Followers

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, May 1, 2014

காதலும் ; காமமும் பிளேட்டோ - [18 +]



தத்துவ ஞானி பிளேட்டோ அறிஞர் சாக்ரடீஸின் மாணாக்கர்
கி.மு 427 ல் ஏதென்ஸில் (கிரேக்கம்) பரம்பரை பரம்பரையான செல்வமும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

அவர் எழுதிய 50க்கு மேற்பட்ட நூல்களில் ஒன்று சிம்போசியம் (Symposium) ”ஆன்மீக காதல்” திருக்குறளின் காமத்துப் பால் போன்றது எனச் சொல்லலாம். காதலும் காமமும் பற்றி பிளேட்டோவின் கருத்துகளின் (ஒரு பகுதி ) சுருக்கத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

காதல் - ஒரு தீவிரமான மனநோய்

உன்னைக் காதலிக்க வேண்டுமானால் நீ காதலி.

காதலானது மனிதர்களை தங்கள் காதலிகளுக்காகச் சாகவும் துணியச் செய்கிறது. காதல் ஒன்றுதான் அந்தமாதிரி ஆக்குகிறது ; ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும்.

அழகில் சிறந்ததை காதலிப்பது இயற்கை.  ஆத்மாவில் உள்ள குறை பாடுகளை காதல் விரும்பாதே தவிர, உடல் குறைபாடுகளை அது பெரிது படுத்துவதில்லை.

மனிதன் பல வழிகளில் இழுக்கப் படுகிறான்.  இரண்டு நோக்கங்களுக்கு இடையே இழுக்கப்படுகிறான் என்பதில் சந்தேகமே இல்லை.  இளமையின் அழகை அனுபவிக்க ஒன்று தூண்டுகிறது ; இன்னொன்று அவனை தடுக்கிறது.  ஏனெனில் முன்னவன், உடலை காதலிப்பவன், பழுத்த கனிபோல அழகைத் தேடிப் பசித்து அலைபவன்.  காதலியின் பண்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தன் பசியை வேட்கையுடன் திருப்தி செய்து கொள்வான். மற்றவனோ உண்மையில் இன்னொரு ஆத்மாவை விரும்பும் ஓர் ஆத்மா ஆவான் ; உடல் இச்சையை இரண்டாவதாகத் தான் கைக் கொள்கிறான்.  சரீர காதலின் திருப்தியை மூர்க்கத்தனமானதெனக் கருதுகிறான். சுபாவத்தையும் திட நெஞ்சையும், கம்பீரத்தையும், அறிவையுமே அவன் மதித்துப் போற்றுகிறான். அவன் வாஞ்சைக்கு பாத்திரமான தூய பொருளான ஒருத்தியுடன் தூய்மையான முறையில் வாழவே ஆசைப் படுகிறான்.

[ தோழமைக்காக பழகும் காதலை தோழமைக் காதல் என்கிறோம், உடல் ஈடுபாடு இல்லாமல் உள்ள ஈடுபாட்டை விரும்பும் காதலை “பிளேடானிக் லவ்” என்கிறோம் ]

ஆண்பெண் உறவை சிற்றின்பம் என்கிறார்கள் அதைவிட வலிமையான சுகம் வேறு ஏதும் இல்லை என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதைப் போல வெறியூட்டும் போதையும் வேறொன்றுமில்லை.

எது சீராகவும் அழகாகவும் அமைந்திருக்கிறதோ அதை நிதானமாகவும் ஆழமாகவும் கலை உணர்வோடும் காதலிப்பது தானே உண்மையான காதல்.

எது வெறியூட்டக் கூடியதோ, மிதமிஞ்சிப் போவதோ அதற்கு உண்மையான காதலில் இடமில்லை.

உண்மையான காதல் நிலைத்திருக்க வேண்டுமானால் சிற்றின்ப ஈடுபாடு தலை காட்டக் கூடாது.   காதலர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் காதலிக்கிறவர்களாயிருந்தால் உடல் இன்பத்தில் அக்கரை கொள்ள மாட்டார்கள்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிடலாம்; இறுக கட்டியணைத்துக் கொள்ளலாம்.  ஓயாமல் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் இந்த எல்லையைக் கடந்து அவர்கள் போகக்கூடாது;  சரீர சுகத்தில் நாட்டம் கொள்ளக் கூடாது.  அவ்வாறு மீறி செய்வார்களானால் காதலின் நிஜச் சுவையை உணராமல் போவதோடு, சரீர ஈடு பாடு அதிகரிக்க நாளடைவில் பலஹீன மாவார்கள்.

(திருவள்ளுவர் இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார் காமம் மலரைவிட மென்மையனது. அதன் தன்மை அறிந்து நுட்பமாக ஈடுபடுபவர்கள் இவ்வுலகில் வெகு சிலரே )
Download As PDF

Monday, April 28, 2014

எங்கே, ஏன், எப்படி ?


எத்தகைய நாகரீக மக்கள் ”மேக்கப்” முதலில் பயன்படுத்தி இருப்பார்கள் ?

நாகரீக ( ! ) ஹோமோசாபியன்ஸ் (Homo  sapiens) முதன் முதலில் மேக்கப் என்ற ஒன்றை கண்டுபிடித்திருக்கலாம்.  சுமார் 75000 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க ப்ளூம்பாஸ் குகை சித்திரங்களில் (ochre * ) இயற்கையில் கிடைக்கும் இரும்பு ஆக்ஸைடு பிக்மெண்ட் நிறங்கள் பயன்படுத்தப் பட்டு இருப்பதை  வைத்து அப்போதே மேக்கப் என்ற சமாச்சாரம் தோன்றி இருக்கலாம் என கருதலாம். அதை நாகரீக வாழ்க்கை என ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்,  ஃபிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களில் கிடைக்கப் பெற்ற சித்திரங்களில் வேலைப்பாடுகளில் அதே போல இரும்பு ஆக்ஸைடு வண்ணங்கள் பயன் படுத்தப் பட்டு இருக்கின்றன. இது சுமார் 20000 வருடங்களுக்கு முன்.


இன்னும் கிட்ட என்னால், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர் ஆரஞ்ச் வண்ணக் கலவை, கண் மை, மருதாணி இவைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சரி அப்படியாயின் நமது இதிகாச காலத்திலேயே முக அழகு வசீகரம் பற்றியெல்லாம் கதை கதையாக படித்திருக்கிறோம். தமிழர்களும் இத்தகைய முக அழகு கலையில் சிறந்து விளங்கி இருப்பர் என்று கருத இடமுண்டு.

*Ochre = Any of various earths containing silica and alumina and ferric oxide; used as a pigment

புதிர் 

ஒருவர் வெளியூருக்கு வேலை விசயமாக போக வேண்டி இருந்ததால், இரவில் காரை அவரே ஓட்டிச் சென்றார். அசதி காரணமாக வழியில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு லாட்ஜ் கிடைக்குமா என பார்த்தார் அந்த ஊரில் லாட்ஜ் இல்லை. பெட்டி கடைகாரரின் உதவியால் ஒரு இடம் கிடைக்க தூங்கிவிட்டு அதிகாலை காரை பார்த்தால் அதிர்ச்சி , காரில் இருந்து ஒரு டயர் திருடு போயிருந்தது. நல்ல வேலையாக அவரிடம் ஸ்டெப்னி ( டயர் ) இருந்தது ஆனால் அதுக்கு போல்ட் நட் இல்லை. பக்கத்தில் எங்கு தேடியும் டயருக்கான போல்ட் நட் கிடைக்கல. வயசானவர் சொன்ன யோசனைப் படி டயரை மாட்டி காரை ஓட்டி சென்றார் எப்படி ?

எப்படி  ? பதில் பதிவின் இறுதியில்.


பைசா சாய் கோபுரம் இன்னும் சாய்ந்து வருகிறதா ?

1173 முதல் அடித்தளமிட்டு கட்டப்பட்ட இந்த கோபுரம் இரண்டு அடுக்குகள் கட்டப்பட்ட நிலையிலேயே நிலை சாய்ந்திருக்கிறது.

சாய்மானத்தின் காரணமாக அதற்குமேல் கட்டப்பட்ட தளங்கள் (1178) சாய்வுக்கு எதிரான நிலையில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அது அமைந்துள்ள நில அமைவே அது மேன் மேலும் சாயத்தொடங்கியது.  அதன் பிறகு 200 ஆண்டுகள் கழிந்து அது சாய்ந்து விழுந்துவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.   அதன் அடித்தளம் உறுதிப் படுத்தப் பட்டது.


அதன்பிறகு 1990, 2001, 2008 ஆண்டுகளில் பல கட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் அடித்தள மண் (முக்கால் பாகம்) வெளியே எடுக்கப் பட்டு நிலத்தடி கடினப் படுத்தப் பட்டு கட்டிடத்தின் சாய்வு 3.97 டிகிரிகள் உயர்த்தப்பட்டதாகவும், கோபுரத்தின் சாய்வை தடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் வலது கைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் ? 



பெரும்பாளும் 90 % பேர் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.  பிறக்கும் பத்தில் ஒன்பது குழந்தைகள் வலது பெருவிரலை தான் சூப்புகின்றன.

இடது அரைவட்ட மூளை பகுதி நமது வலது கைகால் உடல் இயங்கத்தை கட்டுப் படுத்துகிறது.  அதே பகுதியில் தான் மொழி சம்பந்தமான சங்கதிகளும் மூளை செல்களால் இயக்கப் படுகின்றன. மொழியோடு கை எழுத்தும் வலது கை இயக்கத்தில் வந்துவிடுகிறது.  ஆனால் மொழி ஏன் இடது பாக மூளைப் பகுதியிலே செயல் பாட்டில் இருக்கு ?  இதற்கு காரணம் மில்லியன் ஆண்டுகால மனித மரபு கூறு.


விஞ்ஞானிகள், 2013 ல் இது குறித்த ஜெனிடிக் ஆய்வில்  PCSK6 ஜீன் கூறு கை பழக்கத்தை மனித உடலில் கடத்தி வருகிறது என தெரிந்து கொண்டார்கள். ஆனால் 4000 இரட்டை குழந்தைகள் அவற்றின் கை பழக்கங்களை ஆய்வு செய்ததில் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.  ( ??)

கான்சாஸ் பல்கலை கழகத்தில் கைபழக்கம் பற்றிய ஒரு ஆய்வில் அக்கால மனிதர்களின் கை பழக்கம் பெரும்பாளும் வலதாக இருக்க கண்டனர். மண்டை ஓட்டு எலும்புகளில் வலது தாடைப் பற்கள் தேய்மானத்தை வைத்து முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு மனிதனின் கைப் பழக்கம் என்பது ஜீனில் உள்ளபடி உறுதி செய்யப்படுகிறது என்பது மட்டும் புலப்படுகிறது.

க்யூப் வடிவதர்பூசணி  எப்படி விளையுது ?



சின்னதா வளரும் போதே படத்தில் இருக்கும் பெட்டியில், காம்புக்கு துளை விட்டு வளர்ப்பாங்க. அதே போல இதய வடிவ பெட்டியா இருந்தா அதே வடிவில் கோசாப் பழம் ரெடி

2001 ல ஜப்பான் இதை ரெஜிஸ்டர் செஞ்சதால 1st invention அவங்க தான். ஆன அதுக்கு பல வருசம் முன்னாடியே இது உருவாக்கப் பட்டுதுன்னு சொல்றாங்க.

எப்படி இந்த ஐடியான்னா ஈஸியா கேரி பன்ன வசதியா இருக்குமேன்ற எண்ணம் தான். ரெகுலர் விலை கம்மி இதுக்கு விலை அதிகம்.




Labels : கை பழக்கம், பைசா சாய் கோபுரம், ஆதிகால மேக்கப், முக அழகு, துணுக்கு


Download As PDF

Friday, April 11, 2014

சக்கரை கலந்த இறைச்சியினால் மறதி ஏற்படுமா ?

மொறு மொறு இறைச்சியில் சுவைக்காக இனிப்பு சேர்க்கப் படுகிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் உபாதைகள்  குறித்த தகவல்கள் ...தொடர்ந்து படியுங்கள்..

இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம் காரணமாக, அந்த இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 



பிரவுனிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில் இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம் சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது, அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில் வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும் போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும். பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும். இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும் உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும் மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது இந்த பிரவுனிங் முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும் புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட் என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள். இப்படியான ஏஜியி வேதியியல் மாற்றம்
ஏற்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். குறிப்பாக சர்க்கரை நோய் உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல்
மாற்றம் ஏற்பட்ட உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

தற்போது இத்தகைய உணவுகள்,  குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல் மாற்றத்துக்குள்ளான உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த மருத்துவ விஞ்ஞானிகளின்  எச்சரிக்கை ஏற்கெனவே மருத்துவ உலகில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக
வந்திருப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல், வாழ்வியல் சிறப்பு மருத்துவர் வி கவுசல்யா.

Tks to bbc news

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?'

பழமொழியாக வழங்கி வந்தாலும் இதுக்கு விடை சொல்ல முடியுமா ?

இதற்கான பதில் இறுதியில்...

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

தவறு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாது. தவறுகளே நம்மை கூர் செய்கின்றன



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நகைச்சுவை

தேர்தலில் நின்ற ஒருவர் தோற்ற தாக அறிவிக்கப் பட்டது. அவருக்கு 3 ஓட்டுகள் மட்டுமே கிடத்து இருந்தது. அவர் மனைவி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

"யோவ்...எனக்கு அப்பவே சந்தேகம் இருந்திச்சு. உனக்கு ஓட்டு போட்ட அவ யாருன்னு இப்ப ...இப்பவே தெரிஞ்சாகனும்"

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

நடிகையை கல்யாணம் செஞ்சுகிட்ட ஒருத்தன், டாக்டரிடம் போனான்...

" டாக்டர் எ மனைவி மேலே ஒரே சந்தேகமா இருக்கு "

"ஏன் "

" அவ அந்த மாதிரி போஸ் கொடுத்து இருக்கா டாக்"

" நடிப்பு தானப்பா"

" அதில்ல இல்ல டாக் அதுக்காக டிரைவிங் லைசென்ஸ்ல கூடவா.... "



~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

அப்ப புதுசா கலியாணம் ஆகி இருந்தது. பல சமயத்துல வீட்டுக்கு வர லேட்டாகிடும்.  வீட்டு நாய் என்ன பார்த்து சுத்தி சுத்தி குரைக்கும். அவ என்னோட செறுப்ப எடுத்து போடுவா அது குரைப் பத நிறுத்திடும்.

3 வருடங்களுக்கு பிறகு.....



"என்னோட நாய் செறுப்பு எடுத்து கொண்டு வருது

"அட டே"

என்ன நொ டே டே...

அவ என்ன பார்த்து குரைக்கிறா...



(நகைச்சுவைக் காக யார் மனதையும் புண் படுத்துவதற்காக இல்லை முக்கியமா என வூட்டுகாரி க்கு LoL) 

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~


மொபைல் போன் பயன் படுத்துவோரில் நூற்றில் 68 பேருக்கு "பான் தம் வைப்ரேசன் சின்ரோம்" இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.  அதாவது அருகில் இருக்கும் யாரோட மொபைல் சினுங்கினால் நம்முழுதான்னு எடுத்துப் பார்க்கரது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

விடுகதைக்கான பதில்  "காளான்"

விடுகதையாக இருந்தது பின்னாளில் பழமொழியாக மருவியது.



Download As PDF

Friday, March 28, 2014

வால் செத்துப் போச்சி !!

சந்தர்பங்களும் வாய்ப்புகளும் வாழைப் பழம் போல் வருவதில்லை....

அவைகள் பலா பழம் போலவே வருகின்றன.
ஆம்.... வாழை பழம் வேண்டுமென்கிற போது சுலபமாக உறித்து தின்று விடலாம்.  பலா பழத்தை சுவைக்க முட்களை நீக்கி பிசு பிசுப்பைத் தாண்டி சுளைகளை எடுக்க மெனக்கெட வேண்டும்.



கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள் தனக்கு வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட காரணமாயிற்று என்று கவிஞர் வாலி குறிப்பிட்டார்

அந்த பாடல் வரிகள் ...

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

இதே பாடலில் இந்த வரியையும் ரசிக்காமல் கடக்க முடியாது....


""வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 
வாசல் தோறும் வேதனை இருக்கும் 
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.""

ஆம் அந்த பாடலின் முதல் வரிகள்...

மயக்கமா தயக்கமா....


#படித்து_ரசித்தது

வால் செத்துப் போச்சி !!

இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை அவன் வாலைப் பற்றித்தான் கவலை. வாலி வானுலகம் போயிருந்தாலும் அவன் வால் மண்ணுலகில் வைக்கப் பட்டு இருந்தால் என்ன செய்வது ?? அந்த வால் வந்து தன்னை துன்புறுத்துமோ என்ற பயம்.

வாலி மீளாது போயினும் அவன் வால் மீண்டுவிட்டால் என்ன செய்வது என்று அச்சப் படுகிறான். அச்சத்தை தீர்த்து வைக்கிறான் அனுமன்.

அஞ்சலை அரக்க ! பார்விட்டந்தர மடைந்தானறே

வெஞ்சின வாலி, மீளான், வாலும்போய் வீழ்ந்ததன்றே !!

{{ கம்பராமாயணம்}}


தானிக்கி தீனி!!

{பரமார்த குரு கதை}

ஒரு சமயம் குருவும் சீடர்களும் வெளியூரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். செமையான வெயில், வழியில் தென்பட்ட ஒரு விடுதிக்கு சென்றனர். விடுதியாளரிடம் சற்று இளைப்பாறி செல்வதாக கேட்டு இடம் பிடித்தார்கள். அந்த விடுதிக்கு பணக்காரர் ஒருவர் குடும்பத் தோடு வந்தார். அவர் விடுதியாளரிடம் பணத்தை பற்றி கவலை படாமல் அறுசுவை உணவு செய்து தரும் படி கேட்டார். உணவின் மணம் மூக்கை துளைத்தது. குருவிற்கும் சீடர்களுக்கும் பசி வயிற்றை கிள்ள கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்று மூட்டைகளை பிரித்து உண்ணத் தொடங்கினர். ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் மணத்தை உறிஞ்சி யவாறே கட்டுச் சோற்றை காலி செய்தனர்.

சட்டென்று வந்த விடுதியாளர் அவர்களின் செயலை கவனித்துவிட்டார். அவர்களிடம் சமையல் மணத்தை நுகர்ந்தவாரே அவர்கள் சாப்பிட்டதால் அதற்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.

காசு தர மறுத்த குரு சீஷ்ய கோடிகளை பஞ்சாயத்தில் நிறுத்தினார். நடந்த தை கேட்ட நாட்டாமை விடுதியாளர் சொல்வது சரிதானென்றும் அதனால் குரு அவருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு சொன்னார். குரு மற்றும் சீடர்கள் தீர்ப் பை கேட்டு நொந்தனர்.

அதோடு நில்லாமல் நாட்டாமை வேலைக் காரனை கூப்பிட்டு பண முடிப்பை எடுத்து வர செய்தார். விடுதியாளரை அழைத்து காசு நிறைந்த முடிப்பை மேலும் கீழு ஆட்டிக் காட்டி என்ன இது ? எனக் கேட்டார்.

" காசு, துட்டு, பணம், பணம்...என சந்தோசமாக கூறினார் "

பணத்தின் ஓசையை கேட்டீர்கள் அல்லவா அது நீங்கள் காசை வாங்கி கொண்டதற்கு சமம்.

தானிக்கி தீனி சரியா போச்சு " இதுதான் தீர்ப்பு என்றார்.

$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $


// மேரி க்யூரி //

போலந்து பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் பட்ட இடத்தில் பிறந்தவரான மேரி க்யூரி உலக மக்களுக்காக புற்று நோய் குணப் படுத்தும் ரேடியத்தை தன் உயிர் கொடுத்து கண்டு பிடித்தார் என்று சொல்லலாம்.

சோதனைச் சாலையில் கதிர் வீச்சு தாக்கத்தினால் அவர் ரத்தம் கெட்டது.
அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் சொன்னார் "அழகான யுவதிகள் இருக்க வேண்டிய இடம் சமையல் அறையும் வரவேற்பறையும் தவிர விஞ்ஞான வகுப்பறை அல்ல..."

பெண்ணான அவருக்கு நொபல் பரிசு வழங்குவதை ஒரு கூட்டம் கடுமையாக எதிர்த்தது. எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு 45 மாதங்கள் ஓய்வில்லாமல் முதுகு ஒடியும் படியான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். மேரி கண்டுபிடித்த ரேடியம் மிகக் கொடுமையான புற்று நோயை குணப் படுத்தும் மருந்தாயிற்று.

ரேடியம் கண்டுபிடிக்கும் முறையை, காப்புரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்து இருந்தால் கோடி கோடியாய் சம்பாதித்திருக்க முடியும் ஆனால், உலகத்துக்கே இலவசமாக வழங்கிவிட்டார்.

அதன் பின் அவருக்கே ரேடியம் தேவைப் பட்ட போது தயாரித்து வைத்திருந்த எந்த நிறுவனமும் அவருக்கு கொடுக்க முன் வரவில்லை.

அமெரிக்காவை சேர்ந்த மாதர் அமைப்பு லட்சம் டாலர் நிதிதிரட்டி அவருக்கு ரேடியம் கிடைக்க ஏற்பாடு செய்தது. இறக்கப் போவதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அந்த முடிவை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார். அவர் வேண்டியது இறப்புக்குப் பின் கணவர் க்யூரியின் கல்லறைக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே விருப்பமாய் இருந்தது.

அவரின் விருப்பத்திற்கும் சாதனைக்கும் உற்ற துணையாக இருந்தார் அவர் கணவர். பெண்கள் படிப்பதை கேலி பேசும் படிப்பாளிகள் நிறைந்த சமூகத்தில் இருந்து மீண்டுவந்த மேரி அன்றைக்கு சவால்களை சந்திக்காமல் இருந்து இருந்தால் உலகம் ஒரு அருமையான விஞ்ஞானியை இழந்து இருக்கும்.  








Download As PDF

Tuesday, February 18, 2014

ooஓவியர் மருது - நவீன கலைவெளியின் விளைபுலம் 00[பகிர்வு ]





மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயர் நூலின் இரண்டாவது
அத்தியாயம் இப்படித் தொடங்கும்:

“சனிக்கிழமை காலைப் பொழுது தொடங்கியிருந்தது. கோடை உலகம் புதுப்பொலிவோடு ஒளிர்ந்தது; ஜீவன் பொங்கி வழிந்தது; ஒவ்வொரு இதயத்திலும் பாடல் ஒன்று பதிந்திருந்தது;

அந்த இதயம் இளமையாயிருப்பின் உதடுகளில் இசை கசிந்து
கொண்டிருந்தது. ஒவ்வொரு முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்;
எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் வசந்தம் குடிகொண்டிருந்தது. லோகஸ்ட் மரங்கள் பூத்துக் குலுங்கின.  அந்த மலர்களின் வாசம் காற்றில் கலந்திருந்தன.”

மருதுவின் இருப்பில் மார்க் ட்வைனின் இந்தக் கிராமத்து இதமும் வசந்தமும் கலந்திருக்கும். ட்ராட்ஸ்கி மருதுவின் செயல்பாடுகளிலும் உரையாடல்களிலும் உடனிருக்கும்போது பலமுறை இந்த வரிகள் என் நெஞ்சில் நிழலாடுவதை உணர்ந்திருக்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் மருதுவுடன் நிகழ்ந்த சந்திப்புகள் எல்லாம் எனக்கு வைகாசி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன. மணிக்கதவின் தாழ்திறப்பாகத் தொடங்கும் மருதுவின் நேர்ப்பேச்சு, உலகை ஏகதேசமாக்கிக் காட்டும்; தமிழ்த் தொன்மங்களை பேசியும் எழுதியும் சித்திரங்களாக்கியும் சிலாகிக்கும்; அவரது அம்மா
வழி தாத்தா சோலைமலையின் பிம்பம் எழும். அவருடன் நேற்றைய திரை உலக ஆளுமைகளின் முகங்கள் வந்து போகும்.


அவரது கோரிப்பாளையம் வீட்டின் இரண்டு தலைமுறை கலை இலக்கிய அரசியல் வரலாறு அதிர்ந்து கொண்டிருக்கும். அவரது கோட்டோவியங்களில் காணப்படும் தீர்க்கமான கோடுகளும் முகங்களும் நமது வேர்களை அடையாளப் படுத்துவதைப் போல அவரது உதடுகள் தமிழர் சார்ந்த கலை
அரசியல் பண்பாட்டு வெளிகளில் அவரது நிலைப்பாட்டை தீர்க்கமாக உச்சரித்துக் கொண்டிருக்கும். மொன்னைத் தன்மை அறியாதது அவரது மொழி;

எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் மருதுவுக்கு வெளிப்படையான மதிப்பீடுகள் உண்டு. அவரது உணர்வுகளுக்கும் உந்துதல்களுக்கும் வாழ்வியல் அறத்திற்கும் அப்பால் உள்ள எதையும் யாரையும் நிராகரிக்க அல்லது
புறக்கணிக்க அவர் தயங்குவதே இல்லை.

அவர் வாழ்வதும் வரைவதும் ஒரே தளத்தில்தான். வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்து வரும் உறுதியும் தெளிவும் துணிவும் அவரது பதின் வருவ வரலாற்றிலேயே இடம்பிடித்துள்ளன. ‘கல்லூரிக் கல்வி எனக்கு பிரதானமில்லை’ என்று தனது தந்தையிடம் பிரகடனப்படுத்தும் சொற்கள் பொருள் பொதிந்தவை. தனது வாழ்க்கையைத் தானே தகவமைத்துக் கொண்டவர் அவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா தனது ஆசான் மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘அவர் தமிழின் விளைபுலமாக’ விளங்கினார் என்று குறிப்பிடுவார். என்னைப் பொறுத்தவரை நவீன கால தமிழக கலைப் பெருவெளியின் விளைபுலமாக மருது வாழ்கிறார்
என்று எவ்வித தயக்கமுமின்றி உரத்துச் சொல்லமுடியும். அப்படிச் சொல்வதற்கான காரணிகள் நிராகரிக்க முடியாதவை.

கணினியை அறிவியல் உலகத்திற்கான அதிசயப் பொருளாகக் கண்டு காத தூரம் விலகியிருந்த தமிழ்க் கலையுலகில் கணினி தமிழ்க் கலையுலகின் விரைவான விரிவாக்கத்திற்கான திறவுகோல் என்று பேசியும் பயன்படுத்தியும் உணர்த்தியவர் மருது. ஒரு காலக்கட்டத்தில் தமிழகத்தில் டிஜிட்டல் என்ற சொல்லை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஒரே கலைஞன் மருதுவாகத்தான் இருக்க முடியும். தமிழில் உலகத்தரமான காமிக்ஸ் புத்தகங்களின் தேவையை  கிராஃபிக்ஸ் நாவல் பற்றிய அறிமுகத்தை இவை சார்ந்த மாபெரும் உலகக் கலைஞர்களை ஓயாமல் ஓதிக் கொண்டிருந்தவரும்
இவரே.

வருங்காலத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பின் பெரும்பகுதி ஒரு பெரிய அறைக்குள்ளே முடிந்துவிடும் என்று அலறிக் கொண்டிருந்த கலைஞனும் இவரே. அனிமேஷன் செய்யப்போகிற அதிசயங்களை திரைப்படத் துறை
நண்பர்களிடம் ஏன் சொல்கிறேன்? எதற்குச் சொல்கிறேன் என்று வினாக்களை எழப்பியபடி 20 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசிவந்த விஷயங்கள் அவரின் தொடுவான எல்லையை தீர்மானிக்க முடியாதபடி நம்மைத் தடுமாறச்
செளிணிகின்றன.

சிற்றிதழ் கூடாரங்களில், நவீன இலக்கிய முகாம்களில் வான்காவும் டாலியும் வலிந்து பேசப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் வந்த காலங்களில் மருது 19ஆம்
நூற்றாண்டின் ஈடு இணையற்ற பிரெஞ்சு ஓவியர் புகெரவ்வை   எனக்கு அறிமுகப்படுத்தினார். வாழ்நாள் முழுவதும் இழிபுகழைத் தவிர வேறோன்றும் காணாத அந்த மகா கலைஞனின் மனித உருவ சித்தரிப்புகளில் உள்ளார்ந்து கிடக்கும் அந்த மனிதர்களின் நுட்பமான மனநிலையையும்
ஆளுமையையும் உணர்த்தும் மேதைமையை பேசிக் கொண்டிருந்தார்.

‘எழுத்தாளர்களுக்கு ஓவியர்கள் பக்கவாத்யகாரர்கள் அல்ல’ என்று பகிரங்கமாக பிரகடனம் செளிணித மருதுவுக்கு கலைஞர்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை எல்லையற்றது. கலைஞனின் தனித்துவதத்திற்கும் சுதந்திரத்திற்கும் அறிந்தோ அறியாமலோ ஏற்படும் கடுகளவு பிசகைக் கூட அவர் பொறுத்துக் கொள்வதில்லை. ஒருமுறை தமிழ்நாட்டின் பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் தனது நூலுக்கான அட்டையை வடிவமைத்து தருமாறு மருதுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
மருதுவின் வடிவமைப்பில் நாளுக்கொரு திருத்தங்களைச் சொல்லியதோடு முகப்பு ஓவியத்தின் வண்ணங்களிலும் சிலமாற்றங்களைச் செளிணியுமாறு கூறினார். அவர் சொன்னது அனைத்தையும் கேட்டுக் கொண்டதோடு சரி.
குறுக்கீட்டை விரும்பாத மருது அந்த எழுத்தாளரை புறக்கணித்தார். வடிவமைத்த அட்டையை கிடப்பில் போட்டார். கடைசியாக மருதுவின் மனநிலையை உணர்ந்து தன் மீது ஏதேனும் வருத்தமா? என்று கேட்டார் அந்த பிரபல எழுத்தாளர்.

‘நீங்கள்தான் வாயால் எதையும் வரைந்துவிட முடியும் என்றால் நான் எதற்கு? கலைஞன் உங்கள் கையில் ஒரு கருவியல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்’ என்று காட்டமாகப் பதில் சொன்னார். இது கலைஞர்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கான மருதுவின் அறைகூவல். 

மருதுவின் கலைப்பயணம் வானில் சீறிஎழும் வாணவேடிக்கைகளின் வேகத்தோடும் அவை வெடித்துச் சிதறி விண்ணை வண்ணமயமாக்கும் அழகோடும் தொளிணிவின்றித் தொடர்கிறது. மருது ஒரு இறைமறுப்பாளர். பெரியார் அவருக்கு மிகநெருக்கமான ஆசான். தந்தை மருதப்பன் ஒரு
ட்ராட்ஸ்கியிஸ்ட்; தொடக்கத்தில் காந்தி ஆஸ்ரமத்தில் ஓராண்டு காலம் தங்கி பணியாற்றியவர்; இலங்கையிலிருந்து தப்பி வந்த கொமீனா டி செல்வா, என்னம் பெரைரா ஆகிய இரண்டு ட்ராட்ஸ்கியவாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்.

பீம்சிங் படங்களுக்கு கதை வசனம் எழுதிய சோலைமலை மருதுவின் அம்மா வழி தாத்தா. இவர்தான் மருதுவின் கலையார்வத்தை சிறுவயதிலேயே இனம் கண்டு அவரை ஊக்குவித்தவர். நடிகர் எஸ்.எஸ்.ஆர் மருதுவுக்கு பெரியப்பா
மகன். இத்தகைய குடும்பச் சூழலில் மருதுவின் கலை இலக்கிய வாழ்க்கை பயணப்பட்டிருக்கிறது.

ஒரு நல்ல நாற்றங்காலில் முளைவிட்ட பயிர் மருது. இந்த இளம் நாற்று எந்த நிலத்தில் பிடுங்கி நடப்படவேண்டும் என்பதையும் தான் அளிக்கப்போகும் விளைச்சலின் தரத்தையும் மகசூலையும் தீர்மானித்து வைத்திருந்தது.
முதல் முறையாக மருது சென்னைக்கு வந்தது அவரது உறவினர் திருமணம் ஒன்றிற்காக. அது அவரது பதின்பருவம் தொடங்கிய காலகட்டம். அவரை அழைத்துச் செல்ல நடிகர் எஸ். எஸ். ஆர் அவர்கள் ஒரு நீண்ட கார் அனுப்பி
வைத்திருந்தார். தனது குடும்பத்தினரோடு அந்த மோட்டார் வண்டியில் ஏறி முன்சீட்டில் அமர்ந்த மருதுவின் கண்களில் ஸ்டியரிங்வீலில் பதிந்திருந்த எஸ்.எஸ்.ஆர் என்ற வார்த்தைகள் இன்னும் அவரது நினைவில் உள்ளது. சென்னையில் அவர் பயணித்த அதே வண்டியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்
மரணமடைந்த தியாகராஜ பாகவதரின் உடல் திருச்சிக்கு எஸ்.எஸ்.ஆரால் எடுத்துச் செல்லப்பட்டது. இதை எஸ்.எஸ்.ஆர் சொல்லக் கேட்டறிந்திருக்கிறார் மருது. நாடறிய வாழ்ந்த கலைஞனின் அவலம் மிகுந்த கடைசிப் பயணத்துடன் தான் பயணித்த வாகனமும் சம்பந்தப்பட்டிருப்பதைச் சொல்லி மருது நெகிழ்ந்து போவார்.

மருதுவின் வாழ்க்கை சம்பவங்களாலும் மனிதர்களாலும் நிறைந்தது. தீவிர கொள்கைகளோடும் தீர்க்கமான முடிவுகளோடும் இயங்கும் மருது தனது சுயசிந்தனைகளை மையப்படுத்தியே பயணிக்கிறார். வறட்டு வாதங்களுக்கு அவர் இடம் தருவதில்லை. புற அடையாங்களை உவப்பதில்லை. அழகியல்
பார்வையும் அறிவியல் பார்வையும் அவரது வழித்தடங்கள்.

ஒருமுறை நான் சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்கு சிதம்பரம் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கலைஞன் ரோடின் பார்த்து வியந்த ஆடல்வல்லானுக்கு இரவு 3.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் தொடங்கியது. அற்புதமான அந்த
வெண்கலச் சிலைமீது குடம் குடமாக ஊற்றப்பட்ட தேன் வழிந்தோடியது. வழிகிற கெட்டித்தேன் நடராசரின் முகத்தை மறைத்து நின்றது. முகமற்ற முகத்துடன் நடனம்புரிந்த அழகில் ஆயிரம் மாயவித்தைகளை கண்டுணர முடிந்தது. மருது வரைந்த ஒரு நடராஜர் ஓவியத்திலும் நடராஜர் முகமற்ற
முகத்துடன் இருந்தார். மற்ற ஆராதனைகள் தொடர்ந்தன.

மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட திருநீற்றில் முகமற்றிருந்த நடராசர் மறுஒன்றிலாத ஒளிரும் முகத்துடன் காட்சியளித்தார். பிறகு வண்ண மலர்கள் தூவித் தொழுதனர். ஏறக்குறைய மூன்று மணி நேரம் இந்த ஆராதனை தொடர்ந்தது. இவையணைத்தும் முடிந்தபின் கோயிலை விட்டு வெளியே வந்ததும் முகமற்ற நடராசரைப் பற்றிப் மருதுவிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. காலை 7 மணி இருக்கும். கைபேசி மூலம் மருதுவை தொடர்பு கொண்டேன். அவர் குடும்பத்துடன் பொங்கலுக்காக காரில் மதுரை சென்று கொண்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் பேசினேன்.

“இல்ல மருது. இன்றைக்கு சிதம்பரம் வந்திருந்தேன். நடராஜரின் ஆருத்ரா தரிசனத்திற்காக, மூன்று மணிநேரம் அபிஷேகம் நடந்தது. நடராஜர் சிலைமீது குடம் குடமாகத் தேனைக் கொட்டியபோது நடராஜரின் முகம் முழுதுமாகத் தெரியவில்லை. நீங்கள் வரைந்த முகமற்ற நடராஜரை இன்று நேரில் தரிசித்தேன். மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்த ஆராதனையில் அழகின் பேரலைகள் எழுவதை உங்களால் கண்டுகொள்ள முடியும். அடுத்த ஆருத்ரா தரிசனத்திற்கு நீங்களும் உங்களது பிரதம சீடன் கருணாநிதியும் மற்ற இளங்கலைஞர்களுடன் இதைக் காணவேண்டும்” என்று சொன்னேன்.

“ஆஹா பிரமாதம். இதுதான் நான் சொல்றேன். இது எல்லாமே ஒரு ’Theatrical Effect’. உங்களுக்கு பக்தி, எங்களுக்கு கலை. இதை நீங்க புரிஞ்சி வைச்சிருக்கிங்க. அங்கதான் நாம ஒண்ணு சேர்றோம்” என்று என்றைக்குமான ஏகாந்த கிளர்ச்சியோடு பேசினார்.

இறைமறுப்பாளரான மருதுவின் அழகியல் பார்வையில் எந்த வறட்டு தத்துவங்களுக்கும் இடமிருக்காது என்று நான் சொல்லுவது இதை வைத்துத்தான். ‘தரிசனம் என்பது தானாக நிகழ்வது’ என்பார் லா.ச.ரா.
எனக்கு கிடைத்த மருது தரிசனமும் அப்படித்தான். இந்தக் கட்டுரையில் வேண்டுமென்றே மருதுவை ஓவியர் என்ற அடைமொழியிட்டு குறிப்பிடவில்லை. நாயக்கர் மஹாலில் ஒரு தூணைக்காட்டி இதுதான் நாயக்கர் மஹால் என்று சொல்ல முடியுமா? அது பரமார்த்த குருவின் சீடர்கள்
யானையைப் பார்த்த கதைதான். உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு நிகழ்த்துக் கலைஞனாக மாறிவிடும் மருதுவின் பல்பரிமாணங்களை கண்டு கொண்டவர்களுக்கு வெறும் ‘ஓவியர் மருது’ என்ற விளி உவப்பாகாது. அவரது நெஞ்சில் தமிழ் மண்ணின் ஈரம் கசியும். அவரது நுண்மான் நுழைபுலத்தில் மேலைத் தேய நவீனங்களுடன்
ஆயிரம் கலைகள் பரவசப்படும்.



"அரசன்"






"2012 ல் ''

இத்தகைய கலைஞனின் வீட்டுக்கு கலைமாமணி மட்டும் வந்து கதவைத் தட்டிச் சென்றுள்ளது. ‘பத்ம’ங்களுக்கு இன்னும் பாதை தெரியவில்லையாம்.
‘நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டுக்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்’ என்று வேண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்த பொழுது ஆஸ்கார் ஒயில்டு எழுதினான். இன்றைக்கு இந்த வாசகம் மருதுவுக்கும் பொருந்தும். ‘வாளோர் ஆடும் அமலை’ மூலம் கடந்த எட்டாண்டுகளில் மருதுவின் நவீன ஓவியங்கள் நூல் வடிவில் பதிவாகியுள்ளன. இதை வெளியிட்டு மருதுவுக்கு சிறப்பு செளிணிதிருக்கும் தடாகம் அமைப்பு சார்ந்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மிகுந்த கவனம் செலுத்தி அயராமல் இந்த நுலை உருவாக்கி மருதின் கலை ஆளுமையை பதிவு செளிணியும் கவிஞர். வெண்ணிலாவுக்கு எனது வணக்கங்கள். மருதுவுக்கு என்னை
ஆற்றுப்படுத்திய எனதன்புக்குரிய இளையபராதியை நினைவுகூர்ந்து அகமகிழ்கிறேன்.

கட்டுரை : முத்தையா நடராஜன் (சந்தியா பதிப்பகம்)


tks to artist jeevananthan

ஒரு கலைஞனை அவன் வாழும் காலத்திலேயே கொண்டாடுவது என்பது மிக உன்னதமான காரியம்.அதையும் உயரியமுறையில் செய்வதென்பது அதைவிட உன்னதம்.ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது பற்றிய நாற்பது கட்டுரைகளை மருதுவை நன்கு அறிந்த சிறந்த ஆளுமைகள் ஆத்மார்த்தமாக எழுதியுள்ளவை தோழர் அ.வெண்ணிலா,தோழர் முருகேஷ் ஆகியோரின் ஈடுபாடு மிக்க உழைப்பினால் “காலத்தின் திரைச்சீலை” என்று புத்தகமாக வெளி வந்துள்ளது.அவசியம் படிக்க வேண்டிய நூல்.  “அகநி”வெளியீடு,வந்தவாசி -94443 60241/04183-226543அதில் வந்துள்ள ஒரு நல்ல கட்டுரை.நண்பர் (சந்தியாபதிப்பகம்) நடராஜன் எழுதியது. - "ஜீவாநந்தன்"
Labels :  ஓவியர் மருது, டிராட்ஸ்கி மருது, காலத்தின் திரைச்சீலை,


Download As PDF

Wednesday, February 12, 2014

டாவின்சி ஓவியத்தில் ஒளிந்திருக்கும் இரகசியம் !

15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் "தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)" திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

 கட்டிடக்கலை "ப்ரஸ்பெக்டிவ் " என்று சொல்ல கூடிய நுணுக்கமும் இந்த ஓவியத்தில் உள்ளது.  இதை பார்வையிட்ட அறிஞர்களும், ஆர்வளர்களும் இந்த ஓவியம் பற்றி பல்வேறு கருத்துக்கள் ,அபிப்ராயங்கள் சொல்லுகிறார்கள். (தத்துவ விளக்கம், ஜோதிடம், விண்ணியல், கணிதவியல், கலாச்சாரம் இப்படி)


1726 லிருந்து 1954 வரையிலும் பல கால கட்டங்களில் , பல ஓவியர்களால் இந்த ஓவியம் சிதையாமல் (ரீ கலரின்ங் / பேட்ச்) பாதுகாக்கப்பட்டது.  பார்ஸிலோன் என்பவர் சுமார் 20 ஆண்டுகாலம் (1979- 1999) துல்லியமான முறையில் இதை மறுசீரமைவு செய்து பழைய வடிவத்தை கொடுத்தார். இந்த ஓவியம் இருக்கும் சுவரின் மறுபக்கம் சமையலறை அதனாலும் ஈரம் காரணமாக இந்த ஓவியம் பொழிவிழந்தது. 1943 ல் உலகப்போரின் போது கட்டிடத்தின் அருகில் குண்டு விழுந்தது, அப்போது அதிர்ஷ்டவசமாக இந்த ஓவியம் தப்பியது. ஓவியம் இருந்த அறை சிறையாகவும் இருந்திருக்கிறது.

யேசு தன் சீடர்களுடன் விருந்துன்னும் காட்சி "தி லாஸ்ட் சப்பர்" பைபிளில் இந்த காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறது (as it is told in the Gospel of John, 13:21. Leonardo has depicted the consternation that occurred among the Twelve Disciples when Jesus announced that one of them would betray him.)


The Last Supper (1498)—Convent of Sta. Maria delle Grazie, Milan, Italy







  • மூன்று வாயில்கள் எதற்கு  ? நாம் காந்தப்புல மற்றும் மின் உலகத்தில் வசிக்கிறோம்.  யேசுவை  சூரியனாகவும் , சூரியனைச் சுற்றி 12 ராசிகளையும் உருவகப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது.



  • மூன்று மூன்று பேராக 4 குழுக்கள் இருக்கு, மொத்தம் 12 பேர் இது வருடத்தின் 12 மாதங்களையும், நான்கு சீசனையும் (காலங்கள்), ஒவ்வொரு சீசனும் மூனு மாசம் இருக்கும் என்பதை சுட்டி காட்டுகிறது.  முதல் குழுவில் 3பேர் இருக்காங்க இரண்டு கைகளை உயர்த்தி இருப்பது ஜெமினி, அடுத்த குழு லியோ, இப்படி ராசிகளையும் சுட்டிக்காட்டுது. மூன்று வாயில்களில் வலதில் செல்லக் கூடாது, இடதிலும் செல்லக் கூடாது, நடுவில் உள்ள வாயில் வழிதான் செல்லவேண்டும்.

  • யூதர்கள் அந்த டேபிலை சுற்றி இருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்து இருக்கவில்லை. .. இதை டாவின்ஸி ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார். எகிப்தியர், இந்தோனேஷியன்கள், மெக்ஸிகோ டேபிலை சுற்றி இருக்கிறார்கள்.


(in medieval )ஐரோப்பிய சர்சுகள் மற்றும் கதீரிட்ரல்களில் இந்த வாயில் வடிவங்களை காணலாம்.


  • ஐரோப்பிய கலாசாரத்தில் மூன்று எனபது வாழ்கையின் பிறப்பு, உயிர், மறு பிறப்பு இன்னும் இது போல மூன்று என்ற எண் ( triadas),செயல்கள், வழிமுறைகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பதை காணலாம்.
  •  Trinity மூன்று வாயில்கள் , கட்டிடக்கலையில் அந்த கால கட்டங்களில் அப்படி அமைக்கப்பட்டிருக்கும் அதை அவர் அப்படியே யோசித்து வரைந்து இருக்கலாம்.


  • இந்த படத்தை( ஓவியத்தை) அப்படியே திருப்பி பார்த்தோமானால் பின்புலமானது பியானோ கட்டைகளை போலிருக்கும் விரல்கள் வாசிப்பதையும் பார்க்கலாம். 


                                              கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் 
(In greek mythology the stars of Pleiades represented the seven sisters)
மூன்று வாயில்கள் (கதவுகள்) ஓரியான் (Orion ) நட்சத்திர கூடங்களை குறிக்கிறது.

  • யேசுவின் உருவமே ஒரு பிரமிட் வடிவத்தில் இருப்பதை பார்க்கலாம்.
  • சிறிய வாயில் கதவுகள் இரண்டும் சூரியனையும்(ஆண்பால், ஆண்), நிலவையும் (பெண்பால்,பெண்) குறிக்கிறது நடுவில் உள்ள பெரிய கதவு யுனிவர்ஸ், அதன் வழி செல்லவேண்டும்.


  • கணிதவியலின் கூற்றுப்படி, 3, 9 , 6 தனித்த சத்தி கொண்ட எண்கள் எனலாம்.  இந்த மூன்று எண்களையும் அந்த வாயில் கதவுகள் குறிப்பிடுகின்றன.


“Philosophy [nature] is written in that great book which ever is before our eyes — I mean the universe — but we cannot understand it if we do not first learn the language and grasp the symbols in which it is written. The book is written in mathematical language, and the symbols are triangles, circles and other geometrical figures, without whose help it is impossible to comprehend a single word of it; without which one wanders in vain through a dark labyrinth.”  — Galileo Galilei

The entire Universe (including our solar system, as well as atoms, DNA and life-forms) reveals the secrets of balance, rhythm, proportion and unity in diversity, the fractal  interconnection of parts with each other and the whole. This harmony is expressed by some “key” numbers: Fibonacci Series, Phi, Pi and “e”.

The creation myths of many traditions describe the universe as the work of a Divine Architect who uses “sacred geometry” to unfold the dimensions of a beautiful cosmos, wisely designing every aspect of it, and governing by just proportions evidenced in the geometric shapes and processes of nature.

நன்றி _ கலாகுமரன்

Download As PDF

Tuesday, February 11, 2014

உருவங்களை நிஜத்தில் மறைய வைப்பது சாத்தியமா?

ஹாரி பாட்டர், ப்ரிடேட்டர் {potter , predator} போன்ற படங்களில், சயன்ஸ்பிக்ஸன் படங்களிலும், இரும்புக்கை மாயாவி போன்ற கார்டூன் கதைகளிலும் உருவங்களை மறைய வைப்பது அல்லது மறைந்து போவது என்பது இல்லாமல் இருந்தால் அது ஆச்சர்யம்.



உண்மையில் மேஜிக் போல நிஜத்திலும் நிகழ்த்துவது சாத்தியமா ? இன்னும் இல்லை ஆனால் அந்த மாதிரியான நிகழ்வை சாத்தியப் படுத்த அருகில் சென்று  கொண்டிருக்கிறார்கள்  என்று சொல்லலாம்.

இதற்கான திறப்பான் தான் மெட்டா மெட்டீரியல் (Metamaterial).   இது ஒருவகையான இயற்கையில் இல்லாத உருவாக்கப்பட்ட சிந்தடிக் பொருள். ஒளி இதனை சுற்றி சிதறச் செய்யும் தன்மையானது.  அதனால் அந்த பொருளை காணாது மறையச் செய்யலாம்.


டார்சின் முன்னால் வைக்கப்பட்ட துண்டினை(துணி) ஒளி ஊடுருவி கடந்து செல்வதாக உருவகப்படுத்திக்கொள்ளுங்கள் மெல்லிய இழையை ஒளி ஊடுருவாமல் அந்த இழைகளுக்கு இடைப்பட்ட துவாரத்தின் வழியாக செல்லும் அல்லவா.  அந்த இழையில் ஒரு நுண் துவாரம் செய்தால் ஒளியானது அதனுள் செல்ல முடியாமல் விலகி செல்லும் இல்லையா ?. அப்படி ஒளியானது விலகி செல்லும் போது அந்த பொருள் கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.



மிக மிகச்சிறிய தட்டியை கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி இருக்கும் இந்த மெட்டா மெட்டீரியல்.


“Such a lens would offer superior resolution over conventional technology, capturing details much smaller than one wavelength of light to vastly improve imaging for materials or biomedical applications,” says Costas Soukoulis, a physicist at Iowa State University. “A metamaterial superlens could give researchers the power to see inside a human cell or observe DNA.”

ஒரு தட்டி வடிவத்தில் உருவாக்கப்பட்ட தனிமங்களுக்கு இடையே செல்லும் ஒளியின் அலை நீளத்தை விட குறைவான இடைவெளியில் ஒளி வளைந்து செல்லுகிறது. போட்டான்கள் சல்லடை போன்ற நுண்பொறியில் சிக்கி கொள்கின்றன அவை அந்த நுண்துளையில் நுழைய முடிவதில்லை அதற்கு பதிலாக அவை அந்த பொருளை புனல் வடிவில் சுற்றி செல்கிறது.

இந்த டெக்னிகல் இன்னும் ஆய்வுக்கட்டத்தில் இருக்கிறது. மெட்டா மெட்டீரியல் எனும் இத்தனிமம் ஆனது லைட் ரேடியேசனை ஒரு குறிப்பிட்ட வேவ் லெந்தில், குறித்த அலைவரிசை நிறங்களில் மட்டுமே பரிட்சிக்கப் பட்டது. டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியை (ஆஸ்டின்) சேர்ந்த ஆராய்சியாளர்களின் அடுத்த கட்ட ஆய்வு " இந்த தனிமத்தில் ஒரு போர்வை அல்லது கோட் செய்வது " அப்படி உருவாக்கப்பட்டு வெற்றியடைந்தால், திரைப்படங்களில் காட்டப்படும் கிராபிக்ஸ்கள் உண்மையில் உண்மையாகும்.





"The voltage generated by this photodiode when it is illuminated with light can be used to change the resonance of the metamaterial structure," explains Shadrivov. "This means that we can control the refractive properties of the structure at will and bend the microwave light beams passing through the material in whichever direction we like."




Labels: மெட்டாமெட்டீரியல்,metamaterial

Download As PDF

Wednesday, February 5, 2014

விவாதத்திற்குரிய 7 மருத்துவ தியரிகள் உண்மையா?

மருத்துவத்துறையில் ஏழு மருத்துவ தியரிகள் உண்மையான என்பது குறித்து மிகுந்த விவாதங்களுக்கு உரியதாக இருந்தன.


1. காற்றின் மாசு (Air Pollution) நுரையீரல் புற்றுநோய்க்கு காரணம்.

1939 முதல் மருத்துவ விஞ்ஞானிகள் நிறையப்பேர் இது பற்றிய விவாதங்களில் ஈடு பட்டிருந்தார்கள். காற்றின் மாசு பாதிப்பு என்பது பல படித்தான காரணிகளை கொண்டது.21 வருடங்கள் கழித்து அதை ஒத்துக்கொண்டனர்.

2. பாக்டீரியா அல்சர் பாதிப்புக்கு காரணம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்கர்கள் ராஃபின் வாரெண் மற்றும் பேரி மார்ஸல் இவர்கள் கூற்றுப்படி "ஹெலிகோபாக்டர் ஃபைலோரி" எனும் பாக்டீரியா அல்சர் பாதிப்பிற்கு காரணம் என சொன்னார்கள்(1982).  இதற்கு மன அழுத்தமும் உணவு முறை பழக்கங்களும் காரணம் எனச் சொல்லப்பட்டு வந்தது.  1990 ல்தான் அமெரிக்கன் இன்ஸ்டிடியுட் அப் ஹெல்த் இதைஉறுதிப்படுத்தியது.

3. ஆஸ்பிரின் மருந்து ஹார்ட் அட்டாக் ஆபத்தை குறைக்கிறது.

லாரன்ஸ் க்ரேவன், இவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர் தமது முதல் ஆய்வரிக்கையில் ஆஸ்பிரின் இருதயம் சம்பந்தமான ரத்தம் உறைவதை தடுக்கும் ஆற்றல் இருப்பதாக 1950 ல் தெரிவித்தார்.  அதன் பின் 40 ஆண்டுகள் கழித்துதான் இது ஒப்புக்கொள்ளப்பட்டது. நாள் ஒன்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஒரு ஆஸ்ப்ரின் மருந்து ஒருவருக்கு இருதய நோய்களில் பாதுகாப்பளிக்கிறது.

4.  எக்ஸ்-ரே உடலுக்கு கெடுதி

1911 ல் நடத்தப் பட்ட ஆய்வில் அதிக எக்ஸ்ரேக்கல் லுக்கிமியா மற்றும் இதர கேன்சர் நோய்களுக்கு காரணம் என்றார்கள். 1956 ல் தான் அமெரிக்கன் சயன்ஸ் அகாடமி தந்த ரிப்போர் படி இஷ்டத்துக்கு எக்ஸ்-ரே எடுக்க கூடாது என அறிவுருத்தப்பட்டது.

5. மாங்கனீஸ் மனித மூளைக்கு கெடுதி

மாங்கனீஸின் அதிக அளவு அதிகரிப்பு பார்கின்ஸன் நோய்களுக்கு காரணம். நியாபக மறதி mental disordersமற்றும் மூளை அயர்ச்சி , tremors, தூக்க மயக்கம்(lethargy) அதோடு கூட மூளைச் சாவிற்கும் காரணம்.

6. கிட்டப் பார்வை (Myopia is a sign of intelligence)க்கும் அறிவு முதிர்ச்சிக்கும் சம்பந்தம்

ஹாங்காங் பல்கலைகழக முடிவுப் படி ஒருவரின் கிட்டப் பார்வைக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் மரபணு பரிமாற்றம் காரணம்.

7. அதிக வெயில் நாட்கள் வயலென்ஸ் க்கு ஒரு காரணம்.

இஸ்ரேலை சேர்ந்த பென் கூரியன் யுனிவர்சிட்டியின் ஆராய்சியாளர்கள் கூற்றுப்படி,  வெயில் காலங்களில் உடலில் செரோடோனின் அளவு மாற்றம் ஏற்படுவதாக சொன்னார்கள்.  அந்த கால கட்டங்களில் 2  - 3 மடங்கு அதிகமாக குற்றங்கள் அதிகரிக்கிறது.

by Kalakumaran

Download As PDF

Tuesday, January 28, 2014

இராஜநாக காதலன் ரோமியலஸ் !

நிறையப் பேர் வைட் காலர் ஜாப்பிற்கே ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ரோமியலஸ் விடேகர் தமது வாழ்க்கையை காட்டின் அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் நுகர்வதற்காக  இயற்கையோடு தம்மை இணைத்துக் கொண்டார்.

யார் இவர் ?  என்ற எனது தேடல் இவரைப் பற்றி ஆச்சர்ய விசயங்களை தந்தது. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரோமியலஸ் விடேகர் , இயற்கை ஆர்வளர் மட்டுமல்ல, (conservationist) ஊர்வன நீர்வாழ் உயிரிகளை நேசிப்பவர் மட்டுமல்ல ( herpetologist )அவர் சினிமா தயாரிப்பாளர் (டாக்குமென்ரி) மட்டுமல்ல, சென்னையில் உள்ள பாம்பு பண்னையை நிறுவியவரும் ஆவார்.


மனித வாசனை படாத பழங்குடிகளின் பாதம் கூட படாத அமைதியான காட்டுப்பகுதி அமைதிப்பள்ளத்தாக்கு. இதனை உலகறியச் செய்தவர் ரோமியுலஸ் விடேகர்

இந்திய துணைக்கண்டத்தில் அழியும் நிலையில் இருந்த பாம்பு இனங்கள் இந்த பண்ணையில் பராமரித்துப் பாதுகாக்கப் படுகிறது. கிண்டியில் இந்த பாம்பு பூங்கா 1972 ல் இவரால் ஆரம்பிக்கப் பட்டது. இது தான் இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப் பட்ட பாம்பு பூங்கா. வேர்ட்லைப் ஃபண்ட் ஒத்துழைப்புடன் இதை சாதித்தார்.  அதன் பிறகு (1976)ஆரம்பிக்கப்பட்டது தான் மாமல்லபுரம் சாலையில் உள்ள முதலை பண்ணை  இதில் 15 வகைப்பாட்டியலில் வரும் 3000 முதலைகள் இருக்கின்றன. முக்கியமாக இதில் இருக்கும் 3 வகைகள் அழிவின் விளிம்பில் இருகின்றன என்று சொல்கிறார்கள்.


சிறியவயதில் இருந்து பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்.

அமெரிக்காவில் பிறந்த இவர் இந்திய குடியுரிமை பெற்றவர் அதற்கான இவரின் பயண எல்லை விரிந்த அளவிளானது.

க்ரோகடைல் ஹண்டர் ஸ்டீவன் இர்வின் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் அவர் போல செயற்கையான த்ரில்கள் இவரின் டாக்குமென்ரிகளில் பார்க்கமுடியாது. இவருடைய கோப்ரா டாக்குமென்ரிகள் எதார்த்தமானது, செயற்கை கலப்பு இல்லாதது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் மழைக்காடுகளில் ரிசர்ச் செண்டர் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இவரது அவா.


இயற்கையையும்,காட்டுயிர்களை பற்றியும் இவரது அனுபவங்களை பேசுகிறது இவர் எழுதிய புத்தகங்கள்.  wild Dreams, Green screen (2002)

 “The Dragon Chronicles,” filmed in 2008 for PBS's series Nature, shows Whitaker cave-diving in ice-cold water for Slovenian olms, climbing trees in pursuit of flying lizards in the Western Ghats, and Komodo dragon-wrestling in Indonesia.

எழுபதுகளில், ரஷ்யன் பிலிம் நண்பருடன் சேர்ந்து “ரிக்கி டிக்கி தாவி” எனும் டாகுமென்ரியை எடுத்தார். அதில் பறவைகளின் முட்டைகளை திருடும் பாம்புதான் முக்கிய கதா பாத்திரம்.

ரோமியலஸ்  சொல்கிறார்  “ 1980 ல் நான் காட்டு வாழ்க்கையை பற்றிய படங்களை எடுத்த போது என்னிடம் டி.வி கிடையாது, இப்படி பட்ட படங்கள் அதிகம் இல்லை அப்போது.  பாம்புகளுடனான எனது பரிசயம் மற்றும் அவைகள் பற்றிய விழிப்புணர்வு ஜனங்களுக்கு சென்று சேரவேண்டும் என்று விருப்பப் பட்டேன்.  பாம்பு பண்ணை ஆரம்பிக்கப் பட்ட பிறகு அவைகளை பற்றி வருடத்திற்கு மில்லியன் பேருக்கு தெரியப் படுத்தப் படுகிறது. ஆனால் அதுவே டி.வி மூலமாக ஒரே நேரத்தில் 20 மில்லியன் பேரை சென்றடைகிறது.”

பள்ளித்தோழர்கள் இருவருடன் சேர்ந்து எடுத்த டாக்குமென்ரி (Snake bite - 1985 ) பாம்பு கடியால் இறப்பவர்களை பற்றியது. இதற்கு 50000 ரூபாய் செலவானது. அரை மணிநேரம் ஓடும் இது பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.  இதற்கு U.S ல் கோல்டன் ஈகிள் விருது கொடுக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டது.

இந்த மாதிரியான படங்கள் எடுக்க செல்லும் காட்டுபகுதிகளில் மலைவாழ் மக்களோடு (ஆரவல்லி, பழனி மற்றும் இருளர்கள் )பழகிய அனுபங்கள் மறக்கமுடியாது என சொல்கிறார்.  அந்த பயணங்களின் போது கொடிய விசம் கொண்ட பாம்புகளிடம் இருந்து தப்பித்தேன். ஆனால் அதைவிட NH 47 ல் காரில் செல்வது பயமாய் இருக்கிறது.

இவரது பல டாக்குமென்ரிகளும், அனிமல் ப்ளானட், டிஸ்கவரி, நேசனல் ஜியாகிரபிகளில் ஓடுகிறது.

விருதின் மூலம் தனக்கு கிடைத்த 30000 பவுண்டுகளை Agumbe Rainforest Research Station ஆரம்பிக்க செலவிட்டார். இங்கு முக்கியமாக ராஜ நாகங்களின் வாழ்வியலை பற்றிய ஆய்வகம் செய்யப் படுகிறது.

கிங் கோப்ரா (ராஜ நாகம்) நேசனல் ஜியாகிரபியில்
எமி அவார்ட்(Emmy award) பெற்று தந்தது. இது சின்னத் திரையில் ஆஸ்கார் போன்றது.

"super sized " முதலை படம் இந்தியா கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப் பட்டது.

"I’m 65 years old, and instincts (and some well-meaning friends) say I should slow down and maybe take it a little easier, but how can I? "
Romulus Whitaker

 “I am happiest out in the wild just watching turtles, snakes, crocs and other herps.”

“[Children] are fascinated with snakes. They haven’t got that steely thing that you end up either fearing or hating or despising or loathing them in some way. They are interested.” 

17 நிமிடம் ஓடக்கூடிய காணொளி ராஜ நாகம், முதலை மற்றும் சுற்று சூழலை விளக்குகிறார் ரோம்.., விருப்பப் படுபவர்கள் தரவிறக்கி கொள்ளலாம்.



ராஜ நாகம் பற்றி சில தகவல்கள் :

சாதாரணமாக 18 அடி நீளம் வளரக்கூடிய ஜீவன்.  வால் நுனி யில் நேராக தரைமேல் எழும்பி மனிதனை அச்சுறுத்தக் கூடிய வல்லமையும், உலகில் கொடும் விசம் கொண்ட உயிரினங்களில் ஒன்று. இருபது வருடங்கள் உயிர் வாழும்.

அடிப்படையில் மனிதர்களை கண்டால் ஒதுங்கி விடும் ஆனால் கட்டம் கட்டப் படும் போது நேருக்கு நேர் எதிர்த்து தாக்கக்க கூடியது.

இதன் சிறு துளி விசம் 20 மனிதர்களை கொல்லக் கூடியதும், யானையை கொல்லவும் போதுமானது.

மழை காடுகளும் காட்டு பகுதியோடு ஒட்டி மனிதர் வசிப்பிடங்களிலும் இதன் நடமாட்டம் இருக்கும்.

தென்கிழக்காசியா, தென் சீன பகுதிகளிலும் காணப் படும் ராஜ நாகம் இடத்திற்கு தகுந்தாற் போல் நிறங்களில் வேறு படுகிறது. விசமுடைய பாம்புகளையும் விழுங்கக் கூடியது. மரத்தின் மீதேறி பறவை முட்டைகளையும் ஸ்வாகா செய்யும்.

பெண் ராஜ நாகம் முட்டைகளை அடைகாக்க இழை தளைகளை கொண்டு கூடு கட்டும்.  ஆண் ராஜ நாகம் பெண் ராஜ  நாகத்துடன் இணை சேர வில்லை யென்றால் அவைகளை விழுங்குவது ஏன் என்பது இன்னும் புலப்படாத இரகசிய மாக இருக்கிறது.


Labels : ராஜ நாகம், பாம்பு பண்ணை, பாம்பு பூங்கா,snake park,

Download As PDF

Thursday, January 23, 2014

"கைம்மா" ன்னா யானையா ?

ஒவ்வொரு மொழியிலும் அதற்கென்று பல சிறப்புகளை கொண்டிருக்கும், சில மொழிகள்  'அடாப்டட் ' என்று சொல்லக்கூடிய ஒரு மொழியையோ அல்லது பல மொழிகளையோ சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் இல்லாமல் தமிழ் மொழி  சிறப்புகளை கொண்டிருப்பது ஆய்வுக்கு உரியது.

ஒரு உதாரணம், யானை என்ற வார்த்தைக்கு பல பெயர்களையும் அர்த்தங்களையும் கொண்டிருக்கிறது தமிழ் மொழி.  அதே போல யானையின் பல வகைகளையும் அதன் வாழ்க்கையையும், பாலின வேறுபாடுகளையும், குண நலன்களையும், இனங்காட்டவே பல சொற்கள் பிறபிக்கப்பட்டு சங்ககாலத்தில் இருந்து பேச்சு வழக்கிலும்,  இலக்கியங்களிலும் பயன் படுத்தப் பட்டு வந்திருக்கிறது.

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்.  இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்.

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

(tks to sureshbabusuperphotos )




இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களப மென்றென் பூசுமென்றாள்
மாதங்க வேழ மென்றேன் தின்னும் என்றாள்
பக டென்றேன் உழம் என்றாள்
பழனம் தன்னை கம்பமா என்றேன் நற்களியாமென்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.


 { - அந்தகக் கவி வீரராகவ முதலியார்- }

அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து,
'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனனவி கேட்கிறாள்.

புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார். அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.

இந்த பாடலில் இரு பொருள் தருபவை

களபம் -யானை;சந்தனம்:
மாதங்கம் -யானை; மா(பெறிய)தங்கம்
பம்பு சீர் வேழம் (நற்குணமுடைய) யானை - கரும்பு
பகடு -யானை;எருமைக் கடா
கம்ப மா (எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கும்
யானை)-
கம்பு என்னும் தானியத்தில் செய்யப்பட்ட மா        
களி செய்ய உதவும்.
கைம்மா (தும்பிக்கையுடைய யானை)

யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.

(tks to முகநூல் நண்பர் Madras memes)

Labels : தமிழ், யானையின் பெயர்கள், கட்டுரை, அனுபவம், தமிழன்



Download As PDF

Saturday, January 18, 2014

நடிகர் சிவகுமாரின் அனுபவங்கள் - Part 3

பரதகலை பற்றியது, பரத நாட்டியம் ஆடுவதில் மனிதர்களுக்கு கிடைக்கும் அனுபவம் பற்றி கூறுங்கள்.

மனிதன் கதை சொல்லியாக இருந்த ஆரம்ப காலத்திலே இது தோன்றி இருக்க வேண்டும். பின்னர் பொருளார ரீதியாக இது வளர்ந்தது. கதை சொல்லியே காலத்தை ஓட்டியிருக்கிறான். கதை சொல்ல ஆரம்பிச்சான், பாடிட்டு கதை சொன்னான்,பின்னாடி ஆடிட்டே கதை சொல்ல ஆரம்பிச்சான்.

கி.பி 2 நூற்றாண்டில் இருந்து கி.பி 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஏற்படுத்தப் பட்ட அஜந்தா எல்லோரா சிலைகள பார்த்தீங்கன்னா பரத நாட்டியம் எந்த அளவு வளர்ந்திருந்ததுன்னு தெரியும்.. அதுக்குமுன்னாடி கி.மு 2 லேயே இது இருந்திருக்கலாம். இந்த கலையை காப்பாற்றியவன் ராஜ ராஜ சோழன் கி.பி 10 நூற்றாண்டில் ஓவியமாகவும், சிலைகளாகவும் படைக்க வெச்சான்.
அவங்களுக்கு ஆதரவு கொடுத்தான், அதுக்கப்புரம் பல்வேறு ஆட்சியாளர்கள் வரும்போது அப்படியே குறைஞ்சு குறைஞ்சு போய்,  அந்த கலை சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கோயிலோடு வாழ்ந்து, திருமணம் செய்து கொள்ளாம போய், ”தேவதாசி” என்று முத்திரை குத்தப் பட்டு ஆடுவதற்கு தடை செய்யப்பட்டு அவமானப் படுத்தப்பட்டாங்க. நாடு சுதந்திரம் அடையரதுக்கு ஒரு ஐம்பது வருசம் முன்னாடி, பால சரஸ்வதி,ருக்மனி அன்னை போன்றவங்க எல்லாம் தமிழ்நாட்டில் மரியாதை செய்யப்பட்டாங்க.

பரத நாட்டியம் ஆடும் பொன்னுங்க எல்லாம் “தாயே யஷோதா..ன்னு” பாடிட்டு இருக்க அவங்க ஸ்மைலோட ஆடினா போதும். சினிமாவில் எனக்கு கொடுத்த அசைன்மெண்ட் பாடிட்டே ஆடனும்...பாட்டுன்னா எப்படி  “ அனங்கன் நல் கஜநண்பன் வசந்தன் மன் மதனென்பன் வணங்கும் என் உயிர் மன்னவா...கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவி பொங்கும் தனித்தோங்கும் கயல் கன்னியே, ஆடலுடன் பாடல் இன்பம் ஊடலுடன் கூடல் இன்பம் தேடலும் உன் செயலல்லவா.... ( இணைந்திங்கே சிவம் கானுவோம்...மூச்சுவிடாமல் தொடர்ந்து பாடி முடிக்கிறார் பலத்த கைதட்டல்..என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை)

இப்படி பாடிட்டே ஆடும் போது வாய் சரியா இருந்தா கை மூவ்மெண்ட் போயிடும்..
மூவ்மெண்ட் இருந்தா வாய் போயிடும்..முதன் முதலா டான்ஸ் ஆடும் போது கைய இப்பிடி இப்பிடி மூனு தடவை செஞ்சேன்..கவுண்டரே அளந்திட்டு இருக்கீங்களே எத்தனை முழம்னாங்க..

என்னோட ஸ்ரீவித்யா நடிச்சாங்க அவங்க ஐந்து வயசில இருந்தே ஆடிட்டு இருந்தாங்கலாமா.. கேவி மஹா தேவன் மியூசிக் காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் கே.பி. சுந்தராம்பால் 64 வயசுல பாடிட்டு இருந்தாங்க..

கே.வி.மாஹா தேவனுக்கு பதிலா சேஞ்சுகாக இருக்கட்டுமேனு ஒரு படத்தில குன்னக்குடி வைத்திய நாதனனை மியூசிக் டைரக்டரா போட்டாங்க. ஏ.வி.எம்.. குன்னகுடி வைத்திய நாதனா அவன் பெட்டி போடற பையனாச்சே அவன் எப்படி மியூசிக் போடுவான்னார்.  தயாரிப்பாளர் சீரியசா இருப்பார் போலிருக்கேன்னு சொன்ன உடனே ஆர்மோனிய பெட்டிய தூக்கிட்டு காலைலேயே அவர் வீட்டுக்கு போனாரு வைத்தியநாதன். என்னப்பா பில்லு ஏதாவது இருக்கா அம்பின்னாரு ஏவிஎம். இவரு இல்லீங்க சின்ன பாட்டு ஒன்னு சுரம் சேர்த்து கொண்டாந்திருக்கேன்... சரி போடு பாப்போம்...

தக தகவென தக தகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா.. (பாடலை பாடிக் காட்டுகிறார் இந்த பாடல் 1972ல ) பாட்டை கேட்ட ஏவிஎம் சாகரவரைக்கும் நீதாண்டா மியூசிக் டைரக்டர்னாரு. தம் கட்டி பாடிய கே.பி. சுந்தராம்பாள் யப்பா (அவருக்கு அப்ப 64 வயசு ) என்னப்பா இந்தமாதிரி மூச்சு வாங்குதேன்னாங்க. யாரு பார்வதி...ஸ்ரீவித்யா, சிவன் யாரு...கோயமுத்தூர்லேர்ந்து வந்த பையன் டான்ஸ் ஆடுவானா... இல்ல இனிமேதான் தெரிஞ்சிக்க போறான் ...சரியாப்போச்சு..இனிமே இத கத்துக்கிட்டு ஆயுசு முடிஞ்சுடுமேப்பான்னாங்க. அதுக்கப்புரம் விடாம ஆடி கத்துகிட்டு அந்தப் படத்தில ஆடி நடிச்சேன் போதும் போதும்னு ஆயிடுச்சு. ஓவியனா இருக்கரது வேற விசயம்...நடிகனா இருக்கரது வேற.



மெல்லிசைப் பாடலுக்கும் கர்னாடக சங்கீதத்திற்கு வேறுபாடு எப்படிப் பார்கிறீர்கள்.

ஊருக்குள்ள கரண்டே கிடையாது அரிக்கேன் வெளக்கு வெச்சே படிசிக்கிட்டு இருந்தேன்.. ரேடியாவுல பாட்டு கேக்கரதெங்க.. பாட்டு கேட்காம கர்னாடக சங்கீதம் எப்படி தெரியும். விதி எப்படி விளையாடுது பாருங்க.

டைரக்டர் பாலசந்தர் படம், சிந்துபைரவி பாகவதர் கேரக்டர்,  ஒரு பாறைமேல பத்மாசனம் போட்டு உட்கார்ந்து பாடறமாதிரி ஒரு சீன்வரும் அவங்க செளரியமா மேட்டுமேல கேமரா வெச்சுகிட்டு உட்கார்ந்திருப்பாங்க நடுக்கடல்ல நான் மட்டும் பாறையல உட்கார்ந்து பாடனும்... சாட் எடுக்கும் போது பெரிய அலை வந்து பொத்துன்னு தூக்கி கடல்ல போட்டுரும்.. சட்டைய திரும்ப காயவெச்சு போட்டு எடுக்கனும்... இப்படியே மாத்தி மாத்தி உணர்ச்சிகரமா நான் நடிக்கனும்...அதோட வாயசைப்பு சங்கீத ஸ்ருதிமாறாம வாயசைச்சு பாடனும்.. நிசரிசசச நிச ரிசசச...பமப கமப நிசரி...பகம (பாடிக்காட்டுகிறார்) யோசிச்சு பாருங்க. நமக்கு ஸ்வரமே தெரியாதே..இந்த எழுத்துக்கள ஒன்னொன்ன பிரிச்சு மனப்பாடம் பன்னி அப்புரம், ஜேசுதாசோட பாட்டையும் மண்டகுள்ள போட்டு இமய மலமேல உட்கார வெச்சாலும் அழுத்திரோவோம்ல...

யோகாசனம் எத்தனை ஆண்டுகளாக செய்கிறீர்கள் ? ப்ரானாயாமத்தின் பயன் என்ன?

இப்பத்தான் இப்பத்தான் ஒரு 55 வருசமா பன்னிட்டு இருக்கேன்..

காபி டீ கூட சாப்பிடுரது இல்ல. ப்ரானாயாமம் இதை திருமூலர் அழகா சொல்லிட்டுப் போய்ட்டார்,...

ஊரார்கூடி ஒலிக்க அழவிட்டு
பேதமை நீங்கி பிணம் என்று பெயரிட்டு
சூரகன் காட்டிடை கொண்டுபோய்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நிலை பெற்றோரே.

எப்பேர்பட்ட கொம்பனா இருந்தாலும் இறந்துபோன கடைசில
பிணம் -ன்னுதான் சொல்லுவார்கள்... சாருக்கு மூக்குல பஞ்சு வைன்னு சொல்லமாட்டான்.. பிணத்து மூக்கில ன்னுதான் சொல்லுவான். தூக்கிட்டு போவான் எரிப்பான் இல்லன்ன புதைப்பான். வாழ்க்கைல என்னத்த கண்ட  மாப்ள என்று அழுவார்கள்... செத்துபோனவன் சம்பாரிச்ச சொத்து இதுதான்.

யாக்கைன்னா உடம்பு, யாக்கை நிலையாமை இந்த உடம்பு
காப்பாற்ற என்ன வழி.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

உடம்ப காப்பாத்து, தண்ணி அடிக்காத, பீடி சிகரெட் குடிக்காத, டயத்துக்கு சாப்பிடு, ஏழுமணி நேரம் தூங்கு இதத்தான் சொன்னாரு. அதுல ஒசத்தியான விசயம்னா ஒருமனுசன் சாப்பாடு இல்லாம ஒருவாரம் பத்துநாளு   இருக்கலாம் தண்ணி குடிக்காம நலஞ்சு நாளு இருக்கலாம்...ஆனா சுவாசிக்காம இருக்க முடியாது. ப்ராணம் இல்லாம இருக்க முடியாது. இறந்து போனா ப்ராணம் போயிருச்சுன்னு சொல்லுவாங்க.

இடது பக்க நாசிவழியா காத்த உள்ளிழுத்து வலதுபக்க நாசிவழியா 172 முறை வெளிய விடுறது. இதேமாதிரி வலது நாசிவழியா காத்த உள்ளிழுத்து இடது நாசிவழியா 172 முறை வெளியே விடறது. இந்த மாதிரி செஞ்சா ஒருத்தன் 172 வருசம் வாழலாமாம்.  இதுமாதிரி நாஞ்சென்சுபார்த்தேன்.... பாழாப் போன உலகத்துல 172 வருசம் வாழனுமா 86 வருசம் வாழ்ந்தாப் போதும்னுட்டு பாதியா குறைச்சுட்டேன். ப்ராணாயாமம் கரது உயிரோட இருக்கறதுக்கான விசயம். தூங்கிட்டு இருக்காம காலைல நாலரை மணிக்கு எந்திருச்சு சூரியன பாருங்க... சூரியன பார்த்தா ரொம்ப வருசம் உயிரோட இருக்கலாம்.

அக்கால ஆசிரியர் மாணவர் உறவு இக்கால உறவு குறித்து சொல்லுங்கள்.?

இது கொஞ்சம் சீரியசான கேள்வி... மாணவன் டீச்சரை கத்தியால் குத்துவது, பல்லை உடைப்பது...பத்திரிக்கைகல்ல படிக்கிறோம். உலகம் இப்படி போயிட்டு இருக்குது.  நான் கலங்கல்ல தான் படிச்சேன். கல்யாண சுந்தரம் வாத்தியார் ஒழுங்கா படிக்கலேன்னா கொன்னுடுவாருங்க... கொன்னே போடுவார். அப்படி பட்ட வாத்தியாரிடமே படிச்சேன். கால் அரைக்கால் காசுக்கு நாலரைக்கால் கத்திரிக்கான்னா ஒரு காலுக்கு எவ்வளோ... சொல்லி முடிக்கும் போது 3 பைசான்னு போட்டிருக்கனும், தங்கமான வாத்தியாருங்க.. எங்கூருக்கு போற வழில தோட்டத்தில குடி இருந்தாரு ஒருநாளு அவர போய் பார்த்தேன். (என்னோட ஒரிஜினல் பேரு...தண்டபாணி)

"தண்டபாணி மழை ஏமாத்திடுச்சுடா வெள்ளாம ஒன்னும் இல்ல, காட்ல ஒன்னும் விளைய மாட்டீங்குது. மாடு கன்னு தீவனமில்ல அதையும் வித்தாச்சு.. ஒன்னும் முடில நீ ஒரு தபா காட்டுக்குள்ள போய்டுவான்னாரு.." எனக்கொன்னும் புரியல... யோசிச்சேன். கால் பூமில படனும்கிராரு

"ஐயா ...நனொன்னும் ராமபிரான் இல்லே பூமி அகலிகை இல்லே "ன்னேன்... எலேய் ராமாயணம் நாங்க தான் உனக்கு சொல்லி குடுத்தோம் எனக்கே பாடம் எடுக்கறயா... போடா...போடா -ன்னாரு. பத்தடி போய்ட்டு வந்தேன். சாதாரண ஸ்டூடன்டு என் கால் அவரு பூமில படனுமேன்னு சொல்றாரே எனக்கு அழுகையா வந்திச்சு.

மூனு வருசம் கழிச்சு திரும்ப பார்த்தேன். தண்டபானி பரவாயில்ல இடத்த ப்ளாட் போட்டு வித்திட்டேன். பெரிய புள்ளக்கு 4 லட்ச ரூவா, சின்ன புள்ளக்கு 3 லட்ச ரூவா, பேங்கல 5 லட்ச ரூவா போட்டுவெச்சிருக்கேன்னாரு. இது நம்ம நால இல்ல...காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.

இப்ப ஏதுன்னாலும் வாத்தியார சஸ்பன்ட் செய்யராங்க இது நல்லா இல்ல. அப்ப பையன் கண்ணு ரெண்டையும் மட்டு விட்டுட்டு தோல உரிச்சுடும்பாங்க... அந்த உறவு போச்சு.

 "கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா"  நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது


தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு,  ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.., நடிகர் சிவகுமார்,  அவரின் பேச்சை கேட்டவர்களுக்கு தெரியும் கட கடவென பேசுவார்...ஓரளவு அப்படியே கொடுத்திருப்பதாக என்னுகிறேன்.

தொடர்கிறேன்....

நன்றி

கலாகுமரன்.

தொடர்புடைய பகுதிகள் :  

சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 1

சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 2




Download As PDF

Tuesday, January 14, 2014

போலியோ அற்ற நாடு மைல் கல்லை எட்டிய இந்தியா

போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது
(13 ஜனவரி, 2014 )

இந்தியாவில் ஒழிக்கப்படும் இரண்டாவது கொடும் நோய் போலியோ
கடந்த மூன்றாண்டுகளில் ஒரு போலியோ தாக்கிய சம்பவம் கூட வெளிவராத நிலையில், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை இன்று எட்டியிருக்கிறது.
இந்திய அரசின் இந்த அறிவிப்பு இன்று வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.
இந்தியாவில் போலியோ தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது.
2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.
இந்த காலகட்டங்களில் பொதுமக்களுக்கு போலியோ தடுப்பு மருந்து தருவதன் மூலமே இந்தச் சாதனை எட்டப்பட்டிருக்கிறது .
இது பெரும்பாலும் இந்தியாவின் பொதுச்சுகாதாரத் துறையில் பெரும் வெற்றியாகக் கருதப்படலாம்.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து தரும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில், சுமார் 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் 209 மிலியன் வீடுகளுக்கு சென்று, சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தந்தனர்.
"பிரம்மாண்டமான மைல் கல்"
இந்தியாவில் போலியோ ஒழிப்பை ஒரு " பிரம்மாண்டமான மைல் கல்" என்று வர்ணித்த ஐ.நா மன்ற குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்தியப் பிரிவின் , போலியோ தடுப்பு நடவடிக்கைகள் பிரிவுக்கான தலைவி, நிக்கோல் டாய்ட்ச், இனி புதிதாகத் தோன்றியிருக்கும் ஒரு வகை தட்டம்மையை ஒழிப்பதை இந்தியா புதிய இலக்காகக் கொண்டிருக்கிறது என்றார்.
ஆனால் வாய்வழியாகக் கொடுக்கும் சொட்டு மருந்துகள் மட்டிலுமே தரப்பட்ட இந்தியாவில் , போலியோ ஒழிக்கப்பட்டிருந்தாலும், அபூர்வமாக இந்த நோய் மீண்டும் தலைதூக்காதிருக்க வேண்டுமானால், ஊசிவழியாகவும் இந்த மருந்து தரப்படவேண்டும் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் பொதுச்சுகாதரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ

கடந்த ஆண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் , போலியோ அதிகமாகப் பரவியிருக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து, இந்தியாவை நீக்கியது.
இன்னும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.
1980ல் இந்தியாவில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவதாக இப்போது போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயும் ஒழிக்கப்படுகிறது.
போலியோ என்ற இந்தக் கொடிய நோய் தாக்கிய ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே மரணம் ஏற்படலாம், அல்லது முழுமையாக அவயங்கள் செயலிழக்கும் நிலை ஏற்படலாம்.
பழங்காலங்களிலிருந்து சமூகங்களைப் பீடித்த இந்த நோய், 1980களில் கூட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்பட்டது. அப்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் மூன்றரை லட்சம் பேர் போலியோ நோயால் தாக்கப்பட்டனர்.

' பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய பொது வசதிகள் இல்லை'
இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், போலியாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், இயல்பு வாழ்க்கையை நடத்த போதிய பொது ஏற்பாடுகள் இல்லை என்கிறார் போலியோவால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற செய்தியாளர் எச்.ராமகிருஷ்ணன்

நன்றி ; பி.பி.சி. செய்திகள்

ஜோனஸ் ஸாக் போலியோ தடுப்பூசி மருந்திற்கு பேடன்ட் செய்யவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அவரின் பதில் "சூரியனை நீங்கள் பேடன்ட் செய்வீர்களா ? "

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)