Pages

Saturday, February 28, 2015

தவளைகள் அழிந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள் ?


தவளைகள் சூழற் தகவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம்.

 தவளைகள் இயற்கை அழிவுக்கு உட்படுமேயானால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான தடிமனான கோடு எனச் சொல்லலாம்.

உலக அளவில் [ Chytridiomycosis** ] ஸைட்ரிடையோமைகோஸிஸ் எனும் வியாதியால் பாதிக்கப்பட்ட தவளைகளில் 200 வகைகள் சுத்தமாக அழிந்து போய் விட்டது. அதே போல 40 சதவீத   நீர் நில வாழ்வினங்கள் இதனால் பாதிக்கப்பட்டு அழிவு நிலை நோக்கி போய் கொண்டிருப்பதாக ஒரு கணக்கீடு செப்புகிறது.

மேற்கு மலைத் தொடர் காடுகளில் (பகுதிகளில்) மட்டும் சுமார் 217 வகையான  தவளை இனங்கள் உள்ளன. மேற் சொன்ன பங்கஸ் வகை நோயினால் இவைகள் பெரும் பாதிப்பு அடையவில்லை எனச்சொன்னாலும் துறைமுகப் பகுதிகளில் வாழும் நீர் நில நிலை வாழ்விகள் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றன என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

இந்த நோய் கண்ட தவளைகள் இரண்டு வாரங்களில் மரித்து விடும்.

2004 ன் படி IUCN அறிக்கையின் படி இந்தியாவில் 60 வகை நீர் நில வாழ்விகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன  (13 are Critically Endangered, 27 are Endangered and 20 are Vulnerable).



பொதுவாக தவளைகள் அழிவுக்கு வழி வகுப்பவை
1. சுற்றுப்புறத் தூய்மை கேடு,
2. காடுகளை அழித்தல்,
3. நீர் மாசு அதிகரித்தல்

**Chytridiomycosis is an emerging infectious disease of the amphibians caused by Batrachochytrium dendrobatidis a water borne zoospore producing fungi

report any mass death of frogs to the nearest forest department or write to zooreach@zooreach.org / keerthi@zooreach.org / herpinvert@gmail.com

4 comments:

  1. மனிதன் தாழ் வாழ ஒவ்வொரு உயிரினமாய் அழித்துக் கொண்டிருக்கிறான்
    தம +1

    ReplyDelete
  2. எங்க வீட்டுல தவளைகள் சகஜமாக உலா வருகின்றன! வீட்டை சுற்றியும் வயல்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !