Pages

Thursday, June 6, 2013

தவளையின் உடலில் இருந்து...தோன்றிய முதல் மின் கலன்

மீச்சிறு தூண்டுதல் பல பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.

1800 ல் இத்தாலியன் இயற்பியலாளர் அலெஸாண்ரோ வோல்டா முதல் மின்கலனை (BATTERY) கண்டுபிடித்தார்.

அந்த முதல் பேட்டரி இதுதான்

இந்த பேட்டரி பார்பதற்கு நிறுத்தி வைக்கப்பட்ட குழாய்துண்டு போல் காட்சி அளிக்கும்.  சம அளவில் இருக்கும் வட்ட வடிவ தாமிர(copper) மற்றும் துத்தநாக(zinc) தகடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவற்றின் இடை இடையே உப்புத்தண்ணீரால் தோய்க்கப்பட்ட காகிதங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு உலோகத்தகடும் கெட்டியான உலோக கம்பியால் இணைக்கப்பட்டு இருக்கும்.

இவர் இந்த பேட்டரி கண்டு பிடிப்பதற்கு தூண்டுதலாக இருந்தது இன்னொரு நிகழ்வு.

லூகி கால்வனியின் (Luigi Galvani) பரிசோதனை கூடத்தில், தாமிர கம்பியில் தொங்கவிடப்பட்ட ஒரு இறந்த தவளையின் காலருகில் கொண்டு செல்லப்பட்ட மெல்லிய இரும்பு தகடு அதன் காலில் அசைவை ஏற்படுத்தியது எப்படி ? என்ற சிந்தனையே வோல்ட்டாவிற்கு பேட்டரியை கண்டுபிடிக்க தூண்டுதலாக இருந்து இருக்கிறது.

இதே போல வோல்டா ஏற்படுத்திய முதல் மின் தூண்டல் பின்னாலில் 1821 ல் மைகேல் பாரடேவிற்கு மின்மோட்டாரை கண்டுபிடிக்க ஏதுவானது.


தொடர்புடைய பதிவு பாக்தாத் பேட்டரி

கொசுறு தகவல்

1951 ல் இடாஹோவில் ஆரம்பிக்க பட்ட நியூக்ளியர் அணு உலையில் கிடைத்த சக்தி 4 பல்புகளை மட்டுமே எறிய வைக்க முடிந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து கிடைக்கும் சக்தி உலக அளவில் 5 சதவீதமாகும்.
                                                                             ***

ஸ்காட்டிஸ் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஃபிளமிங்கோ விடுமுறையில் கவனிக்காமல் விட்டு சென்ற ஒரு ஆராய்ச்சியில் தோன்றிய ஸ்டாபைலோ ஹோக்கி என்ற (fungus) நொதியால் சுற்றியிருந்த பாக்டீரியா கிருமிகள் அழிந்து போயிருப்பதை கண்டார் இந்த நொதிப் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தே பென்சிலின். உலக அளவில் லட்சோப லட்சம் பேரின் உயிரை காக்கும் அரு மருந்து.

2 comments:

  1. ஸ்டாபைலோ ஹோக்கி உட்பட தகவலுக்குநன்றி...

    ReplyDelete
  2. பாரின் லேன்றனால தப்பிச்சோம்.. இதே நம்ம ஊர்ல நடந்திருந்தா தவளை காலில் மின்சாரம்னு சொல்லி அந்த 'அதிசய' தவளைக்கு சிலை வச்சிருப்பாங்க..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே !