Pages

Monday, June 11, 2012

மரங்கள் மற்றும் பறவைகளை காக்கும் கோவைபதிவர்களின் முயற்சி..!


கோவையின் நகரின் சுற்றுப்புரங்களில் மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு என கோவையின் அனைத்து முக்கியப் பகுதிகளும் மரங்கள் இல்லாமல் போய்விட்டது.   சீசன் மழையும் பெய்யவா..? என யோசிக்கிறது.

வாகனங்களின் நச்சு புகையை இந்த மரங்கள் வடிகட்டி சுத்தப் படுத்தி வந்ததை மறுக்க இயலுமா...? மரங்களை வெட்ட ஆணையிட்டவர்களால்..

வாகனங்கள் எண்ணிக்கை பெருமளவு பெருகிவிட்ட சுழ்நிலையில் சாலைகளை நவீனப்படுத்தப் படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே... ஆனால் வெப்பத்தின் தாக்கம் மற்றும் நச்சு புகையின் அளவை குறைக்க பெரும் பங்கு வகிக்கும் மரங்களை மறந்து விடுவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும்..?..!

மரங்களை வெட்ட தடுப்பவர்களுக்கு தடை போட்டு வெட்டி முடித்த நகராட்சி மரங்களை திரும்ப சாலை ஓரங்களில் நட முயற்சி செய்யுமா..?  தனியார் இடங்களில் மரக்கன்று களை நட விரைந்து நடவடிக்கை எடுக்குமா ..? சந்தேகமே.

பறவைகள் மரங்களில் உள்ள பூச்சிகளை உண்டு கட்டுப்படுத்தி வந்தன.( சிட்டு)  நூற்று கணக்கான சிறிய பறவை இனங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பறவைகளுக்கு நாம் உணவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றின் வாழ்வாதாரமான மரங்களை வெட்டுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

தேவையற்ற மரங்களை வெட்டுங்கள்..ஆனால் அதே சமயம் தனியார் நிருவனங்கள், வீடுகளில் மரம் வளர்க்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

எஞ்சிய பறவைகள் மொபைல் டவர்களிலும், உயர் மின் கோபுரங்களிலும் தஞ்சம் அடைய வேண்டிய சூழ்நிலையை மனிதன் ஏற்படுத்திவிட்டான்.

கோவை வருபவர்கள் ஊருக்கே ஏசி போட்ட மாதிரி இருக்கே...என்ற பேச்சு பழங்கதையாகி விட்டது.

பறவைகளின் சப்தங்களை கேட்டு வாழும் மனிதன் வாகனங்களின் இரைச்சலை மட்டுமே.. கேட்டு வாழ்பவன் அவன் மனநிலை எப்படி இருக்கும் அதனால் ஏற்படும் குடும்ப நிலை பாதிப்பு இவைகளை யோசிக்க வேண்டிய கருத்து.

பேருர் செல்பவர்கள் ரோட்டின் ஓரத்தில் உங்களை வரவேற்கும் பெரிய ஆலமரத்தில் பறவைகளின் கல கலப்பு ஒலியை காலை மற்றும் மாலை நேரங்களில் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அனுபவிக்கலாம்...உணரலாம்.

கோவை ப்ளாக்கர் குழுமம் கோவை வலைப்பதிவர்கள் பங்கேற்ற தனது முதல் அறிமுக கூட்டத்தை 10.6.2012 அன்று நடத்தியது( கோவை காந்திபுரம் லால்குடி ஹால்)

முதல் கட்டமாக 100 மரகன்றுகளை நேசம் சார்பாகவும், கோவை வலைப்பதிவர்கள் சார்பாகவும் வழங்கப்பட்டது.

பெற்றுக்கொண்ட இயற்கை ஆர்வலர் திரு.யோகநாதன் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அதனால் தனக்கு எந்த பயனும் இல்லை இது போன்ற பரிசு அதைவிட மேலாக கருதுவதாகவும்...வாங்கிய காகித விருதுகள் எலிகள் நாசம் செய்து விட்டதாகவும்..குறிப்பிட்டார். மரகன்றுகளை பாசத்துடன் குழந்தையை வாரி அணைப்பது போல அன்பாக பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியான தருனம். (புகைப்பட உதவி வீடு.சுரேஸ்குமார்)


தமது சிந்தனை செயல் மூலம் கோவை பதிவர்களை ஒருங்கிணைக்கும் சங்கவி, சம்பத் மற்றும் உறுதுணையாயிருக்கும் அணைத்து பதிவர்கள், சமூக ஆர்வலர் அணைவருக்கும் இப்பாராட்டு உரித்தாகட்டும். 

16 comments:

  1. மிக்க நன்றி கலாகுமாரன்! இயற்கையை காப்பதற்கு குழுமம் என்றும் உதவியாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. திரு.யோகனாதன் அவர்கள் பட்ட கஷ்டங்கள்...மரங்களுக்காக அவர் நடத்திய போராட்டங்கள்...உங்களின் கட்டுரைத்தொடரிலிருந்தே தெளிவாக அறிந்து கொண்டேன். நன்றி.

      Delete
  2. நிச்சயம் குழுமத்தின் உறுப்பினர்களின் சமூக சேவைகளுக்கு ஆதரவுக் கரமளிப்போம்

    நன்றி திரு கலாகுமரன் சார்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்தை ஒரு சாதாரண கருத்தாக பார்க்கவில்லை ஒரு அசாதாரண கருத்தாகவே கணிக்கிறேன்..நன்றி சம்பத் சார்.

      Delete
  3. உள்ளேன் ஐய்யா

    நிச்சயமாக முயற்சிப்போம்

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி இல்லாமல் கோவையின் குழுமமா...!

      Delete
  4. தொடரட்டும் திரு.யோகனாதன் அவர்களின் சீரிய பணி.!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் திரு.யோகனாதன் அவர்களுக்கே...

      Delete
  5. உண்மை சார் ,அருமை

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு சாதாரண பதிவல்ல... என்பதும் உண்மை.

      Delete
  6. சிறப்பாக உங்களின் தனி நடையில் எழுதி அசதியிருகீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கோவை சரளா அவர்களுக்கு எனது நன்றி..

      Delete
  7. உங்களோடு பேசும் போது..இன்னும் மிக நீண்ட நேரம் பேச வேண்டும் என ஆவல் பிறக்கிறது.
    அடுத்த சந்திப்பு மிக விரைவில் நடக்க ஆண்டவனை பிரார்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இன்னொரு சந்திப்பு விரைவில் நடக்க சாத்தியமே...நாம ஓரே வேவ் லெண்தில் இருக்கோம் நன்றி பாஸ்கரன் சார்.

      Delete
  8. சில காலம் முன்பு கோவை வந்திருந்தேன் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. உங்கள் அனைவர் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி, வாழ்த்துகளுக்கும்..! சீனு சார்

      Delete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !