Pages

Friday, March 9, 2012

ஏன்,எதற்கு, எப்படி?

கணவன்கள் தங்கள் மனைவியை குறிப்பிடும் போது "சிறந்த துணை" ஆங்கிலத்தில் " Better Half " என அழைக்கிறார்கள் இந்த அடைமொழி தோன்றிய விதம் ?

இந்த சொற்றொடர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

அரேபிய பூர்வகுடிகளிடையே ஒருவனுக்கு தூக்கு தண்டனை அறிவிகப்பட்டது. அவனுடைய மனைவி கூட்டத்தின் தலைவனிடம் முறையிடுகிறாள் " தனக்கும் அவனுக்கும் மணமாகி விட்டதால் இருவரும் தனி தனி கிடையாது ஓன்றே அதனால் அவனுக்குரிய சுக துக்கங்கள் தனக்கும் பங்கு உண்டு என்றும் தன்னையும் தண்டனைக்குள்ளாக்குமாறு மண்றாடினாள்" தலைவன் தலையை பீய்த்து கொண்டு யோசித்தான். குற்ற மற்ற இவளுக்கும் தண்டனை தர முடியாது என்று அவனுக்கு தண்டனை அவன் மனைவியோடு வாழ்வதே என தீர்பளித்தான். இப்படித்தான் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க தங்களோட மனைவியை " பெட்டர் காஃவ் " என அழைக்கத் தொடங்கினர்.

மெக்சிகன்கள் அமெரிக்கர்களை குறிக்கும் வார்த்தையான " கிரிங்கோஸ்" அடைமொழி எப்படி ஏற்பட்டது ?

19ம் நூற்றாண்டில் மெக்சிகன் -அமெரிக்கன் போர் முடிவடைந்த போது உள்ளூர் வாசிகள் அவர்களைக் குறிப்பிட Green grow the Lilacs என்று சங்கேதமாக பாடல்களில் பாடினர். இந்த வாக்கியம் green grow என சுருங்கி பின் Gringo என மறுவியது.

அப்போது அமெரிக்க படைவீரர்கள் அணிந்த சீருடையின் நிறம் பச்சை. ஸ்பானிய மொழியில் இந்த வார்த்தையின் பொருள் நம்மூர் பாசையில் சொல்வது போல "வெள்ளக்காரனுங்க".

ஒருவரை பாராட்டிப் பேசும்போது "இவன் வாயில் வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்" (born with a silver spoon in his mouth) என்று சொல்வது வழக்கம். இந்த வழக்கம் எப்படி ஏற்ப்பட்டது?

செல்வம் சேர்க்கும் அவசியமற்ற பிறப்பால் செல்வசீமான் என்று அர்த்தம். அக்காலத்தில் சிசுக்களுக்கு முதலில் பெயர் சூட்டி ஞான ஸ்நானம் செய்து ஆசீர்வதிக்கப்படும் போது அவர்கள் ஸ்பூனை உபயேகித்தார்கள் இது வசதிக்கு தகுந்தார்ப் போல் வெள்ளியாகவோ அல்லது தகரமாகவோ இருக்கும். இந்த நடைமுறை நாளடைவில் இவ் அடை மொழி பெற்றது.

(சிலபேர் அமாங்க நமக்கு ஸ்பூனே இல்லீங்க ! )

மோனாலிசா யார் இந்த புன்னகை இளவரசி ?

மோனாலிசா ஓவியர்கள் புகழும் ஓவியம், இதை தீட்டிய ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) இந்த ஓவியத்திற்கு அவர் சூட்டிய பெயர் லா கியாகொன்டா (La Giaconda) இது ஒரு மரப்பலகையின் மீது தீட்டப்பட்டது. பிளாரெண்டைன் வியாபாரியின் மனைவி தான் இந்த லிசா கெரார்டினி (Lisa Gherardini).

இந்த ஓவியத்தை எக்ஸ்ரே (x-ray) எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். முடிவில் கண்டுபிடித்த ஒரு முடிவு மூன்று வெவ்வேறு விதமான வடிவமைப்பின் (poses) இறுதியில் இப்போது நாம் காணும் வசீகர புன்னகை இளவரசி உருவம் கிடைத்துள்ளது.

சரி ஏன் புருவம் வரையாமல் விட்டுவிட்டார்? இதற்கான பதில் அக்கால கட்டத்தில் பெண்கள் புருவத்தை மழித்துக்கொள்வது நாகரீகமாக இருந்தது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !