பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோவின் பின் சக்கரத்தை கலட்டிக்கொண்டிருந்தார்.
"ஏன் பஞ்சரா ? "
"போர்டைப்பாருங்க ஜி"
போர்டில் "பார்க்கிங் டுவீலர் "
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *
வெளிநாடு சென்ற சர்தார் பீச்சில் குளித்து விட்டு ஹாயாக குடையின் கீழ் படுத்துகிடந்தார்.
வெள்ளைக்கார பெண் அவரை கடந்து செல்லும் போது "ஆர் யூ ரிலாக்ஸிங் ?" என்று கேட்டார்
அதற்கு அவர் " நோ ...நோ ஐ ஆம் பாண்டா சிங்" என்றார்
திரும்பவும் இன்னொரு பெண்னும் இதே கேள்வியை கேட்க, இந்த இடம் சரிப்படாது என்று இடத்தை மாற்றினார்.
அங்கே ஒரு சர்தார்ஜி இருக்க இவர் தம் இங்கிலீசு புலமையை காட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.
அவர் படித்த சர்தாஜி சிரித்துக்கொண்டே "யா...ஐ ஆம் ரிலாக்ஸிங்"
"பொடேர் "என்று அவரை அடித்த சர்தாஜி "உன்ன தான் அங்க எல்லோரும் தேடிட்டு என்ன கேட்கிறாங்க கொய்யால நீ இங்க இருக்க"
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *
மைசூர் அரண்மனையில்
"ஜீ இதில உட்காரக்கூடாது திப்பு சுல்தானோட நாற்காலி"
"ஒயே...கவலப்படாத அவரு வந்தவுடனெ ஏந்திருச்சுருவேன்"
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
மாசமாயிருக்கும் தன் மனைவிக்கு சர்தார் SMS அனுப்பினார்.
சிறிது நேரம் கழித்து ரிபோர்ட் வந்தது
பல்லே...பல்லே என்று குதிக்க ஆரம்பித்தார் கேட்டதற்கு
மெசேஜ் செய்தியை காட்டினார் . SMS ரிபோர்ட் "Delivered"
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
ரயில் வருவதற்காக காத்திருந்த சர்தார்....ஓடிப்போய் ஓரமாக நின்றுகொண்டார்.
ஏன் ? என்றால் ஸ்பீக்கர் சொன்னத கேட்கலியா
"காடி ப்ளேட்பார்ம் பர் ஆ ரஹி ஹை" கத்தினார்.
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
" எழுதினதை காட்டு "
சர்தார் : "நீங்க அழிச்சப்பவே நானும் அழிச்சுட்டேன் மிஸ்"
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
சர்தாருக்கு கல்யாணம் மார்ச் 2 ம் தேதி கல்யாணம் முடிவாகி இருந்தது.
இந்தி, தமிழ், தெரியாதவர்களிடம் ( ! ! ?) இன்விடேசன் கொடுத்து விட்டு இப்படி சொன்னார்
"மேரேஜ் ஆன் மார்ச் செகண்ட், ப்ளீஸ் கம் ஆன் ஃபர்ஸ்ட் நைட்"
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர் "நெப்போலியன் டிக்ஸ்னெரியில் "முடியாது "
"பயம்" என்ற வார்த்தைகள் இல்லை"
சர்தார் "இப்ப யோசிச்சு என்ன செய்ய வாங்கும்போதே பார்த்து வாங்கனும்"
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
இரவில் சர்தாரின் அறையின் வெளியே குரல் கேட்டது...
"புரிஞ்சிக்கோ என்ன தொந்தரவு செய்யாத.. நேத்து ராத்திரியே நல்லா தூங்க
முடியல..என் வாழ்க்கையோட விளையாடாத "
காலையில்...
ஜி...யாரோட பேசிட்டு இருந்தீங்க
பேசிட்டா பொளம்பிட்டு இருந்தேன் கொசு தொல்ல தாங்கல..
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
ஸ்கூல் டேஸ்..
ஆங்கில வாத்தியார் சர்தாரிடம் இந்த வாக்கியத்தை கொடுத்து past tence ல்
எழுத சொன்னார் "I make a mistake"
என்ன எழுதி இருப்பார்....
இப்படித்தான்..
"I was made by a mistake"
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
சர்தார் பல சமயங்களில் போனில் மணிக்கணக்காக பேசுவார்...
ஒரு நாள் அதே போல போன் பேசிவிட்டு வைத்து விட்டார்
அவர் மனைவி "என்ன சீக்கிரம் முடிச்சிட்டீங்க 25 நிமிட் தானே ஆச்சு"
சர்தார் "அது ராங்க் கால் ஸ்வீட்டி" சொல்லிவிட்டு வெளியே நடந்தார்.
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
சர்தாரிடம் ஒருவர் " நீங்க எங்க பிறந்தீங்க ? "
"பஞ்சாப்"
எந்த பகுதி ?
பகுதியா எல்லாம் இல்ல பாய்... எல்லாம் முழுசா தான்
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
விவாகரத்துக்காக சர்தாரும் அவருடைய மனைவியும் கோர்ட்டில் ;
உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுமானால் எப்படி பிரிப்பது ?"
குசு ..குசுவென்று மனைவியிடம் பேசிவிட்டு சொன்னார்
"அடுத்த வருசம் பிரிச்சிறோம் மேம் சாப் "
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
டாக்டர் படித்து விட்டு முதல் முறையாக ஒரு நோயாளிக்கு வைத்தியம் பார்த்தார்.
டார்ச் அடித்து கண்கள், காதுகள்,, நாக்கை நீட்ட சொல்லி பார்த்துவிட்டு
"லோவா இருக்கே"
டாக்டர் நீங்க ப்ரஸர் பார்க்கவேயில்லையே
"டார்ச் பேட்டரி லோவா...இருக்கே "
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
"ஒருவாரமா யாருக்கு பேசினாலும்....கர்ர்ர்ர்ர்... இந்த பொன்னு ரொம்ப
தொல்ல குடுக்குதுபா..."
பக்கத்தில் இருந்தவர் போனை வாங்கி கேட்டார்
"ப்ளீஸ் ரீ சார்ஜ் யுவர் கார்ட் "
*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @
தொடர்புடைய பதிவுகள் :
\\ஆங்கில வாத்தியார் சர்தாரிடம் இந்த வாக்கியத்தை கொடுத்து past tence ல்
ReplyDeleteஎழுத சொன்னார் "I make a mistake"
என்ன எழுதி இருப்பார்....
இப்படித்தான்..
"I was made by a mistake"\\ This is changing from active voice to passive voice.
நகைச்சுவையில் லாஜிக் பார்க்கக்கூடாதும்பாங்க... இலக்கணம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லலியே... அதானே.
Deleteஹிஹிஹி...
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteசுத்தமாக சிரிப்பு வரவில்லை..... இதே ஜோக்குகளை, சர்தார்ஜி என்று நீங்கள் குறியிட்டுள்ள இடங்களில் தமிழன் என்று குறிப்பிட்டு ஒரு பஞ்சாபி பதிவை போடுவார்.... அதையும் படிக்கவும் ....
ReplyDeleteஇனியவை கூறல் என்று சொல்லிவிட்டு நாட்டின் வீரமான சர்தார்ஜி மக்களை இப்படி கிண்டல் செய்வது சரியல்ல.... #வருத்தம் :-(
//ஒரு சர்தாஜி ஜோக்...
Deleteநியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.
அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.
அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி,
"நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், "உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் வேறு விட்டார் சர்தார்ஜியிடம்.
விடுவாரா நம்ம சர்தார்ஜி... "உள்ள வா... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு", சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.
விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ஒரு மேகிக் காட்டுறேன் பார்க்கிறியா?..
கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.
கவுன்டரில் இருந்தவர், " எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?."
சர்தார்ஜி அமைதியாக பதில் அளித்தார், " என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு... நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்...'
#சப்பாத்தி சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா...//
நண்பர் விமல் ராஜ் ,...இந்த ஜோக் உங்கள் தளத்தில் நான் படிச்சது. (சிரிப்பு 11: ) நான் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல நகைச்சுவை கண்னோட்டத்திலேயே பார்க்க வேண்டும் அது ஒரு கேரக்டர்க்காக உருவாக்கப்பட்டது. (யார் எப்போது என்பது தெரியவில்லை) அவர்கள் மதராஸி என்று எழுதுகிறார்கள். அவர்களை கீழ்நிலைப்படுத்துவதும் எம் நோக்ககமல்ல. நான் சர்தார்ஜியை ஒரு நகைச்சுவை நாயகனாகவே பார்க்கிறேன்.
அன்பரே... நான் தேடி கண்டு பிடித்து எழுதிய ஜோக் தான் அது ... மறுக்கவில்லை...இதில் சர்தார்ஜியை (அமெரிக்கனை விட) கொஞ்சம் புத்திசாலியாக/சாமர்த்தியசாலியாக காட்ட வேண்டி அப்படி எழுதி இருந்தேன்...
ReplyDeleteஎதிர் கமெண்ட் போட்டவுடன் என் பதிவுகளை அனைத்தையும் தேடி படித்து கண்டுபிடித்தீர்களா?? அல்லது ஏற்கனவே படித்துளீர்களா என்று புரியவில்லை...ஹா..ஹா,,,
வெள்ளையர்கள் காலத்தில் இந்தியர்களை (சர்தார்ஜிகளை = பஞ்சாபி சிங்குகள் + இப்போதைய பாகிஸ்தான் சிங்குகள் ) கிண்டல் செய்யவே இத்தகைய ஜோக்குகள் வலம் வர ஆரம்பித்தது.... நாமும் அதை வெறும் ஜோக்குகள் என்று எண்ணியே சொல்லி பரப்பி கொண்டிருக்கிறோம்... ( இது நான் கேள்விபட்டது...)
சர்தார்ஜியை ஒரு நகைச்சுவை நாயகனாக நான் பார்கிறேன் என்று நீங்கள் சொல்வதையும் நான் ஒப்பு கொள்கிறேன்..
தமிழில் மூடன்/மட்டி கதைகள், சுப்பாண்டி கதைகள் என்று சில உண்டு.. அதில் அவர்களை யாரும் நாயகனாக பார்க்க மாட்டார்களே ... அவன் ஒரு முட்டாள்...அவர்களை வைத்து கிண்டல் தான் செய்வோம்...
அதே போல தான் நீங்கள் சர்தார்ஜியை பற்றி சித்தரிப்பது போல 'எனக்கு' தோன்றியது.. அந்த வருத்தத்தைதான் நான் என் முந்தைய பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.....
மற்றபடி உங்கள் மேல் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை எனக்கு......
சர்தார் எனக்கு நகைச்சுவை நாயகனாக தெரிகிறார் எனச் சொன்னேன். கிண்டலும் கோமாளித் தனமுமாக தெரியும் அந்த ஜோக்குகளின் உள்ளே ஒழிந்திருக்கும் வெகுளி தனம் மட்டுமல்ல...பலது நம்மை சிந்திக்க வைக்கவும் தவறுவது இல்லை. நான் தொகுத்தளித்து இருக்கும் 3 பதிவுகளையும் கவனித்தால் தமிழோடு ஒன்றியவராக, தமிழனில் ஒருவராக தோற்றம் அளிப்பதை உணர முடியும். (தெனாலியைப் போல) மேலும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட நகைச்சுவைகளை தவிர்த்து இருக்கிறேன் என்பதை அவதானிக்கலாம். உங்களின் பின்னூட்டம் வாயிலாகவே என் மனதில் உள்ள்தையும் வெளிக்காட முடிந்தது. அதற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், விமல் ராஜ்.
Delete///ஒழிந்திருக்கும் /// தவறு.... ஒளிந்திருக்கும் என வாசிக்கவும்
Delete