Pages

Friday, February 14, 2014

மறைக்கப்பட்ட தமிழரின் வரலாறு (பகிர்வு)

திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.................

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர்2012ல் ஆய்வு மேற்கொண்டார்....... அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்..................


பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது.

அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.........

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ, சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்தியஅரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.............

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது..............ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடுவெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

tks to  டொனால்ட் ராபர்ட் _originally shared

(Ref: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 and ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007 )

9 comments:

  1. எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. என்னத்த சொல்ல... எல்லாம் காலக் கொடுமை தான்...!

    ReplyDelete
  3. தமிழர் உயிர் பற்றியோ, கலாசாரம் பற்றியோ எந்த அக்கறையும் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தமிழக எம்.பி. க்களுக்கு இல்லை. காலணியால் மரியாதை செய்தால் ஒழுங்குபடுவானுங்க............

    ReplyDelete
  4. தமிழனின் வரலாறு காலங்காலமாக மறைக்கப்பட்டுத்தான் வருகிறது... பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல்..

    ReplyDelete
  5. மறைக்கப்பட்ட வரலாறை கொஞ்சம் அறியச் செய்தமைக்கு நன்றி! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. மறைக்கப்பட்ட வரலாற்றின் சிறப்பை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி கலாகுமரன்

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : கடந்து சென்ற காலங்கள்

    ReplyDelete
  8. இந்தியா என்றாலே ஆரியர் நாடு
    இந்தியாவை பாரத தேசம் என்றும்
    ஆரிய வர்த்தம் என்றும் அழைப்பவர்கள்
    எல்லாவற்றுக்கும் மேலே ஒருபடி்
    சென்று சிந்துவெளி நாகரிகத்தையே.தம்முடையது என்று
    உரிமை கோருபவர்கள்
    தமிழரின் நடனக்கலையை
    பரதநாட்டியம் என்று சொல்லி
    ஆரியர்க்குப் பெருமை பேசபவர்கள்
    ஆரியமொழியாம் சமற்கிருதமும்
    வேதங்களும்தான் இந்தியா
    என்கின்ற வெற்றுமுழக்கத்தினை
    உலக நாடுகளின் முன்னே
    முன்னிறத்துபவர்கள்
    இரண்டாயிரத்திற்கும்
    குறைவானவர்கள் மட்டுமே
    அறிந்த சமற்கிருதமொழி
    வளரச்சிக்கென கோடி கோடியாய்
    செலவழிப்பவர்கள்
    இவர்கள் எப்படி ஒப்புக்கொள்வாரகள்
    தமிழரின் தொன்மையையும்
    வரலாற்றினையும் கலைகளையும்
    தமிழின் சிறப்பினையும்
    சிலப்பதிகாரத்தின்
    அரங்கேற்றுக்காதைக்கு
    அடியார்க்கு நல்லார்
    எழுதியுள்ள உரையைப்
    படித்தால் அல்லவா அவர்களுக்குப்
    புரியும் தமிழரின்
    நடனக்கலை பரதமுனிவரின்
    நாட்டிய நூலுக்கும்
    முற்பட்டதென்று
    ஆரியரின் சிறப்பே நால்வகை
    வேதங்கள் அந்த
    நால்வகை வேதங்களே
    இந்தியாவின் சிறப்பு
    என்று உண்மைக்குப்
    புறம்பாக உலக நாடுகளின்
    முன்னே இந்தியாவை
    முன்னிறுத்தபவர்கள்
    அறிவார்களா?
    நால்வகை வேதத்திலும்
    இடம்பெற்றுள்ள
    நான்காயிரத்திற்கும்
    மேற்பட்ட தமிழ்ச்சொற்களை
    சமற்கிருத்தத்திற்குப்
    புறம்பான சொற்கள்
    என்று வேதங்களை ஆய்ந்த
    மாக்சுமுல்லர் அடிக்கோடிட்டுள்ளார்
    என்று கிபி ஒன்பதாம்
    நூற்றாண்டு வரையிலும்
    தமக்கென ஒருஎழுத்துவடிவம்
    கொண்டிராத மொழி
    சமற்கிருதமொழி
    தமிழரின் ஒரு பிரிவான
    நாகர்களின் எழுத்துக்களை
    கடன் வாங்கி தனக்கென
    ஒரு எழுத்து வடிவை
    உருவாக்கிக்கொண்டு
    அதற்கு தேவநாகரி என்று
    பெயரிட்டு அழைத்துக்
    கொள்பவர்கள்
    ஆதிஎச்சநல்லூரிலும
    கீழடியிலும்
    காவிரிப்பூம்பட்டினத்திலும்
    அகழாய்வு நடத்தி
    தமிழரின் தொன்மைச்
    சிறப்பை வெளிக்கொண்டுவந்து
    விடுவார்களா?
    இதற்கு வழிதான் என்ன
    தமிழரகள் அனைவரும்
    வேற்றுமையின்றி
    ஒன்றுபட வேண்டும்
    செயல்பாடின்றி உள்ள
    மாநிலத்தொல்லியல்
    துறையை இயங்கச்செய்தல்
    வேண்டும்

    நன்றி


    ReplyDelete
  9. அ.சங்கரபாண்டியன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !