Pages

Wednesday, November 28, 2012

தோன்றி மறைந்த அமானுஷ்ய உருவம் !

( Belmez faces) பெல்மீஸ் முகங்கள்



இந்த புகைப்படத்தில் உள்ள முகத்தை பார்த்தால் ஒரு சாதாரண புகைப்படமாக வோ அல்லது அவுட் போகஸ் வரைபடமாகவோ தெரிகிறது.

இதனுடைய வரலாற்றை தோண்டி எடுத்துப்பார்த்தால் அமானுஷ்ய விவகாரங்கள் கிளம்புகின்றன.

மரியா பெரைரா (Maria Pereira) என்ற பெண்மணி ஸ்பெயினில் பெல்மீஸ் (Spanish - Belmez de la moraleda) எனும் கிராமத்தில் வாழ்ந்தவர். இவருடைய வீட்டின் சமையல் அறை சிமெண்ட் தளத்தில் திடுமென வியக்கத்தக்க அமானுஷ்ய முகங்கள் தோன்றி மறைந்தன இது நடந்தது 23 ஆகஸ்ட் 1971.

இது பார்பதற்கு வரையப்பட்ட போர்ட்ராய்ட் ஓவியம் போல் இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அதிசயத்தை பார்தததாக தகவல்.  ஆறு நாட்கள் கழித்து இந்த தளத்தை இடித்து விட்டு புதிய சிமெண்ட் தரை போடப்பட்டது.

ஆனால்...ஒருவாரம் கழித்து திரும்பவும் வேறு முகம் தெரிய ஆரம்பித்தது. இந்த முகம் பல வாரங்கள் தெரிந்தது அது மட்டுமல்ல இதன் முக தோற்றங்கள் மாறின. பொருக்க முடியாமல் திரும்ப இந்த தளம் தோண்டப்பட்டது இன்னும் ஆழமாக... அப்போது நிலத்தின் அடியில் மனித எழும்புகள் கிடைத்தன.  அப்போது தான் தெரிந்தது அந்த வீடு மட்டும் அல்ல அந்த தெருவே ஒரு காலத்தில் மயானமாக இருந்தது தெரிய வந்தது.

அதன்பின், புதிய தரைத்தளத்தில் பலமுகங்கள் இருப்பதாக பேராசிரியர் குழு ஒன்று வந்து ஆராய்சி செய்தது ஆனால் யரோ வரைந்ததற்கான எந்த தடையமும் கிடைக்கவில்ல இவர்கள் ஆராய்சியில் ஒருமுகம் அல்ல 18 வித முகங்கள் தரையில் தென்பட்டதாக கூறப்படுகிறது. (இன்னும் சில புகைப்படங்கள்)


இது குறித்து மேற்கொண்டு பல வித ஆராய்சிகள் செய்யப்பட்டன விடை பூஜ்ஜியம்.  ஆனால் ஒன்றுமட்டும் சொல்லப்படுகிறது மரியா பெரைரா ஒரு சைக்கோ (psychic) அவர்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்றும் ஒருசாரர் நம்பினர்.  அவர் 2004 ல் தனது 85 ஆவது வயதில் இறந்துவிட்டார்.

இந்த முகங்கள் 35 வருடங்கள் தென்பட்டு இருக்கிறது, அவர் மறைவு வரை ! என்பது இன்னும் ஆச்சர்யமான அமானுஷ்ய தகவல்.

Monday, November 26, 2012

விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம்


1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தார்கள்.  இது மான் தோலில் வரையப்பட்டது (1513).





இது பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம் நூற்றாண்டின்  துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த அட்மிரல் பதவியில் இருந்தவர். வரைபட இயலில் பேரார்வம் உடையவர் காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள  இம்பீரியல் நூலகத்தில் சுதந்திரமான அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது.  கிபி 4 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்திய காலகட்டத்தை சார்ந்ததாக கருதப்படும் வரைபடங்களில் இருந்து அச்சு அசல் நகல்களை படி எடுத்தார்.

பிரிரெய்ஸ் வரைபடத்தில் ஆப்பிரிக்காவின்  மேற்கு கடற்கரைப்பகுதி, தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதி, மற்றும் அண்டார்டிகாவின் வட கடற்கரைப்பகுதி தெளிவாக அடையாளம் காண முடிந்தது.  முக்கியமாக வடஅண்டார்டிகா கடற்கரைப்பகுதி தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவாக இருந்தது.  இந்த இடத்தில் தான் பிரச்சினைக்குறிய பல குழப்ப முடிவுகள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உட்பட்டது.

பிரிரெய்ஸ்  "கிதாபி பாஃக்ரியே"  [Kitabi Bahriye] எனும் பயணப்புத்தகம் எழுதியிருக்கிறார் இதில் கடற்கரை அமைவுகள், குடாக்கள், துறைமுகங்கள், நீரோட்டங்கள், கணவாய்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன.

கிடைத்த புவியியல் ஆதாரங்களில் இருந்து குயின் மெளவுட்லேன்ட் [ Queen Maud Land ] எனும் பகுதியில் மூடியிருந்த பனி கட்டிகள் உருக தொடங்கியது கி.மு 4000 வருடங்களுக்கு முன்.

ஆதாரப்பூர்வமான செய்தி என்னவென்றால் அன்டார்டிகா மற்றும் இந்த பனி முனையானது பல மில்லியன் ஆண்டுகள் பனியால் உறைந்து போயிருந்தது அதாவது முழுக்க முழுக்க பனிகட்டி பாளங்களால் மூடியிருந்தது

கொலம்பஸ் 1492 ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார் எனும் போது அதற்கு முன்பே துல்லியமாக தென் அமெரிக்க கரைகள் வரையப்பட்டுள்ளது ஆச்சர்யமானது.

1820 வரை அண்டார்டிகா அறியப்படவில்லை ஆனால் பனிமூடிய இதன் கரைகள் துள்ளியமாக இவரால் வரையப்பட்டுள்ளது எப்படி?

பிரிரெய்ஸ் வரைபடத்தில் வடக்கு கண்டப் பகுதி பனிமூடியதற்கு முன் வரையப்பட்டது அப்படியானால் இது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதா ? இப்படி ஒரு முடிவுக்கு வரமுடியாது அப்போது மனித இனமே இருக்க வாய்ப்பில்லை.

இன்னும் தீர்க்கமான ஆய்வுகளின் படி, பனி உருகிய இறுதி காலம்   6000 வருடங்களுக்கு முன்.

[ஆனால் பனி உருகிய காலம் பற்றி இன்னும் தீர்க்கப்படாத சந்தேகம் உள்ளது.   பல ஆராய்சியாளர்களின் கருத்துப்படி பனி உருகிய காலம் 13000 இருந்து 9000 B C. ]

அண்டார்டிக்கின் குயின் மெளவுட் நிலப்பகுதி [ Queen Maud Land ] வரைபடம் 6000 வருடங்களுக்கு முன்னால்  வரைந்தது யார் ? அல்லது இனந்தெரியாத எந்த நாகரீகம் இதை வரைந்திருக்கலாம் எப்படிபட்ட வரைதல் தொழிற் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ?

இதுபோன்ற வியப்பான விடை தெரியா கேள்விகள் அல்லது ரகசியங்கள் தொக்கி நிற்கிறது.

கி.மு  3000 ல் மத்திய கிழக்கில் முதல் கடல் வணிகத்தில்
எந்த எந்த நாகரீகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் ?
சிந்து சமவெளி நாகரீகத்தால்  அல்லது சீன நாகரீகத்தால் அல்லது இன்னும் வேறேதேனும் நாகரீகமா ?  தெரியவில்லை.

நவீன தொலிற் நுட்பத்தில் வரையப்பட்ட வரைபடங்களை போல் எப்படி
கி.மு 4000 ஆவது ஆண்டில் தத்ரூபமாக வரையமுடிந்தது. என்பது அறிய முடியாத ரகசியமாக இருக்கிறது.

Monday, November 19, 2012

தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !


தமிழனின் தற்பெருமைக்கான தகவல்கள் அல்ல இவை.  தன் இனத்தை பற்றிய தகவல்களை சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே.. இங்கு சில தகவல்கள்.

தமிழ் பேசும் மக்கள் உலகில் சுமார் 100 மில்லியன்.

சுமேரியன், அராபிக், மாயன், மீசோ, பெர்சியன், துருக்கி இம்மொழிகள் உருவாக்கத்தில் தமிழும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

சுமேரியன் மொழி குறியீடுகள் (Script) தமிழ் சுமேரியன் இரண்டிற்குமுள்ள உறவை வெளிப்படுத்துகிறது.

தமிழ் உலகின் 7 புராண மொழிகளுள் ஒன்று (செம்மொழி).

தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் மூலம்.

வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட திராவிட மொழி தமிழ் (இலங்கை, சிங்கப்பூர் )

பண்டைய தமிழ் இனத்தில் சாதிகள் இல்லை.

தொல்காப்பியம் 3000 வருட பழமையான நூல்.

உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள்.


CHENNAI, 28/12/2011: Numeral 408 incised on pottery from Alagankulam (1st century C.E.) . 
Photo: Tamilnadu State Department of Archaeology





Potsherd with Tamil Brahmi inscription, circa first century B.C., found in Egypt.  @Archaeologyindia

Pottery inscription in Tamil-Brahmi found in Thailand by a Thai-French team of archaeologists. @Archaeologyindia


The picture shows the urn with the rudimentary Tamil-Brahmi script, and a human skeleton and miniature pots at the Iron Age urn burial site at Adichanallur in Tamil Nadu. The inset with the arrow mark depicts how the script has been written inside the urn. — Photo courtesy: ASI, Chennai Circle.


ஜென், புத்த மதங்களை பல்லவ பேரரசு உருவாக்கியது.

ஆசிய சண்டை கலையின் தந்தை எனப்படுவது "கலரி"

தமிழ் - பிராமி எழுத்து வரிவடிவங்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.

வேட்டி, சேலை பாரம்பரிய உடைபற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது.

தமிழரின் பழமையான நாட்டியகலை பரத நாட்டியம்.

இன்றும் நல்ல நிலையில் இயங்கி வரும் கரிகாற்சோழன் கட்டிய கல்லணை தமிழனின் தொழிற்நுட்பத்திற்கு சான்று.

ஜல்லிக்கட்டு 2000 வருடத்திற்கு முன்பு இருந்து வரும் தமிழரின் வீர விளையாட்டு.

தமிழ் அளவைகளுள் ஒன்றுமையான கணக்கீடு உண்டு.
தஞ்சாவூர் கோயில் துல்லியமான அளவீடுகளுக்கு கட்டடக்கலைக்கும் ஒரு சான்று.
சித்த மருத்துவம் தமிழரின் பழமையான மருத்துவம்.


நியூசிலாந்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மணி உள்ளது. (1200AD)

பண்டைய தமிழரிடம் வலிமையான கடற்படை இருந்திருக்கிறது,

நீண்ட கடற்பயணமும், வெளிநாட்டு வாணிபமும் பழந்தமிழர் மேற்கொண்டிருந்தனர்.


வணிகம், மருத்துவம், விவசாயம், போர்பயிற்சி இவைகளில் வேரோடியது தமிழ் கலாச்சாரம்.

பி.கு  : இவை இணையத்தில் கிடைத்த தகவல்கள்

Monday, November 12, 2012

துணுக்குகள் !


அனைவருக்கும் "தீப ஒளி"  திருநாள் வாழ்த்துக்கள் !

மத்தாப்பு குச்சிகள் எறியும் போது பல நிறங்களில் சுடர்விடும். குறிப்பாக பச்சை நிறத்தில் ஒளிர எந்த வெப்ப உலோக உப்பு அதில் பயன் படுத்தப்படுகிறது ?  க்ளு இவற்றில் ஒன்று: (அ) :சோடியம் நைட்ரேட், (ஆ) : பொட்டாசியம் க்ளோரைடு, (இ) : பேரியம் குளோரைடு

விடை இறுதியில்.


இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம் என்ன?

இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம்
அதன் கண்களின் பின்புற உட் பகுதிகளில் "டேப்டம் லுசிடம்" என்று சொல்லப்படுகிற விளித்திரை ஒளிரும் செல் படலம் உள்ளது. ஒளியானது கண்களின் ரெட்டினா எனப்படும் விளித்திரையின் மேல் பட்டு கண்களின் உட் சென்று டேப்டம் லுசிட படலத்தின் மேல் விழும் போது பிரதிபளிக்கின்றன. இந்த ஒளிரும் படலம் இரவில் குறைந்த ஒளியிலும் அதற்கு உருவங்கள் தெளிவாக தெரிய பயன் படுகிறது.


வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் பல வண்ணங்களில் ஒளிர்வது எப்படி?


வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன அவற்றில் நுனிகளில் வெல்வெட்டு போன்ற நுண்துகள்கள் உருவாகின்றன. இந்த துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் பேட்டன் என சொல்லப்படும் உடற்கூறு செல்களின் படி அந்தந்த நிறத்தை பெருகிறது அவற்றின் மீது வெயில் படும்போது கண்ணைக்கவரும் தோற்றத்தைப் பெறுகின்றன. நம் கையால் இறகை தொட்டும் போது கைகளில் இந்த துகள்களை ஒட்டிக் கொண்டு அந்த இடம் நிறமற்ற வெளிர் இறகாகிவிடும்.

வெடிகுண்டைக் கண்டறியும் மோப்பத்தேனீ க்கள் ( super sensitive Sniffer Bees)

மோப்ப நாய் கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன மோப்பத்தேனீ ?

தேனீக்கள் நாட்டியம் நமக்கு தெரிந்ததுதான் [ தெரியாதவர்கள் இதை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம் ] தேன் கிடைக்குமிடம் எவ்வளவு தொலைவில் உள்ளது ? தேன் எவ்வளவு உள்ளது இப்படி பல சிக்னல்களை தெரிவிக்க நாட்டியம் ஆடும்.  இதோடு கூட அவற்றின் மனசில்... ! பதிய வைத்த மேப் என்று சொல்லுவோமே அது போல இவைகள் இட அமைவை பதிய வைத்துள்ளன.  நம்மில் சிலருக்கு மூனு தெரு தள்ளி இருக்கும் கடையை கூட ஞாபகம் வெச்சுக்க முடியாது இல்லீங்களா ?.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அட்வான்ஸ்டு டிபென்ஸ் ரிசர்ஸ் ஏஜென்சி களுக்கு தேனீக்களின் திறமை தெரிந்து போய் அவர்கள் இதனுடைய மோப்ப திறனை ஆராய்ந்தார்கள். இறுதியில் இதற்கென ஒரு கையடக்க கருவியை  தயார் செய்தாங்க இது எப்பிடி இருக்கும்னா ( முழு படம் கிடைக்கல ) ஆஸ்துமா நோயாளிகள் பயன் படுத்துவது போன்ற இன்ஹாலர்.  டிசைன்... ரேஸில் ஒரு கேட் இருக்குமே அது மாதிரின்னு கற்பனை செய்துக்கலாம்.



இந்த கருவியினுள் 32 தேனீக்களை அடைக்க முடியும்.  டிரிக்கர் மெக்கானிசம் இதுல இருக்கு அவ்வளவுதான்.

இந்த கருவி முன்னால தேனீக்கள் முன்னாடி மோப்பம் பிடிக்க வேண்டிய பொருள்களை அதாவது ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிபொருள் ( TNT பவுடர் ) இருந்தாலோ, போதை வஸ்துகளான கோகைன்,ஹெராயின் அப்புரம் செம்டெக்ஸ் இருந்தா உடனே அவைகள் டிரிக்கரை கிளிக் செய்கின்றன. அதாவது மோப்ப நாய் செய்யும் வேலையை இந்த தேனீக்கள் செய்கின்றன. 

எனக்கு ஒரு சந்தேகம் திறமையானவங்க இதுக்கு பயிற்சி அளித்த மனிதர்களா ? அல்லது தேனீக்களா ? 


கொசுறு  தகவல்கள் : 

2002 வரை ஒடிசாவில் போலீஸ் துறையில் புறாக்கள் இருந்ததா ஒரு தகவல்.  

புறாக்கள் தூதுவர்களாக 3000 ஆண்டுகள் இருந்தன. 

1850 ல் பால் ராய்ட்டர் செய்தி நிறுவனம் புறாக்களை வைத்து நடத்தப்பட்டது.

1941 ல் நேச நாடுகள் தகவல் பரிமாற்றத்திற்கு புறாவைப் பயன்படுத்தினர்.


US மற்றும் ரஷ்ய கடற்படையில் பயிற்சி பெற்ற டால்பின்கள் பணிபுரிகின்றன.

டர்கி வல்லூறுகள் (turkey vulture) பைப்லைன்களில் கேஸ் கசிவை கண்டறிகின்றன. இதனுடனை நாசி அமைப்பு இப்படிப்பட்ட தகவமைப்பை கொண்டிருக்கிறது. 


சில பென்குவின் வகைகள் :


ஸ்நேர்ஸ் நியூசிலாந்தின் குட்டிதீவு. இங்கு வாழும் சிறியவகை ஸ்நேர்ஸ் பென்குவின்கள் 31000 இருப்பதாக கணக்கெடுப்பு சொல்லுகிறது. இத் தீவு மனிதர்கள் தரை இறங்க தடை செய்யப்பட்ட பகுதி. (கடலில் போட்டில் மிதந்த படியே எடுக்கப்பட்ட படம் மேலே)


துணை அண்டார்டிக் பகுதியில் மெக்குலர் தீவில் வசிக்கும் ராயல் பென்குவின்கள் வகை சிறு கற் குகைகளில் தங்கள் கூட்டை அமைத்து வசிக்கின்றன. வருடத்தில் ஏழு மாதங்கள் மட்டுமே இந்த தீவில் இருக்கும் ( பிக்னிக் ! )  ஹிரோ ஹீரோயின் மாதிரி ஸ்டைலான தலைய கவனிச்சீங்களா ?



சிறியவகை ஜூவினில் வெள்ளை துடுப்பு ( juvenile white flippered penquin)  பென்குவின்கள் என்பவை  நியூசிலாந்தின் வடக்கு குட்டிதீவில் அதாவது காண்டெர்பரி பகுதியில்  4000 உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு. 

விஷ அம்பு தவளைகள் அல்லது நச்சு தவளையை (Poison arrow frog / Poison dart frog) உண்ணும் பாம்புகள் உண்டா ? இந்த தவளையின் சிறப்பு என்ன ? 


மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் விஷ-அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. (ஆங்கிலப்படம் அபோகலிப்ட்தோ படம் பார்தவர்களுக்கு தெரிந்திருக்கும் ) மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்தக்காலத்தில் இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும்.  இந்த நிறம் எதிராளியை உண்ணவா? சாக வா? என்பதற்கான ஒரு எச்சரிக்கை அடையாளம்.  மேல் தோலில் உள்ள விஷம்  20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது (அடேங்கப்பா !).  நச்சு, இது உண்ணும் கரையான்கள்,எறும்பு, பூச்சிகளில் இருந்து பெறுகிறது.

இதை உண்ணும் பாம்பு - லியோஃபிஸ் எபைன்ஃபைலஸ்
Liophis epinephelus ( வல்லவனுக்கு வல்லவன் ! )




சில  புகைப்படங்கள் : 

வியட்நாமிலுள்ள மட்டந்தட்டு மூக்கு குரங்கு [ Snub nosed Monkey ]






முதல் கேள்விக்கான பதில்  (இ) : பேரியம் குளோரைடு

Saturday, November 3, 2012

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - இறுதிப் பகுதி

 முதலிரண்டு பகுதிகள்

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு )

திபெத்திய மர்ம குகைகள் (ஆய்வு ) - பகுதி 2


உயர்ந்த மலை முகட்டில் இறந்த உடல்கள் :

சாம்ட்ஜோங் குகையில் (tomp 5) இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் (3 x 3 அடி)  இருந்தது. உடைந்த நிலையில் இருந்த சவப்பெட்டியை ஏதென்ஸ் மற்றும் சிங்லாமா ஒழுங்கு செய்தனர்.  இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி வலுவான உயர்தர மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.


பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது விரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம். இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுரம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுரம் காய்ந்து போன மரம். ( " வாழ்க்கையை சிம்பாலிக்காக உணர்த்துகிறதோ ! )



இந்த உடலுக்கு சொந்தக்காரன் உயர்ந்த அந்தஸ்தில்  இருந்திருக்க வேண்டும். கழுத்தில் பதக்கம் போன்று வெண்கலத்திலான கண்ணாடி தொங்கவிடப்பட்டிருந்தது. முகத்தில் வெள்ளி மற்றும் தங்கத்திலான முக மூடி அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகமூடி நீளமான நாசி மற்றும் சிகப்பு நிறக்கண்கள் வரையப்பட்டிருந்தன. உதடுகள் கீழ் நோக்கி ஒரு சோக எக்ஸ்பிரசனில் இருந்தது. முகமூடியின் நெற்றிப்பகுதியில் வண்ண நீள் கண்ணாடி பாசி மணி மாலையால் சோடிக்கப்பட்டிருந்தது.
இந்த உடல் 1300 அல்லது  1800 ஆண்டுகளுக்கு முன் இறந்த உடலாக இருக்கலாம். (வருடங்கள் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை)


பத்து வயது ஆண்குழந்தையின் எலும்புக்கூடும் அருகில் கிடந்தது. அந்தகாலத்தில் பலியிடப் பட்டிருக்கலாம் என்பது ஏதென்சின் அனுமானம் அதன் நிலையை (பொஸிசன்) வைத்து இதை ஊகிக்கிறார் ; உறுதிப்படுத்தப் படவில்லை.

இன்னும் அந்த அறையில் இரும்பிலான குறுவாள்கள், ஒரு மண் தட்டில் பார்லி மாவு, ஒரு காலத்தில் பார்லி பீர் நிறப்பட்டிருந்த தாமிர பாத்திரம், சிறு பாத்திரம் மற்றும் அதை வைக்கும் இரும்பிலான சிறு முக்காலி (tripod), வட்ட கைப்பிடியுடன் கூடிய மரத்தாலான கோப்பைகள், எறுமை மாட்டு கொம்புகள், குதிரை மற்றும் ஆட்டின் தலை மண்டை ஓடுகள் கிடந்தன.  இந்த குதிரை அவனது குதிரையாக இருந்திருக்க வேண்டும்.


ஏதென்ஸ் உண்பதை, தண்ணீர் குடிப்பதை கூட மறந்து இந்த ஆய்வில் ஒன்றி ஈடுபட்டது பாராட்டத்தக்கது.

ஆகாச புதைத்தல் (Sky burial)  :

இதேபோல் மயான குகைகள் சிலவற்றில் அநேக வெட்டப்பட்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன.   ( மனித எலும்பு துண்டுகள் 3 முதல் 8 நூற்றாண்டு காலத்தவையாக இருக்கலாம் என்பது அனுமானம்  )


இறந்த சடலங்களில் இருந்து சதைகள் நீக்கப்பட்டு எலும்புத்துண்டுகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.  மீதமான எலும்புகள் மற்றும் சதைப்பாகங்கள் வல்லூறுக்கு இறையாக்கப் பட்டிருக்க வேண்டும்.
இது முஸ்டங் பகுதி மக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.

