கடந்த 11.04.2016 தினமலர் இதலோடு இணைப்பாக "பட்டம்" என்ற இளைஞர் மலர் வெளியானது (கோவை பதிப்பு). அதில் மனிதர்கள் அஞ்சும் பூச்சி ! என்ற தலைப்பில் படங்களோடு பொது அறிவுத் தகவல் பிரசுரமாகி இருந்தது. இதில் இடம் பெற்ற தகவல்கள் நான் ஏற்கனவே இந்த வலைத்தளத்தில் எழுதியவை.
தகவல்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் விருப்பம்.
முகநூல் மற்றும் வாட்ஸ்சப் போன்ற சமூகதளங்களில் Copy /Past தவிர்க்க முடியாத போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. வலைத்தளங்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால் இது போன்ற பிரபலமான மீடியா (! )அதையே
செய்யும் போது நெருடலாக இருக்கிறது.
இந்த பதிவு என் சொந்த சரக்கு என்று வாதிடவில்லை....ஆனால் அதே நேரத்தில் பல தகவல்களை திரட்டி கிரகித்து படிப்பவர்களுக்கு புரியும் படியாக கொண்டு செல்வது, ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தி சுவாரசியமான
தகவலாக கொண்டு சேர்க்கும் போது அதையும் ஒருவன் அப்படியே ஈ அடிச்சாங் காபியாக பதிவிடும் போது... போடுங்கள் தப்பில்லை ஆனால் இவரின் தகவலுக்கு நன்றி எனும் ஒற்றை வார்த்தை என்னை
இன்னும் எழுத தூண்டுமே !
கீழே...தினமலரில் பிரசுரமான பக்கங்கள்
இந்த லிங்க் 02.02.2016 அன்று நான் எழுதிய பதிவு.
மனிதனின் முதல் எதிரி !!
http://eniyavaikooral.blogspot.com/2016/02/blog-post.html