Pages

Friday, November 21, 2014

ஒளி உமிழும் மீன்கள்!



விதையின ஈரால் வகையை சேர்ந்த "அஸ்ட்ரகோட்" (ostracods)  எனும் கடல்வாழ் உயிரிகளில் 70000 வகைபாட்டியலில் உள்ளதாகவும் அதில் 13000 வகைகள் அழிந்து போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.


இந்த உயிரினங்களில் சில , மின் மினியை போல ஒளியை சிதறுகின்றன. இதற்கெ இவைகளுக்கு சிறப்பு உறுப்புக்கள் உண்டு.  இந்த உறுப்புகளில் ஒளியுமிள் வேதிப் பொருட்களை  (luminescent chemicals)கொண்டிக்கின்றன. தம்மை பாதுகாத்துக் கொள்ள இவ்வுறுப்புகளின் மூலம் ஒளிச்சிதறலை ஏற்படுத்துகின்றன.

இவற்றில் இன்னும் சில வகை தம் இணைகளை கவர்வதற்காக இவ்வொளியை பயன் படுத்துகின்றன.


இந்த வேதி பொருட்களில் லுசிஃபெரின், லுசிஃபெராஸ் ( luciferin , luciferase)  என்பவைகள் முக்கியமாவை. இந்த வேதிப்பொருட்களின் கூட்டு ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த வேதி மாற்றம் ஆங்கிலத்தில் (bioluminescence) பயோலுமினென்ஸ்.

கொசுறு தகவல் இவைகளில் ஆணினம் இரண்டு "ஆண் குறிகளை (penes) " கொண்டிருக்கின்றன.

கார்டினல் மீன்கள் "ப்ளேங்டான்" Plankton பாசிகளை விரும்பி உண் கின்றன. ஒரே கண்ணாடித் தொட்டியில் மேற்சொன்ன அஸ்ட்ரகோட் களை போட்டு வைத்தால் மீன்கள் அவற்றை விழுங்குகிறது. அந்த நொடியிலே அஸ்டகோட்கள் அவைகளிடம் இருந்து தப்பிக்க ஒளியை உற்பத்தி செய்கின்றன மீன்கள் தவறுதலாக விழுங்கிவிட்டதாக அவற்றை உமிழ்ந்து விடுகின்றன. இவை பார்பதற்கு மீன்கள் ஒளி உமிழ்வதாக தெரிகிறது.

பார்க்க படம் : (Image credit: BBC )


Thursday, November 20, 2014

கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன ?




யானை மற்ற விலங்குகள் மனித வாடையை பல அடி தொலைவில் மனித நடமாட்டம் இருக்கும் போதே கண்டுபிடித்து விடுகின்றன.  உண்ணும் உணவின் வாடையை சுவையை நாம் உணர்ந்து கொள்வது போலவே என்று சொல்லலாம்.

குறிப்பாக "சல்கேடோன் " (Sulcatone ) எனும் வேதியல் நொதி வியர்வை சுரப்புகளில் வெளிப்படுகிறது.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "என் அன்பே " என தம் குட்டினூன்டு மூளையில் பதிவு செய்துவிட்டன கொசுக்கள் .

நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைகழகத்தை சேர்ந்த லெல்ஸ்லி வோஷெல் தலைமையில் ஒரு குழு கொசுக்களுக்கு ஏன் மனித ரத்தம் பிடிக்கிறது என்ற ஆய்வில் இறங்கியது.

விலங்குகளை காட்டிலும் மனிதனின் வாழ்க்கை முறை அவைகளுக்கு பிடித்து போனது.   கொசுக்கள் தம் இனத்தை பெருக்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மனிதர்கள் தம்மை சுற்றி தண்ணீர் மற்றும் கழிவுப் பொருட்களை அமைத்துக்கொண்டதே காரணமாம்.


காடுகளில் ரத்தத்தை தேடி அலைவதற்கு கிராமங்கள் நகரங்கள் அவைகளுக்கு தோதாக அமைந்து விட்டன.  விலங்குகளிடம் இருப்பதை போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு இல்லை. அதுவுமில்லாமல் மனிதர்கள் கூட்டங் கூட்டமாக வசிக்கிறார்கள். அதனாலேயே விலங்குகளை விடுத்து அவை மனிதர்களை தேர்தெடுத்து இருக்க வேண்டும்.


14 விதமான கொசுக்களின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த போது மனிதர்களுக்கும் கொசுக்களுக்குமான தொடர்பினை உறுதி செய்து இருக்கிறார்கள். குறிப்பாக  "Or4" (codes for an odor receptor) எனும் கூறு இதை உறுதி செய்கிறது.


இதுதான் முக்கிய பாரம்பர்ய சாவி என்று சொல்லலாம்.  அதாவது மேற்சொன்ன கூறு அதன் ஜீனில் பதியப்பட்டதால், புதிதாக ஜனிக்கும் கொசுக்கள் மனிதர்கள் மேல் "காதல்" கொண்டு துரத்துகின்றன (! ).


"அடெஸ் அஜிப்டி " (Aedes aegypti)  எனும் வகை கொசுக்களே அதிக அளவில் உலகம் பூராவும் பரவி உள்ளன.

Tuesday, November 18, 2014

பில்கேட்ஸ் சிந்தனைகளில் இருந்து !



வெற்றியை கொண்டாடுவது சரிதான் அதைவிட முக்கியமானது தோல்விக்கான பாடம் மறைந்து இருப்பதை கவனி.



  • நான் சில பாடங்களில் தோற்றுப்போனேன்.  என் நண்பன் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்றான். இப்போது அவன் மைக்ரோசாப்டில் எஞ்சினீயராக இருக்கிறான் நான், மைக்ரோசாப்டில் முதலாளியாக இருக்கிறேன்.



நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஊற்று உங்களது மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளர்களிடம் இருக்கிறது.


  • கடினமான வேலையை செய்ய நான் சோம்பேரிகளையே தேர்ந்தெடுக்கின்றேன்.  ஏனென்றால் அவர்கள் தான் அதை சீக்கிரம் முடிக்க சுலபமான வழியை யோசிப்பார்கள்.


கற்றவை எதிலும் எதிலும் உச்சம் அடையவில்லை...ஆனால் இன்று  பல்கலைகழகங்களில் உச்சம் பெற்ற பலரும் என்னிடம் வேலைபார்பவர்கள்..


  • வெற்றி மோசமான வாத்தியார்.  ”இழப்பில்லை” என்று நுணுக்கமானவர்களை நினைக்க வைத்து வசப்படுத்திவிடுகிறது.



நிறையப்பேர் ஒருவருடத்தில் எவ்வளவோ செய்யலாம் என்று திட்டமிட்டு, அடுத்த பத்துவருடத்தை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார்கள்.



  • ஒரு வேலையை மட்டுமே செய்ய கூடியவனுக்கு தான் அந்த ஒரு வேலை தேடி வரும்.


வாழ்க்கை எளிதானதல்ல; அதை நீ எளிதாக்கு.


  • சீனாவை ஒப்பு நோக்கும் போது, மில்லியன் பேர்களில் நீ ஒருவன் ஆனால்  அங்கேயோ உன்னைப் போல் 1300 பேர் இருப்பார்கள்.



நீ உள்ளுக்குள் நினைப்பவைகளை உலகம் கண்டுகொள்ளாது...
உன்னிடம் இருக்கும் நல்லவைகளை பற்றி தீர்மானிக்கும் முன்பே
உன்னிடம் அதை எதிர்பார்க்கும்.


  • ஆசிரியர் உன்னிடம் கடினமாக நடந்து கொள்கிறார் என நினைப்பதற்கு முன்...உன் முதலாளியின் வருகைக்காக காத்திரு.



பர்கருக்குள்ளா வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறாய் ! 

இதையே மாற்றி யோசித்தால்; 
உயர்வடைந்த உன் தாத்தாக்களோ அதினுள்ளே  வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதை கண்டார்கள்.



  • மைக்ரோசாப்டின் வளர்ச்சியை பார்த்து என்னை விட யாரும் பெருமை பட்டு விடமுடியாது ஆனால் அதே சமையத்தில் வாழ்நாள் முழுதும் ஒருவன் சம்பாதிப்பதை என் தவறுகளால் நான்  தொலைத்துவிட்டு இருக்கிறேன்.



தொழில் நுட்பம் என்பது ஒரு கருவி.  குழந்தைகளிடையே ஒருவருக்கு ஒருவர் முன்னேற்றம் அடைய தூண்டுகோலாக இருக்கும் ஆசிரியரே முக்கியமானவர் இல்லையா.


  • வெற்றியின் திறவுகோல் பொறுமை !



எதிர்காலத்தில், இணைய பயன்பாடு குக்கிராமங்களை உலக மயமான நவீன 
 வசதிகளுடன் கட்டமைக்கும்.


  • புத்திசாலி தனமான வாழ்க்கை என்பது வாழை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உருமாறி குலைதள்ளுவதை போல இருக்க வேண்டும்.




எல்லைக்கோட்டை தொட்டுவிட திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறேன்...நீங்கள் நினைப்பது போல் அந்த கோட்டை நான் கடந்துவிடவில்லை.


சொன்னவர் : பில் கேட்ஸ்


Friday, November 14, 2014

ஐன்ஸ்டீன் சிந்தனைகளில் இருந்து..




  • தொழில்நுட்ப மாற்றம் என்பது கொடுமைக்காரன் கையில் கிடைக்கும் கோடாளி.


ஒருவன் பள்ளியில் கத்துகிட்ட மொத்த வித்தையும் மறந்து போய் எஞ்சி இருப்பது கல்வி.



  • கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானது தான்... ஆனால் அதற்காக அது உருவாக்கப் படவில்லையே.


ஈர்ப்பு விசை   காதலில் விழுபவர்களுக்கு பொறுப்பாகாது.
உலகில் புரிந்து கொள்ள கடினமான விசயம் ஒன்று உண்டென்றால் அது வருமானவரி.


  • நான் எதிர்காலத்தை பற்றி நினைப்பதே இல்லை, அதுவே சீக்கிரம் வந்துவிடுகிறதே.


செய்யப்படுபவை முடிந்தவரை எளியதாக இருக்கவேண்டும்.  ஆனால் எளிமையான தாக இருக்க வேண்டியதில்லை.


  • ஒருவனின் படைப்பாற்றலின் ரகசியம் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது  என்பது அதன் ஆதாரங்கள்(சோர்ஸ்) எப்படி மறைக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது.


புதிர்களை விடுவிப்பது என்பது அதை உறுவாக்கிய முறையிலே தான் என்று சொல்ல முடியாது.


  • அவனுக்கு வெளியே வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவன் வாழ தொடங்குகிறான்.


கணிதம் சிக்கலாக இருப்பாதாக கவலைப் படவேண்டாம், என் திறமை அதில் அதி மோசமானது.


  • இரண்டு விசயங்கள் எல்லையற்றது. ஒன்று இந்த பிரபஞ்சம், அடுத்து மனித முட்டாள்தனம். பிரபஞ்சத்தை பற்றி உறுதியா தெரியல.


மூன்றாம் உலகப்போரில் எந்தவிதமான ஆயுதங்கள் பயன்படுத்தப் படுமோ தெரியல, ஆனா
நான்காம் உலகப்போரில் கற்களையும், தடிகளும் பயன்படுத்தப் படலாம்.


  • மந்தையில் மாசற்ற உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஒரு செம்மறி ஆடாக இருந்தாக வேண்டும்.


   ஆபத்து அறியாமல் விபத்தில் இறப்பவனுக்கு "மரண பயம்" அனைத்து பயங்களிலும் நியாயமற்றது 



  • மனநிலை பிறழ்ந்தவர்கள் ஒன்றையே திரும்ப திரும்ப செய்கிறார்கள் ஆனால் விதவிதமான முடிவை எதிர் பார்க்கிறார்கள்.

கற்பனை அறிவைவிட முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு.  கற்பனை பரந்துபட்டது


  • நல்ல அரசியல் ஆலோசகரின் வயிறு காலியாக இருக்காது.


புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் ஊள்ள வித்தியாசம். புத்திசாலி எல்லைகளை வகுத்து கொண்டவன்.


  • ஒவ்வொருவரும் புத்திசாலி தான் எப்போது ? தர்க்கரீதியாக சிந்திக்கும் போது. மீன் மரம் ஏறும் என்பதை அறிந்தவனை விட மீன் வாழ்க்கையை அங்கேயே கழிக்கும் என நினைப்பவன் முட்டாள்.


சார்பியல் (ரிலேட்டிவிட்டி) என்பது ? அழகிய பெண்னை ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது மணி துளி போல ஓடிவிடும்  : அதுவே சூடான அடுப்பின் மேல் ஒரு சில மணிதுளி  உட்கார்ந்திருப்பது ஒரு மணி நேரம் போன்றது.


  • திறமைசாலி பிரச்சனையை அணுகுகிறான்.  அறிவாளி அதில் இருந்து தப்பிக்க நினைக்கிறான்.




A = x + y + z  இதில் A என்பது வாழ்க்கையின் வெற்றி , x  என்பது வேலை, y  என்பது விளையாட்டு, z என்பது வாயை மூடி இருப்பது.


  • ஆண் கடைசிவரை மாற மாட்டோம் என்று பெண்னை கலியாணம் செய்துகொள்கிறான்.  கடைசிவரை சேர்ந்திருப்போமா...என்று நினைத்த பெண், ஆணை கலியானம் செய்து கொள்கிறாள் . இதில் இருவருமே ஏமாற்றமடைகிறார்கள்.


எதையும் அறிவியல் பூர்வமாக வரையறுத்து விடலாம், ஆனால் அதை உணர முடியாது.  பீத்தோவனின் சிம்பொனி அலையின் வேறுபாடு மற்றும் அழுத்ததை பொறுத்தது என்று சொல்வது போல.




  • தண்டனைக்கு பயந்துதான் ஒழுக்கமானவனாக இருக்கிறான், ஒழுக்கமானவனுக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா அவன் இருக்கிறான்.




ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குள்ள உரிமை கொடுக்க வேண்டும்.




  • தனியொருவனுக்கு,  அவனுக்கு தெரியாமல் ஏதும் மறைக்கப் படவில்லை என அரசியல் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.



வாழ்க்கையின் ஜீவாதாரமாக இருப்பது வேலை மட்டுமே.




  • ஆர்வம் எனும் புனிதத்தை இழக்கக் கூடாது.


அனைத்திற்கும் வெளியே  இருந்து பார்க்கும் போது கவலை கொள்வதற்கு சின்னதும் பெரியதுமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.


  • காகிதங்களில் எழுதி வைத்துக்கொள்வது நாம் ஞாபகப் படுத்தி கொள்வதற்காகத்தான். மூளை சிந்திபதற்கு மட்டுமே.




சொன்னவர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்






Wednesday, November 12, 2014

விச சிலந்திகள் !

கரப்பான்களை கண்டு எப்படி பின்வாங்குகிறோமோ (பெரும்பாலான பெண்களின் எதிரி ! ) அதுமாதிரி சிலந்திகளை கண்டு மனிதன் பயப்படத்தான் செய்கிறான்.

இந்த பயத்தை ஆங்கிலத்தில் "அரெச்னோ போபியா" "arachnophobia" என்கிறார்கள்.

நாற்பது சதவீத "போபியாக்கள்" பூச்சிகள், எலிகள், பாம்புகள் மற்றும் வெள்வால்களை ஒட்டியே ஏற்படுகிறது.   மனிதனுக்கு காலங்காலமாக  பூச்சிகள் முக்கியமாக சிலந்திகளின் மீதான பயம் அவனது டி.என்.ஏவில் பதியப்பட்டு இருக்கலாம்.  பாம்புகளை போல சிலந்திகள் விச ஜந்துகளாக இருந்து இருக்கின்றன.



"படத்தில் மயில் சிலந்தி "


விச சிலந்தி கடித்து இறந்தவர்கள் என்பது குறைவுதான்.  விசமுள்ளவை சிலந்திகள்  கடித்தால் தேள்கடி போல கடு கடுப்பு
இருக்கும் குழந்தைகளை கடித்தால் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு குழந்தை இறந்து போனதை தொடர்ந்து 2000 ல்  பிரேசிலில் நடத்தப் பட்ட ஆய்வில்  கடி பட்டவர்களில்  80% பேருக்கு பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப் பட்டது .  விச சிலந்தி கடித்தால் மனிதனுக்கு அலர்ஜி மற்றும் தோல் (skin necrosis) பாதிப்பு ஏற்படுகிறது.


அமோசான், பிரேசிலில் காணப்படும் விச சிலந்திகள் வாழை ஏற்றுமதியின் போது மற்ற நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தன.

ஃபினுட்டிரியா சிலந்திகள் வாழைமரங்களை வசிப்பிடமாக கொண்டவை. சில விச சிலந்திகளின் படங்கள்...


" Cute monste -  Phoneutria spider " 



-Hadronyche -



 funnel-web spiders of Australia


 - fera -




Latrodectus mactans


பொதுவில் உலகில் பூச்சி கடித்து இறப்பவர்களை விடவும் விபத்தில் இறப்பவர்களே அதிகம்.