Followers

Monday, September 30, 2013

லால்பாக் போன்ஸாய் மரங்கள்.. ஒரு திடுக் தகவல்


தொடர்புடைய முதல் பகுதி : டெக்ஸ்டைல் நகரத்தில் இருந்து எலக்ட்ரானிக் நகரத்தை நோக்கி...

தென் ஆர்காட்டின் திருவாக்கரையில் (தேசிய  படிம பூங்கா) இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்ட கல்லாகிப் போன மர படிமம் உள்ளது.  இருபது மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது (Petrified coniferous tree) இதே போல கண்டெடுக்கப்பட்ட கல் மர படிமம் கிண்டி(சென்னை), கேரளா, மற்றும் ஹைதராபாதில் இருக்கும் தேசிய பூங்காக்களில் வைக்கப்பட்டிருப்பதாக நிறுவப்பட்டிருக்கும் பலகை குறிப்பு சொல்லுகிறது.

இதே போன்ற கல் மர படிமம் (wood fossil ) ஊட்டி தாவரவியல் பூங்காவிலும் பார்க்கலாம் (அது கொஞ்சம் சிறியது...).


The oldest tree(white silk cotton tree) at Lal bagh botanical garden, Bangalore

லால்பாக் போன்ஸாய் மரங்கள்.. ஒரு திடுக்கிடும் தகவல்

வருடம் தோறும் கோவை வேளாண்மை பல்கலை கழகத்தில் நடத்தப்படும் கண்காட்சில் போன்ஸாய் மரங்களின் அணிவகுப்பு இருக்கும். லால் பாக்கில் அதற்கென்றே ஒரு பகுதியை ஒதுக்கி வளர்த்து வருகிறார்கள்.  சட்டென பார்பதற்கு சிறு செடிகள் போல தோற்றம் தரும் கொடுக்கப்பட்ட குறிப்புகளில் இருந்தே நாம் 35, 40 வயது மரங்கள் என்பதை கண்டு ஆச்சர்யப் பட முடியும்.

நான் கேள்விப் பட்ட தகவல் இங்குள்ள பெரும்பாலான போன்ஸாய் மரங்கள் சீனிவாசன் என்பவரால் 2002 ல் தானமாக அளிக்கப்பட்டவை.  அவரின் அப்போதைய மதிப்பு படி இவை இரண்டரை கோடி என்றும் ஆனால் அரசு இதை ஐந்தரை லட்சத்திற்கே மதிப்பிட்டதாகவும் தகவல்.  2006 வரை அவருக்கு மாதம் 15000 ரூ அளிக்கப்பட்டு வந்தது.  தம்பெற்றோர் நினைவு பெயர் பொறிக்க வேண்டும் என கேட்டு கொண்டதாகவும் நடைமுறையில் சாத்தியப்படாமல் போனதாகவும் அறிகிறேன். சீனிவாசன் அவர்களின் தந்தை சீதாராமன் முன்னால் பெங்களூரு மேயராம். அவற்றில் சில காணாமல் போய் விட்டன.    தகவல் உண்மையா இல்லையா என்பதற்கு இந்த போன்ஸாய் மரங்களே சாட்சி (அதுகள் பேசாதே வாட் டு டூ ! )







கீழே  இருப்பவை ஜப்பானில் வளர்க்கப்பட்ட போன்ஸாய்




இந்தியா மற்றும் சீனாவில் காணப்படும் வெள்ளை இலவ மரம் ஒன்று லால் பாக்கில் உள்ளது. இதற்கு 200 வருடங்கள் இருக்கும் என்கிறார்கள். (கீழே )







மைசூர் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட சாமராஜேந்திர உடையாரின் சிலை இங்கு வைக்கப்பட்டு உள்ளது. இதை 1908 ல் மைசூர் கர்சன் பூங்காவில் இருந்து இங்கு கொண்டு வந்து வைத்து உள்ளார்கள். இவர் காலத்தில் லால் பாக் (லால் = சிகப்பு) இந்த தாவரவியல் பூங்காவை சிறப்புற வடிவமைத்துள்ளார்.


ராஜாஜிநகரில் உள்ள 2011ல் கட்டி முடிக்கப்பட்ட நார்த் ஸ்டார் கட்டிடத்தின் உயரம் 420 அடிகள் ,  32 அடுக்குகளை கொண்டுள்ளது. இதில் உலக வர்த்தக மையம் (WTC =World Trade Center ) செயல் படுகிறது.  WTC - ன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. அதில் இணைந்து செயல் படும் 330 மையத்தில் இது ஒன்று.


இஸ்கான் கோவிலில் இருந்து பார்கும் போது..WTC


விதான செளதா






(இஸ்கான்) ராதாகிருஷ்ணசநதிரா கோயில், ராஜாஜி சாலை

கடைவீதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு குகை கோயில் ஸ்ரீ காவி கங்காதாரேஷ்வரா,  9ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.  இதற்கு கெம்பே கவுடாவின் பங்களிப்பு இருந்திருக்கிறது.  சாதாரண உயரம் உள்ளவர்கள் இதனுள் சென்றாளே வெளியே வரும்போது குனிந்து தான் வெளியே வர வேண்டி இருக்கும்.  மகர சங்கராந்தி தினத்தில் (ஜனவரி) சூரியக் கதிர்கள் நந்தி மற்றும் லிங்கத்தின் மேல் விழுமாம்.




 சிவன் சிலை, பழைய ஏர்போர்ட் சாலை


முகப்பு சின்னஸ்வாமி ஸ்டேடியம்




வைட் பீல்டில்(white field) உள்ள காஸ்மோஸ் மாலில் குழந்தைகளை கவரும் விளையாட்டு ரயில்.



"குளோசப்பில்"
Download As PDF

Saturday, September 28, 2013

டெக்ஸ்டைல் நகரத்தில் இருந்து எலக்ட்ரானிக் நகரத்தை நோக்கி...

சென்னையில் தமிழ் பதிவர்கள் சந்திப்பின் பிறகு அடுத்த அடுத்த வார இறுதிகளில்  பாண்டிச்சேரி, சென்னை, பின்னர் பெங்களூரு என்று திடீர் பயணங்கள்.   இந்த பயணங்களின் போது நேரில் கண்ட சில தகவல்கள் இந்த பதிவில்...

டெக்ஸ்டைல் சிட்டியிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டியை நோக்கி...

பெங்களூரு நான் முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்பதற்கும் பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் காண்கிறேன்.  சொல்லப்போனால் இன்னும் இத்துணை வருடங்களில் கோவை இன்னும் அப்படியே உள்ளதாக உணர்கிறேன் இதற்குக் காரணம் முன்னேற்றமடைந்த இந்த பெரு நகரங்களை பார்க்கும் போது கோவை சிறிய நகரம் தான்.  கடந்த காலங்களில் (நான் சொல்வது ரொம்ம்ப்ப முன்னாடி...இருந்து) இருந்த அரசுகள் இந்த நகரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இதுவும் பிரம்மாதமான கட்டமைப்பில் இட்டு சென்றிருக்குமோ என்றே எண்ணத் தோன்றியது.  பெங்களூரின் முதலில் கண்ணில் பட்ட எலக்ட்ரானிக் சிட்டி கண்களை அகல திறக்க வைக்கிறது பிரம்மாண்டமான திட்டமிடப்பட்ட சாலைகளும்(outer ring road), ஐ.டி கட்டிடங்களும் பல ஊர் காரர்களுக்கு புகழிடமாக இருக்கிறது.   அதை ஒட்டி பிற எல்லைகளும் பலருக்கும் வேலை வாய்ப்புகளை அளித்து விரிந்து செல்கிறது.

சில்க் போர்டிருக்கு அடுத்து இருந்த கிருஷ்ணராஜபுராவில் (K.R.Pura) இரண்டு நாட்கள் தொகுப்பு மாடிவீட்டில் தங்கி இருந்தேன். இங்கு உள்ளவர்கள் குடிப்பதற்கு மற்றும் சமையலுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) தான் பயன்படுத்துகிறார்கள்.   தண்ணீருக்காக மட்டும் மாதத்தில் ஒரு பெரிய தொகை செலவிடுகிறார்கள்.  ஆனால் ஏனோ இங்குள்ளவர்களுக்கு (கோவை) தண்ணீரின் அருமையே தெரிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது பெங்களுரு மெட்ரோ ரயில் விரிவாக்கத்தினாலும், பெரு மழையின் காரணமாகவும் நகரத்தின் மைய ரோடுகள் பழுதடைந்து இருந்தது. இதனாலோ என்னவோ மேம்பாலங்கள் பல இருந்த போதிலும் போக்குவரத்தின் நெரிசல் அதிகமாகவே இருந்தன (குறிப்பாக பீக் அவர்ஸ்).  எம்.ஜி (மகாத்மா காந்தி) ரோடின் நடுவில் செல்லும் மெட்ரோ மேம்பாலம் சுத்தமாக அந்த ரோட்டின் அழகை கெடுத்துவிட்டது என்று சொல்லலாம். மாலையில் இதமான தட்ப வெப்பத்தில் இருந்தது.

இன்னொன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், பெங்களூரு சிக்னல்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் திருநங்கைகள் கையேந்தி நிற்பதை பார்க்க கஷ்டமாக இருந்தது.


மைசூரை ஆண்ட ஹைதர் அலியால் தொடங்கப்பட்ட லால் பாக் (1760) அல்லது சென்னிற பூங்கா (பொட்டானிக்கல் கார்டன் /botanical garden ) பின்னால் வந்த திப்பு சுல்தானால் அழகுற அமைக்கப்பட்ட வரலாற்று பெருமை கொண்டது. ஹைதர் பல தாவரங்களை இங்கு பாது காத்ததாக குறிப்பிடப்படுகிறது. திப்புவும் துருக்கி, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து விதைகளை தருவித்து இதை உருவாக்கி இருக்கிறார்.  40 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட லால் பாக் விஸ்தரிக்கப்பட்டு பின்னாளில் சுமார் 200 ஏக்கர்கள் கொண்டதாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான தாவரங்களும், மலர் வகைகளும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மலர் கண் காட்சிக்காக அமைக்கபட்ட கண்ணாடி மாளிகையின் முன்பு வந்தவர்கள் தங்களை இணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
வெப்ப மண்டல தாவரங்களை (tropical plants)  கொண்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவங்களை உறுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள வேண்டி இருந்தது அவற்றை இன்னும் சீர் (கட்டிங்.. ஒட்டிங்) செய்யப் பட வேண்டும்.




         தாயும் சேயுமாக இருக்கும் சிம்பன்ஸி

                                                                   தாவர யானை



போன்ஸாய் மரவளர்ப்பு வளாகத்தில், வெய்யிலிலும் தீயாய் வேலையை செய்யும் தேனீ.







இன்னும் சில தகவல்களுடன், அடுத்த பதிவில் தொடர்கிறேன், 

நன்றி
(கலாகுமரன்)

தொடர்புடைய பதிவு : 

லால்பாக் போன்ஸாய் மரங்கள்.. ஒரு திடுக் தகவல்


Download As PDF

Thursday, September 12, 2013

இரத்த நாளத்தினுள் நுட்ப எந்திரங்கள்


கேன்சருக்கு நானோபாட்கள் - கத்தியில்லா அறுவை சிகிச்சை(புதிய தகவல்)

”கத்தி இன்றி ரத்தம் இன்றி அறுவை சிகிச்சை ” இது உண்மையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வியாதிகளில் இருந்து இருந்து விடுபட அணுப்பரிமாண நுண்கருவிகள்  உடலின் உள் செலுத்தப்பட்டு நோய் நீக்கப்படும். இத்தகைய மருத்துவம் மருத்துவ உலகில் ஒரு மைல் கல்.

நானோபாட்கள் (Nano Bots) / “நானோ கிருமிஅழிபான்” / ”நானோபாட்ஸ்” (Nanobots)


நானோ தொழில் நுட்பத்தாலும், மைக்ரோ சிப்புகளாலும் மிக மிக குட்டியாக வடிவமைக்கப்படும்  நுண்கருவிகள் நானோபாட்ஸ். இவைகள்
உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள், கேன்சர் மற்றும் நோய் கிருமிகளை போரிட்டு அளிக்ககூடிய மைக்ரோ ரோபோக்கள்.


விஞ்ஞானிகள் இது எப்படி இருக்கவேண்டும் இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டும் என்று டிசைன் செய்துவிட்டார்கள், ஒரு மருத்துவ டூல் பாக்ஸ் போன்ற இதை மேட்டார் மற்றும் உலவிக்கருவிகள் இணைத்து இன்னும் மேம்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

இதை வைத்து எப்படி  சிகிச்சை செய்வார்கள் ?

இரண்டு மில்லியன் நானோ ரோபோட்டுகள் மருந்துகளோடு சேர்க்கப்பட்டு ஊசி மூலமாக இரத்த நாளங்களில் ஏற்றப்படும்.  இவற்றின் செயல்பாடு மற்றும் கட்டுப்பாடுகள் கணினி மூலமாக கண்காணிக்கப்படும்.  இந்த நானோபாட்கள் கட்டளைக்கு தகுந்த வாறு ஒவ்வொரு வேலையை செய்யும். உதாரணமாக சிலதுகள் ரத்தக் குழாயில் அடைந்து இருக்கும் கொழுப்பு அடைப்புகளை நீக்கும், சிலதுகள் அந்த கொழுப்பு துகள்களை சேகரிக்கும், இன்னும் சிலதுகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்தை செலுத்தும், சிலது திசுக்களை ஒட்டும், இது போல பல பணிகளை இவை செய்யும் திறன் பெற்றவை.  வேலை முடிந்ததும் இவை செயல் இழக்கச் செய்ய முடியும். இறுதியில் உடலை விட்டு வெளியேற்றப்படும். சுமார் அரை மணியில் கச்சிதமாக சர்ஜரி முடிந்துவிடும்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு இவை செலுத்தப்பட்டு பக்கத்து திசுக்களுக்கு பாதிப்பிலாமல் கேன்ஸர் நுண்கிருமிகளை மட்டும் அழிக்கும் திறன் பெற்றவையாக இருக்கும், இந்த நுண் ரோபோக்கள்.

 நானோ என்பது கிரேக்க வார்த்தையில் இருந்து பிறந்தது, ஒரு நானோ என்பதன் அளவீடு “பில்லியனில் ஒரு பங்கு”  ஒரு நானோ மீட்டர் nanometre (nm)  என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு நானோ அப்ஜெக்ட் 100nm வரை அளவிடக்கூடியது. அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது

புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்.
ஒரு தலை முடியின் குறுக்கு வெட்டு 90000 nm கொண்டது. 
ஒரு செல்லின் குறுக்களவு 25000 nm.  டி என் ஏ மூலக்கூறின் குறுக்களவு 2 nm.


பாதிக்கப்பட்ட திசுக்களை மட்டும் சரிசெய்வது எப்படி என்பது டாக்டர்களின் கனவு ப்ராஜெக்ட்.  தொடர்ந்த ஆய்வுகள் இதை மெய்பிக்க போகிறது. கலிபோர்னிய மருத்துவ ஆய்வு பல்கலைகழகத்தை சேர்ந்த பால் ரோத்மௌண்ட் 2006 இல்  டி.என்.ஏ வை மடக்கி காட்டினார். இந்த அடிப்படையே நானோரோபோட் களை கட்டமைக்க காரணமாக இருந்த ஒரு தியரி எனலாம்.

நானோ டெக் வல்லுனர்களின் சவாலான பணி இந்த நானோபாட்களை உடலின் உள்ளே இயங்கச்செய்வது.  2010 ல் கலிபோர்னியா யுனிவர்சிட்டியை சேர்ந்த லியான்ஃபான் சாங் மற்றும் ஜோஸ்ப் வாங் ஆகியோரின் முயற்சியால் நானோபாட்களை ஹைட்ரோஜன் பெராக்ஸைட் (H2O2) இதன் எரிபொருளாக பயன் படுத்தியது தான் இதன் இயக்கமுறை தொடக்கம்.

இதன் இயங்கு வேகம் செகண்டுக்கு 2 mm என்றால் இவ்ளோதானா என்றே தோன்றும்,  ஆனால் இதனுடைய அளவை கருத்தில் கொண்டு பார்த்தோமானால்  ஒரு கார் மணிக்கு 600 கிலோமீட்டர் போனால் எப்படி இருக்கும் அந்த வேகம்.

நானோ ரோபோட்டுகள் உருவ அமைப்பு மூன்று கால்களை கொண்ட சிலந்தி போன்றது இதன் அளவு 2 nm.  இது டிஎன் ஏ வடிவமைப்பை ஏற்றி செய்யப்பட்டது. மிலன் ஸ்டொஜனொவிக்  என்பவர் (கொலம்பியா யுனிவர்சிட்டி - நியூயார்க்) இதை 2012 ல் செயல்படுத்தி காட்டினார்.

2011 ல் இந்திய விஞ்ஞானிகள் (indian institute of science) கண்டுபிடித்த ஒரு செய்முறை  இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் அழுத்தமானது அதிக மாக இருக்கும் நானோ வயர் பொருத்தப்படும் போது இவை அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஈர்த்து செல்லும் என்பது (மேக்னடிக் தத்துவம் போல) இந்த டெக்னாலஜி இதன் உருவாக்கத்தில் பெரிதும் பயனளிக்கும் ஒரு ஆக்கம்.




எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் நானோ தொழில் நுட்பம் இன்னும் பல மகத்தான சாதனைகளை செய்ய இருக்கிறது.


தொடர்புடைய பதிவுகள் :

கொலைகார வைரஸ்கள்..அழிக்க வருகிறது ட்ரகோ [DRACO] 

கேன்சர் சிகிச்சைக்கு நானோ டெக்னாலஜி..

Download As PDF

Friday, September 6, 2013

தேவிகா பற்றி கண்ணதாசன் (படித்ததில் பிடித்தது)

தேவிகா பற்றி கண்ணதாசன் (படித்ததில் பிடித்தது)

சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும். இதை படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு நம் மனக்கண்ணில் ஓடுகிறது. நான் கூட அவரின் சில படங்களே பார்த்திருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் இந்த கட்டுரையில் ஆத்மார்த்தமாக அவரை பற்றி சொல்கிறார்...


தேவிகா...

சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.

இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.

அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.

என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.

எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.

படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.

தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.

என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.

தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.

குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.

இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.

குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.

 “பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.

மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.

‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.

ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.

‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.

அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.

அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.

எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.

என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.

சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.

துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.

அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.

லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.

இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.

ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.

என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.

வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.

சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.

கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.

சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.

சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...

ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.

என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.

அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.

“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ?.




source of books : இந்தவாரம் சந்தித்தேன் - கட்டுரை தொகுப்பு 80 களில் வெளியானது.

Download As PDF

Thursday, September 5, 2013

தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்?


தூக்கம் பற்றிய ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு துறை நிண்ட்ஸ் (NINDS - National Institure of Neurological Disorders and Stroke) செயல்படுகிறது.

முக்கியமாக வயசுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த வயதுகளில் நிம்மதியான தூக்கம் அவசியம் என்கிறார் பெண் டாக்டர் சிரேலி.



ஒரு விசயம், விலங்குகள் தூங்கும் நிலையிலேயே எப்படி உசார் நிலையில் இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது.


மூளை நுண் நரம்பு செயல்பாடு ஒழுங்காக நடக்க தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. தூக்கத்தின் போதே உடலின் பல பாகத்தின் செல்களில் உள்ள புரோட்டீன் சத்து அதிகரிப்போ அல்லது தடையோ தூக்க நிலையிலேயே நடக்கிறது.



எலிகளை வைத்து செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி மல்டிபில் செலெரொசிஸ் சுருக்கமாக (MS) எனும் மூளை நோய்.

விஸ்கான்சின் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் சியர சிரேலி மற்றும் குழு தூக்கம் வர காரணமானது எது ? என்ற ஆய்வில் இறங்கினர். இறுதியில் இவர்கள் குழு ஒரு தீர்மானத்திற்கு வந்தது அதாவது மூளை நரம்பு செல்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒன்று மைலின் (Myelin) என்பது.

அல்ட்ரா வயலெட் கதிர்கள் மற்றும் மன அயற்சியால் பாதிப்படைந்த உடற்செல்களின் கட்டுமானம் மற்றும் செறிவூட்டலுக்கு புரோட்டீன் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புரோட்டீன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரு காரணி மைலின்.

இந்த மைலின் அதிகரிதலோ குறைவோ (Oligodendrocytes) தூக்கத்தை இழக்க வைக்கிறது அல்லது இரட்டிப்பாக்குகிறது.

ஆழ்நிலை தூக்கத்தில் ஏற்படும் கனவுகளுக்கும் இந்த மைலின் தான் காரணம். அந்த சமயத்தில் கண்களின் அசைவு அதிகமாயிருக்கும். (இது தூக்கத்தில் இருப்பவருக்கு தெரியாது)

ஆழ்நிலை தூக்கம் சுருக்கமாக ரெம் (REM = RAPID EYE MOVEMENT) ஜீன்களில் பதியப்பட்ட ஒன்று என்கிறார்கள். அதாவது கடிகாரத்தில் அலாரம் செட் செய்வது போல என வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவருக்கு சாப்பிட சாப்பிட தூக்கம் வந்துவிடும். சிலருக்கு தயிர் சாதம் சாப்பிட்டவுடன். சிலருக்கு புத்தகத்தை எடுத்தவுடன் சிலருக்கு TV. ( அப்படியும் தூக்கமே வரவில்லை யெனில் மாந்திரீகரை தான் பார்கோனும் ! அவ்.. )


மல்டிபில் செலெரொசிஸ் (MS) எனும் மூளை சம்பந்தமான நோய் இது மைலின்(myelin) கட்டுப்பாட்டை குலைப்பது தொடர் தூக்கம் கெட்டு போவதால் ஏற்படுகிறது.(இது சீரியஸ் ஆன விசயம்) MS பாதிப்பு ஏற்றபட்டால் உடலின் இம்யூனல் சிஸ்டம் மூளை நுண்நரம்பு செல்களின் மைலின் கோட்டிங்கை உடைக்கிறது. அதே போல முதுகெலும்பிலுள்ள மைலின் கோட்டிங்கையும் உடைக்கிறது.

அதனால் சுகமான நித்திரை பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

source of news : BBC


Download As PDF

Tuesday, September 3, 2013

பாமரனின் நக்கலும் நையாண்டியும்



பாமரன் கோயமுத்தூர்காரர் இவரின் இயற்பெயர் எழில் கோ,  எழில் என்றால் அழகு கோ என்றால் அரசன் (கவனிக்க மக்களால் இவர் அறியப்பட்ட பெயருக்கும் இவரின் இயற் பெயரும் தலைகீழ் பொருத்தம்)

விழா மேடையில் திரு.பாமரன்


திரு.பாமரனுடன் மெட்ராஸ்பவன் சிவக்குமார்


செப்.1 2013ல் சென்னையில் இசைகலைஞர்கள் சங்க மண்டபத்தில் இரண்டாம் தமிழ் வலைப்பதிவர்கள் விழா மிக அருமையாக நடைபெற்றது இந்த விழாவில் பாமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், அவர் பேச்சிலிருந்து சில பகுதிகள்.



என்னை அறிமுகப்படுத்தியவர் சொன்னார் இவர் என்னவெல்லாம் கத்தை கட்டியிருக்கிறார் என்று என்னய ஏன் எழுத்தாளனு சொல்றாங்க. நான் எப்படி இந்த எழுத்து துறைக்கு வந்தேன்? இந்த கேள்விக்கான பதிலுக்கு நான் என் மண்டையை போட்டு குடைந்தேன் என்ன என்னவோ செஞ்சு பாத்தேன் இந்த கேள்விக்கான பதிலை தேடினேன்.

நான் எழுதுவதற்கு காரணம் யார் ஊட்டிய ஞானப்பாலும் அல்ல. என் எழுத்திற்கு காரணம் பெண்கள், பெண்கள். அப்ப என்னுள் ஊறிய கவிதைகள்.
கண்ணே நீ காகித பூ
என்று தெரிந்திருந்தால்
நான் கழுதையாக தான் பிறந்திருபேன்.

டிஆரின் பாதிப்பில்

உன் கண்’மை கூட என் ஆண்’மைக்கு சவால்விட்டது
உன் பெண்’மையின்
தன்’மையால்
நான் மென்’மை அடைந்தது என்னவோ
உன்’மையிலும் உண்’மை
- - - -
இந்த மாதிரி எல்லாம் கவிதை எழுதி கொடுமைப் படுத்தியிருக்கிறேன். நண்பர்களே நான் தமிழ் சமுதாயத்திற்கு செய்த ஒரே ஒரு நல்ல காரியம் கவிதை எழுதுவதை விட்டது தான்.

பரிட்சை எழுதிய அனுபவம் ?

பரிட்சை எழுதுவதே எனக்கு பிடிக்காமல் போனது. எக்ஸாம் ஹாலுக்குள்ள கேள்விதாளை வாங்கி வெச்சுட்டு என்ன எழுதறதுன்னு முழுச்சிகிட்டு இருப்பேன்  படிச்சிருந்தா தானே எழுதுவதற்கு. அவ அவன் பர பரப்பா அடிசனல் பேப்பர் வாங்கி எழுதிட்டிருப்பான். நான் முழுச்சுகிட்டு இருக்கறத பார்த்த வாத்தியார் எதையாச்சும் உனக்கு தெரிஞ்சத எழுதுப்பான்னார். ஒரு கவிதை எழுதி வைக்கலாமன்னு தோனிச்சு எழுதினேன்.

இந்த கேள்விகளுக்கு பதில் எழுதினால்
மதிப்பெண் கிடைக்கும்
மதிப்பெண் கிடைத்தால் தேர்வு கிடைக்கும்
தேர்வு கிடைத்தால் வெற்றி கிடைக்கும்
வெற்றி கிடைத்தால் பட்டம் கிடைக்கும்
பட்டம் கிடைத்தால் வேலை கிடைக்குமா ?
என்பதே என் மனதின் கேள்வியாக இருக்கிறது.

என்று எழுதினேன். இதற்கு எனக்கு 8 மார்க்குகள் கிடைத்தது. இந்த மாதிரி ஐந்து கவிதை எழுதி இருந்தாலும் 40 மதிப்பெண்கள் கிடைத்து இருக்கும்.

குமுதத்தில் எழுதிய அனுபவம்?

கோவைதங்கம்னு ரப்பர் ஸ்டாம்பெல்லாம் செஞ்சு வெச்சு ரகளை செய்திருக்கிறேன். வாசகர் கடிதம் எழுதி அது குமுதத்தில் வெளியாவதே எனக்கு பயங்கர விசயமாக இருந்தது. 200 , 300 கார்டு வரைக்கும் எழுதி போட்டிருக்கேன்.அதுல ஒன்னு  கவிதாவின் கதையை படித்ததும் என் கண்கள் தளுக் என கண்ணீர் சிந்தியது இப்படி எல்லாம் எழுதியிருக்கேன். வாசகர் கடிதம் மட்டு எழுதினா போதுமா? அப்புறம் துணுக்கு எழுத ஆரம்பிச்சேன் முத்தாரம்,வண்ணத்திரை,பூவாளி இதில் என் துணுக்குகள் வெளிவந்தது. (1983 க்கு முன்பு) துணுக்கு ஒன்றுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா அர்ஜெண்டைனாவில் ஒருவர் மீது ஆறு முறை மின்சாரம் பாய்ச்சப்பட்டும் உயிரிழக்காமல் தப்பி பிழைத்த அதிசயம். அவர் போட்டிருந்த ரப்பர் சூ தான் அவரை காப்பாற்றியது. அப்படி ஒருத்தன் இருந்தானா இல்லையா ? யாருக்கு தெரியும்  இப்படி எல்லாம் எழுதி கொடுமைப் படுத்தியிருக்கேன்.

இப்படி கேவலமாக எல்லாம் எழுதிட்டு இருந்த நான் 1983 கல்லூரி இறுதி ஆண்டு படித்தபோது உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும் தமிழ் ஈழம் வேண்டும் தீ பற்றி எரிய தொடங்கிய காலம் என்று குறித்த
தமிழ் செய்தி பத்திரிக்கையில் கொட்டை எழுத்துகளில் வெளிவந்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். எந்த கண்களால் தமிழ் ஈழத்தை காண்போன் என்று சொன்ன குட்டிமணி, ஜெகன்,தங்கதுரை கோர படுகொளை. சிங்கள பயங்கர வாதிகளால் சிறையில் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பூட்ஸ் காலால் தரையில் தேய்து, படுகொலை செய்த கோரம் என்னை வெகுவாக பாதித்தது. அதன் பின் திமுக எனும் கம்பெனியில் சேர்ந்தேன்.

குமுதத்தில் எழுதுவற்கு அழைத்தார்கள். நீங்கள் எழுதுவதில் எந்த மாற்றமும் செய்யமாட்டோம் அப்படியே வரி மாறாமல் போடுவதாக வாக்களித்தார்கள். அதில் சூடான விவாதங்கள் நடைபெற்றது. பாலசந்தரை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் முக்கோணக்காதல் பற்றியே ஏன் எடுக்கிறார்? மூன்றாவதாக காதலிப்பவள் அவனை மயக்கி குழந்தை பெற்று அவன் காதலித்த முதலாமவளிடம் ஏன் கொடுத்துவிட்டு போகனும். அரைச்ச மாவையே அரைக்கிறார்கள் என்று சாடி எழுதி இருந்தேன். இதற்கு பெரிய எதிர்ப்பு உருவாக்கிருச்சு. இத பற்றி ஏதும் தெரியாம இருந்தேன் அப்ப டி.வி எல்லாம் பார்ப்பது இல்லை. நண்பன் சொன்னதுக்கப்புரம் தான் எனக்கு தெரிஞ்சது. சினிமா டைரக்டர்களை பற்றி... எல்லோரையும் தலையில் யோசித்து எழுதிய போது இளையராஜாவை பற்றி மட்டு இதயத்தில் நேசித்து எழுதினேன்.

அப்பொழுது ஆர்குட்டில் குரூப்பா எழுதிட்டு இருப்பாங்க அதில நானும் சேர்ந்து எழுதிட்டு இருப்பேன் எவ எவன் இருக்காண்னே தெரியாது முகமும் தெரியாது. நான் பெரியாரின் கொள்கைகளை சார்ந்து எழுதிய போது முன் வைக்கப்பட்ட விமர்சனங்களும் விவாதங்களும் ஏராளம். மூன்று மணிக்கு போன் போட்டு அவன பொளக்கனும்டா என்பார்கள். அதில பெண் பெயரில் நானே பெரியார் கொள்கைகளை எதிர்பது போல எழுதுவேன். அப்பதான எவ எவன் நம்ம எதிர் கட்சி கார ன்னு லிஸ்டு போட முடியும்.  அப்புரம் ப்ளாக் எழுதுவதை பற்றி சொன்னாங்க. இந்த மாதிரி பதிவு எழுதினாமட்டும் போதானு தமிழ்மணமோ கோமணமோ ஒன்னு இருக்காமா. ரேட்டுங்கு ஓட்டிங்கு அதில இருக்காமா. அதில யாருக்கு அதிக ஓட்டு போடறாங்களோ அவங்க எழுதின கட்டுரை மட்டும் மேலயே இருக்குமாமா? அஞ்சாறு ஏழு ஓட்டு இப்படி, இப்படி ஓட்டு போடருதுக்கே ஒரு குரூப்ப சேத்துகனுமாமா தம்பி ஒருத்தரு சொன்னாரு. வெடிய வெடிய வெள்ளாவி வெச்சுட்டு இருக்கறவனுக்கு போன போட்டு மச்சான் எனக்கு ஓட்ட போடும்பான், அப்பதான் கட்டுரை மேலேயே நிக்குமாம் எல்லாரும் வந்து படிச்சு பார்ப்பாங்களாமா, எனக்கு அந்த ஓட்டு போடற சிஸ்டமும் புரியல இந்த ஓட்டு போடற சிஸ்டமும் புரியமாட்டீங்குது.

பெண்ணீயம் குறித்தாகட்டும் ஈழம் ஆகட்டும் எல்லா விசயங்களையும் இணைய உலகம் அலசுகிறது. ஒரு கருத்தை எதிர்பதிலாகட்டும் ஆதரிப்பதிலாகட்டும் வலைப்பதிவுகள் வருகிறது. நான் ஆர்குட் ஆகட்டும் பேஸ்புக்காட்டும் நேரம் வேஸ்டாகுதுன்னு பல சமயங்களில் கோபப் பட்டிருக்கேன். ஆனால் பிற்பாடு ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன் உண்மையிலேயே இந்த வலைப்பதிவு எழுதுபவர்கள் மனித நேயத்தில் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

பேஸ்புக்கில் மூன்றாயிரம் நான்காயிரம் நண்பர்கள் வைத்திருக்கும் ஒருவனுக்கு பக்கத்து வீட்டிலிருப்பவனை தெரியாது. 65 வயசு வரை வாழ வேண்டியவன் பேஸ்புக்கில் இருந்தால் 35 வயதிலேயே இறந்து போய் விடுவான் அவ்வளவு டென்சனை கொடுக்கிறது பேஸ்புக்.

இணையம் என்பது எல்லோரையும் இணைத்து வைப்பது. நாம் எழுதுபவைகள் உலகம் முழுக்க சென்றடைகிறது. அதை நல்ல முறையில் பயன் படுத்துங்கள்.

அய்யாவை (புலவர் ராமானுசம் அய்யா ) பற்றி சொன்னார்கள் அவர்  குழந்தைகள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அய்யாவுக்கு ஒரே துணை இந்த இணைய தளம் என்று. அய்யாவை போன்று அன்பானவர்களை நாம் பெற்றிருக்கும் போது இணையத்தின் வழி நாம் எத்துணை அன்பானவர்களை பெறலாம். அதை நோக்கியே நாம் நடை போடுவோம்.

Download As PDF

Saturday, August 31, 2013

வலைபதிவர்கள் திருவிழா நேரடி காட்சி

சென்னையில்
இன்று 1.9.2013. நடைபெறும் வலைப்பதிவர்கள் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு காலை 9 a.m

Download As PDF

Thursday, August 29, 2013

அழிந்துபோன டைனோசர், பனிக்கால யானை மறு உருவாக்கம் சாத்தியமா?


விஞ்ஞானிகள் சிலர் தீவிரமாக யோசிக்கிறார்கள் அழிந்து போன மிருகங்களை திரும்ப கொண்டுவர முடியுமா ? அப்படி அந்த மிருகங்களை திரும்ப உருவாக்கப்பட்டால் அதனால் என்ன பயன்?

இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜுராசிக் பார்க் ஆங்கில திரைப்படம் மைக்கேல் க்ரிக்டன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.  இதில் அழிந்து போன டைனஸோர் மிருகங்களை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்குவதாக கதை.

ஆனால் அந்த கதைப்படி (அந்த டெக்னாலஜி) மேஜிக்கெல்லாம் செய்து மிருகங்களை உருவாக்குவது என்பது நடவாத காரியம்.  இருந்தாலும் மிருகங்களை உருவாக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

சைபீரியாவின் வடகிழக்கு மூலைப் பகுதியில் உள்ளது ப்ளைஸ்டோசீன் பார்க் (Pleistocene Park) அழிந்து போன தாவர உன்னிகளான காட்டெருமை, கலைமான், இனங்களை உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சடைமுடி யானையை உருவாக்குவது பெரும் சவால்.  பனிப்பாறை பகுதியில் உறைந்து கிடைத்த படிமத்தின் ஜீன் (DNA) கொண்டு திரும்ப அந்த யானையை உருவாக்க முடியுமா?

"பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப் பட்டுவரும்  சடைமுடி யானை"

லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தை சேர்ந்த பேராசிரியர் அட்ரியன் லெஸ்டர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த விலங்கை திரும்ப உருவாக்க முடியும் என்று நினைக்கவில்லை என்கிறார்.

டி.என்.ஏ நுண்தொடர்பிழை உடைந்து போயிருக்கும் ஒருவேலை, அந்த விடுபட்ட பகுதியை இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும்.  அந்த கோடிங்கை கண்டுபிடிக்க ஆசிய யானைகள் உதவுமா?

ஒருவேலை ஜீராஸிக் பார்க் கதையில் வருவது போல தவளையின் டிஎன் ஏ இந்த இணைப்பு இடைவெளியை நிரப்புமா? டோலி ஆட்டின் குளோனிங் சிஸ்டத்தை போல (SCNT = somatic cell nuclear transfer) ஆசிய யானையின் கருமுட்டையில் வலு ஊட்டப் பெற்ற மமூத் யானையின் நியூக்ளியஸ் பதிவிடுதல் சாத்தியமா? இதில் பல உள்குத்துகளை பரிசீலிக்க வேண்டும் என்கிறார் லெஸ்டர்.


"மறு உருவாக்க லிஸ்டில் உள்ள வட அமெரிக்க தூது புறா"

"1936ல் அழிந்துபோன டாஸ்மேனியன் புலி"


"பாதுகாக்கப்பட்டு வரும் கடைசி வெள்ளை காண்டாக்கள்"



சமீபத்தில் (1936 ? ) அழிந்து போன தைலாசின் அல்லது டாஸ்மேனியன் புலி மறு உருவாக்கம் சாத்தியமென்கிறார்கள்.

நியூசவுத்வேல்ஸ் (ஆஸ்திரேலியா) பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்(palaeontology research குரூப்) இது சாத்தியமென்கிறார். 1990 லிருந்து இது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இப்படி விலங்கு மறு உருவாக்க ஆய்வு நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.


பையோ பேங்க்

சாண்டியாகோ உயிர் தொழில்நுட்ப  கல்லூரி விலங்கியல் பதப்படுத்தும் கூடத்தில் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் உயிர் கருக்கள்,செல்கள் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது.



கோவை ஆவி உடன் சேர்ந்து பதிவர்விழாவில் கலந்து கொள்ள கோநேஜீ டிராவல்ஸில்


Download As PDF

Tuesday, August 27, 2013

கொஞ்சம் சிரிங்க பாஸ் - நகைசுவைகள்


முகநூலில் நான் ரசித்த நகைசுவைகள்



டாக்டர் கணவன் உடம்பை பரிசோதித்துவிட்டு " இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் அதற்குள் உங்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்துவிடுங்கள்"

மாலை 5 PM : கண்ணீர் மல்க மனைவியிடம் செய்தியை பகிர்ந்தான் அவன் . துடித்தாள் அவள் ...

எனக்கு உன் கையால ரவா தோசையும் வெங்காய சட்னியும் குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி ......

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு உன் கையால மீன் குழம்பு வச்சு குடும்மா இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும் பால்ல உன் கையால பாதாம் அரைச்சு கொஞ்சமா சர்க்கரை போட்டு குடு - இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ..

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான் ...

அவள் : பேசாம படுங்க - காலைல எழுந்த உடன் எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு , சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பணும் ,அய்யர் ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல booking பண்ணணும் , உங்களுக்கு எழுந்திருக்கற வேலை கூட இல்ல ?

thanks to Ramesh Guru
========================================================================

என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?
என்ன முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..! 

************

உங்க மனைவி பார்க்குற புடவைகள் மேலே 1,2,3 -னு
நம்பர் ஸ்டிக்கர் ஏன் ஒட்ட சொல்றீங்க?
-
நூறு புடவை வரைக்கும் பார்த்துட்டு, நான் பார்த்த
39 -வது புடவைக்கு பில் போடுங்கன்னு சொல்லுவா…அதான்!

************

இந்த பேஷண்ட் அபாய கட்டத்தை தாண்டிட்டார்னு
எதை வச்சு சொல்றீங்க சிஸ்டர்…?
-
இவருக்கு ஆபரேஷன் தேவையில்லைன்னு டாக்டர்
சொல்லிட்டுப் போனது உங்க காதுல விழலையா…?

************

நீதிபதி :
இனிமே கோர்ட் பக்கமே வரக்கூடாதுன்னு போன தடவை
சொல்லியிருந்தேனே..?
கைதி :
குத்தம் செஞ்சுட்டு தலைமறைவா இருந்த என்னை
போலீஸ்காரங்கதான் பிடிச்சுட்டு வந்துட்டாங்க எசமான்..! 
************

டாக்டர், உங்க பீஸை என்னால ஜீரணிக்க முடியலை..!
-
கவலைப்படாதீங்க, அதை ஜீரணிக்க தனியா ஒரு மாத்திரை
தர்றேன் சாப்பிடுங்க…!
************
என்னய்யா இது..சாப்பாட்டு ஐட்டத்தோட பேரையெல்லாம் எழுதி அந்த
ஆள் மனு குடுக்கறான்..?

தலைவரே…அது மனு இல்லை..’மெனு’..!
************
தலைவர் எப்பவும் சரக்கு ஞாபகத்துல இருக்கார்னு
எப்படி சொல்றே?

பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து
விட்டுட்டு அது பொங்கி வழியறதைப் பார்த்து
‘சியர்ஸ்’னு கத்திட்டாரே..!
************

மாணவன்: சார் வயிறு வலிக்குது சார்…
-
ஆசிரியர்: வயித்துல ஒண்ணுமில்லைன்னா, அப்படித்தான்
வலிக்கும்…
-
மாணவன்: அப்படின்னா, நேத்து நீங்க தலை வலிக்குதுன்னு
சொன்னீங்களே!
************
பால்’ பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதுடான்னா…
கால் பக்கத்துக்கு எழுதியிருக்கியே…?
-
இது சுண்டக் காய்ச்சின பால் சார்..!
************
ஆசிரியர்: மாணவர்களே, நீங்கள் படித்து முன்னேறி இந்தியாவுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்…

மாணவர்: ஏன் சார்? இந்தியான்ற பேர் நல்லா இல்லையா?



என் மனைவிக்கு ரொம்ப இளகிய மனசு…
-
அப்படியா?-

ஆமாம்! எப்போ என்னை அடிச்சாலும் உடனேதெரியாம அடிச்சிட்டேன்’னு ஸாரி கேட்டுடுவா..!


தலைவரே…உங்க மேலே ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு மக்கள்
பேசிக்கிறாங்க…!

'கறை நல்லது’னு ஏன் இன்னும் அவங்களுக்குப் புரியலை…!?

thanks to  Venkatesan Subramanian
************

ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒ­ரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது.
ஆனால்,அதற்கு முன் அவர்கள் வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.

பாகிஸ்தானி தன் முதுகில் இருதலையணை கட்டச் சொன்னான்; பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்., 

ஷேக் சொன்னார் ”எனக்கு­ இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்"

இந்தியன் கேட்டான். ”எனக்கு­ 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார். 
அடுத்தது”… 
”இந்தப் பாகிஸ்தான்காரரை­ என் முதுகில் கட்டுங்கள்!” 

இது எப்புடி இருக்கு... ??

thanks to Ramesh Guru
========================================================================

ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..

" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?

"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!

thanks to AR Raja

========================================================================

இம்சை அரசனும், Facebook-ம்..!!!
------------------------------------------
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை 
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன் 
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் 
போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் 
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா 
போருக்கு வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு
ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் 
அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு 
எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய் 
அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..

thanks to Kamal Kamalkvl
------------------

above picture : tks to Suresh Krishanan


Download As PDF

Monday, August 26, 2013

கொசுக்களை இயற்கையாக ஒழிக்கும் முறை - தம்பி தங்க கம்பி!


கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும், புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ;


நான், புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன்.  மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது.

மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது.  இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன்.  செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை தேடிய போது, சப்பாத்திகள்ளி உதவியது.

கொசுவின் முட்டைகள், லார்வா, பியூபா, அடல்ட் என இந்த படிநிலைகளை தாண்டித்தான் கொசுக்களாக உருவம் பெருகின்றன. சப்பாத்திக் கள்ளியில் உள்ள முட்களை அகற்றி, மேல் தோலை நீக்கி, தண்டு பகுதியை நன்றாக அரைத்தேன்.  அதிலிருந்து, "மீயூசிலே ஐஸ்" என்னும் வழுவழுப்பான திரவம் கிடைத்தது.


பின், நிறைய கொசு முட்டைகள் தேங்கியுள்ள நீரை, சோதனை குழாயில் நிரப்பி அதில் சப்பாத்திக் கள்ளியின் திரவத்தை கலந்தேன்.  கொசுவின் "லார்வா' " க்களுக்கு உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல், கலந்த இரண்டே நாட்களில் இறந்தன.  இச்சோதனையில் கொசுவின் கூட்டுப் புழுக்கள் முற்றிலும் அழிந்ததை நிரூபித்தேன்.

இது இயற்கை முறையிலானது என்பதால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணியிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் கொசுக்களின் பெருக்கத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.  புதுச்சேரி சயின்ஸ் போரமும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய அறிவியலை  "மேக் சயின்ஸ்"  (அறிவியல் உருவாக்கம்) போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அதோடு 300 யூரோ  பரிசும் பெற்றேன்.

இளம் அறிவியல் விஞ்ஞானியாக ! உருவெடுக்கும் தம்பி தங்க கம்பியை பாராட்டுகிறேன்.

source of news : dinamalar dtd. 26.8.13
Download As PDF

Saturday, August 24, 2013

நாசாவின் எதிர்கால திட்டமும்; மனிதனும்

2030 வரைக்குமான நாசாவின் செயல் திட்டம்

நாசா தனது ஐம்பத்து ஐந்தாவது ஆண்டை கொண்டாடி வருகிறது. (துவக்கம் : ஜுலை28,1958) மனிதனை நிலவுக்கு அனுப்பியது தொடங்கி செங்கிரகத்திற்கு உலவியை (மார்ஸ் ரோவர்) அனுப்பியதோடு இன்னும் பல எதிர்கால திட்டங்களை வைத்திருக்கிறது.

லேடி (LADEE ) Lunar Atmosphere and Dust  Environment Explorer 

வரும் செப்டம்பர் 2013 ல் நிலவுக்கு லேடி ஆய்வகத்தை( அன்னிய பொருள் துருவி) அனுப்ப இருக்கிறது இது நிலவை 160 நாட்கள் சுற்றி  நிலவின் காற்றுமண்டலம் மற்றும் தூசுமண்டல சுற்றுசூழலை ஆய்வு செய்யப் போகிறது.

மாவென் (MAVEN) Mars Atmosphere and Volatile Evolution Mission

இந்த ஆண்டிற்குள்ளாக (2013) செவ்வாய் வளிமண்டலம் மற்றும் அயன மண்டலத்தை ஆய்வு  செய்யும் திட்டம். மேலும் செவ்வாயில் சூரியப் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வது. இத்திட்டதின் நோக்கம்.

Magnetospheric Multiscale Mission (2014) 

புவி காந்தப்புல ஆய்வு :   2014கில் நான்கு விண்கலங்களை  பூமியின் சுற்றுவட்டத்தில் நிலைநிறுத்தி பூமி மற்றும் சூரியன் இவற்றிற்கு இடையே யான காந்தப்புல செயல்பாட்டை ஆய்வு செய்வது.

New Horizons (2015)

2006 ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வரும் 2015 ஜீலை மாதத்தில் புளுட்டோ மற்றும் அதன் பனிகட்டி துணைக்கோளை நெருங்கி தகவல்களை அளிக்கும்.  புளூட்டோ பூமியில் இருந்து 3 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Juno ( 2016)

நொடிக்கு 19 மைல் வேகத்தில் பறக்கும் ஜூனோ பெரிய கிரகமான வியாழன் வரலாற்றை தூசி தட்டப் போகிறது. இது நடக்க இருப்பது வரும் 2016ம் ஆண்டில்.

இன்சைட் Insight (2016) 

பெரிய துளையிடும் கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தை தோண்டி செய்யப்படும் ஆய்வு வரும் 2016 ல்.

TESS (2017) Transiting Exoplanet Survey Satellite

டெஸ் எனும் சாட்டிலைட் மூலம் பூமியை ஒத்த கிரகங்கங்களின் புள்ளி விவரங்களை இன்னும் தெளிவாக அறிவதற்காகவும்,  உடுமண்டல நட்சத்திரங்களை பற்றி மேலும் பல தகவல்களை சேகரிக்கும் திட்டம்.

சூரிய தீர்க்கசோதனை Solar Probe Plus (2018)

சூரிய தகவமைப்பு ஆய்வுப்பணி.  இது 2018 ல் செயல் பாட்டிற்கு வர இருக்கிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி James Webb Telescope (2018)

பால்வெளி மண்டலத்தை மற்றும் கோள்கள் உருவாக காரணமாக இருந்த பெருவெடிப்பு நிகழ்வு பற்றிய மேம்படுத்தப்பட்ட ஆய்வு இது. ஜேம்ஸ் வெப்  தொலைநோக்கி மூலமாக  வரும் 2018ல்.

OSIRIS -Rex (2018) Origins Spectral Interpretation Resource Identification Security Regolith Explorer

பெரும் விண்கற்பாறைகளை (சிறுகோள் )ஆய்வு செய்யும் பணி.  1900 அடி நீளமான  அஸ்ட்ராய்டை (1999 RQ36) நெருங்கி இயந்திர கைகள் கொண்டு அதில் இருந்து கனிமங்களை எடுத்துகொண்டு வருவது. இது நடக்க இருப்பது 2018ல் தொடங்கி 2023 குள்.

MARS Rover (2020)

2020 ல் செவ்வாய்க்கு ஒரு உலவியை அனுப்பி அங்கிருந்து கனிம மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு செய்வது. இது மனிதனை செவ்வாய்க்கு அனுப்பப்படுவதற்கான முன்னோட்டமாகவும் இருக்கும்.

Manned Mission to an Asteroid (2025)

அமெரிக்க அதிபர் ஓபாமா அறிவித்த ஒரு திட்டம், பெரும் விண்கற்பாறைக்கு மனிதன் இறங்கி ஆராய்ச்சி செய்வது. இதை 2021ற்குள்ளாக செயற்படுத்த நாசா திட்டம் வைத்துள்ளது.  இது பல சவால்களை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரும் 2020ல் ஆரம்பித்து 2030 திற்குள்ளாக மனிதனை செவ்வாயில் குடியமர்த்துவது. இந்த கனவு திட்டத்தை அமெரிக்க நிச்சயமாக செயல்படுத்தும் என ஓபாமா உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பதினாறு ஆண்டுகளுக்குள்ளாக இதெல்லாம்...நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதெல்லாம் சாத்தியமா?





Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)