முதலில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கனவுகள் வருகின்றன ? எதனால் அம்மாதிரியான கனவு ஏற்பட்டது.
"பலவிதமான ஆசைகள், விருப்பமான உணவுகளை சாப்பிடத்தோன்றுவது. பிடித்த விளையாட்டு பொருள்களின் மேலான ஈர்ப்பு, தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்றவிருப்பம், பய உணர்ச்சி, கவலைகள், மற்றவர்களின் மேல் ஏற்படும் பொறாமை"
இதுபோன்ற காரணங்களினால் இந்த மாதிரியான கனவுகள் வருகின்றன எனலாம்.
நண்பர்களுடன் விளையாடுவது போன்ற கனவு, எதையோ செய்வது, எங்கோ வித்தியாசமான இடங்களுக்கு செல்வது போல, பள்ளிகூடத்தில் வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக் கென்று பதில் சொல்லி பாராட்டு பெறுவது போல, தனக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவது போன்று. நாய்,பூனை அல்லது ஏதேனும் ஒரு உருவம் (பேய், பிசாசு) துரத்துவதாகவோ துன்புருத்துவதாகவோ, அப்பா, அம்மா அடிப்பது போல, தண்டனை பெற்று அழுவது,கீழே விழுந்து அடிபடுவது .....
முக்கியமாக கனவுகள் பெரும்பாலும் முழுக்க ஞாபகம் இருக்காது சட்டென்ற விழிப்பினால் ஒரளவு ஞாபகம் இருக்கும். முக்கியமாக நீங்கள் கவனித்தீர்களானால் மேற்படிகனவுகளினால் குழந்தைகளின் மன அழுத்தம் வெளிப்பட்டு தண்டனையோ, தீர்வோ கிடைத்து விடுகிறது. மனம் அமைதி பெருகிறது.
கனவின் இலட்சியம் மன விருப்பங்களை பூர்த்தி செய்வது தான்.
சுருக்கமாக மூன்று முக்கிய முடிவுகள் கிடைக்கிறது.
1. விருப்பத்தின் காரணமான கனவு (Wishfulfilment Dreams)
2. பயம் பரபரப்பு கவலை காரணமான கனவு (Anxiety Dreams)
3. தண்டனை பெருவதான கனவு (Panishment Dreams)
பெரியவர்களின் கனவுகள் குழப்பம் நிறைந்ததாகவும், மாற்று உருவம் கொண்டதாகவும் இருக்கும்.
சிந்தனையாளர் பிராய்டு தன் புத்தகத்தில் பல்வேறு விதமான கனவுகள் மற்றும் தீர்வுகளை குறிப்பிடுகிறார்.
இது ஒரு திருமணமான பெண்னின் கனவு : " நான் ஒரு விருந்து வைக்க விரும்பினேன் ஆனால் வீட்டில் பொரித்த மீனை தவிர வேரொன்றும் இல்லை கடைக்கு போய் ஏதாவது வாங்கிவரலாம் என்று இருந்தேன் விடுமுறை தினம் என்பதால் கடைகளும் மூடி இருந்தது. சரி பேக்கரி கடைக்கு போன் செய்து ரொட்டி கொண்டுவர சொல்லலாம் என்றால் போன் வேலை செய்யவில்லை (out of order) எனவே விருந்து கொடுக்கும் எண்ணத்தை கைவிடவேண்டியதாயிற்று ஏன் இந்த கனவு ஏற்பட்டது "
அந்த பெண்ணை பல கேள்விகள் கேட்டார். அவரிடம் தெரிந்துகொண்ட விசயம்.
அந்த பெண்ணின் கணவன் அவளிடம் தான் குண்டாகி வருவதாகவும் அதனால் உடற்பயிற்சியும் சாப்பிடுவதை குறைக்கவும் செய்யப்போவதாகவும் கூறியிருந்தான். அவனுக்கு பல பெண்களைத் தெரியும் அவளில் ஒருத்தியை பற்றி இவளிடம் புகழ்ந்து பேசுவான். மனைவியை விட அவள் நல்ல உடல் வாகு கொண்டவள் என்பான்.
ஒரு நாள் அந்த பெண் இவளை சந்தித்த போது " நீங்க எப்ப விருந்து கொடுக்க போகிறீர்கள் உங்க வீட்டு சாப்பாடு நல்ல இருக்கும்னு சொன்னாரு" என கேட்டாள்.
இந்த பெண் மனதில் தன்னுடைய சாப்பாட்டை சாப்பிட்டு இன்னும் தன் கணவனை வசீகரிப்பாள் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த விசயங்களை வைத்து பார்தால் கனவின் பலன் புரிகிறது. இந்த பெண்மணிக்கு விருந்து கொடுக்க விருப்பமில்லை.அது சரி ஏன் பொரித்த மீன் என்றால் அது கணவனின் தோழிக்கு பிடித்த உணவு.
இன்னும் கனவுகளை பற்றி பிறகு எழுதுகிறேன்.
கனவுல இவ்வளவு இருக்கா அட
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete