Followers

Saturday, March 17, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)

பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்

சென்ற பதிவில் #KR  ஒரு கருத்தை முன் வைத்தார் குயில், முட்டையை அடைகாக்காமல் காகத்தின் கூட்டில் போட்டு விடுவது தெரியாத முட்டாளா காக்கை இருக்கே ? என்று மனிதர்களை, அவர்களின் செயல்களையும் கூட ஞாபக வைத்து  அடையாளம் கண்டு கொள்கின்றன, அப்படியாயின் இந்த முட்டை மாறுபாட்டை அவைகளால் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாதே என்ற கேள்வி எழுகிறது.   அடை காத்து பிறந்த பின் குயில் குஞ்சானது அதனோடு இருக்கும் காக்கைகளை போலவே சப்தமிட்டு நடிக்கிறதா? தெரியவில்லை.   தாய் குயில் ஒரு கட்டத்தில் அதை தன்னோடு கூட்டி சென்று விடுகிறது என நினைக்கிறேன்.

காக்கைகளின் புத்திசாலி தனத்தை அது கட்டும் கூட்டில் பயன்படுத்தும் பொருட்களை( டூல் ) பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

மனிதர்களில் உணவு பழகக்கம் அசைவம் / சைவம் ( ?! ) போல காக்கைகள் இருக்கவும் வாய்ப்பு உண்டு.


நியூசிலாந்தின் கியா (கிளி) பறவைகளிடம் ஒரு ஆராய்சி செய்தார்கள் முடிவில் இவைகள் கிப்பன், ஆந்த்ரபோட் குரங்குகளை காட்டிலும் புத்தி சாலியானவை என்று நிரூபமானது.  நியூசிலாந்து வாசிகள் ஒரு காலத்தில் இவைகளை சுட்டு தள்ளினார்கள் காரணம் என்ன வென்றால் இவைகள் ஆட்டுகளை (ஷீப்) கொன்று விடுகின்றன ஆனால் உண்மை என்னவென்றால் இவைகள் "சைவ" பட்ஷிணிகள்.


பறவைகள் ஞாபக சக்தி ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. வலசை பறவைகள் நாடு விட்டு நாடு கடல் கடந்தும் வருவதை பார்க்கிறோம் எதற்காக வருகின்றன என்பதில் முக்கிய காரணம் இனப் பெருக்கத்திற்காக என்று சொல்லலாம்.  அப்படி கண்டம்  விட்டு கண்டம் வந்த பறவைகள் இங்கே குஞ்சு பொரித்து அவைகள் வளர்ந்த பின் தம் தாய் நாட்டிற்கு திரும்பி விடுகின்றன.  இப்படி வலசை வரும் பறவைகள் வருடா வருடம் எப்படி ஒரே பகுதி களுக்கு திரும்ப வருகின்றன "கூகிள்  மேப்" போல அவைகள் இடங்களை பாதைகளை தக்குனூண்டு மூளையில் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன.   குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அவற்றின் வருகை தொடர் கதையாகிறது.  தாய் பறவையில் இருந்து குஞ்சுகளுக்கு என ஞாபகங்கள் கடத்தப் படுகின்றன.

மனிதன் என்ன செய்கிறான் அவைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அழித்து விடுகிறான் தாம் பிறந்து வளர்ந்த இடத்தை காண ஆவலுடன் வந்த பறவை காணாமல் போன வரண்ட குளங்களை கண்டு ஜெர்க்காகிப் பின் வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.  ஒரு கட்டத்தில் அவைகள் திரும்ப வராமல் கூட போகலாம்.

மனித குழந்தை கற்றுக் கொள்ளும் காலத்தை விட பறவை குஞ்சுகள் அவற்றின் தாய் பறவையிடம் வெகு சீக்கிரமாக வாழக் கற்றுக் கொள்கின்றன.  அந்த வகையில் மனித குழந்தை முட்டாள் தான்.


இரண்டு குயில்கள் சப்த மிட்டு கொண்டிருந்தன நீண்ட நேரமாக என்னவென்று போய்ப் பார்த்தால் தாய் பறவை குஞ்சிற்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தது.  கிளி,மைனா, சிட்டுகள் மற்ற பாடும் பறவைகளும் இப்படியாக   சங்கீதத்தை தம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுகின்றன.

பறவைகள்,விலங்குகள் சப்தமிடாத பகுதியில் மனிதனை வாழச் சொன்னால் அந்த கூட்டம் ஜோம்பீஸ் ஆக மாறிப் போய்விடும்.


சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன் பறவைகள் முட்டைகளை நிலையாக ஒரே மாதிரி வைத்து அடை காப்பதில்லை முட்டைகளை திருப்பி திருப்பி வைத்து அடை காப்பதாக இவற்றை எப்படி கற்றுக் கொண்டன சந்ததிகளுக்கு கடத்துகின்றன? அவற்றின் ஜீன் களில் எழுதப் பட்டிருக்கலாம்.
Download As PDF

பறவைகள் பலவிதம் - பகுதி 5

பறவைகளின் முட்டை ஏன் ஒரே மாதிரி இல்லை?

பெரும்பாழும் "வெள்ளை லகான் கோழிகள்" செயற்கை கருவூட்டல் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன  இவற்றின் முட்டைகள் (ஓவல்) நீள் வட்ட வடிவில் ஒரு பக்கம் கூர்மையாக இருக்கின்றன.  மனிதன் உண்பதற்காகவே வளர்க்கப் படும் பறவை இது.   இதே போலவே மற்ற பறவைகளின் முட்டை இருக்குமா? என்றால் இல்லை. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான முட்டைகளை இடுகின்றன.

இங்கு இன்னொன்றை சொல்லி விடுகிறேன் ஆரம்ப காலங்களில் செயற்கை கருவூட்டல் செய்வது முட்டைகளை சாப்பிடுவதற்காக அல்ல. சண்டை கோழிகளை உருவாக்குவதற்காக மட்டுமே இருந்தது.

சின்ன பறவை சிறியது பெரிய பறவை பெரியதாக முட்டை இடும். அதிலென்ன என்று நீங்கள் கேட்கலாம். வெவ்வேறு நிறம் அவைகள் உண்ணும் உணவை பொருத்து அவற்றிற்கு நிறங்கள் அமைந்திருக்கலாம். அது அதனது ஜீனை பொறுத்தது என்று எளிதில் சொல்லி விடலாம்.
மலை சிகரங்களின் பொந்துகளில்  வசிக்கும் பறவைகளின் முட்டை எளிதில் உருண்டு போகாதபடி சமச்சீர் எடையோடு இருக்கின்றன.
வேட்டை திறன் பெற்ற  கழுகுகள் , பெரிய ஆந்தைகள் (Brown hawk-owls) முட்டைகள் உருண்டை வடிவம்.



நீண்ட தொலைவு பறக்கும் பறவைகளின் முட்டைகள் வடி வத்திற்கும் பறக்காத (கிவி, ஆஸ்ட் ரிச்) பறைகளின் முட்டைகளும் பெருமளவு வித்தியாசப் படுகின்றன.  அதே போல குஞ்சு பொரிக்கும் காலமும் வித்தியாசப் படுகின்றன.


குயில் தன் முட்டையை காக்கை கூட்டில் வைத்து தந்திரமாக அடை காத்து விடுகிறது.

பறவைகள் முட்டையை ஒரே போக்கில் வைத்து அடை காப்பது இல்லை ஒரு நாளில் 2 - 3 முறைகள் முட்டைகளை உருட்டி அடை காக்கின்றன.
ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.

Download As PDF

பறவைகள் பலவிதம் - பகுதி 4

உலகில் சுமார் பத்தாயிரம் வகையான பறவையினங்கள் இருக்கு.

இருக்கும் பறவையினங்களில் சுமார் 20% நெடுந்தொலைவு பறக்கவல்லவை.

காக்கைகளை கண்டு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. தீங்கு செய்யும் மனிதர்களை அவைகள் ஞாபகம் வைத்துக் கொள்கின்றன மட்டுமல்ல அவைகள் கூட்டமாக தாக்க தயங்காதவை.  முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக நம்பிக்கை. காக்கைக்கு சோறு வைத்தபின்  சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  வாடகை வீட்டு ஒன்றில் குடி இருந்த போது அலுவலகத்தில் இருந்து வழக்கமாக 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வந்து விடுவேன். அந்த வீட்டில் அடுத்த அடுத்த அறைகளுக்கு கதவுகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். எல்லா கதவுகளும் திறந்திருந்தால் வீதியில் இருந்து புழக்கடை தெரியும். சமையல் அறை கடைசியில் இருந்தது. வழக்கமாக ஒரு காகம் நான் சாப்பிட உட்கார்ந்ததும் "கரையும்." அதற்கு சோறு வைத்து விட்டுத் தான் சாப்பிடுவேன்.  இது ஒரு வருட காலம் தவறாமல் நடந்தது.

கர்ண பரம்பரை கதையான "சிபி சக்ரவர்த்தி கதை" பறவைகளை பற்றி பேசுகிறது. பருந்திடம் தப்பி வந்த புறா அவரிடம் அடைக்கலம் ஆனது. அதை காப்பாற்ற தன் தொடை சதையை ஈடாக கொடுத்தும் புறாவின் எடைக்கு சமமாக வில்லை புறா சொன்னது பெண் புறாவான என் பின்னே பல்லாண்டு வம்சம் இருக்கின்றதாலே அது ஈடாக வில்லை என்று தன்னையே தருவதாக சொல்லி சிரம் தாழ்த்தி பருந்திடம் மண்டியிட்ட மன்னனை வாழ்த்தி பறந்ததாம் பருந்து.

ஒரு வரலாறும்  உண்டு கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கூட்டத்தில் மைக்கை பிடித்து பேசும் போது அவர் தோளில் புறா ஒன்று பறந்து வந்து மணிக்கணக்காக உட்கார்திருந்தது.

சீன தலைவர் மாவோ "குருவிகளின் கூச்சல்" கூட்டங்களில் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கு என்று  அவற்றை கூட்டத்தோடு ஒழிக்க கட்டளை போட்டார்.  அதன் பின்னே என்ன நடந்தது என்று பார்த்தால் நாட்டில் "வெட்டு கிளிகள் " தொந்தரவு அதிகமாகி விட்டது.

பிளமிங்கோ பறவைகள், வேண்டாம் குளத்து நீரில் நிற்கும் கொக்குகளை பார்த்திருப்பீர்கள் அவைகள் ஒற்றை காலில் நிற்கும் ஏன் ? என்றால்  உடல் வெப்ப நிலையை சீராக்கி கொள்ள ஒற்றை காலை மடக்கி வைத்துக் கொள்கின்றன.  பார்க்கும் நாம் அவை "தவம் " செய்வதாக நினைச்சுகிறோம்.
உலகின் அதிக எடை அதிகமுள்ள பறவை ஆஸ்ட்ரிச் ,வேகமாக ஓடக்கூடியவை  அ.து மணிக்கு 70 கி.மீ ஓங்கி அடிச்சா ஒன்றரை டண் என்பது இவற்றிற்கு பொருந்தும் ஒரே உதையில் சிங்கத்தை சாய்த்து விடும்.  அது மட்டும் அல்ல ஆண் பறவை சிங்கத்தை போலவே கர்ஜிக்கக் கூடியவை.


இவற்றிற்கு பற்கள் இல்லை என்பதால் சிறு சிறு கூழாங்கற்களை விழுங்கி விடும் அப்போது தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். பாம்பு பல்லி என எவற்றை கண்டாலும் விழுங்கி விடும். பெரிய கண்களால் 3.5 கி.மீ தூரத்தில் இருப்பதை பார்த்துவிடும். இவற்றின் கண்ணின் கருவிழி மனிதனுக்கு ஒத்து போகிறது.  இரு ஆண்பறவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் வெற்றி பெற்ற பறவைக்கு தோற்ற பறவையின் குடும்பம் குட்டிகள் அதற்கு அடிமை.  சுமார் 50 முதல் 70 வருடங்கள் வாழக்கூடியவை. 
Download As PDF

Monday, February 5, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 3 (சலீம் அலி)

சலீம் அலி (1896-1987)

இந்தியாவின்  பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.

சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் ("ஏர் கன்") ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம்  அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக  இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.

பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.

கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார்.  பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார்.  துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.

இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி  நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது.  நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து  காப்பாற்றினார்.

1941 ல் "இந்திய பறவைகள்" [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது  பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம்.  வீழ்ந்த குருவி  [ “The Fall of Sparrow”]  பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.

சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார்.  இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.

அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம்  SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]

91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து  பறந்து விட்டது.


* * * * * * * * * * * * * * *  * *

இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)



கண்டறியப் பட்ட பாடும் பறவையான  ஜூத்ரா   சலீமலி ( "Himalayan Forest Thrush Zoothera salimalii")  2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.

Download As PDF

Sunday, February 4, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 2

#பறவைகள் #பலவிதம் Part 2
##############

கடற்பறவை  அல்பெட் ராஸ்   அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள்.

இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.

 இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.

பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.

அமெரிக்காவில் "பாராகீத்" என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று  உலக கின்னஸ்  சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது.  என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது.  அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது.  ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.

தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை.  ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே  வழி காட்டி செல்லும்.  தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50  - 50)

அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன்.  எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.

புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).

 புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.

பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.

தென்கொரிய தலைவன் (Kim Jung Il) "கிம் ஜோங் இல்" தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை.
Download As PDF

Tuesday, January 30, 2018

பறவைகள் பல விதம்

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் "ஸெர் அமி" ஒரு  தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை  அவருக்கு பணியின்  போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய  பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்...அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.



இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி  கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.

விசம் உள்ள பறவையும் இருக்கா? இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui)  இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.


ஒரு கோழியானது வருடத்திற்கு 200 - 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).

கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.

மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் "டோடோ " எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம்.  16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள்.  இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.


சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன்  வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் "ஆர்கியோபேட்ரிக்ஸ்" (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு "முதல் றெக்கை" எனப் பொருள் படுகிறது.

பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை.  டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன. 

தண்ணீர் கலந்த  பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.

மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த  "யானை பறவை" மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.
முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார)  பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது.  அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது.  ஆஸ்ட்ரிச் முட்டையை  (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.

ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.


Download As PDF

Friday, April 28, 2017

நெகிழியை அழிக்க புது வழி... சாத்தியமா?


எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயமாகிவிட்ட உலகமிது...நெகிழிகளை  "Better Pollutants "[சிறந்த சீர்கேடி] என்று சொல்லுவார்கள். உலக நாடுகளில் பல, தர கட்டுப்பாட்டுகள் விதித்து தடை விதித்திருக்கின்றன.  இந்தியாவை பொருத்த வரை ஏட்டு சுரைக்காய்...



டண் கனக்கில் பெரு மலையாக குவியும் இந்த (பிளாஸ்டிக்) பாலிதீன் குப்பைகளை ஒழிப்பது என்பது பெரும் சவால் மட்டுமல்ல இதுவரையில் அளவும் குறைந்த பாடில்லை. இன்றைக்கு தண்ணிர் தட்டு பாடு தலை விரித்தாடுகிறது...மழை இல்லை அதனால் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம். தண்ணீரை நிலத்தில் சேர்வதை தடுக்கும் பெரிய காரணி இந்த பாலிதீன் குப்பைகள். மனிதன் கண்டுபிடிப்பில் மோசமானது இது என்றால் மிகை இல்லை.

பாலிதீன் குப்பை கழிவுகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதில் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதை உபயோகித்து சாலை போட்டு கூட பார்த்து விட்டார்கள். எல்லாம் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை தான்.

விசயத்திற்கு வருவோம் ஜப்பானிய விஞ்ஞானிகள் நொதிக்கும் பேக்டீரியாவை வைத்து சுத்தமாக அழிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.(சாப்பாட்டை கெட்டுப் போகச் செய்கிறதே ) வேக்ஸ் வார்ம் என்று சொல்லுகிற மெழுகு புழுக்கள் வைத்து அழிக்க முடியுமா? என்று பார்த்தார்கள்...வெற்றி இல்லை.

இந்த நிலையில் ஒரு சம்பவம்...பெட்ரோச்சினி என்ற பெண்மணி ஸ்பெயினில் தேனிக்கள் வளர்ப்பு ஆய்வகத்தில் பணி புரிந்து வருகிறார். தேன் கூட்டை சுத்தப் படுத்தும் போது அதில் இருந்த வேக்ஸ் வார்ம் (மெழுகு கம்பளிப் பூச்சி) யை எடுத்து ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் கடித்து ஓட்டை செய்து விட்டு தப்பி போயிருந்தது. இந்த புழுவை தேனீக்கள் எதற்கு கூட்டில் வைத்திருக்கின்றன என்று பார்த்தால் சேதார மாகும் தேவை இல்லாத மெழுகுகளை இந்த புழுக்கள் உண்டு சுத்தம் செய்து விடுகின்றன. (தேன் பூச்சிக்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? ! )

இந்த வகை புழுக்களை Greater Wax Moth என்று சொல்லுகிறார்கள் மேலே சொன்ன ஜப்பான் காரர்கள் ஆய்வு செய்தது வேறு வகை என்று அறிக.
இந்த வகை மெழுகு புழுக்களை வைத்து பாலித்தீனை ஒழித்து விடலாமே...நிற்க அவை சும்மா கடித்து விட்டதா என்றால் இல்லை சாப்பிட்டு விட்டன...அவை சிறு சிறு அழிக்க முடியாத துகள் எச்சங்களா (மைக்ரோப்ஸ்) என்பதையே கவனிக்க வேண்டும். இந்த புழுக்களை பொறுத்த வரை பாலித்தீன்களை சாப்பிட்டு ஜீரணம் செய்து விட்டன. பிறகென்ன அதிக அளவில் இந்த புழுக்களை வளர்த்து விட்டால் போச்சு அப்படியும் செய்யலாம் ஆனால் இயற்கை சூழலை அளவோடுதான் கையாள வேண்டும்.

இப்போதைய முக்கிய விடயம் அதன் வயிற்றில் செறிக்கும் அந்த என்ஸைம்...அதை உருவாக்கி விட்டாலே பாலித்தீன்களை கரைத்து மண்ணில் மக்கச் செய்து விடலாம். இந்த ஆய்வு வெற்றிகரமாக நடக்கட்டும் என்று நம்புவோம்....

நன்றி

(கலாகுமரன்)

Download As PDF

Thursday, April 27, 2017

ஒளி உமிழ் காளான்கள் !



நீங்கள் "அவதார் " திரைப்படத்தில் மனதை வசீகரிக்கும் ஒரு காட்சி யை பார்த்திருக்கலாம் "ஒளி உமிழ் தாவரங்கள்,  பூக்கள் , பூச்சிகள் என வர்ண ஜாலம் மிக்க காட்சி அது.

இருட்டில் மின் மினி பூச்சிகள் ஒளிரும் அழகே தனி தான்.   அதைப் போலவே காளான்களும் ஒளியை உமிழ் கின்றன.  இந்த வகை காளான்களை ஆங்கிலத்தில் Neonothopanus gardneri (நியோனொதொபெனஸ் ) என்ற தாவர வகைப் பாட்டியலில் குறிப்பிடப் படுகின்றன.  எளிதாக இவற்றை  "பயோலூமினன்ட்ஸ் " (உயிரியஒளிஉமிழிகள் ) என்று சொல்லலாம்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஜியார்ஜ் கார்டனர்  என்பவர் பிரேசில் நாட்டில் ஒரு மாலை பொழுதில் இவைகளை மின் மினிப் பூச்சிகள் பெரிதாக இருக்கு என பார்த்த போது அவைகள் காளான்கள் எனக் கண்டு ஆச்சர்யப் பட்டு போனார்.  பகலில் இவை பார்பதற்கு மரக் காளான்களை போல இருக்கும்.



சமீபத்தில் இவைகள் ஏன் பச்சை ஒளியை உமிழ்கின்றன என்பதற்கான காரணத்தை கண்டறிந்தார்கள். காலான்கள் ஸ்பேர்ம் என்று சொல்லக் கூடிய நுண் விதைகள் மூலமாக பரவக் கூடியவை.  இரவில் அந்துப் பூச்சி போல மற்ற பூச்சி இனங்களை இவைகள் கவர்கின்றன. அவற்றின் முலமாக்க நுண் விதைகளை பரவச் செய்கின்றன.

இந்த பச்சையஒளிஉமிழிகள் சுமார் 70 வகைகள் இருக்கின்றனவாம்.
சரி எப்படி இவைகள் ஒளியை உமிழ்கின்றன? (oxyluciferins)(ஆக்ஸிலுஸிஃபர்ன்ஸ் எனும் ஒருவகை என்சைம் இதற்கு காரணம். காற்றில் (ஆக்ஸிஜனோடு) வேதி வினைபுரிந்து ஒளிர் நிறங்களை வெளிப் படுத்துகின்றன. லேசான ஒளியில் இவைகள் ஒளிர் கின்றன. (பார்க்க படம்)



சில வகைகள் : Panellus stipticus, Panellus pusillus,Armillaria mellea,Armillaria gallica,Mycena chlorophos,Mycena luxaeterna

(thanks to Science Advances )

Download As PDF

Thursday, April 20, 2017

தாய்ப்பால் வியாபாரச் சந்தை




"எதுவும் வணிகம்"  இப்படியான உலகத்தில் வாழ்கிறோம் இதில் தாய்ப் பால் விற்பனை என்பது இல்லாமலா இருக்கும்.

 தனக்கு பிறக்காத இன்னொரு குழந்தைக்கு தாய் பால் புகட்டுவது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தினால் பால் சுரப்பில் பிரச்சனையோ அல்லது நோய்வாய் பட்டிருக்கும் சமயத்தில், பசும்பாலை குடிக்கும் பக்குவம் இல்லாத சிசுவிற்கு பால் புகட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா ?

கைக்குழந்தை வைத்து இருக்கும் பெண்கள் இன்னொரு தாயான பெண்னை பால் புகட்ட சொல்லி வேண்டுவது உண்டு. இதெல்லாம் இலைமறை காய்மறை சங்கதிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது. எங்கே அழகு குறைந்து போய் விடுமோவென....குழந்தைக்கு பால் புகட்ட மறுக்கும் பெண்களும்  இருக்கத்தானே செய்கிறார்கள்.  சிசுவிற்கு தாய் பால் புகட்ட வேண்டிய அவசியத்தையும் விளம்பரப் படுத்த வேண்டி இருக்கும் காலமிது.

சரி தலைப்பு செய்திக்கு வருவோம்... ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்ட இப்போது தாய்பால் விற்பனை என்பது ஜனரஞ்சகமான ஒன்று.  இந்தியாவில் இது இன்னும் பரவலாக்கப்பட வில்லை. சாதி என்ற ஒன்று இந்தியாவில் இருக்கும் வரை அதெல்லாம் மாறப் போவதில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

தாய்பால் விற்பனைக்காக பல தளங்கள் இருக்கின்றன அதில் வால்மார்ட் சக்கை போடு போட்டது என்கிறார்கள்.
ஒன்லி தி ப்ரெஸ்ட்  onlythebreast  எனும் தளம் தாய்பால் கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் இணைக்கிறது. இதில் முறையாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வாங்குவதானலும் விற்பதானாலும். (தளத்திற்கு செல்ல லிங்கின் மேல் சொடுக்கவும் ). எய்ட்ஸ் போன்ற நோய்கள் இல்லாதவரிடம் இருந்தே தாய்பால் பெறப்படுகிறது.

தாய்பால் குழந்தைக்காக வேண்டும் என்பது மட்டுமல்லா ஆண்களும் அதிக அளவில் வாங்குகிறார்கள் என்ற விவரமும் இந்த தளத்தில் இருக்கு ஆண்களுக்கு எதற்கு என்றால் இம்யூனல் பிரச்சனை உள்ளவர்கள், அ.து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், விளையாட்டில் (? !) (sports) போன்விட்டா பூஸ்ட் மாதிரி சக்தி ஏற்றி கொள்ளவும் வாங்கி குடிக்கிறார்கள்.  அவுன்ஸ் இவ்வளவு என்று விலை வைத்து விற்கப்படுகிறது அதிலும் கால அளவிட்டிற்கு தகுந்த படி யெல்லாம் இருக்கிறது. ஆனால் முக்கியமாக கவனத்தில் கொள்ளவும் இத்தகைய விற்பனை  பயில்வானாக மாற ஆசைப் படுபவர்களுக்கு அல்ல. "தாய் பால் குழந்தைகளுக்கானது "


தாய்பால் தரத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா, கனடா இங்கெல்லாம் The Human Milk Banking Association of North America (HMBANA) (எச்எம்பானா )என்ற  அமைப்பு (1985 லிருந்து) செயல்படுகிறது. சந்தை வியாபரம் அற்ற தனியார் அமைப்புகள் கூட இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு பால் இன தம்பதிகள் (கய்) கைக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் இப்படியான ஆன்லைன் சேவையை வரவேற்கிறார்கள்.  தங்களுக்கு பால் கொடுக்கும் கொடுப்பிணை இருந்தால் இத்தகைய வங்கிகளில் சேவை செய்ய ஏக்கமாயிருக்கிறது என்கிறார்கள் ....என்கிறது ஒரு செய்தி குறிப்பு.

தாய் பால் வியாபாரமா? என்பவர்களுக்கு  ஆம் கை குழந்தைகளை வைத்துக் கொண்டு பண தேவையில் இருக்கும் பெண்கள் அனேகம் பேர். மாதத்திற்கு சாராசரியாக 20 / 25 ஆயிரம் டாலர்கள் சம்பாதிப்பவர்களும் உண்டு.
இதெல்லாம் தேவையா தவறான போக்கு என்ற விவாதமும் இல்லாமல் இல்லை. எந்த ஒரு விளைவிற்கும் எதிர் வினை உண்டு என்று நியூட்டனே சொல்லி யிருக்கிறார் (டாட்)
Download As PDF

Tuesday, April 12, 2016

தினமலர் செய்த கோக்குமாக்கு வேலை



கடந்த 11.04.2016 தினமலர் இதலோடு இணைப்பாக "பட்டம்" என்ற இளைஞர் மலர் வெளியானது (கோவை பதிப்பு). அதில் மனிதர்கள் அஞ்சும் பூச்சி ! என்ற தலைப்பில் படங்களோடு பொது அறிவுத் தகவல் பிரசுரமாகி இருந்தது.  இதில் இடம் பெற்ற தகவல்கள் நான் ஏற்கனவே இந்த வலைத்தளத்தில் எழுதியவை.
தகவல்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் விருப்பம்.

முகநூல் மற்றும் வாட்ஸ்சப் போன்ற சமூகதளங்களில் Copy /Past தவிர்க்க முடியாத போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. வலைத்தளங்களும் விதிவிலக்கு அல்ல.  ஆனால் இது போன்ற பிரபலமான மீடியா (! )அதையே
செய்யும் போது நெருடலாக இருக்கிறது.

இந்த பதிவு என் சொந்த சரக்கு என்று வாதிடவில்லை....ஆனால் அதே நேரத்தில் பல தகவல்களை திரட்டி கிரகித்து படிப்பவர்களுக்கு புரியும் படியாக கொண்டு செல்வது, ஆங்கிலத்தில் இருந்து தமிழ் படுத்தி சுவாரசியமான
தகவலாக கொண்டு சேர்க்கும் போது அதையும் ஒருவன் அப்படியே ஈ அடிச்சாங் காபியாக பதிவிடும் போது... போடுங்கள் தப்பில்லை ஆனால் இவரின் தகவலுக்கு நன்றி எனும் ஒற்றை வார்த்தை என்னை
இன்னும் எழுத தூண்டுமே !

கீழே...தினமலரில் பிரசுரமான பக்கங்கள்




இந்த லிங்க்  02.02.2016 அன்று நான் எழுதிய பதிவு.

மனிதனின் முதல் எதிரி !!

http://eniyavaikooral.blogspot.com/2016/02/blog-post.html



Download As PDF

Tuesday, February 2, 2016

மனிதனின் முதல் எதிரி !!






கொசுக்கள் ஜுராஸிக் காலத்தில் இருந்து வாழ்பவை (210 மிலியன் வருடங்கள்). நுளம்பிற்கு பயப்ப்பாத கவிஞனுமில்லை, தலைவனும் இல்லை.  பேரரசன் அலெக்ஸாண்டரையே தாக்கி வீழ்த்தியிருக்கின்றன (323 B.C. ல் மலேரியாதாக்கி இறந்தார்). கொசுக்கள் இந்த உலகத்தின் மோசமான விலங்கு (! ?) ஏனென்றால் படு மோசமான மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். வருடத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மலேரியா நோய்கண்டு இறக்கின்றனர்.  விதம் விதமான கொசு ஒழிப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எல்லாம் தற்காலிகமாகிப் போய்விடுகின்றன.  அவற்றில் இருந்து மீண்டு மீண்டும் மீண்டும் மனிதனை தாக்குகின்றன.



டீட் (DEET )பெரும்பாலன கொசு விறட்டிகளில் பயன் படுத்தப் படுகிறது.  எதிர்ப்பு மருந்தாக பிகேர்டென் (picaridin)மற்றும் எலுமிச்சை யூக்லப்டஸ் எண்ணெய் ( lemon-eucalyptus oil) ஆகியவை CDC [ Centers for Disease Control ] ஆல் பரிந்துறைக்கப்படுகிறது.

வெளவால்கள் கொசுக்களை பிடித்து தின்பதில்லை.  பறவைகளில் ஈ பிடிப்பான் வகையை சேர்ந்த purple martins இவைகள் கொசுவைப் பிடித்தாலும் விரும்பி உண்பதென்னவோ தும்பிகளை த்(Dragon fly ) தான்.   மீன்களில் கேம்பீஸ் மற்றும் தட்டாம் பூச்சிகள் (தும்பி) கொசு லார்வாக்களை உண்கின்றன.

மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். அவனை மேலே அனுப்புவதில் முதல் இடத்தையும் அது தான் பெறுகிறது என உலக சுகாதார ( (WHO ) நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. மலேரியா சிக்குன்குனியா..இப்போது புதிதாக ஜிகா (zika) எனும் அஸ்திரத்தால் தாக்குதல் நடத்துகிறது. சிலநாடுகள் பெண்களே கர்பமடையாதீங்க என வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூளை ரொம்ப சின்னதாக இருக்கிறதாம். எதிர்கால சந்ததியையே பாதித்துவிடும் என அந்நாடுகள் நடுங்கு கின்றன. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் ரக நாடுகள்....(கொசுக்களால் ஜிகா பரவுகிறதா ? என்பதில் எனக்கு சந்தேகமிருக்கிறது )

 HIV கொசுக்களால் பரவுவதில்லை. HIV தாக்கப்பட்ட கொசுக்களின் வயிற்றில் அவை செறித்துவிடுகின்றன.

கொசுக்களுக்கு ஆங்கிலத்தில் "Mosquito "   ஸ்பானிய மொழியில் "சிறிய ஈ (அ) சிறிய பூச்சி" என்று அர்த்தம். 16 ஆம் நூற்றாண்டில் இருந்து அந்த மொழியில் இந்த வார்த்தை இருகிறதாம். ஆப்பிரிக்க மொழியில் இதை "மொஸீஸ்" என்கின்றனர். இலங்கையில் கொசுவை "நுளம்பு' என்று வழங்குகின்றனர்

கொசுக்களில் 3500 வகைகள் இருக்கின்றன. அவற்றில் 175 வகைகள்  அமெரிக்காவிலும், "ஏசியன் டைகர்" (Aedes aegypti) என்பது எல்லா இடங்களிலும் இருப்பது. மலேரியா கிருமிகளை சுமந்து செல்பவை அனோபெலிஸ் ( Anopheles)
கொசுக்களில் பெண் கொசுக்கள் தான் மனிதர் ரத்தங்களை ருசிக்கிறது. அதற்கு முட்டைகளை உருவாக்க மனித ரத்தம் தேவையாகிறது.

கொசு கடித்துவிட்டது என்று சொல்லுகிறோம் உண்மையில் அவைகளுக்கு பற்கள் (?) இல்லை. அவைகள் நீளமான நுண் துளை (proboscis) உறிஞ்சிகளை வைத்து அவை ரத்தத்தை உருஞ்சுகின்றன.  நுண் உறுஞ்சிகளை நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் இரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. அந்த சிறு இடத்தில் கொஞ்சம் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. அதோடு மரத்துப்போதலும் ஏற்படுகிறது, அதனால் தான் அது கடிப்பது சட்டென உணர முடிவதில்லை.   பெரும்பாலும் அது ரத்தத்தை உறிஞ்சிய பின்பே நமக்கு எரிச்சலும் வலியும் உணரப் படுகிறது.
மலேரியா நுண்கிருமிகள் அதன் எச்சில் மூலம் நம் உடலில் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன.

அதனுடைய எடையை விட மூன்று மடங்கு எடையுள்ள ரத்தத்தை குடித்துவிடுகின்றன. ஒரு பெண் கொசுவானது ஒரே சமையத்தில் 300 முட்டைகளை இட வல்லது. இதுமாதிரி ஒரு பெண் கொசுவானது அதன் வாழ்நாளில் மூன்று தடவைகள் முட்டைகளை இடுகின்றன.
நீர் பரப்புகளின் மேலே இடப்பட்ட முட்டைகள் 10 நாட்களில் லார்வா, அப்புரம் ப்யூபா வடிவம் பெற்று அடுத்த சில நாட்களில் ரெக்கை முளைத்த கொசுக்களாகின்றன.  ஒரு கொசுவின் வாழ்நாள் 2 மாதங்கள் சில வகைகளுக்கு ஆயுசு 3 மாதங்கள்.

பெண் கொசுக்கள் றெக்கையை நொடிக்கு 500 தடவைகள் வேகமாக அசைக்கின்றன. காற்றில் அவைகள்
ஏற்படுத்தும் ஒலியானது ஆண் கொசுக்களை கவர்கின்றன.  பறக்கும் வேகம் மணிக்கு  1.5 மைல்கள்.

8000 அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில் கூட இவை வாழ்கின்றன.

அவைகள் அவற்றின் தலையில் உள்ள நுண் சென்சார் மயிர் கால்கள் மூலமாக மனிதனின் மூச்சு காற்றும் மற்றும் வியர்வை வாசனையை வைத்து துள்ளியமாக ரத்தம் உறிஞ்சும் பகுதியை கண்டுபிடிக்கின்றன அதுமட்டும் அல்ல வெப்ப அளவீடுகளைக் கொண்டும் டார்கெட்டை துரத்திப் பிடிக்கின்றன.
 அய்டீஸ் (Aedes) வகை கொசுக்கள் பகல் நேரத்தில் ரத்தம் உறிஞ்சுபவை. க்யூலெக்ஸ் (Culex) வகை இரவானதும் தன் வேலையை துவக்கும்.

(Tags : Mosquito, Mosquitos, கொசுக்கள், கொசு, நுளம்பு )
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)