76 சதவீதம் இம்மாதிரியான எலும்புகள் கிடைத்துள்ளன

இது கண்டிப்பக கேனிபுலிசம் [ Cannibalism - தன் இன ஊன் உண்ணுதல்  ] ஆக இருக்காது.

இந்த " திபெத்திய ஆகாச புதைத்தல் வழக்கம் "
புத்த மதம் அங்கு பரவுவதற்கு முன்பிருந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.

முஸ்டங் மம்மிகள் :

இவை எகிப்திய மம்மிகளை ஞாபகப்படுத்துகின்றதா ?

முஸ்டங்கில் மெப்ராக் என்ற இடத்தில் 1995 ல் ஜெர்மன் மற்றும் நேபால் அகழ்வாராய்சியாளர்கள் ஒரு குகையில், ஒரு குழந்தை மற்றும் பெண்ணின் கால் பகுதி மட்டும் மம்மி யாக (பதப்படுத்தி பாது காக்கப்பட்ட உடலங்கள்) கிடைத்திருக்கிறது.


இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும்.   மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள்  கிடைத்தன.  மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன.

"குழந்தை மம்மி"

சுமார் 2000 வருடங்கள் பழமையான உடலங்கள் இவை.  இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன.

தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. இவைகளின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கலாம்.  இவைகள் பல்வேறு பகுதிகளை சேர்ந்ததாக அதாவது பாகிஸ்தான், இந்தியா,  மற்றும் சில ஈரான் தேசத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.

இவைகள் இம் மக்கள் அந்த தேசங்களுடனான வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை ; இம்மக்களின் செல்வ செழிப்பை பிரதிபளிக்கின்றன.


இந்த கடினமான பணியில் ஈடுபட்ட பெண் நுண் ஆய்வாளர் (Bio archaeologist) ஜேக்குலின் இங் கிடைத்த எலும்புகளை, சதைப்பகுதிகளை ரகம் வாரியாக பிரித்து ஆராய்கிறார்.


சில குடும்பங்கள் இன்றும் இங்கு குகைகள் வசித்து வருகின்றனர்.

எவை எல்லாம் இந்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தும் சாண்ட்ஜோங் கிராமத்து தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.  தன் சொந்த பணத்தை சிறு மியூசியம் அமைக்க கொடுத்து உதவியுள்ளார் ஏதென்ஸ் என்பது குறிப்பிடதக்கது.

தங்கள் மூதாதையரின் சிறப்பு மிக்க வாழ்க்கையை நினைத்து பிரம்மிப்போடு பெருமையும் கொள்கின்றனர் இம்மக்கள்.

இப்பகுதி மக்கள் இக்குழுவினரை மிக்க மரியாதையோடு நடத்தினர். அவர்களை பெருமையாக நினைவு கொள்கின்றனர்.


கிடைத்த மரத்துண்டுகள்,  துண்டு துணிகள், பற்களின் துகள்கள்
வண்ணங்கள் (எந்த தாவரங்களில் இருந்து தாயாரிக்கப்பட்டன போன்ற வேதியல் ஆய்வுகள்) பல இடங்களுக்கு கொண்டு செல்லபட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பற்கள், சில எலும்புகள் DNA ஆய்வுக்காக ஒக்லஹாமா பல்கலை கழகத்திற்கும் (University of oklahoma), உலோகங்கள் லண்டன் பல்கலைகழகத்திற்கும் (university of London) கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் முடிவுகள் பல உண்மைகளை வரலாறுகளை அறிவிக்கப்போகின்றன. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.



Thanks for Mustang people ; archaeology team members : athans, mark Aldenderfer (university of california), Jacqueline Eng - western michigan University, Mohan singh Lama - Nepal's archaeology department  and  National Geography
=====================================================================

"இந்த தொடர் பதிவிற்கு ஆர்வத்துடன் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்திய உள்ளங்களுக்கும், தொடர் வாசகர்களான  சைலன்ட் ரீடர்ஸ்களுக்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் இத் தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்."

- கலாகுமரன்
=====================================================================