- ஒரு காரியத்தை செய்யும் பொழுது முழு கவனத்தையும் அதிலேயே செலுத்தவும் வேறு சிந்தனை களுக்கு இடம் கொடாதீர்கள்.
- "என்றும் நன்றே செய் நன்றும் இன்றே செய்" என்பதை மனதில் கொண்டு தாமதமின்றி தொடங்கி விடுங்கள்.
- எப்போதும் விழிப்பாய் இருங்கள் நம்மை கவிழ்க்க ஒருவன் இருக்கிறான் என்பதை மனதில் கொண்டிருங்கள்.
- ஓய்வு நேரத்தை என்றும் வீணாக்காதீர்கள். ஓய்வாக இருக்கும் போது நாம் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை எப்போதும் அசை போடுங்கள் உடலுக்கு ஓய்வு அவசியம் மூளைக்கு ஓய்வு என்பது ஒன்றை பற்றியே சிந்திக்காமல் மாற்றி யோசிப்பது தான்.
- எப்போதும் அறிவு பசியுடனே இருங்கள். நல்ல நேரத்தை தவறவிடாதீர்கள்.
- துடிப்பும் வழிப்பும் உள்ளவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வர். சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பர்.
- பயம் ஆழ்ந்த கவலை நம் உடலை கெடுக்கிறது.
- எந்த காரியத்தையும் ஊன்றிபார்த்து கவனமாய் படித்து ஆழ்ந்து யோசித்து, அது குறித்து இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருங்கள் அது உங்களின் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
- மனவெழுச்சியும் தீவிர எண்ணமும் எந்த காரியத்தையும் அவசியம் வெற்றி பெறச்செய்யும்.
- மனோதிடம் நம் வாழ்வின் முதுகெலும்பு.
- எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள் உங்கள் சுற்று வட்டாரத்தில் சந்தோஷ காற்றை தவள விடுங்கள்.
- சிறியவர் பெரியவர் என்றில்லாமல் அனைவரிடமும் இன் முகத்தோடு அன்புடன் பழகுங்கள்.
- குடியா முழுகிடும், எழவாய் போச்சு, ஏதும் நடக்காது போன்று எதிர்மறையாக பேசுவதை தவிருங்கள்.
- வாக்கு சுத்தத்தை மறக்காதீர்கள் எதிலும் ஒரு நேர்மையை கடைப்பிடியுங்கள்.
- அவசரப்பட்டு எந்த காரியத்தையும் உடனே தீர்மானிக்காதீர்கள். மனதினை கேளுங்கள் அதுவே சரியானது.
- கோபத்தை விட்டொழியுங்கள்.
- வாழ்க்கையில் முன்னேற்றமடைய ஆசையும் ஆர்வமும் எப்போதும் வளர வேண்டும் அதுவே மனோவலிமை.
- மனோவலிமை உள்ள இடத்தில் பகுத்தறிவு பளிச்சிடும்.
- தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள என்றும் கூச்சப்படாதீர்கள்.
- நல்ல குணம் படைத்த நண்பர்களிடம் பழகுங்கள் உயர்ந்த சிந்தனை தரத்தக்க நூல்களை படியுங்கள். தன்னம்பிக்கை பெற இது அவசியம் உதவிபுரியும்.