Pages

Monday, February 5, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 3 (சலீம் அலி)

சலீம் அலி (1896-1987)

இந்தியாவின்  பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.

சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் ("ஏர் கன்") ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம்  அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக  இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.

பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.

கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார்.  பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார்.  துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.

இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி  நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது.  நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து  காப்பாற்றினார்.

1941 ல் "இந்திய பறவைகள்" [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது  பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம்.  வீழ்ந்த குருவி  [ “The Fall of Sparrow”]  பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.

சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார்.  இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.

அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம்  SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]

91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து  பறந்து விட்டது.


* * * * * * * * * * * * * * *  * *

இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)



கண்டறியப் பட்ட பாடும் பறவையான  ஜூத்ரா   சலீமலி ( "Himalayan Forest Thrush Zoothera salimalii")  2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.

Sunday, February 4, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 2

#பறவைகள் #பலவிதம் Part 2
##############

கடற்பறவை  அல்பெட் ராஸ்   அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள்.

இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.

 இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.

பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.

அமெரிக்காவில் "பாராகீத்" என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று  உலக கின்னஸ்  சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது.  என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது.  அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது.  ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.

தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை.  ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே  வழி காட்டி செல்லும்.  தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50  - 50)

அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன்.  எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.

புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).

 புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.

பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.

தென்கொரிய தலைவன் (Kim Jung Il) "கிம் ஜோங் இல்" தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை.