Followers

Showing posts with label dreams. Show all posts
Showing posts with label dreams. Show all posts

Thursday, August 7, 2014

வெளிசப்தங்கள் கனவை பாதிக்கிறதா ?



எனது அனுபவத்தை சொல்கிறேன்...

அன்று வீட்டில் நான் மட்டுமே இருந்தேன். வழக்கம்போல சாப்பிட்டபின்
தொலைக்காட்சி பார்த்துவிட்டு தூக்கம் கண்ணை சொக்க தூங்க சென்றேன்.
காற்று வரட்டும் என்று சன்னலை திறந்து வைத்து விட்டு,கண்ணை கூசுகிறது
என்று இரவு விளக்கையும் நிறுத்தி விட்டேன்.  நல்ல உறக்கம்.

லேசாக உறக்கம் கலைந்த போது என்னால் முழுவதுமாக கண்ணை திறக்க முடியாமல் சொக்கியது, அப்போது என்ன மணி என்றும் தெரியவில்லை, திறந்திருந்த சன்னலில் இருந்து நீளமான தடிமனான ஜந்து ஊர்ந்து கட்டிலில் இருந்த என் கால் மாட்டில் நைசாக இறங்கியது. உதறல் எடுத்தாலும் என்னால் அடித்துப்போட்டது போல அசையக்கூட முடியவில்லை.

அந்த ஜந்து அதோடு நிற்கவில்லை தரையில் இருந்து எழும்பி
என் முகத்திற்கு நேராக நிற்கிறது. புஸ்...புஸ் என்ற சப்தம் இன்னும் என்னை
காபுரா படுத்தி எடுத்தது. எனது சின்ன சலனம் கூட அதை கோபப் படுத்த
முடியும்.  என்ன செய்வது என்றே தெரியவில்லை...

 எந்த அசைவும் இல்லாமல் அப்படியே படுத்து இருந்தேன்....எவ்வளவு நேரம் அப்படி படுத்து இருந்தேன் என தெரியவில்லை. படு முயற்ச்சி செய்து கண்ணை விழித்து பார்த்தேன்.  மச மசவென்று இருந்ததது ஆனால் அது இப்போது அங்கு இருக்காது என்று உள்மனது சொல்லியது.  எப்படியோ தட்டு தடுமாறி டக் கென்று லைட்டை போட்டு பார்தேன்.... எதுவும் இல்லை.

பின்புதான் என்ன நடந்திருக்கும் என புரிந்தது.  அதாவது என் கால்மாட்டில் இருந்த துப்பட்டியின் ஓரம் காலில் பட்டுக்கொண்டும், தலைக்கு மேலே நிறுத்தி ஓடி கொண்டிருக்கும் (பெடஸ்டல்) மின்விசிறியின் உஸ் என் ஓசையும், தரையில் கிடக்கும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் மெத்தையும் பாம்பை உருவகித்து என்னை உசுப்பேற்றி இருக்கிறது என் மூளை.


சரி அது கனவுஅல்ல...

இரவில் அலைபேசியை சார்ஜில் போட்டு விட்டு சார்ஜ் முடிஞ்சதும் சுவிட்சை
நிறுத்தனுமே என்று நினைத்து தூங்கிவிட்டேன்.

"டேய் எழுந்திருடா..." அம்மாவின் சப்தம் என்னை எழுப்பியது. எழுந்து பார்க்கிறேன்.

அம்மா நல்லா தூங்கிட்டு இருக்காங்க. அதற்கு ஒரு செகண்ட் முன்பு அந்த
குரல் ரீவைண்ட் ஆகியது எப்படி?.  ஒருக்களித்து படுத்து இருந்ததால் ரத்த ஓட்டம் தடை பட்டு கை விண் விண் என்று வலி தெரித்தது.  அந்த குரலுக்கு முன்னாடி கனவு ஓடிக்கிட்டு இருந்து இருக்கு ஆனா அதை நினைவுக்கு கொண்டு வரமுடியல..

போனை எடுத்துப் பார்த்தேன் 100% அப்போதுதான் சார்ஜ் ஏறி முடித்திருந்தது. அப்ப   வெளிப்புர சப்தத்தை மூளை எழுதிய கனவுக் கதையில்
அம்மாவின் வாய்ஸை அப்லோட் செய்திருக்கிறது.   வெளிப்புர சப்தங்களை
விழித்திருக்கும் "சப் காண்ஸியஸ் மனம்"  அந்த சப்தத்தை நம் கனவுடன் கோர்த்து கதை திரிக்கிறது.

இதே போல் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டது
போல இன்னொருவருக்கு  கனவில் ; தூரத்தில் கேட்ட துப்பாக்கி சப்தம் அருகில்  கேட்கிறது. அவருக்கு ஒரு கைத்துப்பாக்கி கிடைக்க அவரும் எடுத்து சுடுகிறார் ஆனால் அந்த சப்தம் தூரத்தில் இருந்து கேட்பதுபோல இருந்திருக்கிறது.

பக்கத்து வீட்டில் கார் எடுக்கும் வெளி சப்தம் இவருக்கு துப்பாக்கி சுடும் சத்தத்தோடு கனவு ஓடிக்கொண்டு இருந்து இருக்கிறது.
சிலருக்கு தொலைக்காட்சியில் தொல்லை காட்சி பார்த்தபடியே தூங்கி விட்டால் வரும் கனவிலும் அந்த சீரியல் ஓடிகொண்டு இருக்கும்.  ஆனா அடுத்த எபிசோடுகள் ஓடுமான்னா பெரும்பாளும் இருக்காது.  அவர் இதுவரை
பார்த்த எபிசோடுகளில் இருந்தே முன்னுக்கு பிறனான காட்சிகள் ஓடும்.

முகப்புத்தகத்தில்,,அதாங்க பேஸ்புக்கில் மேய்ந்தபடியே தூங்கி விடுபவர்களுக்கு வரும் கனவில் ஸ்டேடஸ் போடுர மாதிரியோ கமெண்ட் செய்யரமாதிரியோ அதிகமான லைக்குகள் கமெண்டுகள் அவருக்கு விழுவதுமாதிரியும் கனவுகள் ஓடும்.

பாத்ரூமில் தண்ணீர் சொட்டும் சப்தம் கூட டுவிஸ்டாக கனவில் மிதப்பவருக்கு அருவி சப்தமாக இருக்கும்.

குடிதண்ணீர் வரலயே நாளக்கி என்ன செய்வது என்ற சிந்தனையில் தூங்கு
பவருக்கும் வரண்ட பாலைவனத்தில் தவிப்பது போல கனவு வரலாம்.

ரயில் செல்லும் சப்தம் கேட்கும் தொலைவில் இருப்பவர்களுக்கு
அந்த சப்தம் வேறு பல விநோத கனவுகளைத் தருகிறது.

எங்கோ தூரத்தில் சென்று கொண்டிருக்கும் மோட்டார் பைக்கின் சப்தம் கூட
கனவில் யானையின் பிளிரலாக கேட்கும்

வெளிப்புர சப்தங்களை உணரும் நம் மூளை ஒரு ஓவியனின், சிறந்த எழுத்தாளரின் திறமையோடு கதை சொல்லி செல்கிறது.  பல எழுத்தாளர்கள் கனவில் முடிவு கிடைக்கிறது.  ஓவியனுக்கு வரும் கனவில் அழகிய ஓவியங்களையும், பெரிய பாராங்கல் கனவில் கானும் சிற்பி அழகிய சிலையையும் வடிக்கிறான். பிச்சை காரனுக்கும் பலவிதமான  உணவுகள் சாப்பிடுவது போல கனவு வருகிறது. கணித புரபசருக்கு பல்வித குறியீடுகளும் கணக்கீடுகளும் ஓடும்.

பெரும்பாலான கனவுகள் ஞாபகத்தில் இருப்பதில்லை.  கனவு முடியும் போது
விழிப்பு வந்தால் கொஞ்சம் ஞாபகப்படுத்த முடிகிறது.

கனவுகளால் எந்த பிரியோஜனமும் இல்லை என்று சொல்ல முடியாது
கனவுகள் ஆராய்ந்தால் நம் பிரச்சனைகளுக்கு (ஆலோசனை) தீர்வும் கிடைக்கும்.

வெளிப்புற சப்தங்கள் கனவை தடை செய்வது என்பது அந்த சப்தமானது பெரிதாக இருந்தால் மட்டுமே. தூக்கம் கலைக்காத சப்தங்கள் கனவில் இருப்பவருக்கு விசுவல் எபெக்ட்டோடு செல்லும்.

ஏன் அவரின் குறட்டை சப்தம் கூட கனவில் பல டிவிஸ்ட்டுகளை கொடுக்கலாம் !! .


Download As PDF

Wednesday, February 1, 2012

கனவு நெசமாகும்னு சொல்ராங்கலே! அது உண்மையா?


நான் கண்ட கனவு பலிச்சிடுச்சி என்று சிலர் சொல்கிறார்கள். நான் கண்ட கனவு பலிச்சிடுமோ அது மாதிரியே ஆகிடுமோ ? என்று சிலர் பயப்படுகிறார்கள்.

கனவு கண்டவர்களுக்கு அது முழுக்க ஞாபகம் இல்லாத போது எதற்கு பயப்படுகிறார்கள். இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது திரும்ப திரும்ப வரும்போது யோசிக்கவேண்டிய சமாச்சாரம் தான்.

இன்னொரு வகை அதாவது அதி அற்புத கனவுகள். எதிர்பாரத ஒரு விசயம் நடக்கும் போது நம்ம மனசுல ரீவைண்ட் பன்னி பார்தோம்னா சில நினைவுகள் பிடிபடும். அது பின்னாலேயே போனோம்னா கனவு கண்டது ஞாபகம் வரும். அப்ப நாம் என்ன சொல்றோம் கனவு பலிச்சிடுச்சி. அப்ப கனவு நமக்கு தேவையா இருக்கு. நல்லது நடந்தா கனவை ஆதரிக்கிறோம் இல்லேனா அத எதிர்க்கிறோம். இதுதான் மனித இயல்பு.

உள் மனதில் தண்ணீர்க்குள் இருக்கும் சிறிய நீர்க்குமிளி மாதிரி இருக்கும் நினைவுகள் மொல்ல விடுபட்டு மேலெழும்பி வெளிமனதை தொடுகிற போது நாம் கனவை பற்றி உணர்கிறோம்.

சாதாரணமான உணர்ச்சிகள், ஒழுக்கம் பற்றிய கோட்பாடுகள்,உலகை பற்றிய அறிவு, புலண்களை அடக்கியாலும் தன்மை, இவற்றை கொண்ட வெளிமனதை நாம் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொள்கிறோம். இந்த வெளிமனம் தான் நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்கிறது.

உள்மனம் எப்படிப்பட்டது? அதன் செயலை நாம் சாதாரணமாக உணர்வதில்லை. பரம்பரை பரம்பபரையாக ஜீன் மூலமாக கடத்தப்பட்ட பண்புகள், உணர்ச்சிகள், மதி நுட்பம், குழந்தை பருவம் முதல் நம் மனதில் பதிந்து விட்ட ஆசைகள், அபிலாஷைகள், விருப்பு வெருப்புகள் நிறைந்தது நம் உள் மனம். அதில் உயர்ந்த லட்சியங்கள் இருக்கலாம்,விகாரமான வெறி உணர்ச்சிகளும் பதிந்து இருக்கலாம். எப்படி ஒரு பயங்கரமான குகைக்குள் நவரத்தினங்களும், வைர வைடூரியங்களும், காட்டு விலங்குகளும்,கலைப்பொக்கிசங்களும் நிறைந்திருக்குமோ அது போல.

நன்மை அல்லது கெடுதல் நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்துவது இந்த உள்மனம் தான். பின்னால் இன்பங்கள் அல்லது துன்பங்கள் உண்மையிலே நடக்கும் போது நாம் இந்த உள் மனதை உணர்ந்து கொள்ளலாம்.

சில சமயங்களில் நாம் சொல்ல அல்லது செய்ய வெட்கப்படும் நடவடிக்கைய நம்மை அறியாமல் நாம செய்திருப்போம் அது உள் மனசோட காரியந்தான்.

கனவுகள் நம் எதிர்காலத்தை உணர்த்துகின்றனவா? மனித இனம் தோன்றிய நாள் முதல் கேட்க படும் கேள்வி. எதிர்காலத்தை திட்டவட்டமா படம் பிடித்து காட்டுகிறது என்று சொல்ல முடியாத போதிலும் சூசகமா தெரிவிக்கிறது என்று சொல்லலாம். ஏன்னென்றால் கனவு குறிப்பிட்ட மனிதனின் கடந்தகால வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுதான் வருகிறது அந்த பழைய வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாமல் எந்த எதிர்கால மாறுதலும் உண்டாக முடியாது.

ஒருவன் தன்வாழ்க்கையில் திடு திப்பென்று செய்யும் எந்த ஒரு புதிய காரியத்தைப் பற்றிய உணர்வு அன்று வரை அவன் மனதில் பதிந்த ஒன்று அந்த உணர்வு வெடித்து இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். Download As PDF

Saturday, January 14, 2012

இனியவை கூறல் -(நான்கு) கனவுகளும் அதன் பலன்களும் !

சில உதாரணங்களை இங்கே தருகிறேன். அதற்கு முன் சில விளக்கங்கள்.
முதலில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கனவுகள் வருகின்றன ? எதனால் அம்மாதிரியான கனவு ஏற்பட்டது. 
"பலவிதமான ஆசைகள், விருப்பமான உணவுகளை சாப்பிடத்தோன்றுவது. பிடித்த விளையாட்டு பொருள்களின் மேலான ஈர்ப்பு, தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்றவிருப்பம், பய உணர்ச்சி, கவலைகள், மற்றவர்களின் மேல் ஏற்படும் பொறாமை"
இதுபோன்ற காரணங்களினால் இந்த மாதிரியான கனவுகள் வருகின்றன எனலாம்.

நண்பர்களுடன் விளையாடுவது போன்ற கனவு,  எதையோ செய்வது, எங்கோ வித்தியாசமான இடங்களுக்கு செல்வது போல,  பள்ளிகூடத்தில் வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக் கென்று பதில் சொல்லி பாராட்டு பெறுவது போல,  தனக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவது போன்று.   நாய்,பூனை அல்லது ஏதேனும் ஒரு உருவம் (பேய், பிசாசு) துரத்துவதாகவோ துன்புருத்துவதாகவோ, அப்பா, அம்மா அடிப்பது போல, தண்டனை பெற்று அழுவது,கீழே விழுந்து அடிபடுவது .....

முக்கியமாக கனவுகள் பெரும்பாலும் முழுக்க ஞாபகம் இருக்காது சட்டென்ற விழிப்பினால் ஒரளவு ஞாபகம் இருக்கும். முக்கியமாக நீங்கள் கவனித்தீர்களானால் மேற்படிகனவுகளினால் குழந்தைகளின் மன அழுத்தம் வெளிப்பட்டு தண்டனையோ, தீர்வோ கிடைத்து விடுகிறது. மனம் அமைதி பெருகிறது.   

கனவின் இலட்சியம் மன விருப்பங்களை பூர்த்தி செய்வது தான்
சுருக்கமாக மூன்று முக்கிய முடிவுகள் கிடைக்கிறது.
1. விருப்பத்தின் காரணமான கனவு (Wishfulfilment Dreams)
2. பயம் பரபரப்பு கவலை காரணமான கனவு (Anxiety Dreams)
3. தண்டனை பெருவதான கனவு (Panishment Dreams)

பெரியவர்களின் கனவுகள் குழப்பம் நிறைந்ததாகவும், மாற்று உருவம் கொண்டதாகவும் இருக்கும்.
சிந்தனையாளர் பிராய்டு தன் புத்தகத்தில் பல்வேறு விதமான கனவுகள் மற்றும் தீர்வுகளை குறிப்பிடுகிறார்.

இது ஒரு திருமணமான பெண்னின் கனவு :  " நான் ஒரு விருந்து வைக்க விரும்பினேன் ஆனால் வீட்டில் பொரித்த மீனை தவிர வேரொன்றும் இல்லை கடைக்கு போய் ஏதாவது வாங்கிவரலாம் என்று இருந்தேன் விடுமுறை தினம் என்பதால் கடைகளும் மூடி இருந்தது. சரி பேக்கரி கடைக்கு போன் செய்து ரொட்டி கொண்டுவர சொல்லலாம் என்றால் போன் வேலை செய்யவில்லை (out of order) எனவே விருந்து கொடுக்கும் எண்ணத்தை கைவிடவேண்டியதாயிற்று ஏன் இந்த கனவு ஏற்பட்டது "

அந்த பெண்ணை பல கேள்விகள் கேட்டார். அவரிடம் தெரிந்துகொண்ட விசயம்.

அந்த பெண்ணின் கணவன் அவளிடம் தான் குண்டாகி வருவதாகவும் அதனால் உடற்பயிற்சியும் சாப்பிடுவதை குறைக்கவும் செய்யப்போவதாகவும் கூறியிருந்தான். அவனுக்கு பல பெண்களைத் தெரியும் அவளில் ஒருத்தியை பற்றி இவளிடம் புகழ்ந்து பேசுவான். மனைவியை விட அவள் நல்ல உடல் வாகு கொண்டவள் என்பான்.

ஒரு நாள் அந்த பெண் இவளை சந்தித்த போது " நீங்க எப்ப விருந்து கொடுக்க போகிறீர்கள் உங்க வீட்டு சாப்பாடு நல்ல இருக்கும்னு சொன்னாரு" என கேட்டாள்.

இந்த பெண் மனதில் தன்னுடைய சாப்பாட்டை சாப்பிட்டு இன்னும் தன் கணவனை வசீகரிப்பாள் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த விசயங்களை வைத்து பார்தால் கனவின் பலன் புரிகிறது. இந்த பெண்மணிக்கு விருந்து கொடுக்க விருப்பமில்லை.அது சரி ஏன் பொரித்த  மீன் என்றால் அது கணவனின் தோழிக்கு பிடித்த உணவு.

இன்னும் கனவுகளை பற்றி பிறகு எழுதுகிறேன்.
Download As PDF

Wednesday, January 11, 2012

இனியவை கூறல் - (மூன்று ) கனவு காண்பது நல்லதா?



நீங்கள் கனவு காண்பது உண்டா? இதை படித்தபிறகு கூட உங்களுக்கு கனவு வரலாம் !. 

கனவு கண்டுதான் ஏராளமான கதைகளும், கவிதைகளும், பாடல்களும்,விஞ்ஞான ஆராய்சிகளும், எண்ணற்ற கண்டுபிடிப்புகளும், ஏன் திரைப்படங்களும் உருவாகின.


கனவு என்பது என்ன?, மனிதன் ஏன் கனவு காண்கிறான்?, கனவுகளுக்கும் மனித உள்ளத்திற்கும் என்ன சம்பந்தம்? கனவுகள் நம் வாழ்க்கையின் உட்பொருளை உணர்த்துகின்றனவா? கனவு மனித வாழ்க்கையில் எப்படி எப்போது ஏற்பட்டது? இப்படி பல  கேள்விகளுக்கு விடை தேடினார் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு.

தூங்கும் மனம் தன் நினைவுகளை படமாக்கி பார்கிறது அதுதான் கனவு. படமாக்குவதும் மனம்தான் பார்பதும் மனம்தான் என்ற உண்மையை இங்கே நினைவு வைத்துக் கொள்ளவேண்டும். மனிதன் எப்போது சிந்திக்க தொடங்கினானோ அப்போதிருந்தே கனவு தொடங்கிவிட்டது.



நினைவு மனத்தின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. கனவுகள் மனதின் விருப்பமே அடிப்படை நம்மனது அதாவது நினைவுகள் போகும் போக்கிலேயே கனவு தொடரும் அல்லது தடைபடும்.

கனவு வயது அடிபடை  அடிபடையில் பல வகைகளாக பிரிக்கபடுகிறது.

(குழந்தை கனவுகள்) : விருப்பம் காரணமாக ஏற்படுவது ,அச்சம் கவலை பரபரப்பு காரணமாக ஏற்படுவது, தண்டணை அனுபவிப்பதாக ஏற்படுவது.
பெரியவர்களின் கனவுகளின் வகைகள் : நிர்வாணகனவுகள் அல்லது அரைகுறை ஆடை அணிந்திருப்பதாக தோன்றுவது, பரிட்சை கனவுகள், உருவககனவுகள், கனவில் தோன்றும் எண்கள் மற்றும் பேச்சுகள், அர்த்தமற்ற கனவுகள்.

கனவுகள் வெளிப்படையாக ஆராயாமல் அதன் ஆழத்தில் உள்ள உண்மையை ஆராய வேண்டும். உண்மையில் கனவு காணும் போது மனிதன் தூங்கி கொண்டு இருந்தாலும் விளித்திருக்கும் அவன் மனம் கனவுகளை தணிக்கை செய்கிறது. வேண்டாத உணர்ச்சிகள் வெளிப்படாமல் மனத்தடையிடுகிறதாலேயே வெளிப்படையான கனவு அர்த்தங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.

கனவுகள் மனதின் நிறைவேராத ஆசைகள் பூர்த்தி செய்து வைப்பதற்காக உண்டாகின்றன. உறங்குகின்ற மனதின் வேலையே கனவு தான். நமது உள்மனதில் அமுங்கி கிடக்கும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கனவு. குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் நமக்கே மறந்து போன விஷயங்கள் கனவாக வெளிப்படுகிறது. நாம் விரும்பாத நிகழ்வுகளை தடை செய்வதும் மனது தான். மனது தணிக்கையை மீறி தான் நினைக்கும் விசயத்தை உருவங்களாகவோ சங்கேத குறிகளாகவோ வெளிப்படுத்துகிறது.

கனவுகள் குறித்த ஆராய்ச்சி மருத்துவ உலகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

நிறைய புத்தகங்கள் கனவுகளை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டன.


கனவுகள் எதிர்காலத்தைப்பற்றிய சுசகமான அறிவிப்பை மனிதனுக்கு உண்டாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

[கனவை பற்றிய ஆராய்ச்சி செய்தவர் சிந்தனையாளர் சிக்மெண்ட் ப்ராய்டு  (Sigmund Freud) பற்றிய சிறுகுறிப்பு அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் "the interpretation of dreams" அதாவது "கனவுகளின் உட்பொருள் விளக்கம்" ( ஆண்டு 1900 ).   யுகோஸ்லெவேகியா  நாட்டில் பிறந்தவர். அவர் ஒரு யுதர் என்பதால் ஹிட்லரின் நாஸிப்படையால் வயதான காலத்தில் சொல்லெனா துன்பங்களை அனுபவித்தவர். பின் ஆஸ்திரிய நாட்டை விட்டு  துரத்தப்பட்டார் தனது 83வது வயதில் இங்கிலாந்தில் (1939) மரணமடைந்தார்.]


 
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)