Pages

Wednesday, July 30, 2014

மீன்கள் விசிலடிக்குமா ?

மீன்கள் சப்தம் எழுப்புமா ? 


மற்ற விலங்கினங்களை போல் அல்லாமல் மீன்களால் சப்தம் எழுப்ப
முடியும்.  மீன்களுக்கு வாயுப் பை [air bladder] என்ற மீச்சிறு உறுப்பு இருக்கு
இந்த காற்றுப்பையில் ரத்தத்தில் இருந்து வாயுக்களை நிரப்பி வைத்துக் கொள்ளும். இது அதன் மிதவை நிலையை தக்கவைத்துக் கொள்ள உபயோகப் படுத்திகொள்கிறது.

தண்ணீர் மேல் மட்டத்தில் சென்றும் வாயுவை நிரப்பி கொள்ளும். சில
மீன்கள் இந்த உறுப்பை கொண்டு சப்தம் செய்கிறது.   சில மீன்கள் பல் போன்ற
உறுப்புக்களை நற நற வென்று கடித்தும் சப்தம் ஏற்படுத்தும்.


(Oyster Toadfish ) தேரைமீன்கள் தம் இணையை அழைக்க விசில் (சீல்கை) சப்தம்
எழுப்புகிறது. இந்த சப்தத்தை மனிதர்களால் கேட்க முடியும்.

(mackerel utter )மேக்ரெல், drumfish டிரம் மீன் வகை மீன்கள் எழுப்பும் ஒலியை நீர் மேல்மட்டத்தில் கேட்டிருப்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.


[drumfish] டிரம் மீன் கள் நீரில் 60 ஆழத்தின் கீழ் இருந்து ஒலி ஏற்படுத்துகின்றன.

அவ்வளவுக்கு ஏன் நாம் வீடுகளில் வளர்க்கும் வண்ணமீன்களில் குறிப்பாக
தங்கமீன்கள் எழுப்பும் "பொளக்"  ஒலியை அவதானிக்கலாம்.

சரி மீன்களுக்கு காது உண்டா சப்தங்களை எப்படி கேட்கிறது?

கடலின் அடியில் சென்றுவரும் "டிரைவர்கள்" கடல் உள்ளே அமைதியாக
இருப்பதாக சொல்கிறார்கள்.  ஆனால் பல சப்தங்களை மனிதனால்
கேட்க முடிவதில்லை என்பதே உண்மை. மேலே சொன்னோம் மீன்கள்
சப்தம் எழுப்புவதாக அப்படி இருக்கும் போது சப்தங்களை கேட்க அவை
களுக்கு காதுகள் இருக்கின்றனவா?  தலைப்பகுதியில் இருந்து வால்வரை நீண்ட நீளமான நுணர் உறுப்புகள் மிக மெல்லிய உறுப்பு மூலம் சப்தங்களையும் அதிர்வுகளையும் அவைகள் உணர்ந்துகொள்கின்றன.


பூனை மீன்களால் [Catfish] எல்லாவித சப்தங்களையும் கேட்க முடியும் என்கிறார்கள். (படத்தில் இருப்பது)

இருட்டில் மீன்கள் ஒன்றை ஒன்று மோதாமல் நீந்துமா?

மீன்களின் செவுள்களில் (Gills )  இருந்து வால்வரை மெல்லிய புலன் உறுப்பு மற்ற மீன்கள் மீது மோதாமல் செல்லவும் எதிரிகளிடம் தற்காத்துகொள்ளவும் உதவுகிறது. இது மிக மெல்லிய அதிர்வலைகளை உடனுக்குடன் உணர்ந்துகொள்ளும். இரவில் எதிரே இருப்பது மீனா பாறையா என்பதை எல்லாம் இந்த நுணர் உறுப்பின் மூலம் அது அறிந்துகொள்ளும்.

(இருட்டில் எதிரே வருபவன் மீது மோதாமல் நம்மால்
போக முடியுமா? )

வலை இல்லாமல் கைகளால் மீன் பிடித்தல் 

(maori) நியூசிலாந்து குக் தீவின மக்கள் "மெளரி" அவர்களின் பாரம்பர்ய மீன்
பிடித்தல் வித்தியாசமானது.  தெளிந்த நீருக்கடியில் சலனமில்லாமல் இருந்தபடியே மீன்களை தடவி (கிச்சு கிச்சு மூட்டுவது போல) பின் அவற்றை வெறும் கைகளால் பிடிக்கிறார்கள்.


Sunday, July 20, 2014

வெளிநாட்டில் வேட்டி அனுபவம் : கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்

சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றதால் , கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பர்ய உடை மடுமல்ல தன் மான பிரச்சனையாக சட்ட சபை வரை விவாத பிரச்சனையானது வேட்டி. தொடர்ந்து கிளப்புகள் அனுமதி மறுப்பது முதல்வரின் கண்டனத்திற்கு உள்ளானது.


வெளிநாட்டில் வேட்டி கட்டி சென்ற கவிஞர் கண்ணதாசனின் அந்தக் கால சுவரஸ்ய பயண அனுபவத்தை , படித்ததில் இருந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன் சின்ன நகைச்சுவை காட்சிகள்.....

‪#‎தலீவரின்_மனைவி‬

ஏனுங்க சபைக்கு போறதா சொன்னீங்கன்னுதான் நாலஞ்சு வேட்டி எடுத்து வெட்சிருக்கேன்...மறக்காம எடுத்திட்டு போங்க. அப்புரம் துண்டக் கானோம் துணியக் கானோமினுட்டு கூவாதீக


‪#‎தலைவனும்_தொண்டனும்

தலைவரே ....உங்க வேட்டி??

அதா இப்ப முக்கியம் சண்டைல காணாம போறது சகஜம்பா...


#அரசியல் வாதி கணவனிடம்...மனைவி

"ஏனுங்க எங்கேங்க உங்க வேட்டி ?"

"அடியேய்..எத வேனா கேளு...வேட்டிய மட்டும் கேட்காத...ஓடுகாலி...ஓடுகாலி"

"வேட்டிஇல்லாம வந்திருக்கீங்களே எங்கேன்னு கேட்டா ஓடுகாலின்றீங்களா? நா அம்மா வூட்டுக்கு போறேன்"

"அய்யய்யோ...கிழிஞ்சது, அவங்க கிட்ட கேட்கப்போறியா? "

"கிழிஞ்சிடுச்சா முன்னமேயே சொல்றதுக்கென்ன"



கவிஞர் கண்ணதாசனின் வெளிநாட்டு பயண அனுபவம், முக்கியமாக வேட்டி அனுபவம் அதில் இருப்பதால் இந்த கட்டுரையை இங்கு பகிர்கிறேன். அந்தக் கால காட்டத்திற்கு நம்மையும் அழைத்து செல்கிறார், கவிஞர்.

சந்தித்தேன் சிந்தித்தேன்....கவிஞர் கண்ணதாசன் நூலில் இருந்து....



ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நானும், மன்னை அம்பிகாபதியும், மெல்லிசை மன்னர் தம்பி விஸ்வநாதனும், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ யும் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். எங்களில் மன்னை அம்பிகாபதி மட்டும் வேட்டி கட்டி, மேலே ஜிப்பா போட்டிருந்தார். அந்த வேட்டி காபூல் நகரத்துச் சிறுவர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது. அவர்கள் கூட்டமாகக் கூடி அந்த வேட்டியை இழுத்துப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அம்பிகாபதிக்கு கோபம் வந்துவிட்டது.

“நீங்கள்தானடா கோமாளிகள்” என்று அவர்களைத் தமிழில் திட்டினார்.

காபூலில் கேலியாகத் தெரிந்த வேட்டி, சோவியத் யூனியனில் துருக்மினிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் பெரும் மரியாதைக்குரியதாயிருந்தது.

சின்னச் சின்னப் பெண்களெல்லாம் கூட அம்பிகாபதியின் கையைப் பிடித்துக் கொண்டு படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.

நல்ல வேளையாக நானும் வேட்டி கொண்டு போயிருந்தேன்.

துருக்மினிஸ்தானில் சீசன், அசல் பெங்களூர் மாதிரியே இருக்கும். மாஸ்கோவைப் போல் அங்கே பனி பெய்வதில்லை. லேசான வெய்யிலும், குளிர் காற்றும் இருக்கும். ஆகவே, நானும் வேட்டி கட்டிக் கொண்டு போட்டோவுக்கு நிற்க ஆரம்பித்தேன்.

இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழகப் பிரிவுக்கு நான் துணைத் தலைவர். சோவியத் அழைப்பின் பேரில் நாங்கள் சென்றிருந்தோம்.

அஷ்காபாத்தில் நாங்கள் போய் இறங்கிய போது, காலை எட்டு மணி. விமானத்தின் கதவு திறக்கப் பட்டதும், வாத்தியங்கள் முழங்கின. படப் பிடிப்புக் காமிராக்கள் சுழன்றன. மாநில மந்திரிகளெல்லாம் வந்திருந்தார்கள்.

”அண்ணே! யாரோ மிகப் பிரபலமான ஒருவர் இந்த விமானத்தில் வந்திருப்பார் போலிருக்கிறது” என்ற படியே விமானத்தை விட்டுக் கீழே இறங்கினார் தம்பி விஸ்வநாதன்.

”நான் தான் அது! “ என்றார் அம்பிகாபதி.

அவர் சொன்னதிலும் தவறில்லை. வந்திருந்தவர்கள் எங்கள் கழுத்தில் மாலைகளைப் போட்டார்கள்.

லெனின் கிராடில் ‘செம்பியன்’ என்ற தமிழறிவு மிக்க ரஷ்யர் எங்கள் துணைக்கு வந்தார்.

லெனின் கிராடைச் சுற்றிப் பார்த்த போது அங்கேயும் அம்பிகாபதிக்குத் தான் சிறப்பான வரவேற்பிருந்தது.

இந்த வேட்டியையும் சட்டையையும் ரஷ்யர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஆனால் மாஸ்கோவில் நிலமை வேறு. அங்கே அடுப்பையே தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்குக் குளிர். அங்கேயும் அம்பிகாபதி வேட்டி சட்டையோடுதான் காட்சியளித்தார்.

எனக்கு எங்கேயுமே இருப்புக் கொள்ளாது. அற்புதமான சர்க்கஸ். அதிலிருந்து பாதியிலே ஹோட்டலுக்குப் போக விரும்பினேன். தெ.பொ.மீ க்கு ரொம்ப வருத்தம். கூட வந்த பெண்மணி, “கார் வரத் தாமதமாகும்” என்றார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.

அம்பிகாபதியின் வேட்டியையும், சட்டையையும் பார்த்து மாஸ்கோ ஜனங்களெல்லாம் பரிதாபப் பட்டார்கள். துணைக்கு வந்த அம்மையார் தன் கோட்டுக்குள்ளேயே அம்பிகாபதியையும் திணித்துக் கொண்டு, பனி தாக்காதபடி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

இருப்பினும், எனக்கும் அம்பிகாபதிக்கும் அதனால் பாதங்கள் பாளம் பாளமாக வெடித்துவிட்டன. காரணம் நாங்கள் பூட்ஸ் போடவில்லை.

நான் எந்த நாட்டிலும் எந்தப் பெண்ணைக் கண்டாலும் முத்தமிடுவேன். அம்பிகாபதி அதற்குத் தூபமிடுவார். ஒரு கூட்டுப் பண்ணையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது தெ.பொ.மீ க்கு கெட்ட கோபம் வந்துவிட்டது.

துருக்மினிஸ்தானில் ‘மாரே’ என்று ஓர் அற்புதமான ஊர். அங்கே அம்பிகாபதியோடு படம் பிடிக்க ஏக கிராக்கி. அந்த ஊரிலுள்ள எல்லோருமே கலைஞர்கள்.

தம்பி விஸ்வநாதனைப் பாடச் சொல்லிவிட்டு. நாங்கள் படத்துக்குப் ”போஸ்” கொடுத்தோம்.

எந்த ஊருக்குப் போனாலும் தெ.பொ.மீ யோடு அம்பிகாபதியைத் தங்க வைத்து விடுவோம். தெ.போ.மீ மிகவும் கண்டிப்பானவர். அம்பிகாபதி அவருக்குக் கட்டுப் பட்டு அவர் கூட இருப்பார். நானும் விஸ்வநாதனும் அறையில் பத்துப் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவோம்.

1967 கடைசியில் சோவியத் யூனியன் சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பினோம். அதுவரை காங்கிரஸ்காரராக இருந்த அம்பிகாபதி, சோவியத் விஜயம் முடிந்து திரும்பியதும் இந்தியக் கம்யூட்னிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். இப்போது, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் அம்பிகாபதி என்னைச் சந்திக்க வந்தார்.
நேற்று (10-1-80) அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஒரு மாதம் சிங்கப்பூர் மலேஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சோவியத் யூனியனில் எந்த வரவேற்பிலும் அவர் பெயரை “அம்பிகாபதி” என்று உச்சரிப்பதில்லை. ‘அம்பிகபோதி’ என்றழைப்பார்கள்.

விஸ்வநாதனை “விஷ்வகாந்த்” என்பார்கள்.

தெ.பொ.மீ யை ரெக்டார். நான் கொண்ணதாசன்.

அதோ அந்த துருக்மினிஸ்தானில், கோரகும் கால்வாயில் நானும், தம்பி விஸ்வநாதனும், அம்பிகாபதியும் பிறரும் படகு சவாரி செய்த காலங்கள்.....

* * * * * * * * * * * * * * * * *

Wednesday, July 2, 2014

பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?



அப்ப பத்து 12 வயசிருக்கும் வானத்தில் வட்டமா டார்ச் ஒளி சீரான
வேகத்தில சுத்திட்டு இருக்கும் என்ன விட பெரிய பசங்களுக்கு அது
என்னன்னு தெரிஞ்சிருந்தது. நாங்க இருக்கும் பகுதி நகரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர்ங்கரதால அந்த வட்ட டார்ச் ஒளி அமாவாசை இருட்டில் பளிச்சுன்னு தெரியும். ஜம்போ சர்கஸ், ஜெமினி சர்கஸ், ரஷ்யன் சர்கஸ் இப்பிடி பல சர்கஸ் கம்பெனிகள் அப்ப பிரபலமா இருந்தது. அவங்க கூடாரத்தில் இருந்து ஒளிவட்ட சமிங்சை தான் அது.

கயித்து கட்டில் போட்டு வாசலில் படுத்துப்போம். சிறுவர்களான எங்களுக்கு அது ரொம்ப சுவாரஸ்யமான அனுபமா இருந்துச்சு. வானத்தின் நட்சத்திர சிமிட்டல்களை ரசிச்சுகிட்டே பல கதைகள் பேசி மகிழ்வது ஏகாந்த அனுபவம் இப்போதைய சிறுவர் சிறுமிகளுக்கு இல்லாம போச்சு.

சர்கஸ் காரங்களும் அந்த ”சர்ச் லைட்டை” இப்ப அடிக்கராங்களான்னு தெரியல... அப்ப இருந்த வீதி விளக்கு வெளிச்சங்கள் முன்ன மாதிரி மஞ்சளா மினுக்கு மினுக்குன்னு இல்லாம பளீர்ன்னு இருப்பதால சர்ச் லைட் தோத்துப் போச்சானும் தெரியல...

அவங்களோட பெரும்பான்மையான இரவு வாழ்க்கை வீட்டுப் பாடம் (ஹோம் வொர்க்) செய்வதிலும் மீதி டி.வி பெட்டியும் எடுத்துகிச்சு. என் வீட்டுக்கு உறவு குழந்தைகள் வந்து தங்கினால் அவங்களுக்கு மொட்ட மாடி அனுபவத்த கொடுகிறேன். நிலாச்சோறு சாப்பிடுவது குழந்தைகளுக்கும் ஏன் பெரியவங்களுக்கும் பல சிந்தனை ஓட்டங்களை ஏற்படுத்தும் அட்வெஞ்சர்னு சொல்லலாம்.

சரி கேள்விக்கு செல்வோம்...பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?

நிலாவின் மேற்பரப்பு கண்ணாடி போல ஒளியை பிரதிபளிக்க செய்யும் வகையில் அமைஞ்சிருக்கு. சூரிய கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பட்டு எதிரொளிப்பது தெரிந்ததுதான். சினிமா திரையை போல பெரிய திரைன்னும் சொல்லலாம். அமாவாசை காலங்களில் பூமியில் இருந்து சர்ச் லைட் மாதிரி பெரிய லைட்ட அடிக்கமுடியுமா ? முடியும். பெரிய பவர் லேசர் புரொஜெக்டர் வெச்சு 4 லட்சம் கிலோ மீட்டருக்கு ரீச் ஆகரமாதிரி ஒளி கற்றைகளை பாய்ச்சினா அது நிலவில் பட்டு எதிரொளிக்கும். என்ன அந்த செலவு “அஸ்ட்ரானாமிகளா” இருக்கும் அம்புடுதான்.





ஓரிரு வரி துணுக்குகள் !

  • உலகம் முழுக்க பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் 40 சதவீதம் நேரடியாக பைப்பில் பிடித்து விற்கப்படுகிறது ” ஒரு பகீர் தகவல் ”



  • அண்டார்டிக் கடல்களால் சூழப்பட்ட ஒரு கண்டம், அது போல ஆர்டிக் கண்டங்களால் சூழப்பட்டது.



  • பென்சில் என்ற வார்த்தை இலத்தீன் மொழியில் இருந்து உருவானது. அந்த மொழியில் பென்சில் என்பதற்கு ‘small penis’ என்று அர்த்தமாம்.



  • ஒரு டீஸ்பூனில் 2000 கேரட் விதைகளை வைக்கலாம்.



  • எலிசபெத் டைலர் 79 வயசு வரை வாழ்ந்த அவிங்க வாழ்நாளில் ஒரு முட்டையை அவிக்க கத்துக்கல  (மெய்யாலுமா !)



  • ஸ்பெயின் நாட்டின் தேசிய கீதத்தில் பாடல் வரிகள் இல்லை (பெப்ர..பெப்ப்ர...பே)



  • தாவரங்களில் அசைவம் உண்டு தெரிந்ததுதான்...பாம்புகளில் சைவம் உண்டா ?...பச்...இல்ல.



  • ஆட்டு மந்தைகளை மேய்க்க நாய்களை பழக்கப் படுத்துவது போல ஆஸ்ட்ரிச்சையும் பழக்கலாம்.



  • எகிப்தில் உள்ளதை விட சூடானில் அதிக பிரமிிடுகள் இருக்காம்.  மம்மிகள் என்றால் எகிப்து ஞாபகத்திற்கு வருகிறது ஆனால் உலகின் பல இடங்களில் மம்மிகள் உண்டு.



  • பேங்க் ஆப் இங்கிலாந்தில் உட்சபட்ச மதிப்பு நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஒரு மில்லியன் (ஜியண்ட்ஸ்) 100 மில்லியன் (டைட்டன்ஸ்).



  • மலேயா பாசையில் தண்ணீரை ”ஏர்” (Air) ன்னு சொல்றாங்க.

  • ”War and Peace" புத்தகத்தை லியோடால்ஸ்டாய் சொல்ல சொல்ல மனைவி எழுதினாராம்.



  • புது பேனா வாங்கரவங்கல்ல 97 சதவீதம் பேரு அவங்க திருநாமத்தை எழுதறாங்கலாம். (நீங்க ?  நான் “ # " இந்த குறியீட்டை அல்லது கட்டம் வரைகிறேன் ஏன்னு தெரியல )



  • ”East of Eden” என்ற நாவலை எழுதியவர் John Steinbeck இதில சுவாரஸ்யம் என்னன்னா அந்த நாவலை 300 பென்சில்களை சீவி சீவி எழுதி இருக்காா்்