கும் அளவுக்கு வளமையானது இவ்வுலகம். வாழ்க்கைக்கான பாதையும் அழகா இருக்கு; ஆனால் வழியைத்தான் தொலைத்துவிட்டோம்.

  • பேராசை மனிதன் மனத்தை விஷமாக்குகிறது; தன்னைச்சுற்றி வெறுப்பெனும் வேலியமைத்துக் கொள்கிறான். முட்டாள்தனமான நடவடிக்கையால் துக்கங்களை தேக்கி வைக்கிறான். வேகம் வளர்த்துகொண்டு அதில் நம்மை அடக்கிவிட்டோம்.

  • இயந்திரங்கள் அளவுக்கதிகமான நம் தேவையை பூர்த்திசெய்கிறது.  அறிவு நம்மை சிடுமூஞ்சியாக்கிவிட்டது. நம் புத்திசாலித்தனம் மென்மை இழந்து பண்பற்றதாகிப்போனது.

  • எந்திரங்களை காட்டிலும் நமக்கு மனிச தன்மையும்; புத்திசாலிதனத்தை காட்டிலும் நமக்கு நல்ல பண்பும், இனிய குண நலன்களும் தேவை. இவைகள் இல்லை என்றால் வாழ்க்கை போராட்டமாகவும்; எதுவும் இல்லாமலும் போகும்.

  • மதிப்புடைய வாழ்கையை தேடி கண்டுபிடிக்கலாம்... உன் புன்சிரிப்பால்.

by : kalakumaran

Labels : Charlie chaplin Quotes in tamil, சாப்ளின் பொன்மொழி, சாப்ளின்

16 comments:

  1. அவருடைய சிரிப்பை மட்டும் அறிந்திருந்த என்னைப் போன்ற பலருக்கும் சாப்ளினின் இன்னொரு பரிணாமத்தை அறிந்து கொண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. பலருக்கும் அவர் ஒரு நடிகனாக மட்டுமே அறியப்பட்டார். நல்ல சிந்தனையாளரும் கூட, நன்றி

      Delete
  2. சாப்ளினின் "மழையில் நனைந்துகொண்டே அழுகிறேன்" என்ற வரிகளின் மீது எனக்கு வெறுப்புணர்வு இருந்தது !! எல்லோரையும் சிரிக்க வைத்த அவன் ,எல்லோரையும் மகிழ்ச்சியாக இருக்க சொன்ன அவன் ! ஏன் அப்படி சொல்கிறான் என்று...அவனது வாழ்வும் அவனுக்கு நிறைய அடிகளைத்தான் தந்திருந்தது... ! Closeup ,longshot பொன்மொழி செம ! அவன் வாழ்வு மூலம் உணர்ந்து சொல்லிய கருத்தாக இதை நான் பார்க்கிறேன் . நல்ல தொகுப்பு

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜயன் வாழ்வில் அவர் உணர்ந்தவைகளை கருத்தாக சொல்லியிருப்பதால் வலிமை கூடுகிறது

      Delete
  3. நகைச்சுவை நடிகரின் பொன்மொழிகள் வியக்க வைத்தன! அருமையான தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே இன்னும் தொடர முயற்சிக்கிறேன் அதனால் தான் பகுதி1 என்று ஆரம்பித்து இருக்கிறேன்.

      Delete
  4. உலகையே சிரிக்க வைத்தவன் வார்த்தைகள் எத்தனை வலிமிகுந்தவை!?

    ReplyDelete
    Replies
    1. வலிமை சொன்ன வார்த்தைகளில் உண்மை இருப்பதால் ....நன்றி ராஜி

      Delete
  5. சார்லி சாப்லின் வார்த்தைகள் வீரியமாய்தான் இருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நேரடி மொழி பெயர்ப்பாக இல்லாமல் உணர்ச்சி வெளிப்பாடாகவும் சொல்ல முயற்சிக்கிறேன். நன்றி எழில்.

      Delete
  6. Somehow translation distorts the original taste of these quotes..............

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அது பற்றிய சந்தேகம் இருக்கிறது .. ஒன்றை பற்றி நினைத்து சொல்லி இருப்பது பிற்காலத்தில் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நம்மால் அர்த்தம் கொள்ளப் படுகிறது. இது தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன். இன்னொன்று ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்க்கப் படும் போது நெருடல் தவிர்க்க முடியாததாகிறது.

      Delete
  7. சிரிப்பில் சிந்தனை செய்

    ReplyDelete
  8. சிரிப்பில் சிந்தனை செய்

    ReplyDelete
  9. மேலும் இதுபோன்ற கவிதை வரிகளை படிக்க 👇

    Charlie Chaplin quotes in tamil

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !